Jump to content

என‌து ந‌ண்ப‌னுக்கு கொரோனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

 

ந‌ண்ப‌னுக்கு இதுக்கு முத‌ல் ஒரு வ‌ருட்த‌மும் இல்லை , அவ‌ன் வீட்டுக்கை இருப்ப‌தே குறைவு ,  ,கூட‌  வேலை , விடுமுறை கால‌ங்க‌ளில் ம‌லேசியா போன்ற‌ நாடுக‌ளை சுற்றி பார்க்க‌ போயிடுவான் , கொரோனாவுக்கு பிற‌க்கு தான் இவ‌ள‌வு வ‌ருட்த‌மும் 

47 minutes ago, ஜெகதா துரை said:

பையா உங்கள் நண்பர் நலம்பெற வேண்டுகிறேன்.அவர் எந்த நாட்டில் இருக்கிறார்?

டென்மார்க் நாட்டில்  உற‌வே 

6 hours ago, Kapithan said:

அவர் நோய்த்தொற்றுக்குள்ளானது எவ்வாரு எனத் தெரியுமா. நீங்கள் அவரை அண்மையில் நேரில் சந்தித்தீர்களா ?

எல்லாம் வெல்லுவம் கவலைப் படாதேயுங்கோ.👍

ந‌ண்ப‌ன் ஜேர்ம‌ன் நாட்டு க‌டையான‌ ALDIயில் வேலை செய்கிறார் டென்மார்க்கில் , இப்போது உள்ள‌ சூழ‌லில் ந‌ண்ப‌னுக்கு கிட்ட‌ ம‌ருத்துவ‌ர்க‌ளை த‌விற‌ வேறு யாரும் நெருங்க‌ முடியாது / வீட்டில் த‌னிமையில் , போனுக்காள் தான் க‌தைக்க‌ முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா
வயது குறைவென்றபடியால் வெகுவிரைவில் குணமாகிவிடுவார்.
கொஞ்சம் சுகம் என்றவுடன் எழும்பி திரிந்து மற்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் வயதெல்லை 65 என்றாலும் 
இப்போ 55 வயதாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நியூயோர்க்கும் கலிபோர்ணியாவும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதுவே இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் போல.

ஓம் ஓம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா விழிப்புண‌ர்வுட‌ன் இருப்ப‌து முக்கிய‌ம் / ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாது , வீட்டுக்கை தான் , 

Link to comment
Share on other sites

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

நாளைக்கு விப‌ர‌மாய் எல்லாத்தையும் கேட்டு எழுதுகிறேன் / 

பாவிச்ச‌ ம‌ருந்தை ப‌ட‌ம் பிடிச்சு அனுப்ப‌ சொல்லுகிறேன் , அனுப்பின‌ உட‌ன் இந்த‌ திரியில் இணைக்கிறேன் நிழ‌லி அண்ண‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:14 PM, பையன்26 said:

என‌து நெருங்கிய‌ ந‌ண்ப‌னுக்கு கொரோனா , 

இளைய வயது என்பதால் அவரால் நோயிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது.  நீங்களும் அவதானமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இளைய வயது என்பதால் அவரால் நோயிலிருந்து விடுபட முடிந்திருக்கிறது.  நீங்களும் அவதானமாக இருங்கள்.

ந‌ன்றி ஜ‌யா , நீங்க‌ளும் க‌வ‌ன‌மாக‌ இருங்கோ , இப்போது உள்ள‌ சூழ‌லில் யாருக்கு எப்ப‌  என்ன‌ ந‌ட‌க்கும் என்று தெரியாது /

புறா போல் ப‌ற‌ந்து திரிந்த‌ என்ர‌ ந‌ண்ப‌னை ப‌டுத்த‌ ப‌டுக்கையில் கொன்டு போய் விட்டுது உந்த‌ கொரோனா 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 7:49 PM, goshan_che said:

பையன்,

ஆள் கிட்டதட்ட மீண்டமாரித்தான். நீங்கள் தெம்பாக பேசி ஆளை ஸ்டெடியாக வைத்திருங்கள்.

அவருக்கு முன்பே ஏதும் அஸ்மா போல வியாதிகள் இருந்ததா?

சிலருக்கு தும்மலும் இல்லாமல் போகும் வியாதி, சிலரை மரணத்தின் வாசல் வரையும் இன்னும் சிலரை அதை தாண்டியும் கொண்டு செல்கிறது.

