Jump to content

உலகின் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாதான் காரணம்!’ - பிரிட்டிஷ் எழுத்தாளர் #coronavirus


Recommended Posts

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சீன அரசு நினைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதையடுத்து சீன அரசு மவுனம் கலைத்தது. மர்மக் காய்ச்சல் குறித்து எச்சரித்த மருத்துவர் ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் முடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் கான்டெல் (Pat Condell) விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து யூடியூபில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``வுகான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

 

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுகான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை. மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

இதை வுகான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என கான்பியூசிஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://www.vikatan.com/health/international/chinese-communist-party-is-responsible-for-every-death-says-pat-condell?artfrm=v3

Link to comment
Share on other sites

Tedros Adhanom Ghebreyesus - இவரை சீன அரசு பல மில்லியன்கள் கொடுத்து தனது சட்டை பைக்குள் வைத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டுகினறனர். 

Tedros: The face of the global response to coronavirus pandemic

Link to comment
Share on other sites

மிகவும் ஒடுங்கிய நோக்குடைய உண்மைக்குப் புறம்பான ஒரு பார்வை. அவரிடம் ஏற்கனவேயுள்ள சீனவெறுப்பை உரமூட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக பாவிக்கின்றார்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

 

 

இவருக்கு  கொரோனாவை பற்றிய அக்கறையை விட  சீன பொதுவுடமை  கட்சியை  குறை கூறுவதே முக்கியமாக உள்ளது..  மேற்குலக நாடுகளால் சமாளிக்க முடியாதபோது சீனா மீது பழியை தூக்கிப்போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும். அமரிக்காவில் நெருக்கடி அதிகமாக  டிரம் சீன வைரஸ் என்கின்றார்.  சீனா போல் இவர்களால் நெருக்கடி நிலையை  சமாளிக்கவும் முடியாமல் உள்ளது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ampanai said:

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் வுகான் நகரத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதமே மர்மக்காய்ச்சல் இருப்பதாக அங்குள்ள மருத்துவர் ஒருவர் சக மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். வுகானின் இறைச்சிக் கூடத்துக்கு அருகே வசிப்பவர்களுக்கு நான்குபேருக்கு ஒரேவிதமான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே, நோயாளிகளைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சமூகஊடகம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 

இதையறிந்த சீன அரசாங்கம் அந்த மருத்துவரை எச்சரித்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மூச்சுவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என சீன அரசு நினைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதம் சீனா முழுவதும் இந்த நோய் பரவத் தொடங்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்தனர். நிலைமை கையை மீறிச் சென்றதையடுத்து சீன அரசு மவுனம் கலைத்தது. மர்மக் காய்ச்சல் குறித்து எச்சரித்த மருத்துவர் ஜனவரி மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.
 
உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பல நகரங்கள் முடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் உலகம் சிக்கியதற்கு சீன அரசும் அங்கு ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் காரணம் என பிரிட்டிஷ் எழுத்தாளரும் நகைச்சுவை கலைஞருமான பாட் கான்டெல் (Pat Condell) விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து யூடியூபில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``வுகான் நகரத்தில்தான் இந்த வைரஸ், முதன்முதலில் தோன்றியது. ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தை திறம்பட கையாண்டிருக்க வேண்டும். சீனாவில் உள்ள கம்யூனிஸ்ட் அரசு தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டது. இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

 

இந்த வைரஸ் தொடர்பாக பேசியவர்களை எல்லாம் சீன அரசு கைது செய்தது. சீன அரசு வெளியில் இருந்து கிடைக்கும் உதவிகளை மறுத்துவிட்டது. அவர்கள் மக்களின் உயிர்களைவிட தங்களது முகத்தைக் காத்துக்கொள்ளத்தான் உறுதியாக இருந்தனர். உலகில் ஏற்படும் ஒவ்வொரு மரணத்துக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் நேரடி காரணம்.

உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவே இப்போது நெருக்கடி நிலையில் உள்ளது. சீன அதிபர் பொறுப்புடன் செயல்படவில்லை. வுகான் நகரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அவர் எதையும் செய்யவில்லை. மனித வாழ்க்கையைவிட முக்கியமான வேறு விவகாரங்களில் அவர் பிஸியாக இருந்திருக்கலாம் யாருக்குத் தெரியும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதற்குக் காரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிதான் என உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்குத் தெரியும்.

