Jump to content

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.  இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி  பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போராட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார். இவரது சகோதரர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளிகளாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட தேர்தல் களத்தில் ரூபன் களம் இறங்கியுள்ளமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ரூபனின் மனைவி வைத்தியராக திருகோணமலை மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.

ரூபன் தொடர்பாக ‘தமிழ் பக்கம்’ இணைய தளம் மேலதிக சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் படி, விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் ரூபனும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.

இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டார் . குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச் சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வடமாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிக்கேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தேசியத் தலைவர்.

இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.

35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கத்திற்க்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என இரு வருட தடுப்பின் பின் விடுதலையானார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் சண்டையில் தனது அவயவம்  ஒன்றை இழந்த முன்னாள் போராளி ஒருவர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் களம் இறங்குகிறார். இவருக்கான ஆசனமும் தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான விக்ரரின் சகோதரி மாலினி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். வன்னியின் பல்வேறு பகுதிகளில் வலய கல்வி பணிப்பாளராக பணியாற்றிய இவர் ஓய்வுபெற்றபின்னர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

இதேவேளை, வன்னி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான முன்னாள் பெண் போராளி ஒருவரையும் விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேசிய பட்டியலில் உள்ளடக்கியுளார். சிறந்த சமூக சேவையாளரான இவர் எதிர்வரும் மாகாண சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் பொருளியல் துறை பேராசிரியர் சிவநாதன் மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்த மிக நீண்ட காலமாக தமிழ் தேசியத்துக்காக பணியாற்றி வருபவரும் தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பில் ஆங்கிலத்தில் பல வெளியீடுகளை செய்திருப்பவருமான செல்வேந்திரா ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Ruban 1
 

http://www.samakalam.com/செய்திகள்/விக்கியின்-கட்சியில்-திர/

Link to comment
Share on other sites

திருகோணமையில் இப்போது தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகின்றது। எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக கேடடால் இரண்டு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு। எல்லோருக்கும் போட்டியிட உரிமை இருந்தாலும், இங்கு இப்போது நிறைய தமிழ் கட்சிகள் போட்டியிடுவதால் தமிழ் வாக்குகள் பிரிய சந்தர்ப்பம் உண்டு। ஒரு உறுப்பினர் வென்றாலும் பெரிய காரியம்தான்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார்.

D5-B79850-4103-4102-94-FB-65848-CCEB9-D0

Link to comment
Share on other sites

50 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க வக்கில்லாமல், சுயலாபங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு திட்டமிட்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு  காலங்காலமாக முண்டுகொடுக்கும் சம்மந்தனின் கும்பல் விலகி இந்த மிகச் சிறந்த போராளியின் வெற்றிக்கு உதவுவது தமிழினத்துக்கு நடக்கக்கூடிய நன்மையாக அமையும்.

Link to comment
Share on other sites

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

 

Link to comment
Share on other sites

சிங்கள அரசுகளுக்கு முண்டு குடுக்கிறதையே பிரதான தொழிலா செய்ற சம்பந்தனுக்கு ஏன் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டினம்? சம்பந்தனுக்கு ஏன் தமிழ் மக்களிட வாக்குகள் வேணும்?  
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

சம்பந்தனை வெல்ல வைக்கிறதால தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன பிரயோசனம் கிடைச்சிச்சு? கடைசில சம்பந்தன் ரணிலுக்கு விழுந்து விழுந்து முண்டு கொடுத்தும் கன்னியா வெந்நீர் கிணறுகளையும் அந்த பிள்ளையார் கோயிலையும் கூட காப்பாத்த முதிகெலும்பில்லா மனுஷன் ஆகிட்டார். சம்பந்தன் இனியும் ஏன் வெல்லோனும்?
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

நிஜமா தமிழ் மக்கள் மேல அக்கறை இருக்கிறவங்க கூட்டமைப்பை தேர்தல்ல போட்டியிடாம வைச்சு தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாத்துற வேலையை தான் செய்வாங்கள். அதால சம்பந்தனையும் குகதாசனையும் அப்புறப்படுத்தி தமிழ் மக்களுக்கு உதவுற வழியைப் பாப்பாங்கள்.

