Jump to content

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தேர்தல் களத்தில் ரூபன் களம் இறங்கியுள்ளமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ரூபனின் மனைவி வைத்தியராக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.

ரூபன் தொடர்பாக ‘தமிழ் பக்கம்’ இணைய தளம் மேலதிக சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் ரூபனும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டார் . குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச் சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வடமாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிக்கேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தேசியத் தலைவர்.

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கத்திற்க்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என இரு வருட தடுப்பின் பின் விடுதலையானார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சண்டையில் தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி ஒருவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்குகிறார். இவருக்கான ஆசனமும் தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றபின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதேவேளை, வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஒருவரையும் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்துக்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திரா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Ruban 1
 

http://www.samakalam.com/செய்திகள்/விக்கியின்-கட்சியில்-திர/

Link to comment
Share on other sites

திருகோணமையில் இப்போது தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகின்றது। எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக கேடடால் இரண்டு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு। எல்லோருக்கும் போட்டியிட உரிமை இருந்தாலும், இங்கு இப்போது நிறைய தமிழ் கட்சிகள் போட்டியிடுவதால் தமிழ் வாக்குகள் பிரிய சந்தர்ப்பம் உண்டு। ஒரு உறுப்பினர் வென்றாலும் பெரிய காரியம்தான்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார்.

D5-B79850-4103-4102-94-FB-65848-CCEB9-D0

Link to comment
Share on other sites

50 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க வக்கில்லாமல், சுயலாபங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு திட்டமிட்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு  காலங்காலமாக முண்டுகொடுக்கும் சம்மந்தனின் கும்பல் விலகி இந்த மிகச் சிறந்த போராளியின் வெற்றிக்கு உதவுவது தமிழினத்துக்கு நடக்கக்கூடிய நன்மையாக அமையும்.

Link to comment
Share on other sites

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

 

Link to comment
Share on other sites

சிங்கள அரசுகளுக்கு முண்டு குடுக்கிறதையே பிரதான தொழிலா செய்ற சம்பந்தனுக்கு ஏன் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டினம்? சம்பந்தனுக்கு ஏன் தமிழ் மக்களிட வாக்குகள் வேணும்?  
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

சம்பந்தனை வெல்ல வைக்கிறதால தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன பிரயோசனம் கிடைச்சிச்சு? கடைசில சம்பந்தன் ரணிலுக்கு விழுந்து விழுந்து முண்டு கொடுத்தும் கன்னியா வெந்நீர் கிணறுகளையும் அந்த பிள்ளையார் கோயிலையும் கூட காப்பாத்த முதிகெலும்பில்லா மனுஷன் ஆகிட்டார். சம்பந்தன் இனியும் ஏன் வெல்லோனும்?
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

நிஜமா தமிழ் மக்கள் மேல அக்கறை இருக்கிறவங்க கூட்டமைப்பை தேர்தல்ல போட்டியிடாம வைச்சு தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாத்துற வேலையை தான் செய்வாங்கள். அதால சம்பந்தனையும் குகதாசனையும் அப்புறப்படுத்தி தமிழ் மக்களுக்கு உதவுற வழியைப் பாப்பாங்கள்.

Link to comment
Share on other sites

On 3/21/2020 at 10:36 AM, Rajesh said:

சிங்கள அரசுகளுக்கு முண்டு குடுக்கிறதையே பிரதான தொழிலா செய்ற சம்பந்தனுக்கு ஏன் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டினம்? சம்பந்தனுக்கு ஏன் தமிழ் மக்களிட வாக்குகள் வேணும்?  
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

சம்பந்தனை வெல்ல வைக்கிறதால தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன பிரயோசனம் கிடைச்சிச்சு? கடைசில சம்பந்தன் ரணிலுக்கு விழுந்து விழுந்து முண்டு கொடுத்தும் கன்னியா வெந்நீர் கிணறுகளையும் அந்த பிள்ளையார் கோயிலையும் கூட காப்பாத்த முதிகெலும்பில்லா மனுஷன் ஆகிட்டார். சம்பந்தன் இனியும் ஏன் வெல்லோனும்?
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

நிஜமா தமிழ் மக்கள் மேல அக்கறை இருக்கிறவங்க கூட்டமைப்பை தேர்தல்ல போட்டியிடாம வைச்சு தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாத்துற வேலையை தான் செய்வாங்கள். அதால சம்பந்தனையும் குகதாசனையும் அப்புறப்படுத்தி தமிழ் மக்களுக்கு உதவுற வழியைப் பாப்பாங்கள்.

சம்பந்தனும் தேவையில்லை, தமிழர்களுக்கு என்று எந்த பிரதிநிதி வென்றும் பயனேதும் இல்லை. தமிழ் வாக்குகள் பிளவுபட தெரிவாகும் சிங்கள வேட்பாளர் அங்குள்ள சிங்கள மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யும் போது தமிழ் மக்களும் சில பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம். புத்தியுள்ள தமிழ்மக்கள் மொட்டு கட்சியில் நேரடியாகவே இணைந்து பிரச்சாரம் செய்து மேலும் பயன்பெற வாழ்த்துகள். தமிழர் - சிங்களவர் என்று பிரித்து இதுவரை செய்து வந்த இனவாத அரசியல் வியாபாரம் முடிவுக்கு வருவது மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

On 3/21/2020 at 12:43 PM, poet said:

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

 

 

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

 

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

மக்கள் உண்மையில் எதற்காக ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள்?

