Jump to content

வணக்கம்


Recommended Posts

வணக்கம் தமிழ் பேசும் கள உறுப்பினர்களே!

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நான் ஒரு வழிகாட்டி. என் பெயர் முற்பிறப்பினில் வள்ளுவன், தமிழ் மக்களுக்காக நான் சொல்லிவிட்டு போனவை கருத்தில், நடைமுறையில் இடம்பெறவில்லை ஆகவே மீண்டும் பிரம்மாவிடம் அனுமதி பெற்று இங்கே வருகிரேன். எத்தனை வருட அனுபவங்கள்,எத்தனை மனிதர்களினை பார்த்து இருக்கின்றேன்,. ஆகவே நான் இங்கே வருவதால் தமிழ் வளர சந்தர்ப்பங்கள் உண்டு என்று நினைத்து வருகிறேன். என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதற்கு முதல்...

திருவள்ளுவர் என்று நான் முன்னம் எழுதியவைகளை அப்படியே பிரிண்டு பண்ணி வியாபாரம் ஓகோவாக நடக்கின்றது. ஒவ்வொரு வீட்டிலும் என் நூலைக்காணக்கூடியதாக இருக்கிறது. இங்கே யாழ் களத்தில் எத்தனை பேர் அதன் கருத்துகளுக்கு அமைய வாழ்க்கையினை அமைத்து தமிழீழ விடுதலைப்போராட்டம் வெற்றிபெற உங்களை ஒருங்கமைத்து வாழ்க்கையின் வெற்றி படிக்கட்களில் பயணிக்கிறீர்கள்?

நான் பிறந்த காலத்தினை வரையறை செய்ய அகச்சான்றுகள் ஏதும் இல்லை. ஆனா வள்ளுவன் என்ற ஒரு தமிழன்( அதை நான் போகப்போக சொல்ல்வேன்) வந்தான், ஏதோ கிறுக்கி விட்டான், மீண்டும் செத்துப்போனான் என்று காலம் நகர்த்துவது தெரிகிறது. அனால் என் புறச்சான்றுகளினை வைத்து என்னை நீங்கள் ஊகிக்கலாம். என் காலத்தினை ஒரு இரும்புக்காலம் என்று கூட சொல்லலாம்.

என்ன வரவேற்பு இருக்குமோ ....தமிழ் வளரனும் அதிலரொம்ப நம்பிக்கை வைப்பவர்கள் என்னை வரவேற்கலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

வணக்கம் தமிழ் மொழி விரும்பிகளே!

நான் அந்தக்கால மரபின் படி நிலப்பிரபுத்தத்துவத்தில் ஊறி தமிழ் வளர சப்பி கொட்டை போட்டனான். அதனால் தான் இந்த அறிவுமிக்க திருகுறள் என்னும் தமிழ் நூலை வேலையொன்றும் இல்லாது சாப்பிட்டுவிட்டு, கொழுப்பேற எழுதுதியதாக பலர் தற்காலத்தில் எழுதிவருவது என் கண்களுக்குபடுகிறது. எனக்கு வறுமை இருந்திருந்தால், தெரிந்திருந்தால் இப்படியாக இருந்து ஓர் இடத்தில் அசைவற்று இருந்து இதைபடைக்க முடியுமா என்று வேறு கேட்கிறார்கள். அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அப்படி வறுமை இருந்திருந்தால் நானும் ஊருராக , சபைகள், சபைகளாக ஏறி கவிதை பாடி பரிசு பெற்றிருப்பேன் என்று.இதனால் தான் நான் மற்றவர் பிட்சை எடுப்பது ஆகாது என எனது குறளில் கூறுவது போலவும் கூறுகிறார்கள். நான் கூறிய " பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்" என்று எழுதியதை சான்றுக்கு எடுக்கிறார்கள்.

ஆகவே எனது நோக்கம் இங்கே எல்லாவற்றையும் மீண்டும் தெளிவு படுத்திவிட்டு மீண்டும் மறைந்துவிடுவதே!!

