Jump to content

யாழ்.கொடிகாமத்தில் 233 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG_8010.jpg

யாழ்.கொடிகாமத்தில் 233 பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை!

இந்தியா சென்ற 233 யாத்திரிகள் யாழ் கொடிகாமம் 522வது படைப்பிரிவு முகாமில் தங்கவைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) 8 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட இவர்கள் குறித்த பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

14 நாட்கள் குறித்த நபர்கள் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படைப்பிரிவின் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்கு கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமில் 172 பேர் தங்க வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_8007.jpg

IMG_8011.jpg

http://athavannews.com/யாழ்-கொடிகாமத்தில்-233-பேரை/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடிகாமம் கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் 233 பேர்

March 22, 2020

IMG_8011.jpg

கொடிகாமம் 522ஆவது படைப்பிரிவின் படை முகாமில் அமைக்கப்பட்ட கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு 233 பேர் இன்று  ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவுக்கு யாத்திரிகையர்களாகச் சென்ற பிக்குகள் உள்ளிட்ட 233 பேர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. 8 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

அவர்களுக்குரிய உணவு மற்றும் மருந்து வசதிகள் உள்ளிட்டவற்றை இராணுவ சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் என்பன இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு உரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படைப்பிரிவின் படை முகாமில் 500 பேரை தங்கவைக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  #கொடிகாமம்  #கொரோனா #தனிமைப்படுத்தல் #முகாம்  #பிக்குகள்
 

http://globaltamilnews.net/2020/138897/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.