Jump to content

வாடிய மக்களைக் கண்டு வாடிய தாயுள்ளம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

6d4953b8-b8ef-4ed2-be5c-26ea96c9399c

 

சேலத்தில் ஒருவர், பசியால் வாடிய மக்கள் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார். 

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் 'மக்கள் ஊரடங்கு' பின்பற்றப்படுகிறது. இதனால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடக்கின்றனர். ஆனால், சாலையில் அடுத்த வேலைக்கு உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உதவும் நோக்கில், சேலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தாயுள்ளத்தோடு வழங்கி அவர்களது பசியைப் போக்கியுள்ளார்.

அரசின் உத்தரவை ஏற்று, கரோனா தற்காப்புக்காக வீட்டுக்குள் அடங்கியிருக்கும் மக்களுக்கு இடையே, அடுத்த வேளை உணவுக்காக ஏங்கும் நிலையில் இருந்த இந்த மக்களுக்கு உணவு கிடைத்தது அவர்களுக்கு கிடைத்த ஆறுதலாகவே பார்க்கப்படுகிறது. 

https://www.dinamani.com/tamilnadu/2020/mar/22/salem-man-gives-food-to-people-3386752.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.