Link to comment
Share on other sites

On 3/21/2020 at 10:36 AM, Rajesh said:

சிங்கள அரசுகளுக்கு முண்டு குடுக்கிறதையே பிரதான தொழிலா செய்ற சம்பந்தனுக்கு ஏன் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டினம்? சம்பந்தனுக்கு ஏன் தமிழ் மக்களிட வாக்குகள் வேணும்?  
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

சம்பந்தனை வெல்ல வைக்கிறதால தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன பிரயோசனம் கிடைச்சிச்சு? கடைசில சம்பந்தன் ரணிலுக்கு விழுந்து விழுந்து முண்டு கொடுத்தும் கன்னியா வெந்நீர் கிணறுகளையும் அந்த பிள்ளையார் கோயிலையும் கூட காப்பாத்த முதிகெலும்பில்லா மனுஷன் ஆகிட்டார். சம்பந்தன் இனியும் ஏன் வெல்லோனும்?
இப்பேர்ப்பட்ட சம்பந்தனுக்கு பஞ்சப்பாட்டு பாடுற ஆட்கள் லொஜிக் எங்கயோ கடுமையா இடிக்குது.  

நிஜமா தமிழ் மக்கள் மேல அக்கறை இருக்கிறவங்க கூட்டமைப்பை தேர்தல்ல போட்டியிடாம வைச்சு தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாத்துற வேலையை தான் செய்வாங்கள். அதால சம்பந்தனையும் குகதாசனையும் அப்புறப்படுத்தி தமிழ் மக்களுக்கு உதவுற வழியைப் பாப்பாங்கள்.

சம்பந்தனும் தேவையில்லை, தமிழர்களுக்கு என்று எந்த பிரதிநிதி வென்றும் பயனேதும் இல்லை. தமிழ் வாக்குகள் பிளவுபட தெரிவாகும் சிங்கள வேட்பாளர் அங்குள்ள சிங்கள மக்களுக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யும் போது தமிழ் மக்களும் சில பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே, தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம். புத்தியுள்ள தமிழ்மக்கள் மொட்டு கட்சியில் நேரடியாகவே இணைந்து பிரச்சாரம் செய்து மேலும் பயன்பெற வாழ்த்துகள். தமிழர் - சிங்களவர் என்று பிரித்து இதுவரை செய்து வந்த இனவாத அரசியல் வியாபாரம் முடிவுக்கு வருவது மகிழ்ச்சியே.

Link to comment
Share on other sites

On 3/21/2020 at 12:43 PM, poet said:

போரின் தொடற்ச்சியாக சர்வதெசத்தின் ஈடுபாட்டை திசைதிருப்ப திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் சதுரங்கம் மகிந்த குழுவினரால் முன்னெடுக்கபட்டது. சம்பந்தர் மயிரிளையில் தப்பியதும் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு.  

 பணி சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலோ வன்னியிலோ முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வடகிழக்கில் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது .

 

 

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

Link to comment
Share on other sites

31 minutes ago, nunavilan said:

 

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்??

மக்கள் உண்மையில் எதற்காக ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள்?

  • அந்த வேட்பாளர் தனிப்பட்ட முறையில் வாக்களிப்பவருக்கு தனது பதவியின் சக்தியை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, அரச உதவிகள் மற்றும் தனிப்பட்ட உதவிகள் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் வாக்களிக்கிறார்கள்.
  • பொலிஸ் மற்றும் சட்ட தேவைகள் வரும் போது வேட்பாளர் உதவக்கூடியவர் என்ற எதிர்பார்ப்புடன் வாக்களிக்கிறார்கள்.
  • தாம் பரம்பரை பரம்பரையாக ஆதரித்த கட்சியை சேர்ந்தவருக்கு வாக்களிக்கிறார்கள்.
  • உறவினர், தெரிந்தவர், ஊரவர் என்று வாக்களிக்கிறார்கள்.
  • கொள்கை அடிப்படையில், தேசியவாதி, முன்னாள் போராளி என்று வாக்களிக்கிறார்கள்.

இப்படி பல காரணங்களுக்காக மக்கள் வாக்களிப்பதால் வாக்குகள் நிச்சயமாக தமிழ் வேட்பாளர்களுக்கிடையே பிளவுபடும். மக்களை இப்படியான காரணங்களுக்காக வாக்களிக்காமல் நீங்கள் மேலே சொன்ன ஒரே காரணத்துக்காக நீங்கள் வாக்களிக்குமாறு கேட்கலாம், ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்டு அப்படியே செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது உண்மையாகாது.

Link to comment
Share on other sites

திருகோணமலை மக்களே தீர்மானியுங்கள்। இங்கு இணையதள போராளிகள் தங்கள் கருத்தை தெரிவித்து விடடார்கள்। தெரிவிப்பது நாங்கள்। தீர்மானிப்பது நீங்கள்।

Link to comment
Share on other sites

9 hours ago, கற்பகதரு said:

தமிழ் வாக்குகளை பிரித்து சிங்கள வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம்.