Underlying வருத்தங்கள் உள்ளவர்கள் அதற்குரிய மருந்துகளை விடாமல் எடுக்க வேண்டுமாம். 

நில்மினி ஒரு குறிப்பு போட்டால் நல்லம் என்பது என் தாழ்மையான விண்ணப்பம்.

 

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும்

சமீபத்தில், ஜப்பான் இன் மருத்துவ ஆராய்ச்சி சொன்னதாக ஓர் செய்தி வந்தது.

அதாவது, வெளியில் சென்று வந்தாலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ அடிக்கடி எமது இதழ்களை இயலுமானவரை வாய்க்குள் மூடியவாறு உள்ளிளுகும் படி.

இதன் நோக்கம், வைரஸ் இருந்தால், அதை எமது உணவுக் கால்வாயினூடாக வெளியேற்றுவதத்திற்காகவும்,

முக்கியமாக, சுவாசப் பைகுள் சென்றடவைதை தடுப்பதற்கும்.

இது உண்மையா?  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

உங்கள் நண்பன் மீண்டதையிட்டு சந்தோசம். வைரஸ் தொற்றிய பின் ஏற்பட்ட அறிகுறிகள், வந்த பின் எடுத்துக் கொண்ட மருத்துவ விடயங்கள், தனிமைப்படுத்தல் போன்றவற்றை அவரால் பகிர முடிந்தால்...அல்லது அவரிட்ம் கேட்டு நீங்களும் எழுதினால் பலருக்கு பயனாக இருக்கும்.

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா /
ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான் , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொல்லி இருக்கின‌மாம் மீண்டும் ந‌ண்ப‌னுக்கு கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவ‌த்து என்று , காச்ச‌ல் 40க்கு மேல‌ வ‌ந்தா த‌ங்க‌ளுக்கு போன் ப‌ண்ண‌  சொல்லி இருக்கின‌ம் ம‌ருத்துவ‌ர்க‌ள் , த‌ண்னை ப‌டுக்க‌ வைத்து விட்டு உட‌ம்புக்கு பூசின‌ ம‌ருந்து த‌ன‌க்கு என்ன‌ என்று தெரியாதாம் ,  ம‌ருத்துவ‌ர்க‌ளின் அறிக்கை வ‌ரும் வ‌ரை ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாதாம் , கொரோனாவால் ப‌ய‌ந்த‌ போது ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ ந‌ண்ப‌னுக்கு இந்த‌ ம‌ருந்தை குடுத்த‌வையாம்

 20200321-145127.png

இதை எடுத்த‌ பிற‌க்கு ப‌ய‌ம் என்ற‌தே த‌ன‌க்கு தெரிய‌ வில்லையாம் , 

தொன்டை எரிவு , அதிக‌ த‌லை இடி , மூச்சு இழுத்து விட‌ சிர‌ம‌ம் , 
உட‌ம்பில் ப‌ல‌ம் இல்லை ,
அதிக‌ வ‌லிக‌ள் நோவுக‌ள் உட‌ம்புக‌ளில் ,  ம‌ற்றும் அதிக‌ காச்ச‌ல் , இவ‌ள‌வு  சிர‌ம‌ங்க‌ளை கொரோனா வைர‌ஸ் ந‌ண்ப‌னுக்கு  குடுத்த‌தாம் , த‌ன‌க்கு தாங்கி கொள்ளுகிற‌ ச‌க்தி இருந்த‌ ப‌டியால் த‌ப்பிட்டேனாம் , 

வ‌லிக்ள் நோவுக‌ள் எரிவுக‌ள் நின்ற‌து உட‌ம்புக்கு அந்த‌ த‌ண்ணீர் ம‌ருந்து பூசின‌ பிற‌க்காம் 

இம்ம‌ட்டு த‌க‌வ‌ல்  தான் பெற‌ முடிந்த‌து / 

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி பையன். உங்கள் நண்பனுக்கும் என் நன்றி

இப்ப எமக்கிருக்கும் ஒரே ஒரு வழி, எம் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது ஒன்றுதான். உங்கள் நண்பனுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தமையால் பாராதூரமாக ஒன்றும் நிகழாமல் தப்பி விட்டார். இது எமக்கும் ஒரு பாடமாக அமைகின்றது.

