Jump to content

ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் பொதுமக்கள் ஊரடங்கு- சமூக விலக்களிற்கான பயிற்சி- மோடி அறிவிப்பு


Recommended Posts

ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களை மக்கள் ஊரடங்கு ஒன்றை கடைப்பிடிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் இந்திய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்த பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் எவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது அயலில் கூடி நிற்க கூடாது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மோடி அனைவரையும் கட்டாயமாக இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது அடுத்த சில வாரங்களிற்கான சமூக விலகலுக்கான புதிய பயிற்சியை வழங்கும் என மோடி தெரிவித்துள்ளார்.

narendra_modi.jpg


மாலை ஐந்து மணிக்கு எங்கள் வீடுகளில் இருந்தாவாறு மணியடிப்பதன் மூலம்; அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களிற்கான நன்றியை வெளிப்படுத்துவோம் என மோடி தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களிற்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகளிற்காக மாத்திரம் மக்களை வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மனித குலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது இரண்டாம் உலக யுத்தத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது அதிக நாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/78256

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ்: சுய ஊரடங்கு - முற்றாக இந்தியா முடக்கப்பட இருப்பதன் தொடக்கமா?

சரோஜ் சிங் பிபிசி 
கொரோனா வைரஸ்Getty Images

கடந்த வியாழக்கிழமை நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, "கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும். அன்று காலை 7 முதல் இரவு 9 வரை இதை கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசியம் இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள். நம்முடைய இந்த முயற்சி நமது சுய கட்டுப்பாட்டின் அடையாளமாகவும், நாட்டு நலனுக்கு செய்யும் கடமையாகவும் இருக்கும். இந்த அனுபவம் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவி செய்யும்" என்று அவர் தனது உரையில் கூறியிருந்தார்.

"இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ளோர், போக்குவரத்து, உணவு, ஊடகம் போன்ற அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைதட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்க வேண்டும். ஐந்து மணிக்கு உள்ளாட்சி மன்றங்கள் சைரன் ஒலி எழுப்பவேண்டும்" என்று அவர் தனது உரையில் மேலும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் இந்த ஒருநாள் சுய ஊரடங்கு அறிவிப்பு என்பது நீண்ட நாட்களுக்கு இதுபோன்ற முடக்க நிலையை கடைப்பிடிக்கும் அறிவிப்பிற்கான தொடக்கமாக இருக்குமோ என்ற கருத்து பொது மக்களிடையே நிலவியது.

Banner image reading 'more about coronavirus' Banner

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு பயந்து மக்கள் பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்த நிலையிலும், அன்றைய தினம் தொடங்கி இதுவரை நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களிலுள்ள கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது.

சுய ஊரடங்கு ஏற்படுத்தபோகும் தாக்கம் என்ன?

நாட்டின் மிகப் பெரிய அரசுசாரா சுகாதார அமைப்பான வி.எச்.ஏ.ஐ. பிரதமரின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அந்த அமைப்பின் மூத்த இயக்குநர் பட்நகர், "கொரோனா வைரஸின் பரவலை நிறுத்துவதற்கு இருக்கும் முக்கிய வழிமுறையே சமூக விலகல். பிரதமர் ஒரு நாள் முழுவதும் சுய ஊரடங்கை அறிவிக்கவில்லை, இது வெறும் 14 மணிநேரங்களுக்குதான். இது சமூக விலகளின் புதிய வடிவம். மக்கள் நடமாட்டம் ஒரு நாளைக்கு கட்டுப்படுத்தப்பட்டால் கூட அது தற்போதுள்ள சூழ்நிலையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்."

