Jump to content

வயதுபோனால் இதுதானோ ???


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image result for முதியவர்கள்

 

எங்கள் உறவுகள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் குடும்ப உறவுகளான தாத்தா, பாட்டி அம்மம்மா,அப்பப்பா என எல்லோரும் கூட இருப்பது ஒருவரம் என்று தான் இத்தனை நாட்கள் சொல்லிக்கொண்டு வந்தோம். ஆனால் பெரும்பாலும் புலம்பெயர்த்தோர் தம் பெற்றோரை நன்றாக வைத்ட்டுப் பார்க்கிறார்களா என்றால் பெரும்பாலுமில்லை என்ற பதில் தான் வரும். சாதாரணமாகப் பெண்கள் தம் பெற்ரோரைத் தம்முடன் வைத்திருப்பர். ஏனெனில் அவர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதுக்குறைவு. ஆனால் மாமனாரைத் தம்முடன் வைத்திருந்தாலும் மாமியாரைத் தம்முடன் வைத்திருப்பதைப் பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. ஆனால் பெற்ற பெண்பிள்ளைகள் பலர் தமது பெற்றோரை வயதுபோன காலத்தில் நின்மதியாக இருக்கவிடாது தம் உதவிக்காகப் பெற்றோரை தம்முடன் வைத்திருப்பது ஒன்று. இரு பிள்ளைகளோ அல்லது அதிகமான பிள்ளைகள் அந்தப் பெற்றோர்களுக்கு இருந்தால் மாதம் ஒருவீடு என்று மாறி மாறி வைத்திருப்பதும் தாய் ஒரு வீட்டில் தந்தை இன்னொரு வீட்டில் என்று தம் வசதிக்கு பெற்றோரைப் பிரித்தும் வைத்திருக்கின்றனர்.

பிரித்தானியாவில் அறுபது கடந்தவர்களுக்கு பென்ஷன் என்று கொடுக்கிறார்கள். அதைவிட வீட்டுவாடகைக்கும் ஒரு தொகை கொடுத்து இயலாதவர்கள் எனில் சமையலுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு என்றுகூட உதவித்தொகை அரசினால் வழங்கப்படுகிறது. அப்படியிருக்க உதவித் தொகையையும் அவர்களுக்குரிய பென்ஷன் பணத்தையும்கூட சில பிள்ளைகள் தாமே எடுத்துக்கொள்கின்றனர். பெற்றோர்களை தம் வேலைக்காரர்களாகவும் நடத்துகின்றனர். எனக்குத் தெரிந்த ஒரு பெண் வீட்டில் சும்மாதான் இருக்கிறார். மாமியாருடன் ஏழு வயதுப் பிள்ளையை பள்ளிக்கு அனுப்புகிறார். இத்தனைக்கும் மாமியாருக்கு காது கேட்காது. கடவைவிளக்கில் அந்தப் பெடியன்தான் அவரைக் கையைப்பிடித்து அந்தப்பக்கம் கூட்டிப்போவான். கணவரும் எவ்வளவோ சொல்லிப்பார்த்து இயலாது விட்டுவிட்டார்.

இன்னோரு குடும்பத்தில் இருமகள்கள். தாய் ஒரு வீட்டில். தந்தை ஒரு வீட்டில். அவர்கள் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு விடுமுறை செல்லும்போது மட்டும் கணவனைப் பார்க்க அந்தத் தாய் வருவார். எனக்கு என்னகேள்வி என்றால் அந்தப் பெற்றோர் முழுமனதுடன் இதை ஏற்றுக்கொண்டுதான் பிள்ளைகளுடன் இருக்கிறார்களா?? அல்லது வேறுவழியின்றி இருக்கிறார்களா என்பதுதான். அப்படி விரும்பித்தான் இருக்கிறார்கள் எனில் வயது போன காலத்தில் பிரிந்து இருப்பது அவர்களுக்கு நின்மதியைத் தருகிறதா ????  வயதானபின்னும் நின்மதியாக இருக்க முடியாமல் பிள்ளைகளுக்காகத் தம் மகிழ்ச்சியையும் நின்மதியையும் தொலைத்தது வாழாது தனியாக நின்மதியாக வாழ்ந்துவிட்டுப் போகலாமே ???அல்லது ஊர் உலகம் என்ன சொல்லும் என்னும் பயம் தான் அவர்கள் எதுவும்சொல்லாமல் பிள்ளைகளின் விருப்பத்துக்கு இசைந்துபோவதா ???? அல்லது இத்தனை காலமும் சேர்ந்து வாழ்ந்துவிட்டோம். இனியாவது தனியா இருப்போம் என்று அந்தப்  பெற்றோரில் ஒருவர் நினைக்கிறார்களா என்று புரியவே இல்லை.