நான் ஒரு நாளைக்கு இரண்டு mandarin பழங்களை தொடர்ச்சியாக உண்டு வருகின்றேன். அத்துடன் அடிக்கடி தேசிக்காய் சாறு, வல்லாரை போன்றவற்றையும் உண்பதுண்டு. விற்றமின் சி தான் நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க செய்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

தகவல்களுக்கு நன்றி பையன். உங்கள் நண்பனுக்கும் என் நன்றி

இப்ப எமக்கிருக்கும் ஒரே ஒரு வழி, எம் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்துக் கொள்வது ஒன்றுதான். உங்கள் நண்பனுக்கு நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தமையால் பாராதூரமாக ஒன்றும் நிகழாமல் தப்பி விட்டார். இது எமக்கும் ஒரு பாடமாக அமைகின்றது.

நான் ஒரு நாளைக்கு இரண்டு mandarin பழங்களை தொடர்ச்சியாக உண்டு வருகின்றேன். அத்துடன் அடிக்கடி தேசிக்காய் சாறு, வல்லாரை போன்றவற்றையும் உண்பதுண்டு. விற்றமின் சி தான் நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க செய்வது.

என்ர‌ அம்மாடை அண்ணாவுக்கு 74வ‌ய‌து ம‌னுச‌ன் வல்லாரை போன்ற‌ ச‌த்து உண‌வுக‌ள் தான் சாப்பிடுவார் இப்ப‌விம் நோய் நொடி இல்லாம‌ வாழுகிறார் ஊரில்  /

டென்மார்க்கில் வல்லாரைய‌ தேடினாலும் கிடைக்காது இங்கை 10ஆயிர‌த்துக்கு குறைவான‌ த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் , க‌ன‌டா போல் சாப்பாட்டு வ‌ச‌தி இங்கை இல்லை , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

நில்மினி,

இந்த மருந்துகள் நல்லா வேலை செய்துதாமே?

http://www.dailymirror.lk/top_story/Hydroxychloroquine-Azithromycin-for-COVID-19-Treatment-GMOA-submits-concept-paper/155-185449

https://techstartups.com/2020/03/18/breaking-controlled-clinical-study-conducted-doctors-in-france-shows-hydroxychloroquine-cures-100-coronavirus-patients-within-6-days-treatment-covidtrial-io/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா /
ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான் , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொல்லி இருக்கின‌மாம் மீண்டும் ந‌ண்ப‌னுக்கு கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவ‌த்து என்று , காச்ச‌ல் 40க்கு மேல‌ வ‌ந்தா த‌ங்க‌ளுக்கு போன் ப‌ண்ண‌  சொல்லி இருக்கின‌ம் ம‌ருத்துவ‌ர்க‌ள் , த‌ண்னை ப‌டுக்க‌ வைத்து விட்டு உட‌ம்புக்கு பூசின‌ ம‌ருந்து த‌ன‌க்கு என்ன‌ என்று தெரியாதாம் ,  ம‌ருத்துவ‌ர்க‌ளின் அறிக்கை வ‌ரும் வ‌ரை ந‌ண்ப‌ன் வீட்டை விட்டு வெளியில் போக‌ முடியாதாம் , கொரோனாவால் ப‌ய‌ந்த‌ போது ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ ந‌ண்ப‌னுக்கு இந்த‌ ம‌ருந்தை குடுத்த‌வையாம்

 

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவிலிருந்து மீண்ட உங்கள் நண்பன் முழுதாகக் குணம்பெற இறைவனை வேண்டுகின்றேன் பையா

Link to comment
Share on other sites

8 hours ago, பையன்26 said:

ந‌ண்ப‌ன் மீண்டும் ப‌ழைய‌ நிலைக்கு திரும்பி விட்டான்

மகிழ்ச்சி.  நண்பரும் நாமும் கவனமாக, அடிப்படை சுகாதர தேவைகளை அமுல்படுத்துவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

தெரிய‌ வில்லை அக்கா , ம‌ருத்துவ‌ர்க‌ள் சொன்னார்க‌லாம் , திருப்ப‌ வ‌ந்தா ஆவ‌த்து என்று / 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

என்ர‌ அம்மாடை அண்ணாவுக்கு 74வ‌ய‌து ம‌னுச‌ன் வல்லாரை போன்ற‌ ச‌த்து உண‌வுக‌ள் தான் சாப்பிடுவார் இப்ப‌விம் நோய் நொடி இல்லாம‌ வாழுகிறார் ஊரில்  /

டென்மார்க்கில் வல்லாரைய‌ தேடினாலும் கிடைக்காது இங்கை 10ஆயிர‌த்துக்கு குறைவான‌ த‌மிழ‌ர்க‌ள் வாழுகின‌ம் , க‌ன‌டா போல் சாப்பாட்டு வ‌ச‌தி இங்கை இல்லை , 

நான் இப்பான் வல்லாரை நட்டிருக்கிறன். வளந்து வரட்டும் இருக்கு கொரனோவுக்கு.