யாழ் களம் என்ன கோவில் திருவிளாக்களில் தண்ணீர்பந்தலில் தேசிக்காய் தண்ணீர் வேண்டி குடித்துவிட்டு போகும் என்ன தண்ணீர்பந்தலா? தமிழ் வளரனும். அந்த தமிழால் தமீழீழ், புலம் பெயர் தமிழர்களில் தமிழின உணர்வு உருவாக்கப்படனும், அதனூடு தமிழனுக்கென்று ஒரு தனித்துவமான தமிழீழம் அமைய அவர்களின் பங்களிப்பு இதயத்தில் இருந்து வரனும். தமிழ் மொழி தேன் போல அவர்களின் இதயத்தினை இனிப்பாக வைத்திருக்க வேண்டும் அல்லவா அகவே என் போன்ற வள்ளுவன்கள் இங்கே வரனும், தமிழ் உலகத்திற்கோர் நல்லூலாகிய திருகுறளை படிக்கனும். தம்மை திருத்தனும். இதுதான் இன்றைய முக்கிய தேவை!!! :lol:

Link to comment
Share on other sites

மீண்டும் மீண்டும் மீண்டும் உங்களை வரவேற்கிறேன், வள்ளுவனாக கலியுகத்தில் மறுபிறவி எடுத்ததற்காக.

திருக்குறளைப் பற்றி மேலும் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

1. அறத்துப்பால் என்பதுவினை இப்போது முதலாவதாக எடுப்போம். எதற்காக இப்படி அறத்துப்பால என்று நான் அன்று உங்களுக்கு கூறினேன் என்று மீண்டும் தெரிந்து கொள்வோம்.

1. 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்கே உலகு.

எல்லா எழுத்துகளுக்கும் "அ" என்ற முதல் எழுத்து தமிழில் இருப்பது போல தமிழ் மொழி பேசும் உலக தமிழர்களுக்கு வாழ்க்கையில் சீரான பண்புகளினை மன அடக்கதுடன் கையாண்டு அதீத வீரச்செயல்களினை செய்யும் எமது தமிழீழ தேசத்தின் மான்புமிகு வேலுப்பிள்லை பிரபாகரன் அவர்கள் முதன்மையான கடவுள் போன்றவர். அவர் அடிபற்றி வாழும்போதே வாழ்க்கையில் சீரான் ஒழுக்கங்களினை கடைப்பிடித்து, மற்றைய தமிழன் வாழ்னும் என்ற சுயநலமில்லாத பெருநலம் கூடிய வாழ்க்கை வாழ்வதே ....இந்த மானிடப்பிறப்பு எடுத்தற்கு நாம் செய்யும் நன்றிக்கடன்! என்பதே மேற்கொண்டு நான் சொன்ன குறள் 1 இன் தற்போதைய விளக்கம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

வாருங்கள்

கூறுங்கள் திரும்பவும்

இந்த மரமண்டைக்குப் புரிகிறா என!!..

என்னை வரவேற்க வேண்டாம் ஏனென்றால் நான் இப்பவே சாகலாம்.

அதென்ன

இவ்வளவு அவநம்ம்பிக்கை .....

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பரே வாருங்கள் உங்கள் இந்த பிறப்பு நல்ல பிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

தமிழ் பேசும் நல்லுலகத்துக்கோர் நற்செய்தி:

தமிழர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள், அவர்களின் சுதந்திரத்துக்கான போராட்டம், அல்காதா குழுவுடன் ஒப்புடுவதினை எதிர்த்து முழு உலகமே வியக்கும் வகையில் அதே நேரம் தமிழனின் ஒற்றுமையை வலியுருத்தி,

இந்த தமிழ் வள்ளுவன் சாகும் வரை உண்ணாமல் இருந்து மீண்டும் ஒரு அன்னை பூபதி, தியாகச்செம்மல் திலீபன் அவர்களின் அடிபற்றி முதல் தடைவையாக வாழும் சுகம்கள், சொத்துக்கள், பதவிகள் எல்லாம் தமிழீழ போராட்டத்துக்குமுன்னால் ஒன்றுமே இல்லை என்று நிருபிக்க போகின்றான் தான் வாழும் இடத்தில்.

