Jump to content

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய துப்பறிவாளர்களை பயன்படுத்தும் சிங்கப்பூர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கரிஷ்மா வாஸ்வானி பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிய துப்பறிவாளர்களின் உதவியை பயன்படுத்தியுள்ளது அந்நாடு. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை, வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடுகிறது.

இது எப்படி சாத்தியமானது? உலகின் மற்ற நாடுகள் இந்த முறையை பின்பற்றுமா?

சீனாவின் க்வாங்ஷீ நகரத்தில் இருந்து சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த ஜனவரி மாதம், 20 சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் வந்தடைந்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

அதோடு முதலை எண்ணெய் மற்றும் மூலிகை பொருட்கள் போன்ற பொருட்களை விற்கும் பாரம்பரிய சீன மருந்தகம் ஒன்றுக்கும் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற கடை அது.

அப்போது அந்தக் கடையில் இருந்த பணியாளர் பெண்ணொருவர் இந்த சுற்றுலா பயணிகளுக்கு பல பொருட்களை காண்பித்துள்ளார். மேலும், சில நபர்களுடைய தோல்களில் எண்ணைய் மசாஜும் செய்துள்ளார். அந்த சீன சுற்றுலாக்குழு, மீண்டும் நாடு திரும்பிவிட்டது.

சிங்கப்பூரில் உள்ள சீன மருந்தகம்படத்தின் காப்புரிமை ROSLAN RAHMAN Image caption சிங்கப்பூரில் உள்ள சீன மருந்தகம்

ஆனால், அவர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றை சிங்கப்பூரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

என்ன ஆனது?

அந்த நேரத்தில்தான், சிங்கப்பூர் விமான நிலையத்தில் சீனாவில் இருந்துவந்த சில நபர்களில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி, சிங்கப்பூர் நகரங்களுக்கு உள்ளும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

யோங் தாய் ஹங் என்ற சீன மருந்துக்கடைதான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த முதல் தொகுப்பு. இதில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியும், அந்த மருந்துக்கடை பணியாளரும் அடங்குவர்.

சீனா சுற்றுலாவாசிகள் ஒரே ஒரு முறை அந்த கடைக்கு செல்ல, அங்கிருந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மருந்துக்கடை பணியாளர், அவரின் கணவர், அவர்களது ஆறு மாத குழந்தை, அங்கிருந்த இந்தோனீசியாவை சேர்ந்த உதவியாளர் மற்றும் மேலும் இரண்டு பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் குணமாகிவிட்டனர்.

வைரஸ் தொற்று இருப்பவர்களை வேகமாக கண்டறிய விரிவான திட்டம் ஒன்றை சிங்கப்பூர் கையாண்டிருக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும்.

வைரஸ் தொற்று இருப்பவர்களை கண்டறிந்த, அந்த நபரால் யாருக்கெல்லாம் வைரஸ் தொற்று பரவியிருக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த நபர்களை பின்தொடர்ந்து, அவர்களையும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியதே அத்திட்டம். இதனால் வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

"சிங்கப்பூரும் வுஹான் மாதிரி ஆகியிருக்கும். மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் இருந்திருப்பார்கள்" என்கிறார் அந்நாட்டு அரசு ஆலோசகரும், மவுண்ட் எலிசபெத் நொவேனா மருத்துவமனையின் தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவரான லியாங் ஹோ நம்.

மார்ச் 16ஆம் தேதிவரை சிங்கப்பூரில் 243 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை எந்த மரணங்களும் இல்லை.

சிங்கப்பூர்படத்தின் காப்புரிமை ROSLAN RAHMAN

சிசிடிவி கேமிராக்கள், போலீஸ் விசாரணை, சற்று பழைய முறையான துப்பறிவாளர்கள் உதவியுடன் கொரோனா தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் மொத்தம் 6000 பேர் கண்டறியப்பட்டனர்.

துப்பறிவாளர்கள் இதில் எப்படி உதவினார்கள்?

தொலைப்பேசி அழைப்புதான் இதற்கான முதல் அடி.

ஒரு நாள் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட பிரிட்டனை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மெலிசாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.

"என்னால் நம்பமுடியவில்லை. புதன்கிழமையன்று 18:47 மணிக்கு டாக்ஸியில் இருந்தீர்களா என்று கேட்டார்கள். சரியாக சொன்னார்கள். நான் பயந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை" என யாரென்று தெரியாத நபரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து விவரிக்கிறார் மெலிசா.

தான் டாக்ஸியில் பயணித்தது மெலிசாவிற்கு நியாபகம் வந்தது. ஆனால், இன்று வரை அவருக்கு கொரோனாவை பரப்பியது அந்த டாக்ஸியின் ஓட்டுநரா அல்லது உடன் வந்த சக பயணியா என்று தெரியவில்லை.

அவரை தொலைப்பேசியில் அழைத்து இந்த விஷயத்தை தெரிவித்தது சிங்கப்பூரின் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி. மெலிசா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூர்

அடுத்த நாளே மெலிசாவின் வீட்டிற்கு சில மாஸ்க் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வர, அப்போதுதான் அவருக்கு இதன் முக்கியத்துவம் புரிந்தது.

