Jump to content

தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அட நில்லுங்க பாஸ். இதெல்லாம் யார் மெத்த படிச்சது என்பதை பற்றியதல்ல பாஸ். 

கருத்துகளம் என்றாலே கருத்து, எதிர்கருத்து இருக்கும்தானே.

நிண்டு விளையாடுங்க.

உங்களை மாதிரி பொறுமையா நிண்டு விளையாட நேரமில்லை பாஸ்... வேற எங்காவது இப்படி அலம்பறை பண்ணினால், வருவியல் தானே. 

ஏதோ, தெய்வம் மாதிரி நீங்கள் இருக்கிற நம்பிக்கையில் தான், நானும் ஏதோ, நமக்கு தெரிச்சதை சொல்லி அலம்பறை பண்ணுறன். 

கையை விடமாட்டியள் தானே. 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Nathamuni said:

சரிங்க dean of yarl மெத்தபடிச்சனியள்... சொல்லுறது சரியாய் இருக்கும்.

பின்ன வரட்டே போட்டு....  😁

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

 

அடிக்கிற காத்தில அம்மிக்கல்லே பறக்குது, அரசமரத்திலை எம்மாத்திரம்? அவனவன், முக்கியமாக வந்தபின் காப்பவர்கள், பயத்தில, கிடைத்ததை கொண்டோவடுதால், கடைக்காரர்கள், இதை பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் நீண்டகால பாதகம் தரும் நம்பிக்கையீனத்தினை சம்பாதிக்கின்றனர்.

உண்மையான வார்த்தைகள். ஆனால் எங்கட கடைக்காறருக்கு நம்பிக்கையான வாடிக்கையாளர் (?) loyalty என்பது என்கின்ற சொல்லு ஒன்று இருப்பதே தெரிய வாய்ப்பில்லை. 

அடிப்படையில் என் இனத்திற்கு அறம் என்பதே இல்லை என்பது என் தெளிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

கோசான் மெத்தப் படிசவரோ இல்ல படித்து கிழித்தவரோ எனக்குத்  தெரியாது. ஆனால் பதில் எழுதுவதற்கு முன்னர் நன்றாக ஆய்வு -research செய்கிறார் என்பது தெளிவு 😀

 

6 minutes ago, Nathamuni said:

உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

ஆனால் சிறந்த மனிதர்.

முனி பாஸ்,

1. நானும் உப்பிடிதான் யோசிச்சு எங்கட கற்பிதன் பாஸை கனகாலமா கப்பித்தான் எண்டு எழுதினான். மனுசன் தங்கமெல்லோ, ஒரு வார்த்தை மறுப்புச் சொல்லேல்ல.

2. அட சொன்னா நம்புங்க பாஸ். ஒவ்வொரு கருத்தையும் ஆராய்ந்து எழுத முடியுமா. என்ன சின்ன வயசில இருந்து பாண் சுத்தி வாற பேப்பர் ஈறா ஒண்டையும் விடாம வாசிச்சதால சில விடயம் மனசில் நிக்குது. அதை எழுதும் முன் தேவைப்பட்டால் எப்பவாவது உறுதி செய்து கொள்கிறேன் அவ்வளவுதான். 

ஆனால் என்ர குழப்படியல் எல்லாம், அரசியல்,  வரலாறு, சட்டம், பொது அறிவு, அடிப்படை தமிழ், ஆங்கிலம் இவற்றில்தான் என்பதை நீங்கள் கண்டிருப்பியள்.

மற்றும்படி நில்மினியின் மருத்துவ குறிப்புகள், சோமசுந்தரம் ஐயா, மற்றை முனைவர் போன்றோரின் தமிழ் இலக்கிய பதிவுகளில், வாத்தியாரின்   தமிழ் இலக்கண திரியில், கம்யூட்டர், என்ஜினியரிங், கணிதம்,  நடனம் சம்பந்தமான திரிகளில், இப்படி பலதில், கோசான்சே நன்றி வணக்கம் போட்டு விட்டு, சுவரோடு சுவராய் நிற்பதையும் கண்டிருப்பியள்.

