-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nunavilan · பதியப்பட்டது
59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-720x450.jpg இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! | Athavan News -
By nunavilan · பதியப்பட்டது
மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா மருந்து- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இலங்கையில் அடுத்த மூன்று வாரங்களிற்குள் மூன்று இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்புமருந்து வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து 600.000 டோஸ் மருந்துகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு தலா இரண்டுடோஸ்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னிலை பணியாளர்கள் பொலிஸார் முப்படையினருக்கு முதற்கட்டமாக மருந்துவழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலகசுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk -
By nunavilan · பதியப்பட்டது
பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர் http://static2.tamilmirror.lk/assets/uploads/image_0f5e13b069.jpg வா.கிருஸ்ணா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரெட்ன மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பங்குகொள்ளும் உயர்மட்டக் கூட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (26) நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவத் தளபதியும், விமானப்படைக்குரிய ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்புக்கு வருகைதந்து, கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக மாவட்டச் செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், மாவட்டச் செயலகத்தில் கவச வாகனமும் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் மாவட்டச் செயலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் திரும்பியனுப்பப்பட்டனர். மேற்படிக் கூட்டம், என்ன விடயம் தொடர்பில் நடைபெற்றது, அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_d5f30e166a.jpghttp://static2.tamilmirror.lk/assets/uploads/image_098a9562eb.jpg Tamilmirror Online || பாதுகாப்பு செயலாளரும் இராணுவத் தளபதியும் மட்டக்களப்பில் கூடினர் -
By nunavilan · பதியப்பட்டது
நவீன் இராஜினாமா: ஆனால் விலகவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக, கட்சிக்கு அறிவித்துள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து தான் விலகவில்லை என்றும் அறிவித்துள்ளார். தான், கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து செயற்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பொருத்தமான உறுப்பினரை நியமிக்குமாறும் அவர், அனுப்பியுள்ள கடிதத்தின் ஊடாக கோரியுள்ளார். இதுதொடர்பில், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள நவீன் திஸாநாயக்க, தனக்கு ஆதரவளித்தமைக்காக ஐ.தே.கவுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || நவீன் இராஜினாமா: ஆனால் விலகவில்லை -
By nunavilan · பதியப்பட்டது
ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது எதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது இவர்களது இனவாத பரம்பரை பழக்கம். எமது நல்லாட்சியின் போது தேசிய இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச தீர்வு திட்டத்தை, புதிய அரசியல் அமைப்பாக நாம் கொண்டு வர முயற்சி செய்த போது, அதை எதிர்த்து நாட்டில் பேரினவாத தீயை பற்ற வைத்தவர்கள் இவர்களாகும். இவர்களை ஒதுக்கி தள்ளி ஆரம்பித்த பணியினை முடிக்க, அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதுகெலும்பு இருக்கவில்லை. அதைபோல், அமெரிக்க அரசுடன் எம்சிசி ஒப்பந்தம் குறிந்து நாம் பேசிய போது, அதை எதிர்த்து நாட்டை தீ வைத்து கொளுத்தி, இதுபற்றி ஒன்றுமே தெரியாத, வண. உடுதும்பர காஸ்யப்ப என்ற பெளத்த தேரரை கொண்டு வந்து எம்சிசிக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வைத்தவர்கள், இவர்களாகும். பின்னர் ஆட்சிக்கு வந்த உடன், எம்சிசி ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா இனாமாக தர இருந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துக்கு ஆசைப்பட்டு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்கள். எம்சிசி ஒப்பந்தத்தில், 70 விகிதம் நல்லதே என உதய கம்மன்பில என்ற தமிழ், முஸ்லிம் மக்களை சதா கரித்து கொட்டித்தீர்க்கும் அமைச்சர் சொன்னார். ஆனால், கடைசியில் “சரிதான் போங்கடா” என, அமெரிக்கா எம்சிசி ஒப்பந்தத்தையும், 400 மில்லியன் அமெரிக்க டொலரையும் எடுத்துக்கொண்டு போயே போய் விட்டது. “ஐயோ, கைக்கு வந்தது, வாய்க்கு எட்டவில்லையே” என கையை விட்டு போய்விட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நினைத்து நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசின் உள்ளே ஒப்பாரி ஓலம் கேட்டது. அதைபோல், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியா, ஜப்பான் நாடுகளை பங்காளிகளாக்க கடந்த அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு தெருவில் இறக்கி அரசியல் செய்த, மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் அடங்கிய கூட்டணி, இன்று நந்தசேன கோடாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சி அமைத்தவுடன், சுருதி இறங்கி பேசுகிறது. பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதவும் முடியாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள, இதே கொழும்பு துறைமுகத்தில் 85 விகித பங்குரிமையுடன் இவர்கள் சீனாவின் சைனா மெர்ச்சன்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள சீஐசீடி என்ற இன்னொரு முனையத்தை திரும்பி வாங்கவும் முடியாமல், கோடாபய ராஜபக்ச அரசாங்கம், விழி பிதுங்கி போய் நிற்கிறது. இந்நிலையில் இந்த அரசில் இருக்கும் ஒரு அரை அமைச்சரான நிமல் லான்சா, “கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை யார் தடுத்தாலும், இந்தியாவுக்கு வழங்கியே தீருவோம்” என வெட்டி வீறாப்பு பேசுகிறார். இதை இவர் இன்றைய எதிரணியான எங்களிடம் கூற தேவையில்லை. தெரியாமல் வாக்களித்த பொதுமக்களிடம் கூற தேவையில்லை. எதிர்கட்சியில் இருக்கும் போது இவர்களே ஊட்டி வளர்த்த இவர்களது கட்சியின் தொழிற்சங்கங்கள் மற்றும் வண. எல்லே குணவன்ச தேரர், வண. ஓமல்பே சோபித தேரர், வண. முருத்தெட்டுகம தேரர் ஆகிய பெளத்த தேரர்களிடம்தான் கூற வேண்டும். ராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது (adaderana.lk)
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.