Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'.

Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம்.

பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாமல் போய் விட்டது. 

சனம் அள்ளிக் கொண்டு போய் விட்டது. இரண்டு, மூண்டு நாளில் வந்து பாருங்கள் என்று சொல்லி, இப்போது பதுக்கி வைக்கப்பட்டன புதிய கூடிய விலை ஸ்டிக்கர் உடன் தினமும் கொஞ்சமாக வியாபாரத்துக்கு வருகின்றன.

உங்கள் அனுபவங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஊரிலேயே வழமையாக நடப்பது.பெற்றோலில் இருந்து பனடோல் வரை பதுக்கி பின்னர் கூடிய விலைக்கு விற்பார்கள்.
அங்கேயிருந்து வந்தவர்கள் இதைத் தானே செய்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் மாத்திரம் அல்ல மிச்சம் பக்கம் உள்ள elbrook cash and carry இதே வேலை பழைய முட்டைகளை றீ சேலரான  நம்மவர்களுக்கு வித்தானம் பொதுவாகவே அவனின் முக்கிய வியபாரம் ஒப் லைசன்ஸ் பொருள்களை விற்பது நம்மவர்தான் அந்த பாக்கியின் வாடிக்கையாளர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பீதியில்... சனம் அதிகமாக கொள்வனவு செய்வதை பார்த்த...  
இங்குள்ள சில  தமிழ்க்கடைகள்... கிலோ நான்கு ஐரோ விற்ற மரக்கறி வகைகளை,
கிலோ  7 ஐரோவிற்கு விற்க ஆரம்பித்துள்ளார்கள்.

அப்படியே... அரிசி, ஆட்டா மா,  உளுந்து, மைசூர் பருப்பு போன்றவையும்  விலை ஏறியுள்ளது.
அப்படி இருந்தும், மக்கள் வாங்கிக் கொண்டு போகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குள்ளேயே வண்டி ஒட்டினவன் இங்க எப்பிடியெல்லாம் ஓட்டுவான்

Link to comment
Share on other sites

1 hour ago, Nathamuni said:

large.Untitled.jpg.57ecbb74f35ede060a8bb4a4a144fdfb.jpg

Original Expiry Date: 31 Dec 2018

New Expiry Date: 31 Dec 2021

🙄

இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில்  காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் .  இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும்.  இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ?  இருந்தும்  இதை செய்கின்றார்கள் என்றால்  விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சண்டமாருதன் said:

இவ்வாறான ஆதாரங்கள் கிடைத்தால் அந்தந்த நாட்டு உணவுக் கட்டுப்பாட்டு அல்லது சுகாரதர துறைக்கு தெரிவியுங்கள். ரொறன்ரோவில்  காலவதியான பால்மா பெட்டிகளில் திகதி மாற்றி விற்ற சம்பவங்களை கேள்விப்பட்டுள்ளேன் .  இவற்றை கண்டும் காணாமல் இருப்பது ஒருவர் உடல் நிலை மோசமாவதற்கு காரணமாக அமையும்.  இந்த காலவதியான அப்பளத்தில் இருந்து எவ்வளவு லாபத்தை பெறமுடியும் ?  இருந்தும்  இதை செய்கின்றார்கள் என்றால்  விலை உயர்நத பொருட்கள் காலாவதியானால் இவர்கள் விற்பனையில் இருந்து அகற்ற மாட்டார்கள். 

 

2 hours ago, கிருபன் said:

இந்த கொரோனா நெருக்கடியில் பதுக்கிவைத்த பொருட்களை விற்றே பலர் பெரும் பணக்காரர்களாகிவிடுவார்கள். இரக்கம் பார்க்காமல் trading standard க்கு அடித்துச் சொல்லவேண்டும். முடிந்தால் படங்களையும் அனுப்பவேண்டும்

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கெட்ட தென்னாசிய சமூகத்திடம் இருந்து இதை விட வேற எதை எதிர்பார்கிறீர்கள்?

கொரோனாவை விட மோசமான கிருமிகள்.

கேட்டால் தாம் entrepreneurs என்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வழமையாக  ஷொப்பிங் போவதில்லை! ஆனால் இன்று எட்டரை மணிக்கு பாலும் பாணும் வாங்க அருகில் இருக்கும் பெரிய Sainsbury’s supermarket க்குப் போனேன். கார் பார்க் full. உள்ளே போகாமல் அருகில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் கடை (வெறிச்சோடியுள்ளது) கார் பார்க்கில் காரை விட்டு சுபெர்மார்க்கெற்றுக்குள் போனால் உள்ளே ஒரு மைலுக்கு சனம் pay பண்ண கியூவில் நிற்கின்றது🥺

அவர்கள் வயதுபோனவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 7-8 மணி நேரத்திற்குப் பின்னர் போய் 45 நிமிடத்தில் இருந்ததையெல்லாம் அள்ளிக்கொண்டு (ஒரு அயிட்டம் மூன்றுக்கு மேல் வாங்கேலாது) கியூவில் நிற்கின்றார்கள்! இதற்குள் நின்று ஒன்றும் வாங்கேலாது என்று திரும்பி வந்துவிட்டேன்.

