Jump to content

வைகுண்டத்தில் நாரதரின் கொறோனா வைரஸ் அப்டேற்றும், மகாவிஷ்ணுவின் குறும்புகளும்


Recommended Posts

மகாவிஷ்ணு: நாரதரே, பூலோகத்தில் பங்குச் சந்தைகள் பலவும் பெருமளவில் சரிந்துள்ளனவாமே! என்ன காரணம் என்பதை நீ அறிவாயா?

நாரதர்: ஆம் பிரபு, பூலோக வாசிகள் தங்கள் பங்குகளை எல்லாம் விற்று Toilet rollகளைப் பெருமளவு வாங்கிக் குவித்தது தான் காரணம் என்று அங்கு பேசிக்கொள்கிறார்கள். 

மகாவிஷ்ணு: அப்படியா? என்ன ஆச்சரியம் நாரதா! பூலோகத்தில் தண்ணீர் இருப்பது அவர்களுக்குத் தெரியாதா?

நாரதர்: பிரபு தங்களுக்குப் புரியாததா? அதிக விலை கொடுத்து Toilet rollsஐயே பதுக்கிய பூலோகவாசிகள், எதிர்காலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வரலாமோ என்ற பயத்தில் தண்ணீருக்குப் பதிலாக Toilet rollகளைப் பயன்படுத்துவதன் மூலம் தண்ணீரையும் இப்போதே பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள்! 

மகாவிஷ்ணு (புன்னகைத்தபடி): வானத்தில் இருந்து மழையாக, மலையருவியாக நீர் கீழே வீழும்; இனிப் பங்குச் சந்தையில் நீரின் பங்கின் விலை ஏறும்! 
(அருகிலிருந்த தனலஷ்மி இதைக் கேட்டு டாலர்கள் கொட்டுவது போன்ற ஒலியுடன் சிரித்தாள்) 😀😀😀

(அப்டேற் தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான சிரிப்புத் தொடரை தொடங்கியிருக்கின்றீர்கள் மல்லிகைவாசம்.எல்லோரும் சிரிப்பாய் சிரிக்க வாழ்த்துகிறேன்.....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.