Jump to content

தூய்மைக் காவலர்கள் வேதனை கட்டுப்படியாகாத சம்பளம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

less

கோவை: தினமும் ரூ. 100 மட்டுமே சம்பளம் வழங்கும் நிலையில், சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைக் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த 2014 -15 ஆம் நிதியாண்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்கீழ் ஊராட்சிகளில் வீடுதோறும் கழிவுகளைச் சேகரித்து அதனை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரிக்க தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 குடியிருப்புகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் சேர்த்து 1,608 தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 


ஆரம்பத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தூய்மைக் காவலர்களுக்கு 100 நாள்கள் மட்டும் வேலை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் புதிய ஆள்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு ரூ. 200 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 100 நாள்கள் மட்டுமே வேலை அளிப்பதால் தூய்மைக் காவலர் பணிக்கு பலர் வர மறுத்தனர். இதனால் பெரும்பாலான ஊராட்சிகளில் ஒன்றிரண்டு தூய்மைக் காவலர்களை வைத்து கழிவுகளைச் சேகரித்து வந்தனர்.  


இந்நிலையில் 2018 - 19 ஆம் நிதியாண்டில் தூய்மைக் காவலர்களை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நியமிக்காமல் அந்தந்த ஊராட்சிகள் சார்பில் நியமனம் செய்து, மாநில அரசு நிதியில் இருந்து சம்பளம் வழங்க தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலை வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நாளொன்றுக்கு ரூ. 100 வீதம் மாதத்தில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 26 நாள்களுக்கு ரூ. 2,600 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.


விவசாயக் கூலி வேலை உள்பட பல்வேறு வேலைகளுக்கும் குறைந்தபட்சம் ரூ. 300 முதல் ரூ. 500 வரை சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தூய்மைக் காவலர்களுக்கு ரூ. 100 சம்பளம் என்பது மிகவும் சொற்பமானது. இதன் மூலம் அரை வயிற்றுக்கான உணவுத் தேவையைக்கூட அவர்களால் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு தூய்மைக் காவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தூய்மைக் காவலர்கள் சிலர் கூறியதாவது: 


தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு ரூ. 2,600 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. 100 நாள் வேலைத் திட்டத்தில் இருந்தபோது நாளொன்றுக்கு ரூ.200 சம்பளம் வழங்கப்பட்டது. மாநில அரசின் கீழ் மாற்றப்பட்டு ஆண்டு முழுவதும் வேலையை வழங்கி சம்பளத்தைப் பாதியாகக்  குறைத்துவிட்டனர். இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்துக்கான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. 
ஊராட்சி வேலையை நம்பி வந்த எங்களுக்கு அரை வயிறு உணவுகூட கிடைக்க முடியாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது. குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் அனைத்தும் கேள்விக்குறியாகிறது. தினமும் கழிவுகளை அகற்றி கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்க உதவும் எங்களை அரசு கண்டுகொள்ளாமல் நிராகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 


இது தொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை முகமை திட்ட இயக்குநர் ஜி.ரமேஷ்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 


மாவட்டத்தில் 1,608 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து உரக்குடில் மையங்களில் வழங்குவது மட்டுமே இவர்களது பணி. நாளொன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு வேறு வேலையும் வழங்க முடியாது.  இருந்தும் சம்பள உயர்வு கோரிக்கை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்னையில் மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார். 

https://www.dinamani.com/tamilnadu/2020/mar/23/purity-guards-are-unbearable-salaries-3386944.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.