Jump to content

கொரோனா - சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைக, சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனவிடம் இருந்து பிந்திய மருத்துவ அறிவுரைகள், சீன மருத்துவர்கள் இறந்த நோயாளிகளை பிரேத பரிசோதனை செய்ததில் இருந்து.

 

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஏதும் பிரச்னை இருந்தாலும், மற்றும் ஆங்கிலம் எவருக்கேனும் புரியாமல் இருந்தாலும் போன்றே காரணங்களினால், ஒலி வடிவத்தின் மொழி பெயர்ப்பு பின்வருமாறு:

 

 

 

1) இந்த வைரை சுவாசக் கால்வாயை தடித்த சளியை உருவாக்கி, அந்த சளி உறைவதன் மூலமாக சுவாசப் பாதையை அடைகிறது.

2) மருந்தின் மூலம் சிகிச்சை செய்வதத்திற்கு அடைப்புகள் நீக்கப்பட்டு, சுவாசப் பாதை திறக்கப்படவேண்டும். இப்படி அடைப்பை நீக்கி, சுவாசப் பாதையை திறப்பதற்கு எண்ணுக்கணக்கிலான நாட்கள் தேவை.

கொரானாவில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கான சீன மருத்துவர்களின் பரிந்துரைகள் பின்வருமாறு:

1) சூடான நீராகாரங்களை அடிக்கடி எடுங்கள் - தேநீர், காபி, சூப், வெந்நீர் போன்றவை. அத்துடன், 20 நிமிடத்திற்கு ஓர் தடவை ஓர் முறடு வெந்நீரை உள்கொள்வது வாயை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன், வைரஸை (வாய்க்குள் இருந்தால்) உணவுக்கு கால்வாய் வழியாக கழுவி வயிற்ற்றை அடைந்து சமிபாடு தொகுதியினால் நடுநிலையாக்கப்படும் (neutralise)

2)  இயலுமானவரை, ஒவ்வொருநாளும் வெந்நீராலும்,  உப்பு அல்லது எலுமிச்சம் சாறு  அல்லது வினிகர் தொண்டையையும், வாயையும் அலசுங்கள் (gargle)

3) covid-19 வைரஸ் உடையிலும், மயிரிலும் ஒட்டிக் கொள்ளும் தனமாய் உள்ளது. எந்த சவர்க்காரமமும் அல்லது detergent உம் covid-19 ஐ கொல்லக்  கூடியது. எனவே, வெளியில் சென்று வீடு திரும்பியவுடன், ஓர் இடத்தில் தொடாமலும், இருக்காமலும், நேரடியாக குளியல்  செய்யுங்கள்  அல்லது தோயுங்கள்.

4) நாள்தோறும் உடைகளை தோய்க்க முடியாவிட்டால், சூரிய வெய்யிலில் உலர்த்துவது வைரஸ் ஐ கொல்லக்  கூடியது.     

5) உலோக மேற்பரப்புகள் மற்றும் தொடு பரப்புகளை (metalic surface) மிகவும் கவனாமாக கழுவுங்கள்.   ஏனெனில், உலோக  தொடுப்பரப்புக்களில் 9 நாட்கள் வரைக்கும் இந்த வைரஸ் தாக்கு பிடிக்க கூடியது.

6) கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றில் கவனமெடுத்து, தொடுவதை தவிருங்கள் அல்லது தவிர்ப்பதற்கன முறைகளை (கையுறை) கடைபிடியுங்கள். உங்கள் வீடுகளில் கைபிடி  சட்டங்கள், கதவின் கைப்பிடிகள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருங்கள்.

7) புகை பிடிப்பதை தவிருங்கள்.

😎 உங்கள் கைகளை 20 நிமிடத்திற்கு ஓர் தடவை நுரைக்கும் சவர்க்கரத்தினால் 20 நொடி கழுவுங்கள்.

9)  மரக்கறி மற்றும் பழவகைளை உட்கொள்ளுங்கள். விற்றமின் C மாத்திரமின்றி, உங்கள் நாக தாது (Zinc) ஊட்டச்சத்தை தரக்கூடிய அல்லது கூட்டக்கூடியதாக இருக்கும் வழிமுறைகளை கையாளுங்கள்.

10) மிருகங்கள் covid-19 ஐ மனிதருக்கு கடத்துவதில்லை. மனிதனில் இருந்து மனிதனுக்கே கடத்தப்படுகிறது.