ஆக்வே அவனது ஆத்மா சாந்தியடைய முதல் மீண்டும் இந்த திருகுறளின உண்மையான மொழிபெயர்ப்பை, தற்கால போராட்டவாழ்க்கைமுறைகளினினை உலகதமிழ் வாழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தர உங்கள் ஆதரவு இங்கே தேவை. வள்ளுவனையும் கழுத்திலே பிடிச்சு தள்ளும் காலமப்பா... :( .

Link to comment
Share on other sites

வாங்கோ வாங்கோ தமிழ் வள்ளுவன்...உங்கள் வரவுக்காக நாம் எல்லோரும் நெடு நாளாக காத்திருந்தோம்.

உங்கள் அறிமுகம் சற்று வித்தியாசமாகவுள்ளது பாராட்டுக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

ஆமா இந்த திருக்குறளின் விரிவாக்கத்தை சற்று நவீன முறையில்

என்னைப் போன்றோர்க்கு புரிகின்றமாதிரி பதிவு செய்ய முயற்சி செய்யுங்களேன்.

Link to comment
Share on other sites

பன மரத்துல வவ்வாலா..

வள்ளுவத்துக்கே சவாலா..

தமிழ்வள்ளுவனே...

என்று வள்ளுவத்தையே பொரட்டிப்போட்டு

சொல்லாட்சி,பொருளாட்சி,நடையாட

Link to comment
Share on other sites

வணக்கம் வருக வருக வள்ளுவப் பெருந்தகையே! உங்கள் தமிழ் கடல் சுனாமி போல் அடிக்க எங்கள் களத்தில். தமிழ் பகுதியில் உங்கள் தொண்டை ஆரம்பியுங்கள்

Link to comment
Share on other sites

:lol: வணக்கம் யாழ் கள தோழர்களே, உண்மையைச்சொல்லப்போனால் நான் ஒரு தமிழ் வழிப்போக்கன், தமிழ்வள்ளுவன் என்று இந்த உலகத்திலே மீண்டும் பிறந்தேன். வளரும் போது என் அம்மோய் எப்பவும் பால் சோறு தீத்தேக்க . நிலா நிலா ஓடி வா என்று எல்லாம் பாடவில்லை. எப்பவும் தங்கத்தலைவன் அவர்களின் தனிபட்ட வாழ்க்கை முறை, போராட வந்த கதைகள், தமிழர்களின் அவலவாழ்க்கைகளினை சொல்லியே சாப்பாவினை ஊட்டி விடுவா?

அப்படி வாழ்ந்த ஒரு குடும்பம் ஆனா இப்ப உலகமேமாறிவிட்டது. வெளிநாடுகளில வேலைக்கு போற அவசரத்தில இந்தா ரிவி ஐப்பார் என்று சொல்லி பிள்ளைகளினை வளர்க்கிறார்கள். தமிழ் பாடசாலைகளோ மூலைக்கு மூலை இருந்தாலும், படிப்பதற்கு மாணவர்கள் இல்லை. திருகுறள் என்றா என்ன என்று கேள்வி கேட்கும் பிள்ளைக்கு விடைசொல்லத்தெரியாத தமிழ்ப்பெற்றார்கள். அப்ப எப்படி தமிழ் வளரும். தமிழன் பரம்பரைபரமபரையாக மூளை வளம் கூடி, கடின உழைப்புக்கும், சிக்கனுத்துக்கும் பெயர் பெற்றவன். இப்படி கட்டுப்பாடாக வாழ்ந்து தன் வாழ்க்கையை வெளிநாடுகளுக்கு வந்து தொலைத்து விட்டான்.