நண்பன் தப்பினது அருந்தப்புபோல. வாழ்க நூறாண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

Covid -19 வைரஸ் எப்படி அறிமுகப்படுத்தப்பட்டதென்றே யாருக்கும் தெரியாது. எல்லாம் ஒரு ஊகம் தான். பக்டீரியா மாதிரி வைரஸ்க்கு  Antibiotic கும் வேலை செய்யாது. Vaccine தான் கண்டு பிடிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள்.முதலில் தும்மல் இருமல் துளிகள் ஒருவரிடம் இருந்து நேரடியாகவோ அல்லது துளிகள் 2 - 72 மணி வரை வெளியில் ஏதாவது ஒரு surface இருந்து அதை நாம் தொட்டு முகத்தில் காய் வைத்தால் எமது சுவாசக் குழாய்கள் மூலம் நுரயை  ஈரலை அடையும் என்று சொன்னார்கள். இப்போ இது காற்றிலும் கொஞ்ச நேரம் நிண்டுபிடிக்கும் என்கிறார்கள் (வைரஸ் எமது அல்லது மற்றய  உடல் கலங்களில்  மட்டும் தான் வாழும். வெளியில் கொஞ்ச நேரம் தான் பிழைக்கும். அத்துடன் இந்த வைரஸ் மனிதருக்கு உரியது. விலங்குகளை தாக்காது. வைரஸ்க்கு தானே இனப்பெருக்கம் செய்ய முடியாது. எமது கலங்களுக்குள்  சென்று  எமது DNA  யை  hijack பண்ணி நாமே வந்த ஒரு சில வைரஸ் யை மில்லியன் கணக்கில் பெருப்பித்து கொடுப்போம். அவை தான் எமது உடலை தாக்குகிறது. அதே வேளை எமது உடலில் உள்ள வெள்ளை கலங்கள்  வந்தது எந்த விதமான வைரஸ் என்று அறிந்து  அதற்கு எதிர்ப்பு கலங்களை உருவாக்கி அதை மில்லியன் கணக்கில் clone பண்ணி இந்த வைரஸ்க்கு எதிராக போரிடும். இப்படி போரிடுவதுக்கு எமக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். வயது போனவர்களுக்கு கலங்கள் போதிய அளவுக்கு வேலை செய்யாது. பயந்து கவலை பட்டால் . Stress ஆள் சில ஹோர்மோன்ஸ் சுரந்து அது நோய் எதிர்ப்பை குறைக்கும். வைரஸ் வராமல் தடுக்க நாங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் முற்றுமாக தடுப்பது கடினம்.  பொக்கிளிப்பான், கூவக்கட்டு, சின்னமுத்து போன்ற வைரஸ் களுக்கு எதிராக  vaccine இருக்கு , வந்தாலும் எமது உடலே நோய் எதிர்ப்பை உருவாக்கி ஞாபக கலங்களை (மெமரி செல்ஸ்) வைத்திருக்கும். அடுத்த முறை இந்த வைரஸ் உடலுக்கு வரும்போது இந்த  மெமரி செல்ஸ் உடனேயே கண்டு பிடித்துவிடும். விரைவில் தன்னை பல மடங்குகளாக பெருக்கி வைரஸ் உடன் சண்டை போடு கொன்றுவிடும். அனால் சாதரண தடிமன் மற்றும் இந்த மாதிரி COVID  19 வைரஸ் கள் அடிக்கடி உருமாறும். அதனால் vaccine கண்டுபிடிப்பது கடினம். எமது உடலும் எதனை மெமரி செல்ஸ் ஆக வைத்திருக்க முடியாது

அக்கா உங்க‌ளின் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ 🙏, கொரோனா வ‌ந்த‌ ஆளுக்கு திருப்ப‌வும் வ‌ர‌ வாய்ப் இருக்கா , டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் ந‌ண்ப‌னுக்கு சொல்லி இருக்கின‌ம் ந‌ண்ப‌னுக்கு மீண்டும் கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவத்து என்று , இதை ப‌ற்றி தெரிந்தா எங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் படுத்துங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

