Jump to content

வயதுபோனால் இதுதானோ ???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for முதியவர்கள்

 

எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்பது ஒன்று. இரு பிள்ளைகளோ அல்லது அதிகமான பிள்ளைகள் அந்தப் பெற்றோர்களுக்கு இருந்தால் மாதம் ஒருவீடு என்று மாறி மாறி வைத்திருப்பதும் தாய் ஒரு வீட்டில் தந்தை இன்னொரு வீட்டில் என்று தம் வசதிக்கு பெற்றோரைப் பிரித்தும் வைத்திருக்கின்றனர்.

பிரித்தானியாவில் அறுபது கடந்தவர்களுக்கு பென்ஷன் என்று கொடுக்கிறார்கள். அதைவிட வீட்டுவாடகைக்கும் ஒரு தொகை கொடுத்து இயலாதவர்கள் எனில் சமையலுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு என்றுகூட உதவித்தொகை அரசினால் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க உதவித் தொகையையும் அவர்களுக்குரிய பென்ஷன் பணத்தையும்கூட சில பிள்ளைகள் தாமே எடுத்துக்கொள்கின்றனர். பெற்றோர்களை தம் வேலைக்காரர்களாகவும் நடத்துகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டில் சும்மாதான் இருக்கிறார். மாமியாருடன் ஏழு வயதுப் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புகிறார். இத்தனைக்கும் மாமியாருக்கு காது கேட்காது. கடவைவிளக்கில் அந்தப் பெடியன்தான் அவரைக் கையைப்பிடித்து அந்தப்பக்கம் கூட்டிப்போவான். கணவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து இயலாது விட்டுவிட்டார்.

இன்னோரு குடும்பத்தில் இருமகள்கள். தாய் ஒரு வீட்டில். தந்தை ஒரு வீட்டில். அவர்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு விடுமுறை செல்லும்போது மட்டும் கணவனைப் பார்க்க அந்தத் தாய் வருவார். எனக்கு என்னகேள்வி என்றால் அந்தப் பெற்றோர் முழுமனதுடன் இதை ஏற்றுக்கொண்டுதான் பிள்ளைகளுடன் இருக்கிறார்களா?? அல்லது வேறுவழியின்றி இருக்கிறார்களா என்பதுதான். அப்படி விரும்பித்தான் இருக்கிறார்கள் எனில் வயது போன காலத்தில் பிரிந்து இருப்பது அவர்களுக்கு நின்மதியைத் தருகிறதா ????  வயதானபின்னும் நின்மதியாக இருக்க முடியாமல் பிள்ளைகளுக்காகத் தம் மகிழ்ச்சியையும் நின்மதியையும் தொலைத்தது வாழாது தனியாக நின்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே ???அல்லது ஊர் உலகம் என்ன சொல்லும் என்னும் பயம் தான் அவர்கள் எதுவும்சொல்லாமல் பிள்ளைகளின் விருப்பத்துக்கு இசைந்துபோவதா ???? அல்லது இத்தனை காலமும் சேர்ந்து வாழ்ந்துவிட்டோம். இனியாவது தனியா இருப்போம் என்று அந்தப்  பெற்றோரில் ஒருவர் நினைக்கிறார்களா என்று புரியவே இல்லை.

என் பெற்றோர் தனியாக வசித்தார்கள்.நாம் எல்லாம் அருகில் வசித்தோம். தாம் விரும்பிய இடங்களுக்கு அவர்கள் சென்றார்கள். விரும்பியவற்றை வாங்கி உண்டார்கள். அப்பா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அம்மா தானே சமைத்து உண்டு நின்மதியாகவே இருந்தார். அதுவே அவவுக்கு மகிழ்சியைத் தந்தது. அதுவரை அம்மாவும் அப்பாவும்  நின்மதியாக வாழ்ந்தார்கள்.  அப்பா இறந்த பின்னர் தான் அவரைச் சமையல் செய்ய விடாது தம்பியின் மனைவி உணவு சமைத்துக் கொடுத்தார். அதுவரை நாங்கள் யாரும் அவர்கள் சுதந்திர வாழ்வில் தலையிடவில்லை.

ஆனால் இங்கு சில பெற்றோர்கள் எழுபது வயதிலும் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமையல் செய்கின்றனர். பேரப்பிள்ளைகளைக் குளிப்பாட்டுகின்றனர். உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