"நான் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அதனை மீறினால் சிறை தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும் என்றார்கள்" என மெலிசா கூறுகிறார்.

அதனை பின்பற்றிய மெலிசா, இரண்டு வாரங்கள் கழித்து கொரோனா அறிகுறிகள் ஏதுமின்று குணமடைந்தார்.

ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 8000 பேர் இருக்கும் சிங்கப்பூர், இந்த உலகில் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

வைரஸ் தொற்று வேகமாக பரவினால் அது அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, அபாயத்தில் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதைவிட அந்நாட்டிற்கு வேறு வழி இருக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை கண்டறிய ஆயுதப்படைகளையும் சிங்கப்பூர் பயன்படுத்தியது.படத்தின் காப்புரிமை Reuters Image caption கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை கண்டறிய ஆயுதப்படைகளையும் சிங்கப்பூர் பயன்படுத்தியது.

துப்பறிவாளர்களின் பங்கு

யார் யாருக்கெல்லாம் கொரோனா தொற்று இருக்கிறது என்பதை கண்டபிடிக்கும் முயற்சியில் இறங்கிய மூன்று நபர்களில் எட்வின் பிலிப்பும் ஒருவர்.

கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் இவரது குழு பணியாற்றுகிறது,

முதலில், நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வரும்போது, அவர்கள் எந்த இடத்திற்கெல்லாம் சென்றார்கள், யாருடன் இருந்தார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இந்தக்குழு கேட்டறியும்.

அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக்குழு மொத்த தகவலையும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பும்.

"இந்த முதல் தகவல் இல்லாமல் எதையும் சேர்க்க முடியாது. இது ஒரு புதிர் போன்றது" என்கிறார் எட்வர்ட்.

அடுத்த கட்டமாக சுகாதார அமைச்சக பணிகளுக்கு தலைமை தாங்குகிறார் சுபைதா

தகவல்களை திரட்டுவதுதான் இவரது குழுவின் பணி.

சிங்கப்பூரில் ஒரு மரணம் கூட இல்லைபடத்தின் காப்புரிமை ROSLAN RAHMAN

சில நோயாளிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால், அவர்களிடம் இருந்து தகவல்களை திறட்டுவது கடினமாகிவிடும்.

அப்படிப்பட்ட சூழலில் அடுத்தக்குழு இந்த பணியில் இறங்கும்.

சிங்கப்பூர் காவல்துறையில் கிரிமினல் விசாரணைக்குழு பிரிவு அடுத்தகட்ட வேலையை செய்யும்.

"அரசாங்கமும் காவல்துறையும் நோயாளிகள் குறித்த தகவல்களை பரப்பிக் கொள்ள தினமும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபடுவார்கள்" என்கிறார் கிரிமினல் விசாரணை பிரிவின் காவல் ஆணையர் லியன் கிம்.

நோயாளிகள் யாருக்கெல்லாம் கொரோனா தொற்றை பரப்பி இருக்கிறார்கள் என்ற தகவல்களை சேகரிக்கும் வேலையில் தினமும் 30 - 50 அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். சில நேரங்களில் 100 அதிகாரிகள் வரை இந்தப்பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

காவல்துறையினர் இந்தப்பணிக்கு முதல் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் உளவுத்துறையின் உதவிகளையும் இந்த அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

சிசிடிவி கேமிராக்கள், மற்றும் தீவிர விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டறிய முடியாத நபர்களையும் கண்டுபிடித்தனர்.

கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்

உதாரணமாக டாக்ஸி சேவையை அதன் செயலி மூலமாக எடுத்துக்கொண்டவர்களை கண்டறிவது சுலபம். ஆனால், செயலி வழியாக இல்லாமல், பணமாக கொடுத்து டாக்ஸி பிடித்தவர்களை கண்டறிவது கடினமாகும்.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் மயக்கம் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த ஜூலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

"அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்தபோது நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்" என்கிறார் ஜூலி.

கடந்த ஏழு நாட்களில் அவர் எங்கெல்லாம் சென்றார், என்ன செய்தார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற அனைத்து விவரங்களும் அவரிடம் சேகரிக்கப்பட்டன.

ஜுலி, அந்த அதிகாரியிடம் சுமார் 3 மணி நேரங்கள் பேசியுள்ளார். இறுதியாக 50 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

கொரோனா வைரஸ்

அவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அமைச்சகம், அந்த நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 50 நபர்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இரண்டு மாதங்கள் ஆகியும், சிங்கப்பூரில் கொரோனாவால் யாரும் இதுவரை பலியாகவில்லை.

ஆனால், சிங்கப்பூரில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் இந்த திட்டத்தை அந்நாடு கைவிட வேண்டிவரும். இதற்கு அதிக செலவுகள் ஏற்படுவதோடு, அதிக ஆட்களும் தேவைப்படுவார்கள். அதோடு, ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் இந்த அதிகாரிகளை முந்திவிடும் என்பதே நிதர்சனம்.

https://www.bbc.com/tamil/global-51959438

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.