Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.

Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.

பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது. 

சனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்கப்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஊரிலேயே வழமையாக நடப்பது.பெற்றோலில் இருந்து பனடோல் வரை பதுக்கி பின்னர் கூடிய விலைக்கு விற்பார்கள்.
அங்கேயிருந்து வந்தவர்கள் இதைத் தானே செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் மாத்திரம் அல்ல மிச்சம் பக்கம் உள்ள elbrook cash and carry இதே வேலை பழைய முட்டைகளை றீ சேலரான  நம்மவர்களுக்கு வித்தானம் பொதுவாகவே அவனின் முக்கிய வியபாரம் ஒப் லைசன்ஸ் பொருள்களை விற்பது நம்மவர்தான் அந்த பாக்கியின் வாடிக்கையாளர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பீதியில்... சனம் அதிகமாக கொள்வனவு செய்வதை பார்த்த...  
இங்குள்ள சில  தமிழ்க்கடைகள்... கிலோ நான்கு ஐரோ விற்ற மரக்கறி வகைகளை,
கிலோ  7 ஐரோவிற்கு விற்க ஆரம்பித்துள்ளார்கள்.

அப்படியே... அரிசி, ஆட்டா மா,  உளுந்து, மைசூர் பருப்பு போன்றவையும்  விலை ஏறியுள்ளது.
அப்படி இருந்தும், மக்கள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குள்ளேயே வண்டி ஒட்டினவன் இங்க எப்பிடியெல்லாம் ஓட்டுவான்

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில்  காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் .  இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும்.  இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ?  இருந்தும்  இதை செய்கின்றார்கள் என்றால்  விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில்  காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் .  இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும்.  இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ?  இருந்தும்  இதை செய்கின்றார்கள் என்றால்  விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள். 

 

2 hours ago, கிருபன் said:

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட தென்னாசிய சமூகத்திடம் இருந்து இதை விட வேற எதை எதிர்பார்கிறீர்கள்?

கொரோனாவை விட மோசமான கிருமிகள்.

கேட்டால் தாம் entrepreneurs என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வழமையாக  ஷொப்பிங் போவதில்லை! ஆனால் இன்று எட்டரை மணிக்கு பாலும் பாணும் வாங்க அருகில் இருக்கும் பெரிய Sainsbury’s supermarket க்குப் போனேன். கார் பார்க் full. உள்ளே போகாமல் அருகில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் கடை (வெறிச்சோடியுள்ளது) கார் பார்க்கில் காரை விட்டு சுபெர்மார்க்கெற்றுக்குள் போனால் உள்ளே ஒரு மைலுக்கு சனம் pay பண்ண கியூவில் நிற்கின்றது🥺

அவர்கள் வயதுபோனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7-8 மணி நேரத்திற்குப் பின்னர் போய் 45 நிமிடத்தில் இருந்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு (ஒரு அயிட்டம் மூன்றுக்கு மேல் வாங்கேலாது) கியூவில் நிற்கின்றார்கள்! இதற்குள் நின்று ஒன்றும் வாங்கேலாது என்று திரும்பி வந்துவிட்டேன்.

அருகில் இருக்கும் corner shops இல் பாண், பால் வாங்கலாம். ஆனால் தமிழர்கள் கொள்ளைலாபம் அடிக்க விலையைக் கூட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். போனால்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

கோடை காலத்தில் குளங்கள் எல்லாம் வற்றி வெறுந்தரையாய் கிடக்கும். அப்போது முயல் போன்ற பிராணிகள் நீர் தேடி நடு வெட்டைக்கு வரும்.அப்போது அம் முயலை திரத்தி அடிப்பது சுலபமாய் இருக்கும். அதுபோல்தான் மக்களின் அவசிய தேவையை கடைக்காரர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான்,  வேட்டை நாயால் திருத்தப்பட்டு தவிக்கும் முயல், உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

...

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

நாதமுனி, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

ஆங்கிலத்தில் பேசினால்தான் படித்தவன், அறிவாளி என மாயை இன்னமும் உள்ளது. நகரங்களில், குறிப்பாக சென்னையில் பல தமிழர்கள் ஆங்கிலத்தில்தான் 'பீட்டர்' விடுவதுண்டு.

இந்தியர்களென்றால் இந்தியில் பேசவேண்டுமென எதிர்பார்ப்பும், இந்தி தெரியாது என சொன்னால் ஏற இறங்க விநோதமாக பார்ப்பவர்களையும் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

அந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்னும் செய்ய இயலாது.

1 hour ago, suvy said:

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

சாரோடா லொள்ளுகளை, வீட்டில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?