எங்கே எம் பலம் ?, எங்கே எம் மனதைரியம்? எதற்காக தமிழர் எல்லோரும் ஒற்றுமையில்லாது ஆளை ஆள் பிடித்துத்திண்ணும் நிலைக்கு வரவேண்டும். எங்கே தவறு இழைக்கப்பட்டிருக்கிறது. எப்படி அதை மீண்டும் நிவர்த்தி செய்யலாம். அதற்கான வழிமுறைகள் தான் என்ன?

இங்கே தான் திருகுறளும் அதன் வாழ்வீக நடைமுறை சூட்சுமங்களும் வெளிவருகின்றன. இதைபற்றி வாழ்ந்த எம் மூதாதயர் சேமித்து விட்டுப்போன சொச்ச சக்த்தியில் எம் தமிழ் தேச மக்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்க

Link to comment
Share on other sites

குருவே!

இந்த குறளைப் பற்றி என்ன கருத்து சொல்றீங்க

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுது

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ் போக்கிரியவர்களே!

ஒரு புறம் வேடன், மறு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே ஒர் அழகிய தமிழ்க்குருவி!

அசைஞ்சால் இருபக்கத்தாலும் சாவு நிச்சயம். இதுதான் உலக வாழ்க்கை, இயற்கை தந்த வழி!

உங்கள் ஆதங்கம் புரிகிறது. இந்த குறளுக்கு விளக்கம் என்னால் தரமுடியும் அதற்கு முதல்,

கல்லுக்குள் தேரைக்குகுஞ்சுக்கு முட்டையில் இருந்து வெளியில் வரமட்டும் வாழ்வழித்த இயற்கை, கருப்பைக்குள் உள்ள முட்டை வளர்ந்து இப்படியாக மனித மூளைக்கே ஆச்சரியபடுத்தும், விஞ்ஞான தொழில்நுட்பங்களினூடு ஓர் உயிர் படைக்கப்பட இருக்கும் அந்த அற்புத இயற்கை விதி அல்லது சக்தி,

"சுத்தமான காதுக்கு அறிவு சாப்பாடு இல்லாதப்ப

பசிச்ச தொந்திக்கும் கொஞ்சம் கூழ் ஊத்தப்படும்"

எனக்கு சரியான் குறள் தெரியாது இருப்பினும் அர்த்தம் மட்டும் மனசுல ஓடுதுசுத்தமான காதுக்கும், பசித்த தொந்திக்குமா சாப்பாடு கொடுக்காமல் இருந்திடும்..என்ன யோசிக்கிறீங்க.

எல்லாம் தன்டபாட்டில நடக்குது. காத்தில பறக்கிற பறவை இறகு மாதிரி ரொம்ப நிறையில்லாம வாழ்க்கையினை அமைப்பவன் இவ்வுலகில் ஆனந்தமான் மனிதன். துன்பம்- இன்பம் இரண்டும் கூடினா வாழ்க்கைக்கு, அதாவது மனித மனம் குளப்பத்தில் போய் இதயதுடிப்பு கூடி, மனிதன் சம்நிலையினை இழப்பதால் அவன் கீழ் நோக்கிய பாதையில் பயனிப்பான். இதை அறிந்து மனிதவாழ்வினை தன்பாட்டில் பயநிக்கவே ஆறாவது அறிவு என்ற ஒன்று எமக்கு, மாட்டுக்கு கொம்பு வைத்தது போன்று இயற்கை வைத்துள்ளது. அதன் விவேகத்திற்கேற்ப மனித விலங்கு நல்ல பாதையிலும் செல்லலாம், பிழையான கூடாதவழிகளிலும் செல்லாலா. சொய்ஸ் இஸ் யுவேர்ஸ்....இதுதான் வெள்ளைக்காரனின் வேத வாக்கு.