கொரோனா வைரஸ்Getty Images

இந்த சுய ஊரடங்கின் காரணமாக கொரோனா வைரஸின் பரவல் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்று யாரும் கூறவில்லை என்றும், ஆனால் இந்த சுய ஊரடங்கின் மூலம் மக்கள் ஒருவரையொருவர் சந்திப்பது குறைந்தால், பெரும்பாலான பரப்புகளில் சில மணிநேரங்களுக்கு மட்டுமே வீரியத்துடன் இருக்கும் கொரோனா வைரஸின் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வரும் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், கிட்டத்தட்ட ஒருநாள் கடைபிடிக்கப்படவுள்ள இந்த சுய ஊரடங்கால் ஏதாவது மாற்றம் நிகழுமா? அதை மெய்ப்பிக்கும் வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதாவது உள்ளனவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "கடல் பல சிறுதுளிகளால் ஆன ஒன்றே. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது" என்று பட்நகர் கூறுகிறார்.

"உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூலம் இந்த தொற்று 2.2 நபர்களுக்கு பரவ கூடும். ஆனால், இது இந்தியாவில் 1.7 என்ற அளவிலேயே உள்ளது. இந்த வேறுபாடு இந்தியா எந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை காட்டுகிறது."

வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நீண்டகால முடக்கத்தை நோக்கிய முதல் படியே பிரதமரின் இந்த அறிவிப்பு என்று பட்நகரும் கருதுகிறார்.

"ஒருவேளை வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸின் பரவல் வேகமெடுத்தால் அதை கட்டுப்படுத்துவதற்கு சீனா, இத்தாலி போன்று நாடு தழுவிய முடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருக்கும். எனவே, அதுபோன்ற சூழ்நிலைக்கு நாம் எந்தளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக இந்த ஒரு நாள் அமையும்" என்று அவர் உறுதிபட தெரிவிக்கிறார். 

சுய ஊரடங்குக்கும், முடக்க நிலைக்கும் என்ன வேறுபாடு?

ஒருநாள் சுய ஊரடங்கை அறிவித்து அதன் மூலம் மக்கள் முடக்க நிலைக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள பிரதமர் நினைக்கிறாரா என்று பட்நகரிடம் கேட்டபோது, "சுய ஊரடங்கு என்பது ஒரு எளிய அணுகுமுறை. அதாவது, இது மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களாலேயே கட்டுப்படுத்தப்படும் செயல்முறை. இதை பிரதமரும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்" என்று அவர் கூறுகிறார். 

கொரோனா வைரஸ்Getty Images

உலகுக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த பெருந்தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கையை மக்களின் ஆதரவு கிடைத்த பிறகே அரசு முழுவீச்சில் தொடங்கும் என்பதை பிரதமரின் உரை சுட்டிக்காட்டுகிறது.

இந்த ஒருநாள் சுய ஊரடங்கை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றோ இதை மீறுபவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றோ இதுவரை அரசு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஒருநாள் சுய ஊரடங்கின் வெற்றியை மதிப்பீடு செய்வதன் மூலம் வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறை குறித்து திட்டமிட முடியும் என்று அரசு கருதுகிறது. 

"சுய ஊரடங்கு மக்களால் கடைபிடிக்கப்படும் நிலையில், முடக்க நிலை என்பது அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்படும். அதாவது, சீனா மற்றும் இத்தாலியில் நாடு தழுவிய முடக்க நிலை எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை நாம் நினைவுகூர்ந்து பார்க்கலாம்."

சுய ஊரடங்கு

கொரோனா வைரஸ்Getty Images

ஒவ்வொரு வைரஸ் ஏற்படுத்தும் நோய்த்தொற்றும் தனித்துவமானது என்பதால் அதை எதிர்கொள்வதற்கு வேறுபட்ட முறைகளை கடைபிடிக்க வேண்டும். 

இதற்கு முன்பு, உலக நாடுகளை சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்டவை அச்சுறுத்தியபோது, இந்தியாவில் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படவும் இல்லை, விவாதிக்கப்படவும் இல்லை.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், இந்த நோய்த்தொற்றின் பரவலானது கணக்கீடுகளை விட வேகமாக இருக்கிறது. 

