Jump to content

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் பண்டாரி


Recommended Posts

நேற்று, புதன்கிழமை. தமிழ்க்கடைக்கு புது மரக்கறியள் வந்திருக்கும். முருங்கைக்காய்க்கு, பிலாக்கொட்டை போட்டு சமைத்துச் சாப்பிட்டால் அந்தமாதிரி இருக்கும். நினைக்கவே வாயூறியது. நானே தனியப் போய் வேண்டியிருக்கலாம். மனுசியையும் கூட்டிக் கொண்டு போகலாம் என்ற நினைப்பில் 'தமிழ்க்கடைக்குப் போறனப்பா. வாவன்" என்றன். 
 
"உதிலை போறதுக்கு நானேப்பா"
 
"நீயெண்டால் பாத்து நல்ல மரக்கறியளா எடுப்பாய்..."
 
அவளுக்கு உச்சி குளிர...  உடனையே வெளிக்கிட்டிட்டாள்.
 
தனிய போயிருப்பன். பிறகு
"நீங்கள் அதை வேண்டேல்லையப்பா, இதை வேண்டேல்லையப்பா. வெண்டிக்காய் என்ன முத்தலாக் கிடக்கு. முறிச்சுப் பார்த்து வேண்டத் தெரியாதோ...'  என்று ஆயிரத்தெட்டு கதை சொல்லி எனக்கு உச்சியிலை கொதிப்பேத்துவாள். 
 
அதுதான் ... அவளையும் கூட்டிக்கொண்டு அங்கை போனால் கடைக்காரியோடை ரொஜினா கதைச்சுக் கொண்டு நிற்கிறாள். பெயரைப் பார்த்து எந்த நாடோ என்று யோசிக்காதைங்கோ. எங்கடை நாட்டுத் தமிழ்ப்பிள்ளைதான். சாதாரணமா பார்க்கிற போது அவள் அப்பிடியொண்டும் அழகில்லை. இண்டைக்கு முகத்துக்கு பவுடர் பூசி, கண்ணுக்கு மை தீட்டி, வாய்க்கு நல்ல சிவப்புச்சாயம் பூசி கலாதியாக நின்றாள். அந்தச் சிவப்பு கொஞ்சம் பொருந்தாமல் துருத்திக் கொண்டு நின்றாலும் வழக்கம் போல இல்லாமல் ஏதோ பளிச்செண்டு வடிவாத்தான் இருந்தாள்.

என்ரை மனுசிக்கும் வாய் சும்மா கிடவாது. உடனையே "ரொஜினா என்ன பிள்ளை? இவ்வளவு வடிவா இருக்கிறாய். வர வர நீ .."
 
ரொஜினா வாய் எல்லாம் பல்லாக நெளிந்தாள். சந்தோசத்தில் குளிர்ந்தாள். 
 
இது அந்தக் கடைக்காரப் பிள்ளைக்கு துளியும் பிடிக்கேல்லை. அவளின்ரை முகம் அப்பிடியே மாறிப் போச்சுது. உண்மையைச் சொல்லப் போனால் இந்த ரொஜினாவை விட அந்தக் கடைக்காரப்பிள்ளை நல்ல வடிவு. மேக்கப் இல்லாமலே ஜொலிப்பாள்.எனக்கு கடைக்காரப்பிள்ளையைப் பார்க்க யோசினை வந்திட்டுது. இப்ப இந்தக் கோபத்திலை அதுதான் ரொஜினாவை வடிவு என்று சொன்ன கோபத்திலை வேண்டுற சாமானுக்கெல்லாம் அறாவிலை போடப் போறாளோ!
 
நான் அவசரமா கடைக்காரப்பிள்ளையைப் பார்த்து  " பிள்ளை நீ எப்பவும் வடிவுதான். மகாலட்சுமி மாதிரி..."
 
துலஞ்சுது போ. மனிசி என்னை வெட்டிச் சாய்க்கிற போலை அப்பிடியொரு பார்வை பார்த்தாள்.  அதோடை எல்லாக் கலகலப்பும் சரி. வெடுசுடென்று நின்றாள். 
 
சாமான்களை வேண்டிக் கொண்டு வெளியிலை வந்ததும் வராததுமா அவள் கேட்டது 'உதுக்குத்தான் தமிழ்க்கடை  தமிழ்க்கடை என்று  ஓடி வாறனியோ?" 
 
அவளுக்கு உச்சக்கோபம் வந்தால் இப்பிடித்தான் மரியாதையும் குறைஞ்சு போகும்.
 
