Jump to content

கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் :  வைத்திய நிபுணர் உமாகாந்த் ஆலோசனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா உங்களை தேடிவருவதில்லை நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் :  வைத்திய நிபுணர் உமாகாந்த் ஆலோசனை

வைரஸ் என்பது எமக்கு புதிய விடயமல்ல கொரோனா வைரஸை பொறுத்தமட்டில்  அது உங்களை தேடிவருவதில்லை  நீங்களே அதைத்தேடிச் செல்கின்றீர்கள் எனவே தேவையற்ற அச்சங்களை விடுத்து ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்படுங்கள் என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் கொரோனா வைரஸ் எதிர்ப்பு பிரிவின் வைத்திய நிபுணருமான ம.உமாகாந்த் தெரிவித்தார்.

doctor.jpg

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வைகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உலகம் இன்று திரும்பி பார்க்க கூடியதாக இந்த கோவிட் 19 என்ற வைரஸ் தொற்று காணப்படுகின்றது. இச் சுவாச தொற்று நோய் என்பது புதிய விடயமல்ல சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்த விடயமாகும். 1918 ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஸ்பானிஸ்புளு, ஏசியன்புளு, கொங்கொங்புளு, ரஷ்யன்வுளு, சுவைன்புளு போன்றை சுவாச தொற்று நோய்கள் இந்த உலகத்தை வியாபித்து கடந்து சென்றுள்ளது.

எனவே இந்த கொவிட் 19 வைரஸ் என்பது எமக்கு புதியவிடயமல்ல என்பதனை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வைரஸ் என்பது சுவாசம் சம்பந்தமான நோய்களையே உருவாக்கும் உதாரணமாக சொல்லப் போனால் தடிமனில் வீரியம் கூடியதடிமலை உருவாக்க கூடியதொன்றாக நாங்கள் சொல்லலாம் இதற்கு மருந்து இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். 

இந்த வைரஸ் இன்னொருவருக்கு காற்றால் பரவுகின்றது என்பதை விட இது தொடுகை மூலமே கூடுதலாக பரவுகின்றது. ஏனைய வைரஸ்போன்று காற்றால் பரவுகின்றது என மக்கள் தவறாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இதில் ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த வைரஸ் தொடுகை மூலம் ஒரு இடத்தில் சென்றடைந்தால் சுமார் மூன்று நாட்கள் உயிருடன் இருக்கின்றது. இதுவே எமக்கு ஒரு சவாலான விடயமாக இருக்கின்றது. 

இதனால் தான் கூறுகின்றோம் உங்களது கைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதால் இந்த தொற்றினை தவிர்த்துக் கொள்ளலாம். இதனூடாக மற்றவர்கள் தொற்றுக்கு உள்ளாவதையும் தவிர்த்துக் கொள்ளமுடியும்.

அடுத்ததாக வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் முகமாக தற்போதைய காலகட்டத்தில் வெளியில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்,  வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் குறித்து விளிப்புடன் இருங்கள், உறவினர், நண்பர்களுடன் கைகுழுக்குதல் நெருக்கமாக உறவாடுதலை தவிர்த்துக் கொள்ளுங்கள், தவிர்க்க முடியாத காரணத்தினால் உறவினர்கள் வீட்டுக்கு வருகை தந்தால் அருகிலிருந்து உரையாடுவதை தவிர்த்துக் கொள்வதுடன் பாதுகாப்பு கருதி தொற்று நீக்கி கொள்ளுகள்  இவை வைரஸ்பரவுதலை முற்றுமுழுதாக தடுப்பற்கு உதவியாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரிடம் ஏற்படும் அறிகுறிகள்

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முதலில் வரட்டு இருமல், காய்ச்சல், தொண்டை வலி,  மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற  அறிகுறிகளே தற்போது கூடுதலானவர்களுக்கு இருப்பதாக அறியமுடிகின்றது. இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் வைத்திய ஆலோசனையை பெற வேண்டும். 

