Jump to content

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"


Recommended Posts

Image may contain: 1 person, closeup
Image may contain: 2 people, people standing, tree and outdoor
Image may contain: 1 person
Image may contain: 2 people, people standing
பாண்டியன் சுந்தரம் is with Vinoth Pandian and Mani Kandan.
 

"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவுகச்சியா கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயி ப்ரேம் ரஞ்சன் கன்வார். இவரது பகுதியில் விவசாயிகள் மிகப் பலரும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இருவருமே கூட ஒரு வாழை விவசாயி தான். அடிக்கடி வெள்ளம் பாதிக்கப்படும் பகுதி இது என்பதால் இளம் வாழைக் கன்றுகள் தண்ணீர் தேங்கி அழுகிப் போவது ஆண்டுதோறும் தொடர்கதையாகவே நடந்து வந்தது. அடிக்கடி பெருமளவில் சூறைக் காற்றும் இங்கு வீசும். இதனால் பெரிய மரங்கள் காற்றில் வீழ்ந்து போக விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே என்றும் இருந்து வந்தது. இதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் ஏழ்மையிலும் சோகத்திலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

ப்ரேம் ரஞ்சன் மகன் கோபால் சிறுவயது முதலே ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டு பள்ளிப் படிப்போடு புதிய புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கி வந்தார்.வாழை விவசாயிகளின் துயர் துடைக்க ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார் கோபால்.
துள்சிபூரிலுள்ள மாடல் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற கோபால், 2013-2014-இல் 'வாழை பயோசெல்' கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு இன்ஸ்பையர்டு விருது கிடைத்தது. அந்த ஆண்டும் வழக்கம்போல் அவரது கிராமத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அது எல்லாவற்றையும் புரட்டிப்போட்டு விட்டது.அப்போது கண்ணீர்க் கடலில் மூழ்கித் திளைத்த வாழை விவசாயிகளுக்குக் கைகொடுத்தது கோபாலின் கண்டுபிடிப்பு.

வெள்ளத்தால் அழிந்து போன இளம் வாழைக் கன்றுகளின் உயிர்த் திசுக்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பெரிய மரங்களை மீண்டும் இளமையாக்கி அதிக மகசூலைத் தரும் யுக்தி ஒன்றைத் தனது நுண்அறிவு, வேளாண் அனுபவம் மூலம் உருவாக்கி வாழை சாகுபடியில் புரட்சி செய்தார் கோபால். இந்தத் தொழில் நுட்பத்துக்குதான் 'வாழை பயோசெல்' எனப் பெயரிடப்பட்டது.

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு தன்னால் படிக்கவைக்க இயலாது என்று கோபாலின் தந்தையும் விவசாயியுமான பிரேமரஞ்சன் குமார் கூறினார். ஆனால், கோபால் தன் முயற்சியைக் கைவிடவில்லை. அரசின் உதவித்தொகை பெற்று படிப்பதற்கான மற்றும் கண்டுபிடிப்புகளை தொடர்வதற்கான முயற்சிகளை ஆரம்பித்தார். 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் பிரதமர் மோடியை சந்தித்தார் கோபால்.

இதன் மூலம் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்னோவேஷன் பவுண்டேஷனுக்கு அனுப்பப்பட்டார் கோபால். அங்குதான் ஆறு புதிய கண்டுபிடிப்புகளை அவர் சாத்தியமாக்கினார்.

இவருடைய நுண்ணறிவு மற்றும் தொழில் நுட்பம் குறித்து அமெரிக்க "நாசா" கழகத்துக்குத் தெரிய வர 3 முறை இவருக்குப் பணியாற்ற வாய்ப்பளித்து, அழைத்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். இது போன்று இதுவரை 8 நாடுகள் இவரை தொடர்பு கொண்டு அழைப்புகளை விடுத்தன. அவற்றையும் இவர் புறக்கணித்து விட்டார். "நான் கோடீஸ்வரன் ஆவது முக்கியமல்ல, எனக்கு இந்திய விவசாயிகள்தான் முக்கியம். எனது தொழில் நுட்பம் குறித்து இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது. இந்திய அளவில் விவசாயிகளின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பேன். விவசாயத்தில் ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள் தங்கள் பகுதி விவசாய பிரச்னைகளை புரிந்து கொண்டு என்னிடம் பகிர்ந்தால் எனது கண்டுபிடிப்புகள் மூலம் நமது நாட்டுக்கு உதவுவேன்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இந்த தன்னலமற்ற வாலிபர்.

