Jump to content

மகளின் வீட்டுக் கோடிக்குள் கொரோனா பயணிகள் கப்பல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

   சிவனே என்று சுற்றித் திரிந்த இந்தக் கப்பல் கொரோனா தொற்று காரணமாக எங்கு கொண்டு போவது என்று கலிபோர்ணியா மாநிலமே விவாதித்துக் கொண்டிருந்தது.இந்த கப்பல் சன்பிரான்ஸ்சிஸ்கோவுக்கு அண்மையில் மிதப்பதால் அங்கேயே கட்டலாம் என்று ஒரு பகுதியினர்.இல்லை இல்லை விடமாட்டோம் என்று வேறு பலத்த குரல்கள்.

கடைசியில் சன்பிரான்ஸ்சிஸ்கோவில் கட்டாமல் ஓக்லண்ட் துறைமுகத்தில் கட்டலாம் என்று முடிவெடுத்தனர்.சரி இந்தத் துறைமுகம் எங்கே என்று பார்த்தால் மகளின் வீட்டு பின்பக்கம்.

இந்த துறைமுகம் தனியே கொள்கலன்கள் இறக்கி ஏற்றுமிடம்.தனித்தனியே இரண்டு மூன்று இடங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் இந்த துறைமுகத்துக்கு இரண்டே இரண்டு பாதைகள் தான் உள்ளன.ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் பாதையை மூடி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் சுலபம்.இந்த இடத்தை தெரிவு செய்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.தனியான பகுதி என்றபடியால் அங்கு வேலை செய்பவர்களையும் கொள்கலன்கள் ஏற்றி இறக்கும் பாரிய வாகனங்களையும் தவிர தேவையில்லாமல் வெளியார் யாருமே இந்த பகுதிக்குள் போகமாட்டார்கள்.

                             இந்த பகுதியை காபர்பார்க் என்று அழைப்பார்கள்.இந்த துறைமுகத்துக்கு நடுவில் சிறிய பூங்காவும்(பெயர் தான் ஆனால் அங்கு எதுவுமில்லை)விரிகுடா கரையோரமாக நடைபாதையும் இருக்கிறது.

                            நான் இங்கு நிற்கும் காலங்களில் 3 நிமிடம் கார் ஓட்டத்தில் போய் நிம்மதியாக சுத்தமான காற்று (ஆனால் குளிரும்)கப்பல்களில் சாமானுகள் ஏற்றி இறக்குவதை பார்த்துக் கொண்டே நடக்கப் போவேன்.வழமையில் மனைவியுடனே வருவேன்.எனவே இருவருமே இயற்கையை ரசித்தபடி நடப்போம்.இந்த தடவை தனியே நிற்பதனால் தனியே நடைதான்.

                           இந்த கப்பல் இங்கு கொண்டுவரப் போகிறார்கள் என்றதும் மகள் உடனே அப்பா காபர்பார்க்குக்கு தான் கொரோனா கப்பல் கொண்டு வாறாங்கள் இனிமேல் அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று உத்தரவும் போட்டுவிட்டா.அத்துடன் இப்ப தான் அப்பாவைக் கூப்பிட்டு வைத்திருக்க கொரோனா கப்பலைக் கொண்டு வந்து வீட்டுக்கு பக்கத்தில் கட்டப் போகிறார்கள் என்று அம்மாவுக்கு சொல்லி கவலைப்பட்டாவாம்.

                           3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                           கப்பல் வந்த நேரங்களிலேயே இதை எழுதுவோம் என்றால் பேரனால் முடியாமல் போய்விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

கடைசியில் சன்பிரான்ஸ்சிஸ்கோவில் கட்டாமல் ஓக்லண்ட் துறைமுகத்தில் கட்டலாம் என்று முடிவெடுத்தனர்.சரி இந்தத் துறைமுகம் எங்கே என்று பார்த்தால் மகளின் வீட்டு பின்பக்கம்.

ஓக்லாண்ட் காரர் என்ன கொக்கா எண்டு ஒரு போராட்டத்தை தொடங்குங்கோ...

நடுகடடில கொண்டுபோய் மிதக்க விடலாம் தானே.

