Jump to content

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!

44.jpg

தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்று, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் வைரஸ் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல் மக்களின் மன நலனையும், சமுகத்தையும், தேசத்தையும் பாதிக்கின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பை ஒருவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மூன்று காரணிகளைப் பொறுத்தது. அவை தனிநபர், சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவையாகும்.

 

சீனாவில் கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ’வாங்’ என்பவரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ”53.8 சதவிகித மக்கள் உளவியல் தாக்கத்தை மிதமானது முதல் கடுமையானதாக மதிப்பிட்டதாகவும். 16.5% மக்கள் கடுமையான மனப்பதற்றத்தில் இருப்பதாகவும் மதிப்பிட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மனரீதியான பாதிப்புகள், நோய் எவ்வளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, எவ்வளவு வேகமாகப் பரவுகிறது, மரணமடைபவர்கள் விகிதம் மற்றும் மருத்துவ நிவாரணங்கள் கிடைக்கும் நிலையைப் பொறுத்து இருக்கிறது.

மன அழுத்தம் உள்ளதற்கான அறிகுறிகள்

1)ஒருவரின் உடல்நிலை அல்லது குடும்பத்தினரின் உடல்நிலை குறித்த அதீத கவலை

2)தூக்கமின்மை, பசியின்மை, உடல் சோர்வு

3)மனச்சோர்விற்கான அறிகுறிகள், தற்கொலை எண்ணங்கள்

4)தனிமைப்படுத்தப்பட்டு இருந்தால், மது போன்ற பொருட்களுக்கு அதிகமாக அடிமையாதல்

5)எரிச்சல், கோபம்

6)ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களின் பாதிப்பு அதிகரித்தல்

7)சானிட்டைசர்கள், மற்றும் முகமூடி போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற அழுத்தமே மனப்பதற்றத்தை உருவாக்கும்

 

8)புதிய மற்றும் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியாத ஒரு நோயை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயம்.

44a.jpg

யார் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள்?

1)வயதானவர்கள் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாக கொரோனா வைரஸ் தாக்கும்.

2)குழந்தைகள், பொதுவான தங்களின் வாழ்க்கை முறை மாறுவதாலும், பெற்றோர்களின் மனப்பதற்றத்தாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

3)மருத்துவத் துறை சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் அதிகமான பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்பு இருப்பதாலும், அதிக நேரம் வேலை செய்வதாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

4)ஏற்கனவே மனரீதியிலான பாதிப்புகளில் இருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

5)தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள், அவர்கள் நிலை என்னவாகும் எனத் தெரியாமலும், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து கவலையும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

என்ன செய்ய வேண்டும்?

1)வைரஸ் தாக்குதல் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுதல்.

2)சுகாதாரத்தை அளவுடன் பேணுதல்.

3)சமூக வலைதளங்களில் வரும் நம்பகத்தன்மையற்ற செய்திகளைப் படித்து தேவையற்ற மன பதட்டத்தை ஏற்படுத்தி கொள்ளாமல் இருத்தல்.

4)மன அமைதிக்காக யோகா, நடைப்பயிற்சி, இசை, வாசித்தல் என ஏதாவது ஒன்றை மேற்கொள்ளுதல்.

5)மருத்துவத் துறை பணியாளர்கள் அளவுக்கு அதிகமாக வருத்திக்கொள்ளாமல் இருத்தல்.

6)தனியாக இருப்பது சரிதான் என்றாலும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டும், மனரீதியாகத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் சரியல்ல.

7)சமாளிக்க முடியாத நிலை வரும்போது மற்றவர்களிடம் உதவி கேட்க வேண்டும்

தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் அவர்களுடன் பேச வேண்டும், தேவையான தகவல்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பதைக்கூறிப் புரிய வைக்க வேண்டும். தவறான தகவல்களைக் குழந்தைகள் அறிந்து கொள்வதிலிருந்து தடுக்க வேண்டும்.

உலக சுகாதார மையத்தின் தலைவர் ஆதோனம் கேப்ரியேசிஸ் கூறுகையில், ”கொரோனா மனிதர்களிடம் இருக்கும் சிறந்த அல்லது மோசமான குணங்களை வெளியே கொண்டுவரும் வாய்ப்பாகும். அது நல்ல குணங்களையே வெளிக்கொணரும் என நம்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி : தி இந்து

Dr. Thara, Director, Schizophrenia Research Foundation and Dr. Lakshmi Vijayakumar, founder of suicide prevention group

தமிழில் : பவித்ரா குமரேசன்

 

https://minnambalam.com/public/2020/03/20/44/because-the-mind-matters

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று,  எனது நகரத்தில்..... கொரோனா நோயால் பாதிக்கப் பட்டு,
வீட்டில் இருந்து.... சிகிச்சை  எடுத்துக் கொண்டு இருந்தவர்கள்...
முகநூல், வாட்ஸ் அப் போன்ற இணையத் தொடர்புகள் மூலம், ஒன்று திரண்டு...
"கொரோனா பார்ட்டி"  என்ற நிகழ்வை நடத்தி முடித்து இருப்பது,
பலருக்கும்...  சரியான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதனால்...  இங்கும், கடுமையான  நடவடிக்கைகள்... திங்கள் கிழமையிலிருந்து வரலாம். 
அதற்கான... முன் எடுப்புகள் இப்போது நடந்து கொண்டு இருக்கின்றது.
அந்த அறிவித்தல்... நாளையோ... மறு தினமோ... வரும் என சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா!

என்ரை மூனாவுக்கு வந்திட்டுது போலை கிடக்கு...
நாளை ஆளை சந்திச்சு கதைச்சால் நிலவரம் தெரியும்.
மூனாவுக்கு வயது72 எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, குமாரசாமி said:

என்ரை மூனாவுக்கு வந்திட்டுது போலை கிடக்கு...
நாளை ஆளை சந்திச்சு கதைச்சால் நிலவரம் தெரியும்.
மூனாவுக்கு வயது72 எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.😎

தாத்தா முனாவை விட்டு த‌ள்ளி இருங்கோ , ஏதும் க‌தைக்க‌ வேண்டி இருந்தா போனுக்காள் க‌தையுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ...ஆட்கள் ஓடி ,ஓடி பொருட்களை வேண்டிப் பதிக்குவதை பார்த்தும் ,இவனுக்கு கொரோனா இருக்குமோ அவளுக்கு கொரோனா இருக்குமோ என்ற பயத்திலேயே மன  வருத்தம் அல்லது ஹாட் அட்டாக் வந்திடும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.