தெரியாத விடயத்தை ஆராய்ந்து எழுத முடியாது. அப்படி எழுதுவதென்றால் யாழில் முழு நேர ஊழியனாக வேண்டும் 🤣 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ராசவன்னியன் said:

இந்த தவிச்ச முயல் அடிப்பது'னா என்ன..?

தூண்டில் போட்டு பிடிக்குறதா..?

ஒன்னும் புரியலை..!

இந்த குறித்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்கள் (முயல்கள்) தவிக்கிறார்கள் அத்தியாவசிய உணவுகளை கொள்வனவு செய்தே ஆக வேண்டிய நிலையை எண்ணி, அப்படிப்பட்ட உணவுகளின் தட்டுப்பாட்டை, பற்றாக்குறையை எதிர் நோக்கி.  

அந்த இக்கட்டான  நிலையை தமக்கு சாதகமாக பாவித்து (exploit), சாதாரணமாக விற்பனையாளர்களின் கையிருப்பில் இருக்கும் உணவுகளை  தட்டுப்பாடு மற்றும் பற்றாக்குறை போன்ற செயற்கையான தோற்றத்தை ஏற்படுத்தி, விலைகளை ஏற்றி விற்றும்,   வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல பாசாங்கு பண்ணி தராதரம் அற்ற பொருட்களை சந்தைப்படுத்தியும்  வாடிக்கையாளரிடம் இருந்து கொள்ளை இலாபம் விற்பனையாளர்கள் அடிக்கிறார்கள்.


முக்கியமாக, தவிச்ச முயல் அடிப்பது  என்பது வாடிக்கையாளரின் பார்வையில் (perspective of customers).

இவ்வளுவு விளக்கியும், தவிச்ச முயல் அடிப்பது என்பதன் உணர்வை எழுத்தில் வெளிக்கொணர்வதற்கு முடியவில்லை.

ஆனால், bird's eye view இல் (அதாவது இந்த நிகழ்வை முழுமையாக நோக்குமிடத்து), விற்பனையாளர்கள்  come out smelling of roses (அப்படி கொள்ளை இலாபம் அடித்தும் விற்றபனையாளர்கள் நன்மை புரிபவராகவே நோக்கப்படுகிறார், ஏனெனில் அத்தியாவசிய உணவுகளை (செயற்கையாக ஏற்படுத்திய) பற்றாக்குறை, தட்டுப்பாடு வேளையிலும் குறிப்பிட்ட விற்பனையாளரிடமிருந்து பெறக்   கூடியதாக இருப்பதால்) என்பது  மிகவும் பொருந்தி வருவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

1) உங்களை முதல், முதலாக சந்திக்கிறேன்.

2) உங்கள் பெயர்,  ஸ்ரீலங்கன் விமானங்களில் கேப்டன் என்பதனை சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் உள்ளது என்று நினைக்கிறேன் சரியோ?

ஆமாம், கோசன் சரியான தகவலுக்காக சிரத்தை எடுப்பார். ஆனால் அதில் செலவழிக்கும் நேரம் குறித்தே நான் கவலை கொள்வேன். 

3)அதனை சொன்னாலும், my car, my petrol என்பதாக பேசி பயமுறுத்துவார் ஆகையினால்... இப்ப அவரை அப்படியே அவர் போக்கில் விடுவதே நல்லது என்பது எனது பார்வை.

4) ஆனால் சிறந்த மனிதர்.

1) வணக்கம் நாதமுனி(யர்) ஏறக்குறைய பன்னிரெண்டு வருடங்களாக யாழ் .கொம் ஐ வாசித்து வருபவன். அண்மையில்தான் இணைந்தேன். உங்கள் பெயர் எனக்குப் பரிச்சயமானது.

2) உங்கள் யூகம் சரியானது.  Captain என்பதன் Spanish (?) வடிவம்.

3) சரியான தகவலுக்காக மிகவும் சிரத்தை எடுத்து ஆய்வு செய்தல் Research  Methodology ன் மிக முக்கியமான பண்பு / அம்சம்.  ஆய்வு முடிவுகள் எழுமானந்தமானதாக இருக்காது. எனவே அவர் தனது முடிவுகளில் உறுதியாக நிற்பது இயல்பானதே.