 

கப்பல் பார்க்கப் போறன் எண்டு கிளம்பி விடாதீங்கோ😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிய போகாமல் வீட்டுக்க இருங்கோ. என்னையும் பிள்ளைகள் வெளிய போக விடாமல் பத்திரமா வீட்டுக்குள்ள இருங்கோ என்று இருத்தி வைத்திருக்கினம். வீட்டுக்க சும்மா இருக்க ஏலுமா? தினமும் விதவிதமா சமையல் நடக்குது. இடைப்பட்ட நேரத்தில பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சியும் செய்யிறம். யாழையும் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்குது.எதற்கும் தேவையில்லாமல் வெளியே போகாமல் இருப்பது எமக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோணா வாரண்டால் துறைமுகத்தில் இருக்கும் கப்பலால் மட்டும் வராது ...சுப்ப மார்கெட்  போனாலும் வரும் ...வீட்டுக்குள்ள இருங்கோ ...வீட்டை சுத்தி நடவுங்கோ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ளதை எழுதியதன் பின் முதல்முறையாக அந்த இடத்துக்கு நடந்து போனேன்.கூட தூரம் வரும் என்று நினைத்து நடந்தால் சரியாக 2 மைல் தான்.போகவர 4 மைல் தூரம்.இது சாதாரணமாக நடக்கிறபடியால் பெரிய தூரமாக இல்லை.

E9-FCC8-B4-8264-4-AFD-BDB5-AB47469052-DC

நடந்த தூரம்

4-B434-AC2-8-E8-A-48-EF-BE2-D-CCFC809-B1

ஓக்லண்ட் கரையில் இருந்து சன்பிரான்ஸ்சிஸ்கோ கரை.

767-BFC01-1-C52-40-B0-8549-9-AC030-EEB00

6176-A758-D1-A3-4-B57-8-FC1-5478-C9916-C

9-ECDD55-B-835-D-4-ADC-A041-E76-B4-F6-F2

C11-F1638-1-D31-4-E9-C-B1-A6-736793-BF02

துறைமுகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஓக்லாண்ட் காரர் என்ன கொக்கா எண்டு ஒரு போராட்டத்தை தொடங்குங்கோ...

நடுகடடில கொண்டுபோய் மிதக்க விடலாம் தானே.

 

கப்பல் பார்க்கப் போறன் எண்டு கிளம்பி விடாதீங்கோ😁

ஆளைஆளை கண்டா தூர ஓடும் நேரத்தில் போராட்டமா?

நாதம் இது நடந்து 10 நாளாகி விட்டது.
வெறும் கப்பலும் புறப்பட்டு 2 நாளாகி விட்டது.
எனக்கு இப்போ தான் நேரம் கிடைத்தபடியால் பதிகிறேன்.

1 hour ago, Kavallur Kanmani said:

வெளிய போகாமல் வீட்டுக்க இருங்கோ. என்னையும் பிள்ளைகள் வெளிய போக விடாமல் பத்திரமா வீட்டுக்குள்ள இருங்கோ என்று இருத்தி வைத்திருக்கினம். வீட்டுக்க சும்மா இருக்க ஏலுமா? தினமும் விதவிதமா சமையல் நடக்குது. இடைப்பட்ட நேரத்தில பிள்ளைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சியும் செய்யிறம். யாழையும் எட்டிப் பார்க்க நேரம் கிடைக்குது.எதற்கும் தேவையில்லாமல் வெளியே போகாமல் இருப்பது எமக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.

உண்மை தான் வயது போனநேரம் கவனம் தேவை.நடையைத் தவிர வேறு தேவைகளுக்காக வெளியே போவது கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரதி said:

கொரோணா வாரண்டால் துறைமுகத்தில் இருக்கும் கப்பலால் மட்டும் வராது ...சுப்ப மார்கெட்  போனாலும் வரும் ...வீட்டுக்குள்ள இருங்கோ ...வீட்டை சுத்தி நடவுங்கோ 

 

இப்போ அனேகமா வீட்டைச் சுற்றி தான் நடக்கிறது.
ஆனாலும் எனக்கு அதில் திருப்தி இல்லை ஏனென்றால் நீட்டுக்கு 2-3 மைல் நடந்தால் திரும்பவும் அதே தூரத்தை நடந்தே ஆக வேண்டும்.
வீட்டைச் சுற்றி நடந்தால் 3-4 தரம் நடக்க களவு வந்திடும்.இதை எத்தனையோ தடவை முயற்சி செய்தும் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

..உண்மை தான் வயது போனநேரம் கவனம் தேவை.நடையைத் தவிர வேறு தேவைகளுக்காக வெளியே போவது கிடையாது.