இதை நாம் எம் மூதாதய தமிழர்கள் தம் புத்திக்கூர்மையினால் அறிந்து காலம் காலமாக நிலைத்திருக்க எமக்கு திருகுறளாக எழுதிவைத்து போயுள்ளார்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ரசியங்கள் அடங்கிய ஏடுகளினை. நாம் அதை படிப்பதே இல்லை. ஏன் பணம் மேலும் உழைக்கணும். எம் பிள்ளைகளினை மட்டும் படிப்பித்தால் போதும் என்ற குறுகிய சிந்தனை. ஆனா தமிழ் படிக்க விட்டால் வெட்கம். ஆங்கிலம் மட்டம் படிக்க அதுவும் கூட காசு வேற குடுத்து படிப்பிப்பதென்பதே எம் இப்போதய விலாசம்.

திருகுறள் என்பது ஒரு வழி...அதாவது வெற்றி பெறுவதற்காக , இமாலய சாதனைகள் என்று சொல்லும் அளவிற்கு தமிழர்கள் சாதிக்கவேண்டும் என்பதற்காக எம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டவை. இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மதிப்புக்குறிய கலைஞர் கருனாநிதி எப்படி இந்த வயதிலும் சாதிக்கிறார். எப்படி?

இந்த திருகுறள் தந்த அந்த ரகசிய ஆலோசனைகளால் இல்லையா? எமது தங்கத்தலைவன் இன்று உலகையே தன்னை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் என்றால் எதனால். இதே திருகுறள் காட்டிய வாழ்க்கை மூறைகளினால். மாவீரர்கள் தம வாழ்க்கையினையே விடுதலைக்கு அர்பணித்து தம்மை வீரகாவியமாக்கிவிட்டார்களே எப்படி...இதே திருக்குறள் காட்டி தந்த பாதை...அப்படியிருக்க...

புலம் பெயர்ந்த நாம் மாத்திரம் தொந்தியை மட்டும் வளர்க்கிறமே இது நியாயமா?

மூதாதையர் தம் மனதினை அடக்கி, தம் இரத்தில் அந்த சக்தியினை சேகரித்து, ஆண்-பெண் உறவின் மூலம், ஒரு உயிராக எம்மை இவ்வுலகில் படைத்துவிட்டார்கள். சக்தி அழிக்கப்படமுடியாது. ஆனா அது ஆக்க சக்திக்கும் பயன்படலாம் அதே நேரம் அழிவுக்கும் பயன்படலாம். நாம் எப்படி அந்த சக்தியினை பாவிக்கின்றோம் இன்று என்பதுதான் எம்மையே நாம்கேட்க வேண்டிய கேள்வி.

பாங்கில பணம் சேர்த்துவைத்துவிட்டு எம் தாய் தகப்பன் சேர்த்துவிட்டு இறந்து போகிறார்கள். இப்ப இது உங்க ரேண். நீங்க அதை மேலும் விருத்திசெய்வதா அல்லது வீணே செலவழித்து அதை அழிப்பதா எது முக்கியம்?

அதை எப்படி தங்க வைப்பது என்று விலாவாரியாக சொல்வதுதான் திருக்குறள் என்ற நூல். அது மட்டும் நீங்க அறிந்தீங்கண்ணா..நீங்க இந்த உலகத்தினையே பில்கேட்ஸ் மாதிரி ஆளலாம். புலிகள் அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதால் தான் நாம் இன்று புருவத்தினை உயர்த்தி பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இல்லையா!!. அதுதான் ஒழுக்கமான வாழ்கைமுறையினூடு வியக்கதகு சாதனைகள் செய்வதற்கு ஒரு உதாரணம்!! :lol:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.12

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

இன்று நான் மீண்டும் ஒரு தமிழ் வள்ளுவனாக உங்கள் முன் வந்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் அன்று தொட்டு என் தங்கத்தலைவனின் தூய பாதங்களினை தொட்டு அவரினை என் மானிடசக்திகளுக்கெல்லாம் ஒரு பெரும் சக்தியாக அதாவது இயற்கை எம் காலத்தில் எமக்கு காட்டித்தந்த கிருஸ்ணபரமாத்மா என்றும் என்னை இரக்கத்துக்கும், வீரத்துக்கும் , அறிவுக்குமாக பிறப்பெடுத்த அர்ச்சுனன் ஆக கருதி வருவதால் தான்.