அருகில் இருக்கும் corner shops இல் பாண், பால் வாங்கலாம். ஆனால் தமிழர்கள் கொள்ளைலாபம் அடிக்க விலையைக் கூட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். போனால்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

'இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

கோடை காலத்தில் குளங்கள் எல்லாம் வற்றி வெறுந்தரையாய் கிடக்கும். அப்போது முயல் போன்ற பிராணிகள் நீர் தேடி நடு வெட்டைக்கு வரும்.அப்போது அம் முயலை திரத்தி அடிப்பது சுலபமாய் இருக்கும். அதுபோல்தான் மக்களின் அவசிய தேவையை கடைக்காரர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ராசவன்னியன் said:

திரு.நாதமுனி, திரு.சுவி இருவரின் விளக்கத்திற்கும் நன்றி.

ஈழத்தில் பயன்பாட்டிலிருக்கும் உவமைகள், சுவாரசியமாக உள்ளன.

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான்,  வேட்டை நாயால் திருத்தப்பட்டு தவிக்கும் முயல், உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஹீ... ஹீ...

இது ஈழ மொழி அல்ல வன்னியர். தமிழ் மொழி. நான் சொன்ன உவமானம் தமிழகத்தில் பாவிக்கின்றனரே. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

...

நம்மூரில் சிங்களவன் எதிரியானான். அவனது மொழியினை எதிர்த்ததால், தமிழில் அக்கறை வந்தது. மேலும் A/L (+2) வரை தமிழிலேயே படித்தோம். அதே போல சிங்களவர்கள் சிங்களத்தில் படித்ததால், இணைப்பு மொழியில்லாது, சிறிய தீவில் ஒருவரை ஒருவர் புரியாது வாழ்ந்தோம்.

உங்கள் ஊரில், எதிரி நண்பனாக நடித்தான் அதுதான் சிக்கல். அதனால் தமிழில் அக்கறை இல்லாமல் வேறு மொழிகளில் அக்கறை வந்தது. ஹிந்தி, ஆங்கிலத்தில் உள்ள மோகம் அளப்பரியது.

சரவணன் பாலசுப்ரமணியன் என்பவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார். London சிட்டியில் ஒரு காண்ட்ராக்ட் இருப்பதாக சொல்லி. அவரது பெயரைப் பார்த்து, அவரது ஆங்கில மெயிலுக்கு, தமிழில், 'ரேட் என்ன, சரவணா' என்று கேட்டேன்.

ஆங்கிலத்திலேயே பதில் வந்தது. I can speak Tamil but can't read, sorry. உண்மையிலேயே ரத்தம் கொதித்தது. இதுக்கு எதுக்குடா தமிழ் பேரை வைத்துக்கொண்டு அலையுறீங்க என்று பதில் போட்டேன். I am so sorry என்று பதில் போட்டார். அதுக்கு மேல் அவருடன் பேச பிடிக்கவில்லை.

நாதமுனி, நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான்.

ஆங்கிலத்தில் பேசினால்தான் படித்தவன், அறிவாளி என மாயை இன்னமும் உள்ளது. நகரங்களில், குறிப்பாக சென்னையில் பல தமிழர்கள் ஆங்கிலத்தில்தான் 'பீட்டர்' விடுவதுண்டு.

இந்தியர்களென்றால் இந்தியில் பேசவேண்டுமென எதிர்பார்ப்பும், இந்தி தெரியாது என சொன்னால் ஏற இறங்க விநோதமாக பார்ப்பவர்களையும் வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கலாம்.

அந்த மனநிலையில் இருப்பவர்களை ஒன்னும் செய்ய இயலாது.

1 hour ago, suvy said:

ஆத்திரத்தில் புத்தி ஒழுங்கா வேலை செய்யாது நாதம்ஸ்.....இதுக்கு நீங்கள் சரவணன் பாலசுப்பிரமணியனின் அப்பாவிடம்தான் பேசாமல் இருந்திருக்க வேண்டும்,  அப்பாவியிடம் கோபம் கூடாது....!   😁

சாரோடா லொள்ளுகளை, வீட்டில் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?


தமிழ் கடைக்கு போனால் பெரும்பாலான சாமான்கள் இல்லை ...இருக்கின்ற மரக்கறிகளுக்கு விலையை கூட்டி வைக்கிறார்கள் ...6 மாசத்தில்  கிடைக்கிற லாபத்தை ஒரு மாசத்தில் எடுத்து விடுவார்கள்.🙂
கொரோனாவை விட சனங்கள் பொருட்கள் வேண்டிக் குவிப்பதை பார்க்க பயமாயிருக்கு🤔 ...6,7 மாசத்திற்கு வெளியால வெளிக்கிடேலாது என்ட மாதிரி வேண்டிக் கொட்டினம் ...எனக்கு இன்னமும் பருப்பு கிடைக்கேல் 😟.

