Jump to content

தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள்

பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ்
பிளமிங்கோ.jayashankar

வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. 

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன.

ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை, வேதாரண்யம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருகின்றன. 

கண்டம் விட்டு கண்டம் வரும் பிளமிங்கோ.jayashankar

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழையால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் போன்ற கடலோரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் காரணமாக தனுஷ்கோடி கடற்பகுதியில் தற்போது ஃப்ளமிங்கோ உட்பட பல வெளிநாட்டுப் பறவைகள் வலசை வந்துள்ளன. இதனை ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் ஆர்வமாகப் பார்த்து மகிழ்வதுடன் ஃப்ளமிங்கோவுடன் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

ஃப்ளமிங்கோ எப்படி இருக்கும் என்ன சாப்பிடும்?

ஃப்ளமிங்கோ பறவைகள் மூன்றிலிருந்து ஐந்து அடி உயரம் இருக்கும். இளம் சிவப்பு நிறக் கால்களையும், வெண்ணிற உடற்பகுதியையும் கொண்டிருக்கும். ஃப்ளமிங்கோவின் அலகு நுனி கருப்பு நிறமாகவும், அகலமாகவும், வளைந்தும் காணப்படும். இவை கரையோரங்களில் வாழும் பறவை என்பதால் சேறு மற்றும் சகதியில் உள்ள பாசிகளை உணவாக உட்கொள்ளும். 

அதே போல் நீர் நிலைகளில் சிறிய மீன்கள், புழு, பூச்சிகளை அலகால் கொத்தி எடுத்து வடிகட்டி உணவாக்கி கொள்ளும். ஃப்ளமிங்கோக்கள் தாவர மற்றும் ஊண் உணவுகளை உட்கொள்ளும். இவை கூடு கட்டுவதில்லை. மாறாக, தண்ணீரில் நின்ற படியே தூங்கும்.

பிளமிங்கோ.jayashankar

ராமேஸ்வரத்தின் விருந்தினர்களான இவை இந்த ஆண்டு ஏராளமாக வந்துள்ளது பற்றி மண்டபம் வனச்சரகர் வெங்கடேஷிடம் கேட்டது பிபிசி தமிழ். "தனுஷ்கோடி கடல் பகுதிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த ஆண்டு வெளிநாட்டுப் பறவைகளான ஃப்ளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வந்துள்ளன. கடந்த ஆண்டு சுமார் 5 ஆயிரம் பறவைகள் மட்டுமே வந்தன. ஆனால் இந்த ஆண்டு பருவ மழை நன்கு பெய்ததன் காரணமாக சுமார் 8 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. இது கடந்த வாரம் எடுக்கப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். 

மேலும் அவர், "ஃப்ளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்திற்காக தனுஷ்கோடி பகுதிக்கு வருகின்றன என பொது மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. உணவு தேடி மட்டுமே ஃப்ளமிங்கோ பறவைகள் இங்கு வருகின்றன" என்றார் அவர்.

வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை 

மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்திலேயே ஃப்ளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வரும் பகுதி தனுஷ்கோடிதான். இவற்றை யாரும் வேட்டையாடினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்" என்றார்.

தனுஸ்கோடி வரும் பிளமிங்கோ.jayashankar

இந்த ஆண்டு வனத்துறை நடத்திய பறவைகள் கணக்கெடுப்பில் எவ்வளவு பறவைகள் வந்திருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்று பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்ற தன்னார்வலர் ஜெயசங்கரிடம் கேட்டது பிபிசி தமிழ். "கோதண்டராமர் ஏரியில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஃப்ளமிங்கோ பறவைகள் அதிகபட்சமாக காணப்படுகின்றன" என்று கூறினார்.

பிளமிங்கோ.jayashankar

மேலும் இது குறித்து பறவைகள் கணக்கெடுக்கும் மற்றொரு தன்னார்வலர் அபிஷேக் பிபிசி தமிழிடம் பேசினார். "ராமநாதபுரம் வனத்துறையினரின் ஒத்துழைப்புடன் மன்னார் வளைகுடா பகுதியில் பறவைகள் கணக்கெடுத்து வருகிறோம். வலசை பறவைகளை இப்பகுதிகளில் அதிகமாக கணக்கெடுத்துள்ளோம். இந்தப் பருவம் முடிவடையும் நேரத்தில் கூட அதிகமான பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இது இங்கு பல்லுயிர்ப் பெருக்கம் (BIO DIVERSITY) நன்றாக உள்ளதைக் காட்டுகிறது. மீண்டும் இவ்வகையான வலசைப் பறவைகளை வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இப்பகுதியில் பார்க்கலாம்" என்றார் அவர்.


 

https://www.bbc.com/tamil/india-51915312

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டைமானாறு பகுதியிலும் காணக்கிடைக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

எங்கை படத்தில 32 தானே இருக்கு

32 * தனுஸ்க்கோடி மொத்த நீளத்தால் பெருக்க வேண்டும் 
படத்தில் அண்ணளவாக வெறும் 15-18 அடி நீளம் மட்டுமே உள்ளது 
ஒரு நாரை நிற்கும் இடம் அண்ணளவாக 1 அடியாக இருக்கலாம் 
எனும் கணிப்பில் எழுதுகிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல.
    • சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.