சிவ சிவா. தனிய வந்திருக்கலாம். இனி கொஞ்ச நாளைக்கு எந்தப் பிர்ச்சனை வந்தாலும் றிவைன் பண்ணி றிவைன் பண்ணி இந்த ஸ்லோகந்தான் போப்போகுது
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட விலைக்கு கொஞ்சக்காசை குடுத்திருக்கலாம்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடைகாரப்பிள்ளையைப் பார்த்து வடிவு என்று சொன்னது தப்பில்லை, தப்பே இல்லை, அதுக்கு முன் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்.அந்த வார்த்தை "என் மனைவிபோல் நீயும் நல்ல வடிவுதான்" இனிமேல் கவனமாய் இருங்கோ......ஒரு ஆணின் மனசு ஆணுக்குத்தான் தெரியும்....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் ஆண்களுக்கு நேரகாலம் பாத்துக் கதைக்கத் தெரியாது எண்டுறது  😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நீங்கள் கடைகாரப்பிள்ளையைப் பார்த்து வடிவு என்று சொன்னது தப்பில்லை, தப்பே இல்லை, அதுக்கு முன் ஒரு வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்.அந்த வார்த்தை "என் மனைவிபோல் நீயும் நல்ல வடிவுதான்" இனிமேல் கவனமாய் இருங்கோ......ஒரு ஆணின் மனசு ஆணுக்குத்தான் தெரியும்....!  😂

உவற்ற கதையை நம்பாதேங்க்கோ.

அந்த கடைக்கார பெட்டையோடயே என்னை கொம்பியர் பண்ணின்னிங்கள் எண்டு உங்களுக்கு முருங்கைகாயாலேயே விழும்😆

பிகு: எதுக்கும் முருங்கைகாயை 1 கிழமை ப்ரீஸரில் வையுங்கோ. எல்லாட்டி வீண் அவஸ்தை😃

Link to comment
Share on other sites

இதுக்குத் தான் நான் அனேகமான நேரங்களில் மகளை அல்லது மகனைக் கூட்டிக் கொண்டு போவது. அதுகளுக்கு கிறீம் சோடாவோ அல்லது நெக்டோவோ வாங்கிக் கொடுத்துட்டு எங்கட மிச்ச அலுவல்களை பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நாஞ்சில் said:

நான் அவசரமா கடைக்காரப்பிள்ளையைப் பார்த்து  " பிள்ளை நீ எப்பவும் வடிவுதான். மகாலட்சுமி மாதிரி..."

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

அவ குறைத்து அடிக்கறது இருக்கட்டும்.வீட்டில் எப்படி அடித்திருப்பா என்டு யோசிச்சு பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

அவ குறைத்து அடிக்கறது இருக்கட்டும்.வீட்டில் எப்படி அடித்திருப்பா என்டு யோசிச்சு பாருங்கோ.

அதிலயும் எவ்வளவு சுகம் இருக்கு.
அடி வாங்கி பேச்சு வாங்கி இரண்டு மூன்று நாளுக்கு கதைக்காமல் இருந்து மீண்டும் சேரும் போது அன்றிரவு முதலிரவை விட பிரகாசிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

இந்தத் திரியோட அனுபவம் அமோகமாய் கிடைக்கும்.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேத்து ஒரு படம் பாத்தனான் இணையத்திலதான் அதாவது (tamilgun) தமிழ்கண்ணில் "ஓ மை கடவுளே" நல்ல படம் சொந்த மனைவியை விட்டு மற்றப் பெண்டுகளைப் பார்த்து ஜொள்ளு விடும் எம்போன்ற சிலதுகளுக்கு ஏதாவது செய்தி சொல்லும் படம் ஆனால் ஒருவிடையம் நான் இந்தப்படத்தை மனுசியோடு சேர்ந்து பார்க்கவில்லை (ஏதேச்சையாகத்தான் நடந்தது நல்லதாப்போச்சுது) 

இங்கையும் சிலவேளை விஜை அஜித் சூர்யா கமல் ரஜனி ஆகியோரது படங்களைப்போட்டு விசி அடிக்கிறவையள்தான் அந்தப்பக்கம் நான் போறதில்லை. 

ஆ... இப்ப நினைவுவருது கமில் விஸ்வரூபம் பார்த்தனான் காரணம் அதில் ஆரோ ஒலித்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த்யிருருக்க்கிறார்கள் என யாரோ சொன்னதை நம்பி அங்க போனால் அப்படியொண்டும் இல்லை ஏமாற்றமே.

முடிந்தால் ஓ மை கடவுளே படத்தை ஒருக்கால் பாருங்கள் ஒரு சில குறைகள் இருந்தாலும் எங்கள்போல் சபல புத்திக்காரருக்கு ஏதாவது ஒரு செய்தி கிடைக்கும். அதோட ஆரண்யகாண்டத்தையும் தவறவிடவேண்டாம்.

நஞ்சிலார் கதையை சுருக்கமாக நல்லா முடிச்சிருக்கிறியள்.

Link to comment
Share on other sites

34 minutes ago, Elugnajiru said:

எங்கள்போல் சபல புத்திக்காரருக்கு ஏதாவது ஒரு செய்தி கிடைக்கும். அதோட ஆரண்யகாண்டத்தையும் தவறவிடவேண்டாம்.