என் பெற்றோர் தனியாக வசித்தார்கள்.நாம் எல்லாம் அருகில் வசித்தோம். தாம் விரும்பிய இடங்களுக்கு அவர்கள் சென்றார்கள். விரும்பியவற்றை வாங்கி உண்டார்கள். அப்பா இறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வரை அம்மா தானே சமைத்து உண்டு நின்மதியாகவே இருந்தார். அதுவே அவவுக்கு மகிழ்சியைத் தந்தது. அதுவரை அம்மாவும் அப்பாவும்  நின்மதியாக வாழ்ந்தார்கள்.  அப்பா இறந்த பின்னர் தான் அவரைச் சமையல் செய்ய விடாது தம்பியின் மனைவி உணவு சமைத்துக் கொடுத்தார். அதுவரை நாங்கள் யாரும் அவர்கள் சுதந்திர வாழ்வில் தலையிடவில்லை.

ஆனால் இங்கு சில பெற்றோர்கள் எழுபது வயதிலும் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமையல் செய்கின்றனர். பேரப்பிள்ளைகளைக் குளிப்பாட்டுகின்றனர். உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

நாம் ஊரில் இருந்தபோது என் அம்மா காலை நாலரைக்கே எழுந்து காலை,மதிய உணவுகளை சமைத்து முடித்து எமக்குத் தேநீர் போட்டு ஐந்து பிள்ளைகளுக்கும் பள்ளிக்கு உணவு பொதி செய்து தானும் எட்டு மணிக்குப் பள்ளிக்கு கிளம்பிவிடுவார். மாலை வந்து இரவுக்கு ஏதும் சமைப்பார். இத்தனைக்கும் எனது அம்மம்மா எம்முடன் தான் இருந்தார். அவர் தன் பாட்டுக்கு எழுந்து குளித்தவிட்டு உள்ள கோவில்கள் எல்லாவற்றுக்கும் போய்விட்டு பதினொரு பன்னிரண்டுக்குவந்து சாப்பிட்டுவிட்டு இருப்பார். அந்த நாட்டில் அது சரி என்றாலும் இங்கு இன்னும் வசதிகளுள்ள நாட்டில் ஏன் முதிய பெற்றோரை வேலை வாங்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. இப்படிப்பார்க்கும்போது மற்றைய இனத்து முதியவர்கள் நின்மதியாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். இந்தியாபோன்று மாமியார் கொடுமை எல்லாம் எம்மிடம் இல்லை என்று பார்த்தால் இங்கு நடப்பதெல்லாம் அதைவிடக் கொடுமையல்லோ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மாங்குயில் said:

நீங்கள் சொன்ன உதாரணங்கள் எல்லாம், சிறி லங்காவைச் சேர்ந்தவர்களோ?

இல்லை புலம்பெயர்ந்த தமிழர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

. உடையணிவித்து  பள்ளிக்கு கூட்டிச் சென்று மீண்டும் மாலையில் கூட்டி வருகின்றனர். பார்க்க பாவங்களாய் இருக்கிறது. உங்கள் வேலைகளை ஏன் உங்கள் பெற்றோர்மீது திணிக்கிண்றீர்கள்.

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

ஐயாவுக்கு பயங்கர அனுபவம் இருக்குமெண்டு நினைக்கிறன்....
இஞ்சாலையும் கொஞ்சத்தை எடுத்து விடுறது😷

Bildergebnis für goundamani gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

எனக்கு தெரிந்தது, இருக்க விரும்புவது:

முதுமையில் கடைசி வரை பொருளிருக்க வேண்டும்.

இருவருக்கும் தேவையான அளவிற்கு பணம் - மருத்துவ செலவு, உணவு, இருக்க வீடு, காப்பீடு, சொத்துக்கள் என அனைத்தும் தம் பெயரிலையே முதியவர்கள் வைத்திருக்க வேண்டும். 'தமக்கு பின்தான் பிள்ளைகளுக்கு' என தயார்படுத்தியிருக்க வேண்டும்.