11) இயலுமானவரை தடிமன் காய்ச்சலை தவிர்பதற்கு முயற்சியுங்கள். குளிரான உணவுகளை தவிருங்கள்.

12) எதாவது தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு வருவதற்கன அறிகுறிகளோ அல்லது உணர்வோ தென்பட்டால், மேற்கூறியவற்றின் மூலம்    தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

13)    covid-19 தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு மூலம் தொற்றி, 3-4 நாட்கள் வரை தொண்டையில் தங்கி இருந்து, சுவாசப் பாதை வழியாக நுரையீரலை சென்றடையும். எனவே தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை அரிப்பு போன்றவற்றிற்கு மேற்கூறிய படிமுறைகள் மூலம்  எதிர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

14) உங்களில் கவனமெடுப்பதுடன், ஏனையோருக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டும், நான் எதிர்பார்த்தது போன்றே அது தளத்தில் ஏற்றுப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி. நல்ல தகவல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆங்கில ஒலி வடிவம் இணைக்கப்பட்டும், நான் எதிர்பார்த்தது போன்றே அது தளத்தில் ஏற்றுப்படவில்லை.

கடஞ்சா.... நீங்கள் எழுதிய அழகிய தமிழ் வடிவம் இருக்கும் போது, 
ஆங்கிலம் இணைக்கப்படவில்லை என்று கவலைப் படாதீர்கள். நன்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி கடஞ்சா......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு  நன்றி.👍

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகின்றது என தோன்றுகின்றது.

பொதுவாக குளிரான தேசங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவும் என்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உண்டு, 


இன்றும் குளிரான கனடாவில், அதிக மக்கள் வாழும் ஒன்ராறியோவில், நேற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களும் நோயால் தாக்கத்திற்கு உள்ளவர்கள் குறைந்தால், ஓரளவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என கருத்தலாமாம்.     

https://www.680news.com/2020/03/22/new-coronavirus-cases/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிற்கு சார்ஸ் ஐ எதிர் கொண்ட அனுபவம் இதில் உதவி இருக்கிறது.

சார்ஸ் வந்தபோது, canada சார்ஸ் அறிகுறி உள்ளவர்களை நகரை அண்டி இருந்த வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களில் சோதித்தது மற்றும் சிகிச்சை அளித்தது.

இதுவே விழிப்புணர்வு வரும் வரையில் சார்ஸ் பரவியதற்கான மிக முக்கியமான கரணம் என்பதை கனடா மருத்துவ துறை MODELING ஆல் ஊகித்தது.

இதில் கனடா கற்றது என்னவென்றால், நோய் அறிகுறி உள்ளவர்களை நகரில்  இருந்து அல்லது சனத்தொகை செறிவான மற்றும் புழங்க கூடிய இடங்களில் இருந்து  ஒதுக்கு புறமாக இருக்கும் வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களில் சோதித்தது மற்றும் சிகிச்சை அளிப்பது, பரவலை தடுப்பதில் மிகக் கூடிய பங்கு வகிக்கிறது என்பது.

ஓர் விதத்தில் இதுவும் தனிமைப்படுத்துதல் தான்.    

இப்பொது கனடா இதை, மேலும் ஓர் படி சென்று, ஒதுக்கு புறமாக இருக்கும் வைத்திய சாலைகள் மற்றும் நிலையங்களையும் தனிமைப் படுத்தி சோதித்தது மற்றும் சிகிச்சை அளிப்பது நடந்திருக்கிறது என்றே என்ன வேண்டி உள்ளது.

 

11 hours ago, ampanai said:

எனக்கென்னவோ நாட்டிற்கு நாடு வித்தியாசப்படுகின்றது என தோன்றுகின்றது.

பொதுவாக குளிரான தேசங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவும் என்கிறார்கள். அதற்கு ஆதாரமும் உண்டு, 


இன்றும் குளிரான கனடாவில், அதிக மக்கள் வாழும் ஒன்ராறியோவில், நேற்றும் கோவிட்டால் பாதிக்கப்பட்டோர் குறைய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து வரும் அடுத்த இரண்டு நாட்களும் நோயால் தாக்கத்திற்கு உள்ளவர்கள் குறைந்தால், ஓரளவு தற்போது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என கருத்தலாமாம்.     

https://www.680news.com/2020/03/22/new-coronavirus-cases/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.