  • அந்த வேட்பாளர் தனிப்பட்ட முறையில் வாக்களிப்பவருக்கு தனது பதவியின் சக்தியை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, அரச உதவிகள் மற்றும் தனிப்பட்ட உதவிகள் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் வாக்களிக்கிறார்கள்.
  • பொலிஸ் மற்றும் சட்ட தேவைகள் வரும் போது வேட்பாளர் உதவக்கூடியவர் என்ற எதிர்பார்ப்புடன் வாக்களிக்கிறார்கள்.
  • தாம் பரம்பரை பரம்பரையாக ஆதரித்த கட்சியை சேர்ந்தவருக்கு வாக்களிக்கிறார்கள்.
  • உறவினர், தெரிந்தவர், ஊரவர் என்று வாக்களிக்கிறார்கள்.
  • கொள்கை அடிப்படையில், தேசியவாதி, முன்னாள் போராளி என்று வாக்களிக்கிறார்கள்.

இப்படி பல காரணங்களுக்காக மக்கள் வாக்களிப்பதால் வாக்குகள் நிச்சயமாக தமிழ் வேட்பாளர்களுக்கிடையே பிளவுபடும். மக்களை இப்படியான காரணங்களுக்காக வாக்களிக்காமல் நீங்கள் மேலே சொன்ன ஒரே காரணத்துக்காக நீங்கள் வாக்களிக்குமாறு கேட்கலாம், ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது உண்மையாகாது.

Link to comment
Share on other sites

திருகோணமலை மக்களே தீர்மானியுங்கள்। இங்கு இணையதள போராளிகள் தங்கள் கருத்தை தெரிவித்து விடடார்கள்। தெரிவிப்பது நாங்கள்। தீர்மானிப்பது நீங்கள்।

Link to comment
Share on other sites

9 hours ago, கற்பகதரு said:

தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம்.

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

சம்பந்தனின் வினைத்திறன் உங்களுடைய பிரச்சுனை. சிங்கள வேட்பாளரை வெல்ல வைப்பது எங்களுடைய தேவை. எங்களுடைய நோக்கம் உங்களுக்கு உண்மையிலேயே புரிந்திருந்தால் ஆதரவளியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

Link to comment
Share on other sites

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?? - nunavilan   

------------------------------------------------------------------------

30 வருட ஆயுதப்போராட்டம் இனக்கொலையில் முடிந்த சூழலில் இனவாத அடக்குமுறை ஆட்ச்சி தொடர்ந்ததல்லா? நொந்து நூலாகிப்போயிருந்த ஈழத் தமிழர்களை ஒருங்கிணத்தது யார்? தமிழர் தேசிய கட்சிகளின் பின்னே சென்று சர்வதேச நாடுகளின் முன் தேசிய இன அடையாளத்தை இழந்து சிறுபாண்மையினராக குறுகாமல் வெறுங்கையுடன் தமிழரை இனமாக ஒன்றுபடுத்தியது யார்? களநிலமை புரியாமல் கொடி தூக்கி தீவிரவாதம் பேசிய புலம்பெயர்ந்த தமிழருக்கு தங்கள் அழுத்தங்களின் ஆதாயம் போவதை அனுமதியோம் என சர்வதேச சமூகம் ஒதுங்கியபோது அவர்களை ஓரளவாவது அழுத்தம் கொடுக்க வைத்து ஓரளவாவது நிலம் மீட்ப்பு, அமைதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகிய சூழல் எப்படி உருவானது? அரசை நோக்கி இழுக்கும்  கொழும்புத்தமிழ தலைவர்கள் ஒருபுறமும் களநிலமை தெரியாமலும் ஒருங்கிணையாமலும் தீவிரம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர் மறுபுறமுமாக நசித்த சூழலில்  இனத்துவத்தைக் காப்பாற்றி சர்வதேச ஆதரவௌ தக்க வைத்திருக்கும் சம்பந்தர்மீது விமர்சனமில்லை என சொல்லவில்லை, ஆனாலு விமர்சனங்களோடு நீங்கள் ஆதரித்திருந்தால் நிலமை இன்னும் மேம்பட்டிருக்கும். 

 

 

Link to comment
Share on other sites

20 hours ago, MEERA said:

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

யார் ஜயா சம்பந்தன் என்டது......? 😇

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

இன்றைய நாட்களில் அல்ல அன்றைய நாட்களிலும் எனது அனுபவம்,

அரச அலுவலங்களில் எங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சென்று ஒரு சிங்கள அலுவலரை அணுகக் கிடைத்தால்... அவரது ஓரிரு கேள்விகளுடனும், அவரே சொல்லித்தரும் திருத்தங்களுடனும் தேவைகள் நிறைவேறிவிடும். ஒரு தமிழரை அணுகக் கிடைத்தால் அவரது ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், திருத்தங்களை செய்வதற்கு அலைவதிலும் ஏன்டா வந்தோமென்று ஆகிவிடும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தோற்றாலும் வென்றாலும் கவலையில்லை 
சம்மந்தன் தோற்றால் மிக்க மகிழ்ச்சி.

கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் போராடலாம் 
கண்ணுக்கு தெரியாத கொரோனா போன்ற கிருமிகளுடன் போராடுவது கடினம் 
என்பதே தற்போதைய உலக அனுபவம். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.