தமிழ் கடைக்கு போனால் பெரும்பாலான சாமான்கள் இல்லை ...இருக்கின்ற மரக்கறிகளுக்கு விலையை கூட்டி வைக்கிறார்கள் ...6 மாசத்தில்  கிடைக்கிற லாபத்தை ஒரு மாசத்தில் எடுத்து விடுவார்கள்.🙂
கொரோனாவை விட சனங்கள் பொருட்கள் வேண்டிக் குவிப்பதை பார்க்க பயமாயிருக்கு🤔 ...6,7 மாசத்திற்கு வெளியால வெளிக்கிடேலாது என்ட மாதிரி வேண்டிக் கொட்டினம் ...எனக்கு இன்னமும் பருப்பு கிடைக்கேல் 😟.

 

இப்படியான நேரத்தில் ஊரில் இருந்திருந்தால் பெட்டரோ என்று படுது😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

 

மன்னிக்கவும்,
நானறிந்த மட்டில்

Running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் தவிச்ச முயல் அடிப்பதல்ல.

Hounds என்றால் வேட்டை நாய்கள். Hares என்றால் முயல்.

ஊரில் “அங்காலையும் பாடி இங்காலையும் பாடி” என்பார்கள் அதை ஒத்ததுதான் இதன் அர்த்தம்.

அதாவது முயலோடும் ஓடும் அதே ஆள், முயலை வேட்டை ஆடும் நாயோடும் ஓடுவது அல்லது ஓடுவதைப் போல் காட்டுவது.

தமிழில் இதற்கு அருகான பழமொழிகள்

“பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” அல்லது

”தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடல்”.

எனது கருத்தில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்வேன்.

பிகு: இதில் தனிமனித bullying ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். 

2. To act duplicitously or hypocritically; to speak or act out against something while engaging or taking part in it.How can you be taken seriousy as a reformer when you have continued to accept gifts? You can't run with the hare and hunt 
with the hounds, Senator.

இதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

இன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி  ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். 

2. To act duplicitously or hypocritically; to speak or act out against something while engaging or taking part in it.How can you be taken seriousy as a reformer when you have continued to accept gifts? You can't run with the hare and hunt 
with the hounds, Senator.

இதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

இன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி  ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.

 

நீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை. 

நான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.

தவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).

நீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை. 

நான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.

தவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).

நீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய வாகனம் தொடர்பில் விசாரணை! 19 MAR, 2024 | 11:08 AM   விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நீதிமன்றில் ஆஜராகும் போது பயன்படுத்தியதாக கூறப்படும் வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்டது என முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வழங்கப்பட்ட இந்த வாகனம் கைதிகளின் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக மாத்திரமே என்பதுடன் இதில் கைதிகளை ஏற்றிச்செல்ல முடியாது எனும் நிபந்தனையை மீறி கெஹலிய ரம்புக்வெல்ல இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இரகசிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/179097
    • 19 MAR, 2024 | 11:21 AM   வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று  கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை  (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்த நீதிபதி வழக்கினையும் தள்ளுபடிசெய்தார்.  குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம்,  அருள், க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.   https://www.virakesari.lk/article/179099
    • காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர் - தொடர்கின்றது ஊடகவியலாளர்களை இலக்குவைக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை Published By: RAJEEBAN    19 MAR, 2024 | 10:56 AM   காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய  படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த செய்திசேகரிப்பதற்காக சக ஊடகவியலாளர்களுடன் அல்ஜசீராவின் அல்கூலும் மருத்துமவனைக்கு சென்றிருந்தார். அல்ஜசீராவின் செய்தியாளரை இஸ்ரேலிய படையினர் இழுத்துச்சென்றனர், அவரது ஊடக உபகரணங்களை அழித்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்களிற்கான அறையில் குழுமிய ஏனைய ஊடகவியலாளர்களையும் கைதுசெய்தனர் என விடுதலை செய்யப்பட்ட பின்னர் அல்ஜசீரா ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கண்கள் கைகளை கட்டிய இஸ்ரேலிய படையினர் அவர்களை நிர்வாணமாக்கி தாக்கினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாராவது அசைந்தால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வோம் என இஸ்ரேலிய படையினர் எச்சரித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனது சகாக்கள் சிலரும் விடுதலை செய்யப்பட்டனர் என்பதை அறிகின்றேன் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். காசாவின் மீது இஸ்ரேல் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தாக்குதல் குறித்த செய்திகளை வெளியிடும் செய்தியாளர்களிற்கான தளமாக அல்ஷிபா மருத்துவமனை காணப்படுகின்றது. அல்ஜசீரா செய்தியாளரை கைதுசெய்து சித்திரவதை செய்தனர் தாக்கினார்கள் என அல்ஜசீராவின் மற்றுமொரு செய்தியாளரான ஹனி மஹ்மூட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179096
    • 🙏🏾 🌺 உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.