அக்கா உங்க‌ளின் த‌க‌வ‌லுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ 🙏, கொரோனா வ‌ந்த‌ ஆளுக்கு திருப்ப‌வும் வ‌ர‌ வாய்ப் இருக்கா , டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் ந‌ண்ப‌னுக்கு சொல்லி இருக்கின‌ம் ந‌ண்ப‌னுக்கு மீண்டும் கொரோனா வ‌ந்தா உயிருக்கு ஆவத்து என்று , இதை ப‌ற்றி தெரிந்தா எங்க‌ளுக்கு விள‌ங்க‌ப் படுத்துங்கோ 

2 விதமான கொரோனோ வைரஸ் உலாவுது . S type தான் முதல் வந்தது. ஆனால் அதிலிருந்து L type உருமாறி மிக வேகமாக பரவுது. 70% வீதமானவர்களுக்கு L  type  என்றாலும் எது வீரியம் கூடியது என்று கண்டுபிடிக்கவில்லை. அத்துடன் உங்கள் நண்பருக்கு இப்ப வந்த கோரோனோ வைரஸ் க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி இப்ப இருக்கும். ஆனால் இது புதிய வைரஸ் என்பதால் இந்த எதிர்ப்பு எவ்வளவு தூரம் வலிமையானது எவ்வளவு காலம் நின்று பிடிக்கும் என்று எவருக்கும் இன்னும் தெரியாது. இப்பதான் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ( எமக்கு பொக்குளிப்பான் சிறு வயதில் வந்தபோது உடலில் உருவாகிய எதிர்ப்பு சக்திதான் இப்பவும் (சாகும் அளவும்) இருக்கும் . அதனால் திருப்பி அந்த வைரஸ் வர சாத்தியமே இல்லை. வந்தவுடன் இது பொக்குளிப்பான் வைரஸ் என்று எமது உடல் கண்டுபிடித்து அவற்றை கொன்றுவிடும். அல்லது பொக்குளிப்பான் vaccination எடுத்தவர்களுக்கு எமது உடல் அந்த செயற்கையாக புகுத்தப்பட்ட வீரியம் குறைந்த வைரஸ் க்கு ( vaccination  என்றால் அதுதான்) எதிராக எதிர் அணுக்களை உருவாக்கி காலம் முழுதும் வைத்திருக்கும். இந்த கோரோனோ வைரஸ் க்கு எதிராக vaccine கண்டுபிடிக்க கொஞ்ச காலமாகும். என்றபடியால் இதன் பரவல் குறைந்து இல்லாமல் போகும் வரை எல்லோரும் கவனமாக தான் இருக்க வேணும். நல்ல மஞ்சள், லெமன், பெர்ரி வகைகள் , காய் கறி , கீரை என்று சாப்பிட்டு உடலை கொஞ்சம் நல்ல நிலையில் வைத்தால் வைரஸ் வந்தாலும் எதிர்த்து அழிக்கலாம்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2020 at 23:13, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வந்தவர்களுக்கு மீண்டும் வருமா கொரோனா ???????

இதோ வ‌ந்த‌வ‌ருக்கு மீண்டும் கொரோனா குழ‌ப்ப‌த்தில் ம‌ருத்துவ‌ர்க‌ள் 😓/

20200422-234954.png

 

 

டென்மார்க் நாட்டு ம‌ருத்துவ‌ர்க‌ள் , அனுப‌வ‌ம் இல்லா ம‌ருத்துவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் இங்கை ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைப்பின‌ம் தாயே , ஆனால் இந்த‌ நாட்டில் திற‌மான‌ ம‌ருத்துவ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம் 👏🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா.... இங்கு, எந்த நாடு என்று,  பிரச்சினை  இல்லையே....
மனித உயிர்... எல்லாம்... மாறுபட்டதல்ல, எல்லாம்.... சமமான உயிர்கள்.

எந்த நாட்டில் வைத்து.... 
எந்த நாட்டு.... மருத்துவ கருவிகளை வைத்து,
இப்படியான... சோதனைகளை, நடத்தி இருப்பார்கள் என்பதனையும்,
முற்று... முழுதாக ஆராய வேண்டும்.

சும்மா.... அரசியல் செய்வதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும்... 
பல நாடுகள் முயன்று கொண்டு இருக்கும் வேளையில்...
மருத்துவர்களை... குறை சொல்லாதீர்கள்.

மருத்துவர்களும், அவர்களின் உதவியாளர்களும் மிக...
இக்கட்டான நிலையில்... உலகம் எல்லாம் இருக்கிறார்கள்.   
பாவம்... அவர்களை, விமர்சிக்காதீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.