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

வினைத்திறனற்ற சம்பந்தனுக்கு கஷ்டகாலம் என நினைச்சு கவலையோட உங்க நோக்கங்களை தெளிவா புரியவைச்சு இருக்கீங்க. நல்லதே.

சம்பந்தனின் வினைத்திறன் உங்களுடைய பிரச்சுனை. சிங்கள வேட்பாளரை வெல்ல வைப்பது எங்களுடைய தேவை. எங்களுடைய நோக்கம் உங்களுக்கு உண்மையிலேயே புரிந்திருந்தால் ஆதரவளியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

Link to comment
Share on other sites

ஏன் வாக்குகள் பிரிக்கப்பட வேண்டும். கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏனையவர்களுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்தால் வாக்குகள் பிரிக்கப்படாது. கொடுத்த சந்தர்ப்பத்தை பாவிக்காமல் விட்டவர்களுக்கு ஏன் மக்கள் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?? - nunavilan   

------------------------------------------------------------------------

30 வருட ஆயுதப்போராட்டம் இனக்கொலையில் முடிந்த சூழலில் இனவாத அடக்குமுறை ஆட்ச்சி தொடர்ந்ததல்லா? நொந்து நூலாகிப்போயிருந்த ஈழத் தமிழர்களை ஒருங்கிணத்தது யார்? தமிழர் தேசிய கட்சிகளின் பின்னே சென்று சர்வதேச நாடுகளின் முன் தேசிய இன அடையாளத்தை இழந்து சிறுபாண்மையினராக குறுகாமல் வெறுங்கையுடன் தமிழரை இனமாக ஒன்றுபடுத்தியது யார்? களநிலமை புரியாமல் கொடி தூக்கி தீவிரவாதம் பேசிய புலம்பெயர்ந்த தமிழருக்கு தங்கள் அழுத்தங்களின் ஆதாயம் போவதை அனுமதியோம் என சர்வதேச சமூகம் ஒதுங்கியபோது அவர்களை ஓரளவாவது அழுத்தம் கொடுக்க வைத்து ஓரளவாவது நிலம் மீட்ப்பு, அமைதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை அணுகிய சூழல் எப்படி உருவானது? அரசை நோக்கி இழுக்கும்  கொழும்புத்தமிழ தலைவர்கள் ஒருபுறமும் களநிலமை தெரியாமலும் ஒருங்கிணையாமலும் தீவிரம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர் மறுபுறமுமாக நசித்த சூழலில்  இனத்துவத்தைக் காப்பாற்றி சர்வதேச ஆதரவௌ தக்க வைத்திருக்கும் சம்பந்தர்மீது விமர்சனமில்லை என சொல்லவில்லை, ஆனாலு விமர்சனங்களோடு நீங்கள் ஆதரித்திருந்தால் நிலமை இன்னும் மேம்பட்டிருக்கும். 

 

 

Link to comment
Share on other sites

20 hours ago, MEERA said:

திருகோணமலையின் நிலமை,  

சிங்களவன் வந்து தமிழனுக்கு தீமை செய்யவதிலும் பார்க்க தமிழன் வந்து சும்மா இருப்பது மேல்.

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

யார் ஜயா சம்பந்தன் என்டது......? 😇

Link to comment
Share on other sites

1 hour ago, கற்பகதரு said:

திரும்பவும் சம்பந்தர் என்கிறீர்கள்! 😜 தமிழன் தமிழருக்கு செய்யும் தீமையா அல்லது சிங்களவன் தமிழருக்கு செய்யும் தீமையா இன்றைய நாட்களில் மோசமானது? 😇

இன்றைய நாட்களில் அல்ல அன்றைய நாட்களிலும் எனது அனுபவம்,

அரச அலுவலங்களில் எங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சென்று ஒரு சிங்கள அலுவலரை அணுகக் கிடைத்தால்... அவரது ஓரிரு கேள்விகளுடனும், அவரே சொல்லித்தரும் திருத்தங்களுடனும் தேவைகள் நிறைவேறிவிடும். ஒரு தமிழரை அணுகக் கிடைத்தால் அவரது ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்வதிலும், திருத்தங்களை செய்வதற்கு அலைவதிலும் ஏன்டா வந்தோமென்று ஆகிவிடும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தோற்றாலும் வென்றாலும் கவலையில்லை 
சம்மந்தன் தோற்றால் மிக்க மகிழ்ச்சி.

கண்ணுக்கு தெரிந்த எதிரியுடன் போராடலாம் 
கண்ணுக்கு தெரியாத கொரோனா போன்ற கிருமிகளுடன் போராடுவது கடினம் 
என்பதே தற்போதைய உலக அனுபவம். 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.