கொரோனா வைரஸ் தொற்றுக்கும் சாதாரண தடிமலுக்கும் என்ன வித்தியாசம் என்றால் தடிமல் உள்ளவர்களுக்கு மூக்கு வடிதல்,  தும்மல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. எனினும் இவ்வாறான அறிகுறிகளின் போது அனாவசியமாக பயம்கொள்வதை விடுத்து வைத்தியரை அணுகுதல் வேண்டும். 

அத்துடன் உங்களை நீங்களே வீட்டில் தனிப்படுத்தி கொள்ளலாம். இதனை சுகாதார உத்தியோகத்தருக்கு தெரிவிப்பதன் மூலம் உங்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டு சென்று விடுவார்கள் என்று பயம் கொள்ள தேவையில்லை.  உங்களை வீட்டில் வைத்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளுடன் சுகாதார உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

உங்களையும் பாதுகாத்து இந்த நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்ப்படுகின்றன. எனவே அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குதல் கட்டாயமாகும்.

மக்கள் இந்த விடயத்தில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் நூறு கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டால் அதில் இரண்டு பேர் மட்டுமே இறப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு ஆனால் மக்களிடையே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்துவிடுவதாக தவறான எண்ணப்பாடு உள்ளது.

இவ் வைரஸ் தக்கம் வயது கூடிய நபர்களிடையே வீரியமாக உள்ளது. அதிலும் இருதய சத்திர சிகிச்சையை மேற் கொண்டவர்கள், ஆஸ்மா நோயுடையவர்கள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றார்கள். 

எனவே எமது வீடுகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட் உறுப்பினர்களை கவனமாக பார்த்துக் கொள்ளவேண்டும். இது உங்களது தலையாய கடமையாகும் நீங்கள் வெளியில் சென்று வந்தால் உங்களுடைய குடும்பத்தை யோசித்துக் கொண்ட வீட்டுக்குள் காலடி வைக்க வேண்டும்.  கொரொனா வைரஸை பொறுத்தளவில் அது உங்களை தேடி  வருவதில்லை நீங்களே அதைத் தேடிப்போகின்றீர்கள்.

நீங்கள் வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்

இந்த வைரஸினை இல்லாமல் செய்வதற்கு  தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை  என்பதனை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவ்வாறு மருந்து கண்டுபிடித்தால் அது வருவதற்கு பல மாதங்களாகும். 

எனவே உங்களுக்கு இந்த கொரோனா தொற்று உள்ளது என்று நீங்கள் சந்தேகித்தால் முதலாவது நீங்கள் பயம் கொள்ள தேவையில்லை. முதலில் வெளியில் செல்லக்கூடாது. மறாக  அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அறிவித்துவிட்டு உங்களை நீங்களே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்குபிறகு வைத்தியர்கள் நேரடியாக வருகை தந்து உங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

எக்காரணம் கொண்டும் சோர்ந்து விடாதீர்கள் நீங்கள் சோர்வடைந்தால் உங்களது உடம்பில் நோய் எதிர்ப்பபு சக்தி குறைந்துவிடும்.  இதனால் நோயின் தாக்கம் கூடதலாக அமையும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

 நன்றாக தூங்குங்கள், ஓய்வாக இருங்கள். விற்றமின்கள் உள்ள பழவகைகளை உண்ணுங்கள், காய்ச்சலுக்கு பாரசிட்டமால் உள்ளடெடுக்கலாம். தடிமலுக்கு வைத்தியரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

உங்களின் உடும்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியினூடாக இந்த நோயானது இல்லாமல் போகும் எனவே நீங்கள் தேவையற்ற பயங்கொள்ள தேவையில்லை மாறாக  இந்த நோயினை இல்லாமல் செய்வதற்கு சமூகத்தில் இறக்கி அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய வைத்தியர்கள் தயார் நிலையில் உள்ளார்கள். 

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தளவில் இருபத்தினான்கு மணித்தியாலங்களும் இயங்ககூடிய ஆலோசனை மையம் ஒன்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம். அதனூடாகவும் உங்களது தேவைகளை, சந்தேகங்களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் குறித்து  நீங்கள் அனாவசியமாக பயம்கொள்ள தேவையில்லை. 
 

https://www.virakesari.lk/article/78321

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.