19 வயது இளம் விஞ்ஞானி கோபால், 'நாசா' மூன்று முறை வழங்கிய ஆய்வுப்பணி வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டதோடு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பையும் நிராகரித்துவிட்டார். இந்த மறுப்புகளுக்கு அவர் கூறும் ஒற்றைக் காரணம்:"தாய்நாட்டில் சேவைபுரிவதே என் லட்சியம்."

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 100 குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற மகத்தான குறிக்கோளை மனதில் கொண்டிருக்கிறார் கோபால். இதற்கான பணிகளை 2019-இல் தொடங்கியும் விட்டார்.

இதுவரை 8 சிறுவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றிருக்கும் கோபால், தற்போது டேராடூனில் உள்ள அரசு கிராஃபிக் ஈரா இன்ஸ்டிட்யூட்டின் சோதனைக் கூடத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். ஜார்கண்டில் ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்து, அங்கு ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

தற்போது, உலகின் 30 ஸ்டார்ட்-அப் விஞ்ஞானிகளுள் ஒருவராகத் திகழ்கிறார் கோபால். அபுதாபியில் 2020 ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள உலகின் மிகப் பெரிய அறிவியல் கண்காட்சியில் தலைமை உரையாற்றப் போகிறவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கண்காட்சியில் உலக அளவில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

வாழைப்பழச் சாறு மூலம் ஹேர் டை உருவாக்குவது, காகிதக் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது முதலானவை கோபாலின் தனித்துவமான கண்டுபிடிப்புகள்.

5000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தரக்கூடிய 'ஜி ஸ்டார் பவுடர்', 50 ஆயிரம் வால்ட் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய 'ஹைட்ரோ எலக்ட்ரிக் பயோ செல்', சூரிய சக்தியையும் காற்றையும் கலந்து உருவாக்கப்பட்ட 'சோலார் மைல்' எனும் இவரது கண்டுபிடிப்பு மூலம் காற்று 2 கிலோமீட்டர் வேகத்தில் வீசினால்கூட மின்சாரத்தை சேமிக்க முடியும்.

இவரது கண்டுபிடிப்புகளில் 'கோபாலசகா' மிகவும் கவனத்துக்குரியது. இது அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படக்கூடிய ரேடியேஷனை குறைக்கவல்லது. அணு ஆயுதத் தாக்குதலால் ஏற்படும் ரேடியேஷன் நூறு ஆண்டுகளுக்கு தாக்கத்தைத் தரும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் அணு ஆயுத ரேடியேஷனை இந்தக் கண்டுப்பிடிப்பின் மூலம் அகற்றிடலாம்.

டயப்பர் தயாரிப்புகள், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட், டிஷ்யூ பேப்பர், ஹேர் டை என பல விதங்களில் பலன் தருகிறது இவரது 'பனானா நானோ ஃபைபர் அண்ட் கிறிஸ்டல்' கண்டுபிடிப்பு.

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின் ஒற்றை மந்திரச் சொல் இதுதான்:"நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"

கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் தன் தாய் நாட்டுக்காக அர்ப்பணிப்போர்
எல்லையில் கடுங்குளிரில் இத்தேசத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு இணையாகச் சொல்லலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

நான் தாய்நாட்டிலேயே பணிபுரிவேன், தாய்நாட்டுக்காகவே சேவை செய்வேன்"
அமெரிக்காவின் நாசா, ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பை ஏற்க மறுத்த 19 வயது இளம் இந்திய விஞ்ஞானி கோபால்!

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

7 minutes ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, சுவைப்பிரியன் said:

மிக மிக அருமை.வாழத்துக்கள்.