இதை வுகான் வைரஸ் அல்லது ட்ரம்ப் சொல்வது போல் சீனா வைரஸ் என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு விஷயத்தை அதன் சரியான பெயரில் அழைப்பதுதான் முக்கியம் என கான்பியூசிஸ் கூறுகிறார். இந்த விவகாரத்தை மறைத்தால் உலகமே முடங்கிவிடும் எனத் தெரிந்தும் மறைத்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பொறுப்பற்றவர்களாவும், நேர்மையற்றவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் உலகின் பார்வையில் சீனாவைத் தலைகுனிய வைத்துவிட்டார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

https://www.vikatan.com/health/international/chinese-communist-party-is-responsible-for-every-death-says-pat-condell?artfrm=v3

நம்பகமற்ற தகவல்களைக் கொண்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

2 hours ago, manimaran said:

மிகவும் ஒடுங்கிய நோக்குடைய உண்மைக்குப் புறம்பான ஒரு பார்வை. அவரிடம் ஏற்கனவேயுள்ள சீனவெறுப்பை உரமூட்ட இதனை ஒரு சந்தர்ப்பமாக பாவிக்கின்றார்.

சரியான கருத்து 👍

4 hours ago, ampanai said:

Tedros Adhanom Ghebreyesus - இவரை சீன அரசு பல மில்லியன்கள் கொடுத்து தனது சட்டை பைக்குள் வைத்துள்ளதாகவும் சிலர் குற்றம் சாட்டுகினறனர். 

Tedros: The face of the global response to coronavirus pandemic

நானும் இவரைக் குற்றம் சாட்டுகிறேன் சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்று.

1 hour ago, சண்டமாருதன் said:

 

இவருக்கு  கொரோனாவை பற்றிய அக்கறையை விட  சீன பொதுவுடமை  கட்சியை  குறை கூறுவதே முக்கியமாக உள்ளது..  மேற்குலக நாடுகளால் சமாளிக்க முடியாதபோது சீனா மீது பழியை தூக்கிப்போடுவது தவிர்க்க முடியாமல் நடக்கும். அமரிக்காவில் நெருக்கடி அதிகமாக  டிரம் சீன வைரஸ் என்கின்றார்.  சீனா போல் இவர்களால் நெருக்கடி நிலையை  சமாளிக்கவும் முடியாமல் உள்ளது. 

 

 

இவர்கள் தங்கள் தோல்விகண்ட  பொருளாதார சமூக அரசியல் கொள்கைகளை மறைப்பதற்கு சீனா ஒரு துருப்புச் சீட்டு அவ்வளவும்தான்.

Link to comment
Share on other sites

இங்கே, இப்படி, இதில் இருந்து தான் இந்த கோவிட் 19 ஆரம்பித்தது என யாரும் கூற முடியாத நிலை. ஆனால், எல்லோரும், சீன அரசு உட்பட இது சீனாவில் தான் ஆரம்பித்தது என்கிறோம். 

எங்கே, எப்படி, எப்பொழுது இந்த வைரஸ் தனது தொற்றை ஆரம்பித்தது என அறிந்தால், அது ஒரு தீர்விற்கும், குறைப்பிற்கும் உதவி இருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இங்கே, இப்படி, இதில் இருந்து தான் இந்த கோவிட் 19 ஆரம்பித்தது என யாரும் கூற முடியாத நிலை. ஆனால், எல்லோரும், சீன அரசு உட்பட இது சீனாவில் தான் ஆரம்பித்தது என்கிறோம். 

எங்கே, எப்படி, எப்பொழுது இந்த வைரஸ் தனது தொற்றை ஆரம்பித்தது என அறிந்தால், அது ஒரு தீர்விற்கும், குறைப்பிற்கும் உதவி இருக்கலாம். 

ஆனால் சீனா, கொறோனா வைரஸ் அமெரிக்க இராணுவத்தால் வுகான் மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளதே ?🤔

Link to comment
Share on other sites

11 minutes ago, Kapithan said:

ஆனால் சீனா, கொறோனா வைரஸ் அமெரிக்க இராணுவத்தால் வுகான் மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளதே ?🤔

இத்தாலியிலும், ஸ்பெயினில் உயிர் இழப்புக்கள் சீனாவை விட அதிகரித்துள்ளன. 

அடுத்த இரு வாரங்களில். அமெரிக்காவும் சீனாவை முந்தி விடலாம். 

எனவே, நான் நினைக்கவில்லை அமெரிக்க நாடு தான் கோவிட்டின் பின்னால் உள்ளது என்பதை. 
அத்துடன், அமெரிக்க பொருளாதாரம் பலத்த சரிவில் கூட உள்ளது, இந்த கோவிட்டால். அதுவரை, அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ampanai said:

இத்தாலியிலும், ஸ்பெயினில் உயிர் இழப்புக்கள் சீனாவை விட அதிகரித்துள்ளன. 

