Jump to content

நடிகரும் , இயக்குனருமான விசு மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

c550ea4c14d1a6d48792713eb9804925.jpg

பிரபல நடிகரும் , இயக்குனருமான விசு வயது 74 சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் இவர் உயிர் பிரிந்தது.

1941-ம் ஆண்டு பிறந்த விசு இயக்குநர், நடிகர், வசன கர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பரிணாமங்களை கொண்டவராவார்.

திரைப்படங்களை தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சி தொடர்களிலும் தனது அத்தியாயங்களை பதித்து வந்தார்.

இவர் இயக்கிய ‘சம்சாரம், அது மின்சாரம்’ திரைப்படம் பல மொழிகளில் எடுக்கப்பட்டுள்ள பெருமையை கொண்டிருந்தாலும், 1986-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றது. இயக்குநர்களின் சிகரம் என போற்றப்படும் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகவும் விசு பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், அண்மை காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.

இவரது இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பெரும் இழப்பாம். விசுவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://newstm.in/tamilnadu/actor-and-director-visu-death/c77058-w2931-cid494623-s11189.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறந்த  இயக்குனர் மற்றும் அரட்டை  அரங்கம் நடத்தி பலருக்கும் உதவிகள் செய்பவர்.....! 

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to comment
Share on other sites

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான விசு உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கணும் போன்ற தேசிய விருது பெற்ற பல படங்களை இயக்கிய விசு உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

நடிகர், இயக்குநர், கதையாசிரியர் உள்ளிட்ட பல்வேறு முகங்களை கொண்ட இவர், கடந்த சில தினங்களாகவே உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

https://www.ibctamil.com/india/80/139566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

மிகச்சிறந்த  இயக்குனர் மற்றும் அரட்டை  அரங்கம் நடத்தி பலருக்கும் உதவிகள் செய்பவர்.....! 

ஆழ்ந்த இரங்கல்கள்......!

ஆனால் ஈழப் போராட்டத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி வந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்பு . May his soul rest with God. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

ஆனால் ஈழப் போராட்டத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி வந்தார்.

இவர், சேகர் போன்று பலர் எதிர்காலத்தில் இந்தக் குழுவில் ரஜனியும்  கூட இணையலாம். காந்தியம் பேசியவாறு மனித உரிமைகளை அறியாத மனித உருவில் திரயும் இவர்களைப்பற்றிக் கதைத்து எமது சக்தியை வீணாக்குவதே விரயமாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

நாகர்கோயில் நாதமுனி

அவர் மறைந்தாலும், அவது மணல் கயிறு படத்தின் நாரதர் நாயுடு, சிதம்பர ரகசியம் படத்தின் பீமா ராவ், சம்சாரம் அது மின்சாரம் படத்தின் அம்மையப்பன் முதலியார், 'திருமதி ஒரு வெகுமதி படத்தின் நாகர்கோயில் நாதமுனி, உரிமை ஊஞ்சலாடுகிறது படத்தின் சண்முகம் உட்பட பல கேரக்டர்களின் வழியாக வாழ்ந்து கொண்டிருப்பார் என்கின்றனர் ரசிகர்கள்.

Read more at: https://tamil.filmibeat.com/news/visu-the-king-of-family-drama-movies/articlecontent-pf131931-069270.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

ஆனால் ஈழப் போராட்டத்தை தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி வந்தார்.

ஆரம்பத்தில் தவறாக கதைத்தேன் என்று பின்பு திருந்தியவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

ஆரம்பத்தில் தவறாக கதைத்தேன் என்று பின்பு திருந்தியவர் .

தகவல் உண்மையாக இருந்தால் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது தலைமையில் நடாத்திய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டில் வதியும் பல இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவிகள் கிடைப்பதற்கு விசு அவர்கள் உதவினார். அவர் நடிப்பு, படைப்புக்கள் மறக்க முடியாதவை.  ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஆரம்பத்தில் தவறாக கதைத்தேன் என்று பின்பு திருந்தியவர் .

அவர் ஆத்மா இயற்கையோடு  சங்கமித்து இளைப்பாறட்டும். 

அரசியல் குமுகாய ரீதியில் முதலில் எடுக்கப்படும் முடிவுகள் தவறாக இருக்குமாயின் அதுவே இறுதிவரை பாதிப்பாகிவிடுகிறது. இதற்குப்பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இங்கே இறந்தவரை வைத்து அரசியல் செய்வதல்ல நோக்கு. இவர்போன்ற கருத்துடையோர் மாறவேண்டும். தமிழகத்தில் எமது தாயகநிலை தொடர்பாக அனைத்துமட்டங்களிலும் ஒரு ஒத்த கருத்தியல் உருவாக வேண்டும்.  இவர்களது கடந்காலச் சிந்தனைகள் தவறானவை என்பது மீண்டும் மீண்டும் சுட்டப்பவேண்டும். இது காழ்ப்புணர்வின்பாற்பட்டதல்ல. கருத்தியற் தளத்திலானது மட்டுமே. தமிழகத்தில் பல பிரபலங்கள் தவறுவிட்டுக் கொண்டே நகர்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோகம்.. ஆழ்ந்த அனுதாபங்கள்.

தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்துயர் பகிர கொஞ்சமாவது இடமளித்தவர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.