நிச்சயமாக இருக்காது.திறமை மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

சுவை
இவர் ஒரு பிராமணராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சொல்வது சரி.

இல்லாவிட்டால் பல இடங்களில் இவரை தட்டிக் கழிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பிறிதொரு நேரம் இதற்காக கவலைப்படலாம்.

மேற்குலகின் அபிவிருத்தி development (இவரின் பிரத்தியேக துறையில்), ஒழுங்கு discipline  போன்றவற்றை பெறுவதினூடாக / கற்பதனூடாக  தனது மக்களுக்கு மிக அதிகமாகவே இவரால் உதவ முடியும். 

(கட்டுரையில் முக்கியமான பல விடயங்கள் தவறவிடப்பட்டுள்ளதாகப் படுகிறது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஏழ்மையான பின்புலத்தில் கஷ்டங்கள் நிறைந்தச் சூழ்நிலையில் இருந்து, தன் அறிவாற்றலாலும் விடாமுயற்சியாலும் இளம் விஞ்ஞானியாக உருவெடுத்துள்ள கோபாலின்

 

8 hours ago, சுவைப்பிரியன் said:

மற்றும் அர்ப்பனிப்பு இவரை மேலும் மேலும் உயர்த்தும்.

மேட்ற்குலகு இப்படி இருப்பவர் தனது திறமை, விட முயதர்சி, உழைப்பு மூலம் சமூகம் மற்றும் நாட்டிற்கு சேவைசெய்வதை வரவேற்படகுடன், அவரின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதுடன், அவரின் உழைப்பை அர்ப்பணித்து சேவை செய்யுமாறு அவரை ஒரு போதுமே எதிர்பார்க்காது.

கிந்தியாவில், எத்தனையோ பண முதலைகள் அர்ப்பணிப்பை செய்யாது, ஊழல்களில் தோய்ந்து இருக்கும் போது, வசதியில் குறைவான ஒருவரை அர்பணிக்குமாறு எதிர்பார்ப்பது சமூக குறைபாடு என்று தான் கருத வேண்டி இருக்கிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கே சில பேர் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிட்டு தங்களை மாதிரி அடிமையாய் வைத்திருக்க பாக்கினம்😉 
 

நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

நீங்கள் எதற்குள் அடங்குகிறீர்கள் 😀

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நானும் உங்களை மாதிரி அடிமை தான் ...ஆனால் இன்னொரு அடிமையை உருவாக்க விரும்பவில்லை 😅

 

 

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படிப்புக்காவது நாசாவுக்கு போயிருக்கலாம்.
போனால் சில நேரம் திரும்பி வரமாட்டார் கூகிள் பிச்சை போல 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎3‎/‎19‎/‎2020 at 11:27 PM, Kapithan said:

யலோ அக்கா !

நான் இன்னும் அடிமை ஆகவில்லை. எப்போதும்போலவே நானே ராஜா 🏛 நானே மந்திரி🌙

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ரதி said:

ஓகோ சொந்த பிஸ்னசோ 😄

உண்மைதான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் துணிவும் நாட்டுப்பற்றும் பாராட்டிடப்படவேண்டியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

எங்களுக்கும் தமிழீழம் இருந்து.. தேசிய தலைவர் போல.. நல்ல நேர்மையான அரசியல் தலைமைத்துவத்துடன் கூடிய.. நல்ல நிர்வாகமும்... இருந்திருந்தால்.. இவரை விடப் பல மடங்கு என் தேசத்தை நான் நேசித்திருப்பேன். சிங்கப்பூரை விட உயர்ந்து நிற்க உதவி இருப்பேன். 

அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்?

நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே?

உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை?

விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பிகு: இங்கே ஒரு கள உறவு, இதை வாசித்து விட்டு அவராகவே தன்னை இனம் காட்ட விரும்பினால் ஓகே, அவரின் ஒன்று விட்ட சகோதரன், ஏ எல் பரீட்சையில் 3 ஏ, 1பி எடுத்து மருத்துவ கல்லூரி அனுமதி வந்த மறுநாள் புலிகளோடு இணந்து யாழ் கோட்டை யுத்தத்தில் வீரச்சாவடைந்தார்.

