Jump to content

சுவிஸ் போதகருடன் அரை மணி நேரம் பேசியவரிற்கு யாழில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரை IDH தொற்று நோயியல் மருத்துவ மனைக்கு அனுப்பத் தீா்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளா் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே சிகிச்சையளிக்கப்படும் என பணிப்பாளர் கூறியுள்ளார்.

safe.png

இதேவேளை, குறித்த தொற்றுக்குள்ளானவர், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த போதகருடன் அரை மணி நேரம் பேசியதாகத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காய்ச்சல் மற்றும் சுவாசப்பை அழற்சி ஆகியவற்றினால் குறித்த நபர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/srilanka/01/241567?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

இத்தனைக்கும் அவர் ஒரு கிறிஸ்தவர் இல்லை। இவர் போதகரது  கட்டிட வேலை விடயமாக பேச வந்தவராம்। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட...அரைமணி நேரத்திலை, கொரோனா தன்ரை  வேலையை காட்டிப் போட்டுது. 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

corona-up.jpg

அரியாலை ஆராதனைக்கு சென்ற இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மதபோகரின் வழிப்பாட்டில் வவுனியாவில் இருந்து கலந்துகொண்டவர்களில் இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – அரியாலையில் போதனையில் ஈடுபட்ட மதபோதகருக்கு கொரனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் இருந்து குறித்த நிகழ்விற்கு சென்ற 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இவர்களில் நெளுக்குளத்தை சேர்ந்த ஒருவரும், புளியங்குளத்தை சேர்ந்த ஒருவருமாக  இருவருக்கு உடலில் உபாதைக்குணம் இருப்பதை அறிந்து பொதுசுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொதுசுகாதார பரிசோதகர்கள் சிரமம் பாராது அவர்களை உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது தொடர்பிலான கண்காணிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://athavannews.com/அரியாலை-ஆராதனைக்கு-சென்ற/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.