4) இன்றைய பொழுதுகளில் பிறரின் நற்பண்புகளை போற்றுவதே குறைந்து போயே போயிற்று. உங்கள் கூற்றுநீங்கள் பெரியவர் (குணத்தில்) என்பதைக் காட்டுகிறது . வாழ்த்துக்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‭020 3738 6000‬

இந்த நம்பருக்கு அடித்து market and competition authority யிடம் price gouging  என்று முறையிட முயற்சியுங்கள்.

மற்றைய நாடுகள் (யூ எஸ்) போல பதுக்கல் விலை கூட்டலுக்கு எதிரான சட்டம் யூகேயில் போதுமான காத்திரமாக இல்லை.

அடுத்த முறை வாக்கு கேட்டு வரும் நபரிடம் இனி இப்படி நடக்காமல் இருக்க அவர்கள் என்ன செய்வார்கள், செய்பவருக்கே என் வாக்கு எனச் சொல்லுங்கள்.

2 hours ago, colomban said:

செல்வர‌த்தினம் மாஸ்டரிடம் பெற்ற பொருளியல் அறிவை கொண்டு சொல்வ‌தென்றால் 
இங்கு கேள்வி கூட நிரம்பல் குறைவு எனவே பொருட்களின் விலை கூடும்.

செல்வநாயகம் எல்லோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

நான் இன்றைக்கு பாக்கின்ட  கடைக்கு இறைச்சி வாங்க போனேன் ... சரியான சனம் ...£15 என்னவோ  இறைச்சி , 2 ரின் தக்காளியும் வாங்கினேன் ...£27  எடுத்து இருந்தார்கள் ...முதலில் யோசிக்காமல் காட்டில் டப் பண்ணிப் போட்டு  பில்லை பார்த்தால் £10 கூட எடுத்திருக்கிறான்...போய் கேட்டவுடன்  சொறி என்று போட்டு தூக்கி தந்தான் ...அவசரத்தில் பார்க்காமல் வாங்கிற எத்தனை பேருட்டை ஆட்டையைப் போட்டானோ ?

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

Link to comment
Share on other sites

6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடடா இந்தத் திரியை வந்து பார்க்காமல் நானும் ஒண்டைத் திறந்துபோட்டன்

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் 😁

8 hours ago, colomban said:

கொழும்பான், சசி வர்ணம்

இவர், டிக்கா ப்ரோ (முன்னர், மகிழ்சி டா) கொழும்பு தமிழ் பேசும் ஒரு அருமையான நகைச்சுவையாளர். இவரது concept மிகவும் பிரமிக்கவைப்பவை. ஆட்டோமேட்டிக் காமெராவை வைத்துக்கொண்டு, தானே பல பாத்திரங்களில் நடிப்பார். அநேகமாக பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவர் அதேயளவு சிங்கள மொழிப்புலமையும் கொண்டிருப்பதால், இருபக்கமும் ரசிகர்கள் உண்டு.

கலியாணம் பண்ணுற குட்டி, மெஸ்ஸேய மாறி அனுப்பி னது சுட்டி அப்செட் ஆயி..

குட்டிட அப்பாவ வசியம் பண்ணிறை 

வீட்டுக்குள்ள கள்ளன் பாய்ஞச்சி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

அட நீஙக தானோ அது.  பாக்கி அசடு வழிந்ததை பார்த்து சிரித்துக்கொண்டேன். நான் £17.30 வாங்கினேன். சரியாக காசை வாங்கி கொண்டார்.

இதோடா வந்திட்டார் மைனரு 🤑

4 hours ago, நிழலி said:

இரண்டையும் இணைத்து (Merge) விடவா? நீங்களும் நாதமும் ஓம் என்றால் Merge செய்து விட முடியும்.

நீங்கள் வேற அவ தெரிஞ்சே தான் இன்னொரு திரி திறந்தவ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 5:17 PM, goshan_che said:

செல்வநாயகம் எல்லோ?

தெரியும் போல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 7:14 AM, colomban said:

தெரியும் போல‌

ஓம். மீசைக்கார வாத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம். மீசைக்கார வாத்தி.