'தன் பேச்சுக்கு மரியாதை இல்லை, தான் சொல்வதை பிள்ளைகள் கேட்பது இல்லை' என்ற எண்ணத்தை,எதிர்பார்ப்பை அகற்றிக்கொள்ள வேண்டும்.

கூடுமானவரை பிள்ளைகளின் குடும்ப பிரச்சனைகளில் தலையிடாமல் 'அது அவர்களின் வாழ்க்கை, அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்' என விலகியிருக்க வேண்டும்.

பேரப்பிள்ளைகளை கொஞ்சி விளையாடினால் மனதளவில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு வடிகாலாக இருக்கும்.

ஓய்வு பெற கொஞ்ச காலம் இருக்குதானே, பார்க்கலாம்..! tw_glasses:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சுமே இதுவரை நீங்கள் தாயாக மட்டும் இருப்பதனால் பேரன் பேத்திமாரின் கஸ்டங்கள் மட்டுமே தெரிகிறது.
நீங்களும் பேத்தியாகினாலே எவ்வளவு கஸ்டமாக இருந்தாலும் அதிலுள்ள சுகம் புரியும்.

அதுவும் சரிதான் அண்ணா.சுகம் இருப்பது உண்மைதான்.  ஆனால் துன்பத்தை ஏன் கொடுக்கிறார்கள் பிள்ளைகள் என்பதுதான் என் கேள்வி ??? பிள்ளைகள் தத்தமது வேலைகளை பொறுப்புடன்செய்து பெற்றவர்களை சும்மா இருக்க விடலாம் தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavallur Kanmani said:

இது ஒரு பெரிய பிரச்சனையாக. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கத்தை குறை சொல்ல முடியாது.
சில வீடுகளில் முதியவர்கள் சும்மா இருக்கச் சொன்னாலும் இருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்குத் தொரிந்த சில பிரச்சனைகளை இங்கு தருகிறேன்.
ஒரு ஜயா மகனின் வீட்டு பின் தோட்டத்தில் மரக்கறித் தோட்டம் செய்கிறேன் என்று புல் அனைத்தையும் நாசம் பண்ணி விட்டார்.பின் மகன் பணம் செலவழித்து புதிய புல் பதித்தார்.
ஓர் அம்மா மறதி காரணமாக சமையலறை பேசினிற்குள் துப்புவார்.
இன்னோர் அம்மா கழிவறை கொமட்டிற்குள் இருக்கும் நீரில் கை கழுவுவார்.
பிறிதொரு அம்மா அறையில் இருக்கும் சீமெந்து அலுமாரியை கழிவறை என்று நினைத்து மலங்கழித்தார்
இப்படி இன்னோரன்ன பிரச்சனைகளை பிள்ளைகளும் சந்திக்கின்றனர்.
பிள்ளைகளால் பெற்றவர்களும் துன்பப்படுவது  சில இடங்களில் நடக்காமல் இல்லை.
முதுமை பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகுந்த சவால்தான்.
சில வீடுகளில் பெற்றவரின் உதவிப் பணம்தான் வீட்டிற்கு மோட்கேஜ் கட்டுவதும் நடக்கிறது.
பிள்ளைகளின் உணவை உண்ணமுடியாமல் அவதிப்படும் பெற்றவர்களையும் கண்டிருக்கிறோம்.
முதுமைக்காலத்தில் பிள்ளைகள் பெற்றவரை அன்பாக ஆதரவாக நடத்த வேண்டியது அவசியம். 
முடியாத பட்சத்தில் முதியோர் அப்பாட்மென்ட்கள் முதியோர் காப்பகங்கள் அவர்களை கவனிக்க அமைக்கப்பட்டுள்ளன.
இன்னும் எம்மில் பலர் முதியோர் காப்பகங்களுக்குச் செல்லத் தயாராகவில்லை.
மறதி நோய் வந்து விட்டால் முதியோர் காப்பகத்துக்கு செல்வதுதான் ஒரே வழி.
அதுவரை பிள்ளைகளுக்கு எம்மால் ஆன உதவிகளை செய்யலாம்.