ஒட்டுமொத்த உலகிற்கும் கொரோனா வைரஸ் என்பது முற்றிலும் புதிய அச்சுறுத்தலாக இருப்பதால், இதை எதிர்கொள்வதற்கு என உறுதிப்படுத்தப்பட்ட வழிமுறை எதுவும் இல்லை. ஒவ்வொரு நாடும் தன்னால் இயன்ற வகையில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான இந்திய அரசின் இந்த சுய ஊரடங்கு முடிவுக்கு அரசுசாரா நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதுமுள்ள ஏராளமான வர்த்தக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இந்த ஊரடங்கில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளதால், அவற்றின் உறுப்பினர்களாக உள்ள சுமார் ஏழு கோடி பேர் மட்டுமின்றி அவர்களின் வாயிலாக சுமார் 40 கோடி பேர் வரும் ஞாயிற்றுக்கிழமை வீடுகளிலேயே இருப்பார்கள் என்று தெரிகிறது.

சுய ஊரடங்கு - இந்தியாவில் இதுதான் முதல் முறையா? 

கொரோனா வைரஸ்

"தற்கால தலைமுறையினருக்கு முடக்க நிலை குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முன்பு, போர் காலங்களில் நாடு முழுவதும் முடக்க நிலை நடைமுறையில் இருந்துள்ளது" என்று கூறிய பிரதமர் நரேந்திர மோதி முந்தைய காலங்களில் இருந்த முடக்க நிலைகளின் தீவிரத்தை தனது உரையில் விளக்கி இருந்தார்.

உண்மையில் சுய ஊரடங்கு என்பது இந்தியாவிற்கு புதிதல்ல. குஜராத் எனும் மாநிலத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என்று 1956-1960களில் கிளர்ச்சி வெடித்தபோது இதுபோன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதாக கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் ரிஸ்வான். 

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ரிஸ்வான், "குஜராத் மாநிலத்தை உருவாக்க கோரி முன்னெடுக்கப்பட்ட இயக்கத்தின் தலைவராக இந்துலால் யாக்னிக் இருந்தார். அப்போது, ஜவஹர்லால் நேரு பங்கேற்ற பேரணி ஒன்று நடைபெற்றது. அதில் பொது மக்கள் யாரும் கலந்துகொள்ள கூடாது என்று முடிவு செய்த யாக்னிக் சுய ஊரடங்கை அறிவித்தார். எனவே, மிகப் பெரிய தலைவராக இருந்த நேருவின் கூட்டத்தில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், யாக்னிக்கின் பேச்சை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்" என்று அவர் கூறுகிறார். 

"ஒரு இயக்கத்தில் மக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று செயல்படுதே சுய ஊரடங்கு என்று எளிதாக சொல்லலாம். இதில் மக்களே நேரடியாக பங்கேற்பதால் மற்ற அணுகுமுறைகளை விட இது திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நோய்க்கு எதிராக சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த சிக்கலான நேரத்தில் மருத்துவப் பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் கைத்தட்டியோ, தங்கள் வீட்டின் அழைப்பு மணிகளை அடித்தோ நன்றி தெரிவிக்கவேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

இதே போன்றதொரு அணுகுமுறை சமீபத்தில் இத்தாலியில் கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

https://www.bbc.com/tamil/india-51985657

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

India-Curfew.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் சுய ஊரடங்கை கைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 315 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்த வேண்டும் எனவும் மார்ச் 22ஆம் திகதியான இன்று யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சுய ஊரடங்கை பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரடங்கினால் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. சுய ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் இரவு 9 மணிக்கு ஊரடங்கு நிறைவுக்கு வருகின்றது.

India-Curfew-2.jpg

இதேவேளை, மக்கள் ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து போக்குவரத்து மார்க்கங்களையும் நிறுத்தியுள்ளதோடு, கோயம்பேடு மொத்த சந்தையும் இயங்கவில்லை. அத்துடன் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், மக்கள் ஊரடங்கையொட்டி இன்று 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

India-Curfew-3.jpg

http://athavannews.com/இந்தியா-முழுவதும்-ஊரடங்க/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.