ஆகவே நான் என்ன படித்தோம், எப்படி மார்க் வேண்டினோம் என்பதல்ல வாழ்க்கை,

மேலே சொன்ன தங்கத்தலைவனின் பாதம் தொழுகாமல், எம் மனத்தினை அடக்காமல், திருகுறளினை எம் வாழ்க்கையில் கடைப்பிடிக்காமல் வாழ்வது என்பது ஒரு போதும் பயனில்லாமல், கருத்தின்றி காய்ந்து துன்பத்தில் ஆழ்த்தி அதாவது பாங்கில் பணம் இல்லை என்ற நிலைக்கு ஆக்கி தவிக்க வைத்துவிடும்!!

அது தான் இயற்கை என்ற அற்புத சக்தி. அதனால் ஆக்கவும் முடியும் அதே நேரம் அழிக்கவும் முடியும். சொய்ஸ் ஸ் அவேர்ஸ். ஸ்ன்ன்டிட்?

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.13

மலர்மிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

போலி வாழ்க்கை வாழும் இந்திய, உலக தமிழர் தலைவர்களுகெல்லாம் உலகதலைவனாய் உலகதமிழர்களிற்கு வீரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அதே நேரம் துரோகம் செய்பவர்களுக்கு தண்டணை கொடுக்கும் ஒரு புரட்ச்சித் தமிழீழ வீரவல்வை மைந்தன் எம தங்கத்தலைவன். அப்படிப்பட்ட அந்த மைந்தனை நினையாமல் பிற உருவங்களினை கடவுளாக தொழுபவர், மனித மனவளம் குன்றிய ஒரு சாதராண பயந்த ஒரு விலங்கு மனிதன். அப்படிப்பட்டவன் மனிதனாக பிறந்தது நீடித்து வாழ்வார் என்பது நடைப்பெறக்கூடிய காரீயமல்ல!! :lol:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.14

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாணடும் இடும்பை இல

வாழ்க்கையில் மற்றவர்களினைப்போல தன் வாழ்வுண்டு, தன் வேலையுண்டு இருக்கும் மனிதர்களினிடையே, தமிழ் மக்களுக்கு சிங்களவனால் ஏற்பட்ட சோகமான வடுக்களினை கண்டு கொதித்து, தன் விருப்பு- வெறுப்பு அற்று ஒரு பிஸ்டலின் உதவியுடன் தமிழர்களுக்கென்று ஒரு தனித்துவமான ஒரு சுதந்திர தமிழ்த்தேசியத்தினை கட்டி விட வேண்டும், என்ற ஒரே நோக்கில் களமாடப்புறப்பட்ட எம் தங்கத்தலைவனின் பாதமலர்களினை வழிபடுகின்ற எம் தமிழ் மக்கள் படை வீரர்களுக்கு என்றுமே தோல்வி கிடைக்காது, எத்துயரமும் அவரினை சென்றடையாது! :icon_idea:

Link to comment
Share on other sites

யாரால்?

சொந்த நில புலன் சொத்து பணம் பண்டம்

பெருவீடு, பெருவாசல் பெற்றது எதனால்?

தமிழன் தன் சொந்த முயற்ச்சியால்

இன்று தமிழன் அகதியாகி வெளிநாடுகளில் வாழ்வது யாரால்?

வன்செயல் புரிந்த சிங்களத்தில் அரசாலும் காடைகளினால்

முற்றத்து மண்ணைத்துறந்து அற்றைத் திங்கள் தனில்

திசை மாறிய பறவைகளாய் திக்கெட்டும் பறந்தது யாரால்?