மறதி நோய் வந்தால் பெற்றவர்களை வீட்டில் வைத்திருப்பது கடினமானதுதான். ஆனால் நான் கூறுவது அதற்கு முன்பாக ஒரு 60 - 70 வயது வரையாவது அவர்கள் நின்மதியாக மகிழ்வாக இருக்க அனுமதிக்கலாம் தானே அக்கா. ஒரு ஐம்பது கடந்தாலே வீட்டு வேலைகளை யாராவது செய்ய மாட்டார்களா என்றும் சமைத்துத் தந்தால்  இருந்து உண்ணலாம் என்றும் ஆசை எழும்போது அறுபது கடந்த பின்னரும் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சமையல் சாப்பாடு, வீடு சுத்தம் செய்வது, குசினியைச் சுத்தம் செய்வது எல்லாம் எத்தனை பெரிய சுமை அவர்களுக்கு.

4 hours ago, விளங்க நினைப்பவன் said:

அந்த பாவங்களுக்கு நடக்கும் அநியாயங்களை எழுதியதற்கு நன்றி.

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா??? அல்லது ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் அந்த அநியாயம் நடக்குதா???

இல்லை.

அல்லது ???

ஓரளவு தெரிந்தது  பலது நண்பர்கள்  உறவினர்கள் மூலம் அறிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 11:53 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதன் பின் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ஆனாலும் உங்கள் அனுபவம் வேறாகத்தானிருக்கும். ஏனெனில் நீங்கள் இருக்கப்போவதுஉங்கள் சொந்த நாட்டில் சுற்றங்கள் சூழ. அது எம்மவர்க்குப் பொருந்தாது தானே அண்ணா

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பையன்26 said:

சுமெக்கா இது என‌க்கு 2004ம் ஆண்டு க‌ன‌டாவில் வ‌சிக்கும் என‌து ம‌ச்சான் சொன்ன‌து , வாசித்து விட்டு சிரிக்காதைங்கோ /

ம‌ச்சானின் ந‌ண்ப‌ன் தாயை சிறில‌ங்காவில் இருந்து பொன்ச‌ர் ப‌ண்ணி க‌ன‌ட‌வுக்கு எடுத்தாராம் , தாயை க‌ன‌ட‌வுக்கு கூப்பிட்டு ம‌க‌ன் வேலைக‌ளில் விசியாய் இருந்தாராம் , 

ந‌ண்ப‌னின் அம்மா தானே வ‌ந்து இருக்கிரா நேரில் போய் பாப்போம் என்று என்ர‌  ம‌ச்சான் போய் இருக்கிறார் ந‌ண்ப‌னின்  வீட்டை ,

அந்த‌ அம்மா க‌ன‌ட‌ வ‌ந்த‌ கால‌ம் க‌டும் குளிராம் , என்ர‌ ம‌ச்சானை பார்த்து கேட்டாவாம் , த‌ம்பி என்ன‌ வெளியால‌ தேங்காப்பு கொட்டுன்டூது என்று , அப்ப‌ ம‌ச்சான் சொன்னாராம் அம்மா இது தான் சினோ இது கொட்டி தான் குளிர் அதிக‌மாகிற‌து என்று , உட‌ன‌ ந‌ண்ப‌னின் அம்மா சொன்னாவாம் உப்ப‌டி என்று தெரிந்து இருந்தா நான் ஊரிலையே இருந்து இருப்பேன் என்னை ஏமாத்தி க‌ன‌டாவுக்கு கூப்பிட்டாங்க‌ள் என்று ஹா ஹா 😁

பல இடங்களிலும் உது தான் நடக்குது

1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சொல்றேனம்மா.

ஏன் இது மற்ற நாடுகளுக்கு பொருந்தாதா..?

அங்கெல்லாம் பென்சன் அரசாங்கத்திடமிருந்து கிடைத்தாலும், வாழ்வது பிள்ளைகளுடன் தானே, இல்லை முதியோர் காப்பிடங்களா..?