வயசுப் போச்சா..? மெய்யாலுமா..??

பேச்சைப் பார்த்தால் அப்படி தெரியலையே..?  vil-happy.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ராசவன்னியன் said:

வயசுப் போச்சா..? மெய்யாலுமா..??

பேச்சைப் பார்த்தால் அப்படி தெரியலையே..?  vil-happy.gif

எனக்கு ஒரு அடி இரண்டு அடி பின்னால் நீங்க இருக்கிறீங்க அந்த தைரியம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் வீட்டிலேயே இருங்கள் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு ஒரு அடி இரண்டு அடி பின்னால் நீங்க இருக்கிறீங்க அந்த தைரியம் தான்.

கொரோனா வந்தால் தாக்குப்பிடிக்கமாட்டியள்.வீட்டுக்குள்ளேயே இருங்க....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை வீட்டுக்கு வெளியில கடிதம் எடுக்கவும் போக விடுறாங்கள் இல்லை. யூரோப் முழுக்க இருந்து கொண்ட்ரோல் பண்ணுறாங்கள்......!  😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4-B434-AC2-8-E8-A-48-EF-BE2-D-CCFC809-B1

வீட்டிலிருந்து துறைமுகத்துக்கு நடந்து போய்வந்த படம்.

7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதற்கும் வீட்டிலேயே இருங்கள் அண்ணா.

சகோதரி
நான் தனியே வெளியே போகாமல் இருப்தால் மட்டும் கொரோனாவிலிருந்து தப்ப முடியாது.

ஒவ்வொரு நாளும் கொஞ்சமாக நடப்பது.அவ்வளவு தான் வெளியுலகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

கொரோனா வந்தால் தாக்குப்பிடிக்கமாட்டியள்.வீட்டுக்குள்ளேயே இருங்க....

 

6 hours ago, suvy said:

என்னை வீட்டுக்கு வெளியில கடிதம் எடுக்கவும் போக விடுறாங்கள் இல்லை. யூரோப் முழுக்க இருந்து கொண்ட்ரோல் பண்ணுறாங்கள்......!  😐

நானும் கவனமாக இருக்கிறேன்.

நீங்களிருவரும் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி.இன்னும் கவனமாக இருங்கள்.

Link to comment
Share on other sites

   3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                        கவனமாய் இருங்கள் அண்ணா. அந்தக் கப்பல் ஆட்களுடனேயே சென்றுவிட்டதா? அல்லது கொரானா வந்த  ஆட்களை இறக்கி விட்டுள்ளார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.
                        கவனமாய் இருங்கள் அண்ணா. அந்தக் கப்பல் ஆட்களுடனேயே சென்றுவிட்டதா? அல்லது கொரானா வந்த  ஆட்களை இறக்கி விட்டுள்ளார்களா?

வணக்கம் சகோதரி
3500 பேருடன்(வேலையாட்களும் சேர்த்து 1200)சன்பிரான்ஸ்சிஸ்கோவை நோக்கி வரும் போது ஏற்கனவே 10-20 பேர்வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மிகுதி பேரையும் உடனே அப்புறப்படுத்த தொடங்கினார்கள்.
    ஆனால் நடுக்கடலில் வைத்து செய்ய முடியாதென்பதால் சன்பிரான்ஸ்சிஸ்கோ துறைமுகங்களில் வைத்து செய்ய யோசித்தார்கள்.பாதுகாப்பு குறைபாடுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் என்பதால் இந்த பகுதி தவிர்க்கப்பட்டு ஓக்லண் குடா தெரிவாகியது.
     கப்பல் நின்ற இடத்திலிருந்து ஓக்லண்ட் பகுதிக்கு வர இரண்டு நாள் எடுத்தது.

அதற்கிடையில் யார்யாரை எப்படி இறக்கி எங்கு கொண்டு போவது என்று திட்டங்கள் வகுத்து பாதுகாப்பு படைகளின் முகாம்களுக்குள் 5 நாட்களாக ஏற்றி இறக்கிவிட்டனர்.
 3 நாட்களுக்கு முன் வெறும் கப்பலை எங்கோ நகர்த்திவிட்டனர்.
       மகளின் வீட்டிலிருந்து நடந்து போய்வந்த பாதையை போட்டிருந்தேன் பார்க்கலாம்.