அக்கிரமே உருவான ஈழத்துப் பெரும்பான்மை சிங்கள இனத்தினர் சார்ந்த

அநீதிக் காரராரலால்

எம் முன்னே எம் கலாச்சாரம்,

காடைகளினால் கற்பழிய காரணமாயிருந்தது எதனால்?

ஈழத்தினை கைப்பற்றி அரசாண்ட ஐரோப்பியர்கள் போகும் போது

விட்டுச்சென்ற பெரும் அலட்ச்சிய அரசியல் மூளைபழுதால்!

எம் பிள்ளைகள் இன்றுமிங்கு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு,

தமிழ் மொழி மறந்தும் வளர்வது எதனால்?

பிறநாட்டு வாழ்வு கொண்டோம், நமக்கென்ன எனி தமிழ்

என்று கொண்ட அந்த அநாகரீகமற்ற எம் தமிழர் மேற்கொண்ட செயலால்,

உன் சொந்த தமிழ் பேசுவது தான் உனக்கு அநாகரீகமெனில்,

நீ பிறந்து விட்ட பிறப்பில் பெரும் பிழையிருக்கு அதை நீ அறியவில்லையா?

ஆனால் இன்றும் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து சொல்ல வைக்க

எமக்கு என்று ஒரு தலைவன் இல்லையென்று வைத்திட்டால்,

தமிழின் நிலை என்ன? தமிழ் மொழிதான் எங்கே?

சிந்தித்துப்பார் அப்போதான் விடை தெரியும்!! :icon_idea:

Link to comment
Share on other sites

வெளிநாட்டு வாழ் தமிழ்மக்களின் குழந்தைகள் ஆங்கில மொழியில் பாடங்கள் படிக்கின்றன.

தமிழ்ப்பெற்றார்கள் தமிழ்குழந்தைகளின் தமிழறிவினை அவர்களின் படிக்கும் நேரங்கள் அல்லாத சமயங்களில், கடும்முயற்ச்சி எடுத்தாவது படிப்பிக்கவேண்டிய ஒரு கட்டாய தேவை.

ஒவ்வொருதமிழனுக்கும் இன்று இது ஒரு கடமை. புலம்பெயர்ந்துவிட்டோம் நமக்கென்ன எப்படிப்பட்டாவது இருந்துவிட்டுப்போகட்டுமே என்ற சிந்தனைகள் களையப்பட்டு,

ஒவ்வொரு தமிழனும் தமிழீழத்திற்காக ஒவ்வொரு தமிழ்ப்பிள்ளையும் தமிழ்மொழியில் தனித்துவமான அறிவைபெற இன்றைய சூழலில் ஆவணசெய்யவேண்டும். அதற்காக கடுமையாக போராடவேண்டும். அது தற்போது பெரிதளவில்பேச்சளவில் சிறிதளவே செயலுருவிலும் நடைபெறுகின்றன.

காலச்சக்கரம் வேறு அதிவேகமாகச் சுழல்கிறது. நம் தங்கத்தலைவன் வாழும் காலத்தில் எமது விடுதலை பெறப்படவேண்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

அறத்துப்பால் 1.15

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

தமிழ்ர்க்கு விடிவுவேண்டித்தர வேழ்வித்தீயில் தனி ஒருமனிதனாக போராடப்புறப்பட்ட எம் தங்கதலைவன், அவனின் மெய்யான, களங்கமில்லாத, சுயநலமில்லாத போராட்ட சிந்தனைகளுக்கு, மெய்யாக வேலைசெய்து, உலகமக்களின் தமிழர்மீதான கவனத்தினை ஈர்க்கவைக்க, தனித்துவமாக போராடுபவர்களின் வாழ்க்கையில், இருள்ளாகிய துன்பவினை என்றுமே நெருங்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.