Jump to content

திருகோணமை வன்னி மாவட்ட தேர்தல்கள் - நாம் இனமா சிறுபாண்மையா ? - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

 

திருகோணமை வன்னி மாவட்ட தேர்தல்கள் - நாம் இனமா சிறுபாண்மையா ? - வ.ஐ.ச.ஜெயபாலன்

சென்ற தேர்தலில் போரின் தொடற்ச்சியாக வடகிழக்கு தமிழர்கள் இனத்துவத்தை அழித்து சர்வதேசத்தின் கண்களில் ஈழத் தமிழரை சிறுபாண்மையினராக சிதைக்கும் முயற்ச்சியில் மகிந்த அரசு ஈடுபட்டது. எல்லா விமர்சனங்களோடும் சம்பந்தரே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற தமிழ் தலைவராக இருந்தார். இதனால் மகிந்த அரசு  திருகோணமலையில் சம்பந்தரை தோற்கடிப்பது என்கிற முதன்மை  நோக்கத்துடன்  திருகோணமலையில்  தமிழரின் 2 பிரதி நிதித்துவத்தையும் இல்லாதொழிக்கும் தேர்தல் சதுரங்கத்தை முன்னெடுத்தது. தேர்தலில் சம்பந்தர் மயிரிளையில் தப்பினார்.  ஆனாலும் திருகோணமலையில் இரண்டில் ஒரு பிரதிநிதித்துவத்தை நாம் இழந்ததும் வரலாறு. இம்முறை வன்னியிலும் திருமலையிலும் ரணிலின் யு.என்.பி கட்ச்சியின் மறைமுக ஆதரவும் மகிந்தவுக்கு கிடைக்கும் என்பது பீதியைக் கிழப்புகிறது. 

 

வடகிழக்கில் குறிப்பாக வன்னியிலும் திருகோணமலையிலும்  முதன்மையான தமிழ் பிரதி நிதித்துவம் இருக்குமட்டும்தான் ஈழத் தமிழர் ஒரு தேசிய இன அடையாளத்தை தக்க வைக்க முடியும். அது வரைக்கும்தான்  சர்வதேச ரீதியில் ஈழத் தமிழருக்கும்  புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கும் குரல் இருக்கும்.   

திருமலையில்  ஈழத் தமிழர் வாக்குகளைப் பிழவு படுத்தி  பிரதி நிதித்துவத்தை தோற்கடிக்கும் கொந்தராத்து சென்றமுறை கஜேந்திரன் பொன்னம்பலத்துக்கு கிடைத்தது. இம்முறை உறவுக்காரர் விக்கிக்கு. இதுதான் தமிழன் விதி. 

இம்முறை திருகோணமலையில் மட்டுமல்ல வன்னியிலும் வாக்குகளைப் பிரிக்கிற பணி எப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக இடம்பெறுகிறது. தமிழருக்குள் தங்களுக்கும் பிரதிநிதிகள் உள்ளனர் என்பதை காட்டி  சர்வதேச அரங்கில்  தமிழர் இனமல்ல சிறுபாண்மையினர் என நிரூபிக்கிறது மகிந்த அரசின் தந்திரோபாயம், சென்றமுறை சம்பந்தர் தோற்றிருந்தால் அவர்கள் நோக்கம் நிறைவேறியிருக்கும்.  

தமிழ் வாக்குகளை பிழவுபடுத்தி மாஜி சிங்கள வாக்குகளையும் அமைச்சருக்கு விழும் வாக்குகளையும் ஓருசில முன்னைநாள் போராளிகள்  வாக்க்குகளையும் இராணுவத்தின் வாக்குகளையும்  சேர்த்து ஒரு சிங்கள வேட்ப்பாளரை வெற்றி பெற வைக்கும் முயற்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது.  கவலை அந்த சிங்கள வேட்பாளர் சிவிலியன் அல்ல போரை நடத்தி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என்பதாகும்.

திருகோண மலையிலும் வன்னியிலும் நாம் செய்ய வேண்டியது என்ன?  முன்னைநாள் போராளிகள் சொல்கிறார்கள் என்பதற்காக வாக்களித்து பிரதி நிதித்துவத்தை இழப்பதா அல்லது சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் வெற்றிவாய்ப்புள்ள வேட்ப்பாளர்களை ஆதரித்து  வடகிழக்கில் தமிழர் பிரதி நிதித்த்வத்தை உச்சப்படுத்துவதா என்கிற கேழ்வி நம் இனத்தின் முன்னுள்ளது.