Dropped pin
Near San Francisco Bay, California
https://goo.gl/maps/X2pvoFx4XZyNNtnM6

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

நன்றி வாத்தியார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

பதிவிற்கு நன்றி அண்ணா
உங்கள் பாதுகாப்புதான் முதலிடத்தில் இருக்கவேண்டும்

உண்மை. கள உறவுகள் சொல்வதுபோல் பாதுகாப்பாக இருங்கள். உடலையும் நகர்த்தாது இருப்பதும் கூடாது. கூடியவரை வெளியாட்களின் தொடர்பின்றி இருப்பதே இன்றறைய  சூழலுக்குச் சரியானனது.

Link to comment
Share on other sites

On 3/22/2020 at 4:55 AM, ஈழப்பிரியன் said:

 3500 பேருடன் வந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கொண்டு போய்விட்டனர்.இன்னமும் அந்தப் பக்கம் போகவில்லை.இன்று போகலாம் என்று எண்ணியுள்ளேன்.

 

ஈழப்பிரியன் அண்ணை, உடனே அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்துவிடவேணும் என்ற ஆர்வக்கோளாறு வருவது யாருக்கும் இயல்பே. அங்கே போய்க் கொரோனாவையா பார்க்கப்போறீங்கள்! அதிக அபாயம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

உண்மை. கள உறவுகள் சொல்வதுபோல் பாதுகாப்பாக இருங்கள். உடலையும் நகர்த்தாது இருப்பதும் கூடாது. கூடியவரை வெளியாட்களின் தொடர்பின்றி இருப்பதே இன்றறைய  சூழலுக்குச் சரியானனது.

 

7 minutes ago, மல்லிகை வாசம் said:

 

ஈழப்பிரியன் அண்ணை, உடனே அந்த இடத்துக்குப் போய்ப் பார்த்துவிடவேணும் என்ற ஆர்வக்கோளாறு வருவது யாருக்கும் இயல்பே. அங்கே போய்க் கொரோனாவையா பார்க்கப்போறீங்கள்! அதிக அபாயம் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்.

நொச்சி மல்லிகைவாசம் மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்கிடையில் யார்யாரை எப்படி இறக்கி எங்கு கொண்டு போவது என்று திட்டங்கள் வகுத்து பாதுகாப்பு படைகளின் முகாம்களுக்குள் 5 நாட்களாக ஏற்றி இறக்கிவிட்டனர்.
 3 நாட்களுக்கு முன் வெறும் கப்பலை எங்கோ நகர்த்திவிட்டனர்.

ஈழப்பிரியன்,  தலைக்கு வந்தது.... தலைப்  பாகையுடன் போச்சுது  என நினையுங்கள்.
அந்தக் கப்பலை அங்கு நிறுத்தி  வைத்து... வைத்தியம் பார்க்காமல், 
இருந்தார்களே... என சந்தோசப் படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்,  தலைக்கு வந்தது.... தலைப்  பாகையுடன் போச்சுது  என நினையுங்கள்.
அந்தக் கப்பலை அங்கு நிறுத்தி  வைத்து... வைத்தியம் பார்க்காமல், 
இருந்தார்களே... என சந்தோசப் படுங்கள்.

அதே கப்பலில் வைத்து வைத்தியம் செய்திருந்தால் கூண்டோடு காலி.

என்னடா இந்தத்திரியை காணவில்லையே என்று தேடினால்

அகவை 22 இல் இருந்து

வாழும் புலத்துக்கு மாற்றி கிடக்கு.

யார் செய்த வேலையா இருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 3:49 AM, ஈழப்பிரியன் said:

அதே கப்பலில் வைத்து வைத்தியம் செய்திருந்தால் கூண்டோடு காலி.

என்னடா இந்தத்திரியை காணவில்லையே என்று தேடினால்

அகவை 22 இல் இருந்து

வாழும் புலத்துக்கு மாற்றி கிடக்கு.

யார் செய்த வேலையா இருக்கும்?

அதை ஏன் பேசுவான் எல்லையள் கோடுகள் இடங்கள் மாத்தினதாலை வெட்டுகொத்து எல்லாமே நடந்து முடிஞ்சிருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.