பிள்ளைகளுடன் தான் வாழ்கிறார்கள் அண்ணா. ஆனால் பலர் நின்மதியாக வாழவில்லை. வயதானபின்னும் அத்தனை வேலைகளையும் பிள்ளைகளுக்குச் செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பென்ஷன் பணத்தையும் தாமே வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கைச்செலவுக்குக் கூட விரும்பியதை வாங்குவதற்கு பணம் கொடுப்பதில்லை பல பிள்ளைகள். தற்போது பலரை முதியோர் இல்லங்களிலும் விடுகின்றனர். விடுவது கூடப் பரவாயில்லை. சென்று பார்ப்பது கூட இல்லை என்று அங்கு வேலை செய்யும் பெண் கூறினார். கனடாவில் ஷாப்பிங் மோலில் கொண்டுசென்று விட்டுவிட்டு வேலை முடிந்து வரும்போது திரும்பக் கூட்டிவருவதும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

யாயினியைக் கண்டது மிக்க மகிழ்ச்சி.
முடியுமானவரை யாழுடன் இணைந்திருங்கள்.
நீங்கள் தொடக்கிய அருமையான திரி தேடுவாரற்றுக் கிடக்கிறது.
மீண்டும் வந்து அதற்கு உயிர் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2020 at 6:53 PM, யாயினி said:

முக்கியமாக மீளவும் நான் இந்தப் பகுதிக்குள் வர காரணமான திரியாக இது இருந்திருக்கிறது..நன்றிகள் அக்கா.சுருக்கமாக சொன்னால் நம் தாய்.தந்தயர்கள் வெளிநாடு என்ற ஒன்றுக்கு வராமல் இருப்பதுவே நன்று.வயோதிப காலத்தில் நிறையவே கஸ்ரப்படுகிறார்கள்.

அதற்குப் பிள்ளைகளை மட்டும் காரணமாகச் சொல்லமுடியாது யாயினி. பெற்றவர்களும் பிள்ளைகள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு இருக்காமல் தமது விருப்புக்களையும் சொல்லப் பழக்கவேண்டும். அத்தோடு பிள்ளைகள் மட்டுமே வாழ்வு என்று இருக்காது தாமும் சிறிதுகாலமாவது நின்மதியாக இருக்கும் ஏற்படுகளைப் பார்க்கவேண்டும்.

பச்சைக்கள் தந்த விசுகு அண்ணா, ஈழப்பிரியன் அண்ணா, விளங்க நினைப்பவன் ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இப்ப என்ன சொல்ல வாறீங்கள் பையா...... எதுக்கும் பரிமளம் நர்ஸிங் படிச்சுட்டு வரவேண்டும் என்று சொல்லுறீங்களா ......!  🤔

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

சும்மா நகைச்சுவைக்கு எழுதினான் /
தாத்தாவ‌ போட்டு வாங்வ‌தில் ஒரு சுக‌ம் இருக்கு சுவி அண்ணா 😁/ நீங்க‌ள் த‌ப்பாக‌ க‌ருத‌ வேண்டாம் 😁

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு பையா......!  😁

ம‌ன‌சுக்கு பிடிச்ச‌ உற‌வுக‌ளுட‌ன் தானே அன்பு ச‌ண்டை போட‌ முடியும் சுவி அண்ணா 😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2020 at 9:33 AM, பையன்26 said:

யாழில் க‌ருத்து எழுதும் ப‌ல‌ உற‌வுக‌ள் கூட‌ 55 வ‌ய‌தில் இருந்து 65 வ‌ர‌ உள்ள‌வ‌ர்க‌ள் / இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் போக‌ 75 வ‌ய‌த‌ தாண்டிடுவின‌ம் / 
யாழ் உற‌வுக‌ள் அறிவான‌ர்வ‌க‌ள் அவ‌ர்க‌ள் க‌ட‌சி வ‌ர‌ த‌ங்க‌ளை தாங்க‌ள் பார்த்து கொள்ளுவின‌ம் /

க‌ள்ளு கொட்டில்ல‌ நினைக்க‌ தான் பாவ‌மாய் இருக்கு / வ‌ய‌து போக‌ போக‌ க‌ண் பார்வை குறைந்திடும் பிற‌க்கு ப‌ரிம‌ள‌த்த‌ நினைச்சு க‌டித‌ம் எழுத‌ ஏலாது ஹா ஹா 😁
 

பழகிய பழக்கத்துக்கு நீங்கள் எழுதிக் குடுக்க மாட்டியளே குமாரசாமிக்கு ???😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.