அடுத்த இரு வாரங்களில். அமெரிக்காவும் சீனாவை முந்தி விடலாம். 

எனவே, நான் நினைக்கவில்லை அமெரிக்க நாடு தான் கோவிட்டின் பின்னால் உள்ளது என்பதை. 
அத்துடன், அமெரிக்க பொருளாதாரம் பலத்த சரிவில் கூட உள்ளது, இந்த கோவிட்டால். அதுவரை, அமெரிக்க பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. 

நீங்கள் மறுத்த மாதிரியே Mr. Pompeoவும் மறுத்துள்ளார். 😀

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அமெரிக்க செனற் சபையில் நடைபெற்ற நிகள்வு ஒன்றில் கொறோனா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அக் காணோளியை நான் பார்த்திருந்தேன். 

மேற்கின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல  என்பது என் தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

நீங்கள் மறுத்த மாதிரியே Mr. Pompeoவும் மறுத்துள்ளார். 😀

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அமெரிக்க செனற் சபையில் நடைபெற்ற நிகள்வு ஒன்றில் கொறோனா தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அக் காணோளியை நான் பார்த்திருந்தேன்.

அமெரிக்கர்கள் சீன அரசிற்கு அனுப்பியது அவர்களுக்கு எதிராக பாய்ந்திருக்கலாம் என்பது ஏற்புடையது. 

3 minutes ago, Kapithan said:

மேற்கின் பொருளாதார வளர்ச்சி ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல  என்பது என் தனிப்பட்ட கருத்து.

வளர்ந்த பொருளாதார நாடுகள் 1-3 வீதம் வளருவது ஆரோக்கியமானது. அதுவும், பணவீக்கத்திற்கு மேலாக வளரும் பொழுது செல்வமும் வளரும். ஆனால், மேற்குலக தந்து உற்பத்தி வலுவை இழந்தது, குறிப்பாக சீனாவிடம் இழந்தது பெரிய இக்கட்டான நிலையில் அவர்களை இன்று வைத்துள்ளது. 

Link to comment
Share on other sites

'அமெரிக்க வீரர் தான் கொரோனாவை பரப்பினார்': சீனா மீண்டும் குற்றச்சாட்டு

'கொரோனா வைரஸ், சீனாவின் வூஹான் நகரில் உள்ள வனவிலங்குகளின் இறைச்சி விற்கும் சந்தையில் இருந்துதான் பரவியது' என, சீனாவின் மத்திய நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், 'அமெரிக்க ராணுவ வீரர்கள் தான் வூஹானில் கொரோனா வைரசை பரப்பினர்' என, சீன சுகாதாரத் துறை அமெரிக்கா மீது குற்றம் சுமத்தியது.

இதையடுத்து, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், இந்த வைரசை 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.'கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் தானே தவிர, வைரஸ் உருவானது சீனாவில்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, சீன அரசு தெரிவித்தது. இந்நிலையில் சீன அரசின் ஆங்கில நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' இந்த வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவானது எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டது.

அந்தக் கட்டுரையை எழுதிய ஜார்ஜ் வெப், 'கொரோனா வைரஸ் அமெரிக்காவின் ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்., மாதம் ஹூபே மாகாணத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வூஹான் நகரில் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் ஒருவரால் பரப்பப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

வைரசுக்கும் சைக்கிள் பந்தய வீரருக்கும் என்ன தொடர்பு என்பதையோ, பரப்பியதற்கான ஆதாரத்தையோ அந்தச் செய்தியில் விளக்கவில்லை. இதனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீனா தெரிவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. இருந்தும், சீனாவில் இருந்து தான், இந்த வைரஸ் உருவானது என்பதற்கான ஆதாரத்தை இதுவரை அமெரிக்கா காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (27ம் தேதி), 'கடந்த மாதங்களில், கொரோனா விவகாரத்தில், டிரம்பும் ஒரு சில அமெரிக்க அரசியல்வாதிகளும் சீனா மீது பழி சுமத்தும் வகையிலும், இனவெறியை வெளிப்படுத்தும் வகையிலும் பேசி வந்தனர். ஆனால், உண்மையை சீனா கண்டுபிடித்தவுடன், 'சீன வைரஸ் எனக் குறிப்பிட மாட்டேன்' என, மார்ச் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியளித்துள்ளார்' என, குளோபல் டைம்ஸ் நாளிதழ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து, மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2510510

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.