.

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

அது ஒண்டுமில்லை எங்களுக்கு நாங்களே வெள்ளையடிக்கக்கூடாதுதானே மத்தப்படி எனக்கும் உங்களது கருத்துத்தான் 

நாங்கள் கலைப்பொருதளை ரசிக்கும் பாவனையும் திறனும் ஒருபடி மேலேயே கலைப்பொருளை வைத்திருக்கும் உரிமையாளனை நினைத்து "என்னடாப்பா இப்படி மெய்ன்டேன் பண்றான்" என நான் நினைத்ததுமுண்டு. அவனுக்கு என்ன கிணத்துத் தண்ணிய ஆத்து வெள்ளம் அடித்துக்கொண்டு போகவா போகுது எனும் நினைப்பு, அவரும் வேரு ஒரு கலைப்பொருளை ரசிக்கப்போயிடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

உஷ்ஷ்ஷ்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 2:56 PM, குமாரசாமி said:

நாஞ்சிலுக்கு அனுபவம் துண்டற இல்லை.😎

அதானே...

பின் பக்கமா கூல் ரூமில நல்ல முருக்கைகாய் இருக்குதாம்... போய் எடுத்துக்கொண்டு வாருமன்.... எண்டு அனுப்பிப்போட்டெல்லே  வாயை திறந்திருக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:59 PM, நாஞ்சில் said:

ரொஜினாவை வடிவு என்று சொன்ன கோபத்திலை வேண்டுற சாமானுக்கெல்லாம் அறாவிலை போடப் போறாளோ!

விலை பொருளுக்கு அருகில் இருக்கும் விலையை விட்டு எப்படி அறவிலை  அடிப்பார்கள் ?

Link to comment
Share on other sites

13 hours ago, பெருமாள் said:

விலை பொருளுக்கு அருகில் இருக்கும் விலையை விட்டு எப்படி அறவிலை  அடிப்பார்கள் ?

நீங்களும் என்ரை மனிசியைப் போல மடக்கல் கேள்வியெல்லாம் கேட்கிறிிங் கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நாஞ்சில் said:

நீங்களும் என்ரை மனிசியைப் போல மடக்கல் கேள்வியெல்லாம் கேட்கிறிிங் கள் 

நல்லா நொந்து போய்  உள்ளீர்கள் இனி கேள்வி வராது .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பச்சை நாஞ்சில் இரண்டுமுறை குத்தினாலும்  ஒன்று கணக்கில் தான் கூடுது இன்றுதான் கவனித்தேன் .

Link to comment
Share on other sites

On 3/20/2020 at 3:20 PM, ஈழப்பிரியன் said:

அடுத்த தடவை நீங்க தனியே கடைக்கு போய் பாருங்கள்.
இந்த தடவை விலை குறைத்து அடித்திருப்பா.

உங்கட கதையைக் கேட்டு, மனசுக்குள்ளை பட்டாம் பூச்சியைப் பறக்கவிட்டுக் கொண்டு தனியா கடைக்குப் போனால் அவ கடையைப் பூட்டிக் கொண்டு போட்டா. கொரோனானானா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 10:35 AM, ஈழப்பிரியன் said:

அதிலயும் எவ்வளவு சுகம் இருக்கு.
அடி வாங்கி பேச்சு வாங்கி இரண்டு மூன்று நாளுக்கு கதைக்காமல் இருந்து மீண்டும் சேரும் போது அன்றிரவு முதலிரவை விட பிரகாசிக்கும்.

ச்சீ .. நீங்க ரொம்ப மோசம். 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 2:05 PM, நிழலி said:

இன்னொரு பெண்ணை ஏற இறங்க பார்ப்பதை சபலம் என்று குறுப்பிடுவதை மென்மையாக கண்டிக்கின்றேன். நாங்கள் ரசனை மிக்கவர்கள்... ரசிகத்தன்மையுடன் ஒரு கலைப்பொருளை ரசிப்பது போல் ரசிக்கின்றோம்...அவ்வளவுதான். வேண்டுமென்றால் சுவைப்பிரியனிடமும் கேட்டுப் பாருங்கள்.

ஐயா... இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நானும் ஒரு ரௌடி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 5:59 PM, நாஞ்சில் said:

சாமான்களை வேண்டிக் கொண்டு வெளியிலை வந்ததும் வராததுமா அவள் கேட்டது 'உதுக்குத்தான் தமிழ்க்கடை  தமிழ்க்கடை என்று  ஓடி வாறனியோ?"

மனைவியை பக்கத்தில வைத்துக்கொண்டு இன்னொருத்தியிடம் வழிவது இலேசான காரியம் இல்லை. ஆனால் ஆண்புத்தி எப்பவும் அலைபாயும்தானே!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.