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬


 
Link to comment
Share on other sites

" தவிச்ச முயல் அடிக்கும் நம்மவர்கள்" 

தமிழ் ஊடகங்களை மட்டுமே செவிமடுத்தால் இந்த முயல்கள் மட்டுமே தெரியும் 

கொஞ்சம் நாடுகளின் பிரதான ஊடகங்களை செவிமடுத்தால் வேறு முதலைகளையும் காணலாம் 

இது நம்மவர்கள் சமாச்சாரம் மட்டுமே அல்ல

வியாபாரிகள் சூத்திரம்  கூடவே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் சுத்துவது பலசரக்கு கடைகளில் மட்டுமல்ல. 

பெரும் சுத்தல்கள் டிவி, ரேடியோ, பத்திரிகை விளம்பரங்களில் நடக்கின்றன. பெரும்பாலும் தவிச்ச முயல் அடிப்பது இங்கு அதிகம் - மனிதாபிமானமே இல்லாமல்.

ஒரு நண்பர் வியாபார ஸ்தாபனம் தொடங்கினார். வருடம் தோறும் பிரசுரமாகும் ஒரு கையேடு ஒன்றில் சிறு விளம்பரம் செய்தார்.

அதில் இருந்த இலக்கத்துக்கு இந்தியா, இலங்கையில் இருந்து அழைப்புக்கள். விளம்பரம் கேட்டு...

டிவி, ரேடியோ சேவைகளுக்கு விளம்பரம் கேட்டு வந்த அழைப்புக்கள் அவை.

மரண செய்திகளை வெளியிடும் ஒரு தளம். மிக அதிகமான விளம்பர கண்டனம் அறவிடுவார்கள்.

ஆனால் அந்த தளத்தில் அவ்வளவு பணம் செலவழித்து போடுவது பிரயோசனம் இல்லை என்பது பலரது அனுபவ உண்மை.

மேலும் தமது 600, 000 வரையான முகப்புத்தக லைக்குகளில், மாதாந்தம் 150,000 லைக்குகளுக்கு புஷ் பண்ண £50, 300,000 £100, 600,000ம் என்றால் £200 தனிக் கட்டணம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள். அதேபோல யுடியூப் புஷ் பண்ணுவோம் என்று சுத்தி காசு பார்ப்பார்கள்

குறித்த இந்த நண்பர், கொஞ்சம் விபரமானவர். அதெப்படி பிரித்து புஷ் பண்ண முடியும்? மேலும் முகப்புத்தக ஓனர் மார்கரிடம் $10 கொடுத்தால் அந்தாள் அழகாக 600,000 க்கும் புஷ் பண்ணுமே என்றதும், துண்டைக் காணம், துணையைக் காணம் என்று ஓடி விட்டனர். 

இவர்களுக்கு சில முகவர்கள் உள்ளனர். அவர்களது வேலை, இந்த மீடியாக்களில் விளம்பரம் தரும் விளம்பரத்தாரர்களை அழைப்பது.

அவர்களது குரலை வைத்து, அவர்கள் வானொலி சேவைக்கு அடிக்கடி அழைத்து, அரட்டை அடிப்பவர்கள் என கண்டு பிடித்து விடலாம். உங்கள் விளம்பரம் கேட்டேன். எனது நண்பரும் அல்லது நண்பியும் உங்களது பொருளை, சேவையினை பெற இந்த வார இறுதியில் வருகிறோம் என்று அடித்து விடுவார்கள்.

அடித்தார்களே, வரவில்லையே என திருப்பி அடித்தால், இது வேலை இலக்கம் அல்லது கம்பெனி போன். அடிக்காதீர்கள். வேறு அலுவல் வந்திட்டுது, நான் வரத்தான் இருக்கிறேன், என்று வேறு பீலா விடுவார்கள்.

இவர்களது நோக்கம், விளம்பரத்தார்கள் தமது விளம்பரம் வேலை செய்கிறது என்று நினைக்க வைப்பது.

ஆனால், தமது நிறுவனங்களில் பாரிய நம்பிக்கையீனம் உண்டாகின்றது என்பதனை உரிமையாளர்கள் அறிவதில்லை. ஏனெனில் இந்த சுத்துமாத்து வேலை செய்பவர்கள், குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற அழுத்ததுடன் வேலை செய்பவர்கள். 

விடயம் தெரிந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வதால், இவர்களை அப்பாவிகளாக தம்மிடம் வரும் ஆட்களிடம், தவிச்ச முயல் அடிக்கிறார்கள்.