 

இப்படியான நேரத்தில் ஊரில் இருந்திருந்தால் பெட்டரோ என்று படுது😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

Running with hares and hunting with hounds!!

நீங்களும் என்னுடன் சேர்ந்தே பயத்தில் ஓடுகிறீர்கள். இடையே எனது பாக்கெட்டினுள்ளும் கையை போட்டு உருவிக்கொள்கிறீர்கள் - நியாயமில்லாமல்..

டைட்டானிக் கப்பலில் வருவது மாதிரி... பணம் வைரஸினைக் தடுக்காது. 🙄

 

மன்னிக்கவும்,
நானறிந்த மட்டில்

Running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் தவிச்ச முயல் அடிப்பதல்ல.

Hounds என்றால் வேட்டை நாய்கள். Hares என்றால் முயல்.

ஊரில் “அங்காலையும் பாடி இங்காலையும் பாடி” என்பார்கள் அதை ஒத்ததுதான் இதன் அர்த்தம்.

அதாவது முயலோடும் ஓடும் அதே ஆள், முயலை வேட்டை ஆடும் நாயோடும் ஓடுவது அல்லது ஓடுவதைப் போல் காட்டுவது.

தமிழில் இதற்கு அருகான பழமொழிகள்

“பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” அல்லது

”தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடல்”.

எனது கருத்தில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டினால் திருத்தி கொள்வேன்.

பிகு: இதில் தனிமனித bullying ஏதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். 

2. To act duplicitously or hypocritically; to speak or act out against something while engaging or taking part in it.How can you be taken seriousy as a reformer when you have continued to accept gifts? You can't run with the hare and hunt 
with the hounds, Senator.

இதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

இன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி  ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

இந்த phrase ஆங்கில மொழி உருவாகிய மத்திய காலப்பகுதியில் இருந்து பாவிக்கப்பட்டு வருகின்றது. பல வித கருத்துக்களை பலர் சொல்கிறார்கள். 

2. To act duplicitously or hypocritically; to speak or act out against something while engaging or taking part in it.How can you be taken seriousy as a reformer when you have continued to accept gifts? You can't run with the hare and hunt 
with the hounds, Senator.

இதுவே எனக்கு சரியாக பட்டாலும், தெளிவில்லை என உணர்ந்ததால் பின்னர் மேலதிக விளக்கம் வன்னியருக்கு கொடுத்துளேன்.

குழம்பிய குடையில் மீன் பிடித்தல் என்றும் இன்னோரு உவமை உண்டு. சரியான கருத்து, நீங்கள் மிக பெரிய பண நெருக்கடியில் உள்ளீர்கள். உங்கள் பிரச்னை முழுவதும் தெரிந்த நண்பனாக, உங்களுக்கு உதவி செய்ய வேண்டிய நான், உங்களிடம் இருக்கும் உடமை ஒன்றினை, மிக்க குறைந்த விலையில் எனது உடமையாக்கிக் கொள்வது தான், தவிக்கும் (முயல்) உங்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் (கொள்ளை) அடித்துக் கொள்வது.

இன்னும் சிலர், வேடடைக்கு துரத்தும் மிருகங்களிடம் தப்பி  ஓடும் முயல்கள் உடன், பயந்தது போலவே சேர்ந்து ஓடி, குறித்த முயல் ஒன்று சிதறி ஓடி தனிமையில் மாட்டும் போது லபக் என்று கவ்விக் கொள்வது என்ற பொருளும் உள்ளது என்கின்றனர்.

 

நீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை. 

நான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.

தவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).

நீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நீங்கள் கொடுத்த “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும்” உவமானத்தை பற்றியோ நீங்கள் கொடுத்த மேலைதிக விளக்கத்தை பற்றியோ நான் எதுவும் கூறவில்லை. 

நான் கூறியதெல்லாம் running with the hares and hunting with the hounds என்பதன் அர்த்தம் “தவிச்ச முயல் அடிப்பது” அல்ல என்பது மட்டுமே.

தவிரவும் நீங்கள் கூறுவது போல் ஆங்கிலம் கூறு நல்லுலகில் இந்த சொலவாடையின் அர்த்தம் பற்றிய மாறுபட்ட கருத்துகள் ஏதுமில்லை (சகல நம்பதகு அமைபுக்களும் இதயே சொல்கிறன).

நீங்கள் தந்த ஆங்கில உதாரணத்தில் கூட ஒரு செனேட்டரின் duplicity ஐ அதாவது “அங்காலும் பாடி இங்காலும் பாடி” தனத்தை குறிக்கவே இந்த சொலவாடை பயன்படுத்தப் பட்டுள்ளது.

 

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் காதலுடன் நிப்பாட்டி இருக்கலாம்.......கல்யாணம் வரை போயிருக்கக் கூடாது..........!  😂 நன்றி ஏராளன் .......!
    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.