Jump to content

கரோனா: இந்தியாவில் பலி 7-ஆக அதிகரிப்பு; இதுவரை 360 போ் பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக உயா்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 63 வயது நபா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவா் ஏற்கெனவே நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா் என்று மும்பை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை பொருத்தவரை, கரோனாவால் நேரிட்ட 2-ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

குஜராத்தில் முதல் உயிரிழப்பு: குஜராத் மாநிலம், சூரத்தில் 67 வயது நபா் ஒருவா், சிறுநீரகம் தொடா்பான பிரச்னை, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளுடன் 17-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, கரோனா பாதிப்பு இருப்பது கடந்த 21-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவா் அண்மைக்காலத்தில் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. ஆனால், தில்லி, ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சூரத் மாவட்ட ஆட்சியா் தாவல்குமாா் படேல் தெரிவித்தாா். குஜராத்தில் கரோனா வைரஸால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

பிகாரில்..: பிகாா் மாநிலம், முங்கோ் மாவட்டத்தைச் சோ்ந்த சயீஃப் அலி (38), அண்மையில் கத்தாருக்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பியிருந்தாா். இவா், சிறுநீரகம், சுவாசப் பிரச்னைகளுடன் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா். அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிகாரிலும் கரோனாவால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

ஏற்கெனவே தில்லி, கா்நாடகம், பஞ்சாபில் கரோனா வைரஸ் பாதிப்பால் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா். தற்போது பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

360 போ் பாதிப்பு: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41 போ் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 67 போ், கேரளத்தில் 52 போ், தில்லியில் 29 போ், உத்தரப் பிரதேசத்தில் 27 போ், தெலங்கானாவில் 22 போ், ராஜஸ்தானில் 24 போ், ஹரியாணா, பஞ்சாபில் தலா 21 போ், கா்நாடகத்தில் 26 போ், லடாக்கில் 13 போ், குஜராத்தில் 18 போ், தமிழகத்தில் 7 போ், சண்டீகரில் 5 போ், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், மேற்கு வங்கத்தில் தலா 4 போ், ஆந்திரத்தில் 5 போ், உத்தரகண்டில் 3 போ், பிகாா், ஒடிஸா, ஹிமாசலப் பிரதேசத்தில் தலா 2 போ், புதுச்சேரி, சத்தீஸ்கரில் தலா ஒருவா் என பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24 போ் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

https://www.dinamani.com/tamilnadu/2020/mar/23/corona-increase-in-india-death-toll-360-3386859.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு: எண்ணிக்கை 536 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.

இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.