வீடு வாசலை அடமானம் வைத்து, வட்டிக்கு காசு வாங்கி, சேமிப்பினை வைத்து ஒரு வியாபாரம் செய்பவர்களுக்கு, நேர்மையான சேவையினை கொடுங்கள்.

அறவிடும் அதிகமான பணத்தினை நியாய படுத்த , ஆட்களை வைத்து, சுத்துமாத்து செய்வதை என்னென்பது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

குமாரசாமி

  • மப்புறுப்பினர்
  •  
  • குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
  •  7,339
  • 29,069 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Bild

 

கலோ கியர் குமாரசாமி ஸ்பீக்கிங்..உது  பொலிஸ் ஸ்ரேசன்😎

ஓமடா  உன்ரை இங்கிலிசிலையே தெரியுது நீ குமாரசாமிதான் எண்டு...என்ன விசயம் சொல்லு..

கோயில் திருவிழாவிலை கோசான் எண்டவர் காணாமல் போயிட்டார்.உங்கினேக்கை கண்டால் ஆளை இஞ்சை கொண்டுவந்து விடுறியளே?

எங்கை கொண்டுவந்து விடோணும்

யாழ்கள கொரோனா சென்ரரிலை

🤬🤬🤬

Like

 

அன்பார்ந்த அடியார்களே,

ஒரு நற்செய்தி. காணாமல் போனதாக அறிவிக்கப்பட கோசான் என்ற குழந்தையை குமாரசாமி எனும் அன்பர் கண்டுபிடித்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

குழந்தை கோசான் பொரிவிளாங்காய் கடைக்கு முன்னால் வெள்ளி பார்த்து கொண்டிருந்த சமயம் குமராச்சாமி அவரை கண்டு பிடித்தார். 

ஆனால் குமாராசாமிக்கு பொரிவிளாங்காய் கடையில் என்ன வேலை என்பது இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறது 🤣

பிகு: நோட்டீசுக்கு நன்றி அண்ணர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

தவறு கட்டாயம் விலை போடப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

இலங்கையில் இப்படி ஒரு சட்டம் உண்டு. அத்தியாவசிய பொருட்கள் இந்த சட்டத்தால் கவர் பண்ணுப் படும். (பாணின் விலை).

ஆனால் ஒரு வர்த்தகர் இன்னொரு வர்தகருக்கு நட்டம் விழைவிக்கும் வகையில் லாபம் ஈட்ட முடியாது. இதை போட்டிக்கு எதிரான நடவடிக்கை anti competitive practices என்பார்கள். 

தவிரவும் யூகேயில் சந்தை (market) தான் விலையை நிர்ணயிப்பதால் ( demand and supply), போதுமான supply இருந்தும் பதுக்கி வைத்து விலையை கூட்டுவது manipulation of the market என்பதாயும் பார்க்கப்படும்.

எனவேதான் இதை MCA க்கு அறிவியுங்கள் என மேலே ஒரு நம்பரை போட்டேன்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் MCA க்கு கொம்பளைன் பண்ணி ஆதாரத்தை கொடுப்பது மட்டுமே. 

மிச்சத்தை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.

1 hour ago, ரதி said:

கடைகளில் விலைப் பட்டியல் போட்டு இருக்காவிடில்  தேவையை பொறுத்து விலையை கூட்டி விப்பதில் எந்த பிழையும் இல்லையாமே!...சட்டத்திலும் அதற்கு இடம் இருக்காம் ...யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நான் அறிந்த மட்டில்,

விலையை கூட்டி விற்க முடியாது என்று ஒரு “நிர்ணயவிலை சட்டம்” யூகேயில் இல்லை. 

அது உங்கை யுகேயிலை மட்டுமில்லை கண்டியளோ.....புலம்பெயர்நாடுகளிலை இருக்கிற தமிழ்கடையள் எல்லாத்திலையும் எழுதப்படாத சட்டம் ஒண்டு இருக்கு. அந்த கடையளின்ன்ரை மூனாமாரர்ரை மைண்ட் வாய்ஸ் "சாமான் வேணுமெண்டால் வாங்கு இல்லாட்டி இடத்தை விட்டு மாறு விலை இதுதான்" 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.