இப்படி எத்தனையோ அற்புதமான அறிவாளிகளும், புத்திசாலிகளும் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தை மறந்து, போராளிகளான வராலாறு நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்படி கண்ணுக்கு முன் நடந்த போரில் பங்கெடுகாமல் கொழும்புக்கு பின் வெளிநாட்டுக்கு வந்த நாங்கள், தமிழ் ஈழம் என்றொரு நாடு இருந்தால் நாங்களும் வெட்டிக் கிழித்திருப்போம் என்று எழுதுவதை போல அந்த மாவீரர்களின் தியாகத்தை வேறு யாரும் கொச்சைப் படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/21/2020 at 11:42 PM, goshan_che said:

அப்படி ஒரு தேசத்தை கட்டி எழுப்ப ஒரு உக்கிரமான போராட்டத்தை அவர் வழி நடத்திய போது ஏன் கொழும்புக்கும் பின் வெளிநாட்டுக்கும் வந்தீர்கள்?

நீங்கள் அவர் கேட்டபோது போராட போயிருக்கலாமே?

உங்களை விட திறமைசாலிகளான கேணல் சங்கர் போன்றோர், நாடு கிடைக்கும் வரை காத்திருகாமல், தம் உயர் பதவிகளை எல்லாம் துறந்து விட்டு வெளிநாடுகளில் இருந்து போய் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, அப்போது ஓ எல் மாணவனாய் இருந்த நீங்கள் ஏன் அவர்கள் படையில் சேர்வில்லை?

விடுதலை புலிகள் நீண்ட காலநோக்கில் என்னை பல்வைத்தியம் படிக்க வற்புறுத்தி கொழும்புக்கும், வெளிநாட்டுக்கும் அனுப்பினர், என சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

பிகு: இங்கே ஒரு கள உறவு, இதை வாசித்து விட்டு அவராகவே தன்னை இனம் காட்ட விரும்பினால் ஓகே, அவரின் ஒன்று விட்ட சகோதரன், ஏ எல் பரீட்சையில் 3 ஏ, 1பி எடுத்து மருத்துவ கல்லூரி அனுமதி வந்த மறுநாள் புலிகளோடு இணந்து யாழ் கோட்டை யுத்தத்தில் வீரச்சாவடைந்தார்.

இப்படி எத்தனையோ அற்புதமான அறிவாளிகளும், புத்திசாலிகளும் தமது தனிப்பட்ட முன்னேற்றத்தை மறந்து, போராளிகளான வராலாறு நம் எல்லாருக்கும் தெரியும்.

இப்படி கண்ணுக்கு முன் நடந்த போரில் பங்கெடுகாமல் கொழும்புக்கு பின் வெளிநாட்டுக்கு வந்த நாங்கள், தமிழ் ஈழம் என்றொரு நாடு இருந்தால் நாங்களும் வெட்டிக் கிழித்திருப்போம் என்று எழுதுவதை போல அந்த மாவீரர்களின் தியாகத்தை வேறு யாரும் கொச்சைப் படுத்த முடியாது.

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

உங்களை மாதிரி ஆக்கள் தப்பி ஓடி என்ன பீலாவிடுவீர்கள் என்று கண்காணிக்கவும் ஆக்கள் தேவை தானே. 

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 2:34 PM, Kapithan said:

ஓ.. அப்ப நீங்கள் ....😜😛

(பன்மையில் இருந்ததால் நானும் வாயத் திறந்து போட்டன் 😀)

 

சூ.. இப்படி எல்லாம் கேக்கப்படாது.

முப்படைகள், மருத்துவ பிரிவு எல்லாம் ஏற்படுத்திய பிரபாகரன், புலம்பெயர் பல்மருத்துவர் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியது உங்களுக்கு தெரியாது.

தெரியாது -ஏனென்றால் அது நெடுக்குக்கும் பிரபாவுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்🤣.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.