Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for coronavirus

 

கொரோனா என்னும் கொடுநோய்
காணுமிடமெங்கும் கரகமாடுகிறது
கொள்ளைபோல் வந்து மனங்களை  
கொதிநிலையில் கதிகலங்க வைக்கிறது

கூட்டம்கூட முடியவில்லை
கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை
குடும்பமாய்க் கூட நாமெல்லாம்
குதூகலிது மகிழ்ந்திருக்க முடியாது
கொடுங்கோல் ஆட்சியாளனாய்
கொத்துக்கொத்தாய் மனிதர்களை
கொன்றேதான் குவிக்கின்றது

வைரஸ் என்னும் விழியில் தெரியா சிறுகிருமி
வல்லவர்களைக் கூட விழிபிதுங்க வைக்கிறது
மானிடர்கள் கண்ட மதி நுட்பமெல்லாம்
பேரிடரில்க் கூடக் கைகொடுக்க மறுக்கிறது
மாளிகையில் வாழும் மகாராணி கூட
மனங்கலக்கம் இன்றி இருக்கவா விடுகிறது   
வீதியில் இருப்போரும் வீடுகளில் இருப்போரும்
வேறில்லை என்றேயது வினைகூறி நிற்கிறது

வீதியெங்கும் வாகனம் விரைந்து செல்கின்றது
கடைக்கண்ணி எங்கும் கலவரமாய் இருக்கிறது
காணும் பொருள்கள் எல்லாம் கூடையில் நிறைகின்றது
கண்மண் தெரியாமல் காசும் கரைகின்றது
வீடுகள் எங்கணும் விளைபொருளால் நிறைகின்றது
பள்ளிகள் இல்லாது பிள்ளைகளில் கூச்சலில்
பக்கத்து வீடும் பரிதவித்து நிற்கின்றது  

விண்ணுந்துப் பறப்பற்று வானம் இருக்கிறது  
தொடருந்துத் தடமோ அதிர்வற்று இருக்கின்றது
வேகச் சாலைகளில் வேறெதுவும் செல்லவில்லை
அலைமோதும் கடைகளில் ஆளரவம் எதுவுமில்லை    
காணுமிடமெங்கும் கதவடைத்தே இருக்கின்றது
போர்க்கால நிகழ்வாய் புதுமையாய் இருக்கிறது

ஆனாலும்

இணையத்தளங்களும் இணையற்ற முகநூலும்   
தொலைபேசி என்னும் தொடர்பாடற் கருவியும்
திக்குத் திசையற்று நேர காலமற்று எப்போதும்
எல்லைகள் தாண்டியும் எதிரொலித்தபடியே
எண்ணிலடங்காது இயங்கிக்கொண்டே இருக்கின்றன

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா பற்றிய வாழ்வியல் கவிதை நன்றாக இருக்கின்றது.

கடவுள் இருக்கான் குமாரு....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி ....அழகாக எழுதியுள்ளீர்கள்.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கொரோனா பற்றிய வாழ்வியல் கவிதை நன்றாக இருக்கின்றது.

கடவுள் இருக்கான் குமாரு....😎

நன்றி குமாரசாமி

 

1 hour ago, suvy said:

நல்ல கவிதை சகோதரி ....அழகாக எழுதியுள்ளீர்கள்.....!  👍

நன்றி சுவி அண்ணா

நன்றி பச்சை  தந்த உடையார், மருது இருவருக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 9:30 PM, பாலபத்ர ஓணாண்டி said:

கொக்காமக்கா கொரனோ கவிதை அருமை.

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஓணாண்டி

பச்சைகள் தந்த  இணையவன், கண்மணி அக்கா ஆகிய உறவுகளுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக்கு நன்றி தமிழினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 3:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை

ஆஆஆ
அபத்தம் அபத்தம்
இந்த கொரோனா விடுமுறையுடன் உலக சனத்தொகை கூடப் போகுதாம்.
நீங்க மட்டும் எப்படி?இப்படி அழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ
அபத்தம் அபத்தம்
இந்த கொரோனா விடுமுறையுடன் உலக சனத்தொகை கூடப் போகுதாம்.
நீங்க மட்டும் எப்படி?இப்படி அழலாம்.

மனிசனின் தொல்லைதான் பெருந்தொல்லை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nilmini said:

நல்ல கவிதை சகோதரி 

வருகைக்கு நன்றி நில்மினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2020 at 11:42 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விண்ணுந்துப் பறப்பற்று வானம் இருக்கிறது  
தொடருந்துத் தடமோ அதிர்வற்று இருக்கின்றது
வேகச் சாலைகளில் வேறெதுவும் செல்லவில்லை
அலைமோதும் கடைகளில் ஆளரவம் எதுவுமில்லை    
காணுமிடமெங்கும் கதவடைத்தே இருக்கின்றது
போர்க்கால நிகழ்வாய் புதுமையாய் இருக்கிறது

 

நன்று. பாராட்டுகள்.

புதுமைகளைக்கூட நான் நிதானமாக நின்றால்தான்  என்று இப்போது இயற்கை மனிதனை நோக்கிக் கேட்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகள் தந்த கண்மணி அக்கா, ரதி, இணையவன், பையன், சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கு நன்றி

20 hours ago, nochchi said:

நன்று. பாராட்டுகள்.

புதுமைகளைக்கூட நான் நிதானமாக நின்றால்தான்  என்று இப்போது இயற்கை மனிதனை நோக்கிக் கேட்கிறது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 19/3/2020 at 22:42, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கூட்டம்கூட முடியவில்லை
கொஞ்சிப்பேசவும் முடியுதில்லை

பார்க்கும் படங்களில் கூட்டமாக இருப்பதையும், உரசியும், கொஞ்சியும் பழகுவதையும் பார்க்க இப்படி உலகம் இருந்ததா என்று தோன்றுகின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

பார்க்கும் படங்களில் கூட்டமாக இருப்பதையும், உரசியும், கொஞ்சியும் பழகுவதையும் பார்க்க இப்படி உலகம் இருந்ததா என்று தோன்றுகின்றது!

இன்று கடைக்குப் போனால் பலர் முகக்  கவசமோ கையுறையோ கூட இல்லாமல் வந்திருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று கடைக்குப் போனால் பலர் முகக்  கவசமோ கையுறையோ கூட இல்லாமல் வந்திருக்கின்றனர்.

சனம் இப்பொழுது துணிந்து விட்டது போல தெரிகின்றது ...இங்கும் சனம் சகஜமாக திரியத் தொடங்கிவிட்டனர்....
கவிதைக்கு பாராடுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, putthan said:

சனம் இப்பொழுது துணிந்து விட்டது போல தெரிகின்றது ...இங்கும் சனம் சகஜமாக திரியத் தொடங்கிவிட்டனர்....
கவிதைக்கு பாராடுக்கள்

நன்றி புத்தன். நானும் கூட இன்று ஆடிப்பாடி 45 நிமிடம் சாமான்கள் எடுத்தது. 8 மணிக்குத் திறக்கிற கடைக்கு முதல் ஆளா 7.40 இக்குப் போய் நின்று வீடடை வர 8.30. கடை 5 நிமிடநடையில் இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.