2

 வடகிழக்குத் தேர்தலில் சர்வதேசம் அங்கீகரிக்கிறவர்கள் வெற்றி பெறுவதில்தான் ஒரு இனமாக எங்கள் எதிர்காலம் தங்கியுள்ளது.  புலம்பெயர்ந்த தமிழருக்கும் அப்போதுதான் குரல் இருக்கும். நீங்கள் சம்பந்தரை சொல்கிறீங்க.  மிக முக்கிய மேற்க்கு இராஜதந்திரிகள் வெற்றிகளின் லாபம் பாலசிங்கம் அண்ணர் விலக்காக ஏனைய புலம்பெயர்ந்த தீவிர செயல்பாட்டாளருக்கு போகும் சூழலை ஒருபோதும் அனுதைக்கமாட்டோம் என  செயற்பட மாட்டோம் என 2006ல் இருந்தே சொல்லிவருகின்றனர். இதனை நானும் வன்னிக்குத் தெரிவித்திருக்கிறேன். 2009ன்பின்னர் கொடி பிடித்த போது இன்னும் திட்ட வட்டமாக அதனையே சொன்னார்கள். ஆயுதங்கள் மவுனித்தபின்னர்  சர்வதேச சமூகத்தை வெறெடுக்கக்கூடிய விடுதலையில் புலம்பெயர்ந்த தமிழரின் ஆதரவு மிக மிக முக்கியமானதாகியுள்ளது.   மேற்படி தளம் தொடற்ச்சியாக அடுத்த தலைமுறை புலம்பெயர்த தமிழரை நோக்கி  பெயற்ச்சி அடைவதும் மிக முக்கியம். அதைவிட முக்கியம் கழத்தில் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கக்கூடியவர்களின் பிரதி நிதித்துவம். தயவு செய்து இதனை கருத்தில் எடுத்து விவாதியுங்க.  .

Link to comment
Share on other sites

நீங்கள் திருகோணமலை பற்றி கதைக்கிகிறீங்களா அல்லது வன்னி பற்றியா ....???

Link to comment
Share on other sites

6 minutes ago, poet said:

சென்ற தேர்தலில் போரின் தொடற்ச்சியாக வடகிழக்கு தமிழர்கள் இனத்துவத்தை அழித்து சர்வதேசத்தின் கண்களில் ஈழத் தமிழரை சிறுபாண்மையினராக சிதைக்கும் முயற்ச்சியில் மகிந்த அரசு ஈடுபட்டது. எல்லா விமர்சனங்களோடும் சம்பந்தரே சர்வதேச அங்கீகாரத்தை பெற்ற தமிழ் தலைவராக இருந்தார்

சில சர்வதேசத்தின் உதவியோடு சொறிலங்கா (ரணில், மகிந்த கூட்டு) செய்த தமிழின அழிப்புக்கும் அதே சில சர்வதேசத்தின் அங்கீகாரத்தையும் பெற்ற சம்பந்தனை தமிழர் தூக்கி தலைல வைக்கோணும் என்டு ஏன் கஷ்டப்படுகிறீர்களா? தமிழினத்தை தொடர்ந்து அழிப்பதுக்கு ஏன் நீங்க ஆதரவா இருக்கிறீங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் நிற்பது, வெற்றிபெறுவது இதுவெல்லாம் தான் பிரதி நிதித்துவப்படுத்தும் இனத்தின் முன்னேற்றத்திற்காக உழைப்பதற்காவும் சேவை செய்வதற்காகவுமே அன்றி வேட்பாளருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக என நினைத்து செயற்படுவது தவறு.

மக்கள் சுயமாக சிந்திக்க முடியாதவர்கள் என நினத்து அவர்களுக்கு பூச்சாண்டி காட்டி பெயர்குறிப்பிட்ட நபர்களை தெரிவு செய்யாவிடில்  அது வரும் இது வரும் என்று கூறி வேண்டாத நபர்களை வெற்றிபெற வைப்பதும் ஜனநாயகத்தை மழுங்கடிக்கும் செயல்தான்.

மக்கள்  ஜனநாயகத்தில் தெளிவற்றவர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருந்தால் எத்தனை தேர்தல் வந்தாலும் எவர் எவர் வென்றாலும் மக்களுக்கு விடியல் வரபோவதுமில்லை   உரிமைகளை பெறப்போவதுமில்லை. அரசியலை நிரந்தர தொழிலாக வைத்திருக்கும் பல தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் விழிப்புணர்வு பெறுவதை விரும்புவதுமில்லை.

மக்கள் அதே வேட்பாளரை மீண்டும் மீண்டும் தெரிவு செய்வதற்கு கடந்த காலங்களில் தேர்தலில் வென்றபின் அவர் மக்களுக்கு என்ன சேவை செய்தார் என்ற கேள்வி முன்வைக்கப்பட வேண்டும். அல்லது வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டு தேர்தலில் ஒரு சாதனையாளன் மட்டுமே தெரிவு செய்யப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.