நாம் ஊரில் இருந்தபோது என் அம்மா காலை நாலரைக்கே எழுந்து காலை,மதிய உணவுகளை சமைத்து முடித்து எமக்குத் தேநீர் போட்டு ஐந்து பிள்ளைகளுக்கும் பள்ளிக்கு உணவு பொதி செய்து தானும் எட்டு மணிக்குப் பள்ளிக்கு கிளம்பிவிடுவார். மாலை வந்து இரவுக்கு ஏதும் சமைப்பார். இத்தனைக்கும் எனது அம்மம்மா எம்முடன் தான் இருந்தார். அவர் தன் பாட்டுக்கு எழுந்து குளித்தவிட்டு உள்ள கோவில்கள் எல்லாவற்றுக்கும் போய்விட்டு பதினொரு பன்னிரண்டுக்குவந்து சாப்பிட்டுவிட்டு இருப்பார். அந்த நாட்டில் அது சரி என்றாலும் இங்கு இன்னும் வசதிகளுள்ள நாட்டில் ஏன் முதிய பெற்றோரை வேலை வாங்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப்பார்க்கும்போது மற்றைய இனத்து முதியவர்கள் நின்மதியாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். இந்தியாபோன்று மாமியார் கொடுமை எல்லாம் எம்மிடம் இல்லை என்று பார்த்தால் இங்கு நடப்பதெல்லாம் அதைவிடக் கொடுமையல்லோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

இல்லை புலம்பெயர்ந்த தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

ஐயாவுக்கு பயங்கர அனுபவம் இருக்குமெண்டு நினைக்கிறன்....
இஞ்சாலையும் கொஞ்சத்தை எடுத்து விடுறது😷

Bildergebnis für goundamani gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

அதுவும் சரிதான் அண்ணா.சுகம் இருப்பது உண்மைதான்.  ஆனால் துன்பத்தை ஏன் கொடுக்கிறார்கள் பிள்ளைகள் என்பதுதான் என் கேள்வி ??? பிள்ளைகள் தத்தமது வேலைகளை பொறுப்புடன்செய்து பெற்றவர்களை சும்மா இருக்க விடலாம் தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavallur Kanmani said:

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

மறதி நோய் வந்தால் பெற்றவர்களை வீட்டில் வைத்திருப்பது கடினமானதுதான். ஆனால் நான் கூறுவது அதற்கு முன்பாக ஒரு 60 - 70 வயது வரையாவது அவர்கள் நின்மதியாக மகிழ்வாக இருக்க அனுமதிக்கலாம் தானே அக்கா. ஒரு ஐம்பது கடந்தாலே வீட்டு வேலைகளை யாராவது செய்ய மாட்டார்களா என்றும் சமைத்துத் தந்தால்  இருந்து உண்ணலாம் என்றும் ஆசை எழும்போது அறுபது கடந்த பின்னரும் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சமையல் சாப்பாடு, வீடு சுத்தம் செய்வது, குசினியைச் சுத்தம் செய்வது எல்லாம் எத்தனை பெரிய சுமை அவர்களுக்கு.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா??? அல்லது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா???

இல்லை.

அல்லது ???

ஓரளவு தெரிந்தது  பலது நண்பர்கள்  உறவினர்கள் மூலம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 11:53 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

பல இடங்களிலும் உது தான் நடக்குது

1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

பிள்ளைகளுடன் தான் வாழ்கிறார்கள் அண்ணா. ஆனால் பலர் நின்மதியாக வாழவில்லை. வயதானபின்னும் அத்தனை வேலைகளையும் பிள்ளைகளுக்குச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பென்ஷன் பணத்தையும் தாமே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கைச்செலவுக்குக் கூட விரும்பியதை வாங்குவதற்கு பணம் கொடுப்பதில்லை பல பிள்ளைகள். தற்போது பலரை முதியோர் இல்லங்களிலும் விடுகின்றனர். விடுவது கூடப் பரவாயில்லை. சென்று பார்ப்பது கூட இல்லை என்று அங்கு வேலை செய்யும் பெண் கூறினார். கனடாவில் ஷாப்பிங் மோலில் கொண்டுசென்று விட்டுவிட்டு வேலை முடிந்து வரும்போது திரும்பக் கூட்டிவருவதும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

யாயினியைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.
முடியுமானவரை யாழுடன் இணைந்திருங்கள்.
நீங்கள் தொடக்கிய அருமையான திரி தேடுவாரற்றுக் கிடக்கிறது.
மீண்டும் வந்து அதற்கு உயிர் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 6:53 PM, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

அதற்குப் பிள்ளைகளை மட்டும் காரணமாகச் சொல்லமுடியாது யாயினி. பெற்றவர்களும் பிள்ளைகள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு இருக்காமல் தமது விருப்புக்களையும் சொல்லப் பழக்கவேண்டும். அத்தோடு பிள்ளைகள் மட்டுமே வாழ்வு என்று இருக்காது தாமும் சிறிதுகாலமாவது நின்மதியாக இருக்கும் ஏற்படுகளைப் பார்க்கவேண்டும்.

பச்சைக்கள் தந்த விசுகு அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, விளங்க நினைப்பவன் ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

ம‌ன‌சுக்கு பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் தானே அன்பு ச‌ண்டை போட‌ முடியும் சுவி அண்ணா 😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2020 at 9:33 AM, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

பழகிய பழக்கத்துக்கு நீங்கள் எழுதிக் குடுக்க மாட்டியளே குமாரசாமிக்கு ???😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! நாட்டில் தனி நபரின் மாதாந்த செலவு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரியில், தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, நாட்டின் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 18,308 ரூபா தேவைப்படுவதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378659
    • 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ)  https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.