Jump to content

கொரோனா வைரஸ் இளவயதினரையும் கடுமையாகப் பாதிக்கும் : இத்தாலிய மருத்துவர்கள் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

italy-1-720x450.jpg

கொரோனா வைரஸ் இளவயதினரையும் கடுமையாகப் பாதிக்கும் : இத்தாலிய மருத்துவர்கள் எச்சரிக்கை

COVID-19 தொற்றுநோய் இளவயதினரையும் கடுமையாக நோய்வாய்ப்படுத்தும் என்று இத்தாலிய மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்டவர்கள் கொரோனா வைரஸின் கடுமையான பாதிப்புகளுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 இனால் வயதானவர்களைப் போல இளவயதினர் மோசமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற கருத்துக்கு எதிராக இத்தாலி மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

லோம்படி (Lombardy) மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவின் தலைவர் மருத்துவர் அன்ரோனியோ பேசென்ரி (Antonio Pesenti) கூறுகையில்; கொரோனா வைரஸின் கடுமையான தாக்கங்களுடன் பல இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள மிகக் கடுமையான நோயாளிகளில் 50% மானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் மற்றைய 50% மான நோயாளிகள் 65 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இளைஞர் யுவதிகளும் கொரோனா வைரஸால் இறக்கலாம் அல்லது பல வாரங்களுக்கு மருத்துவமனையில் இருக்கவேண்டியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் கூறியுள்ளார்.

http://athavannews.com/கொரோனா-வைரஸ்-இளவயதினரையு/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

luca-di-nicola-coronavirus-720x450.jpg

வயதில் இளையவர்களையும், கொரோனா பலி கொள்கிறது – 13 – 19 வயதுடையவர்கள் லண்டனில் மரணம்…

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு ஆரோக்கியமான இளைஞர்கள் லண்டனில் பலியாகி உள்ளனர். 13 வயதுடைய இஸ்மாயில் முகமது அப்துல்வாஹாப், மற்றும் 19 வயதுடைய லூகா டி நிக்கோலா,  ஆகிய  இருவரும் கொடிய கொரோனா  வைரஸ் தொற்றினால் பலியாகி உள்ளனர்..

பிரிக்ஸ்டனைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவரான இஸ்மாயில், கொரோனா தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கிய பின் கடந்த வியாழக்கிழமை சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மறு நாள் அவர் எவ்வாறு தொற்று நோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார், பின்னர் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார் என அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் (30.03.20) கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் அவர் இறந்தார். இதனை மருத்துவமனை உறுதி செய்துள்ளது. பாரதூரமான இந்தக் COVID-19  தொற்று நோயினால், அவர் இறந்தபோது அவரது குடும்பத்தினர் அவருடன் அருகில் இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில் “எங்கள் அறிவுக்கு எட்டியவகையில் அவருக்கு எந்த விதமான  வேறு  அடிப்படை  சுகாதார பிரச்சனைகள் இருக்கவில்லை.” என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மத்திய இத்தாலியின் நெரெட்டோவை பிறப்பிடமாகக் கொண்ட  உதவி சமையல் கலைஞரான 19 வயதுடைய  டி நிக்கோலாவும் “மிகவும் ஆரோக்கியமானவர்” எனவும், அவருக்கு எந்தவிதமான  அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை  எனவும்  அவரது குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். இதனை  NHSம் உறுதிப்படுத்தியது.

கடந்த செவ்வாயன்று (31.03.20) அவர் வடக்கு லண்டனின் என்ஃபீல்டில் உள்ள வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர் 30 நிமிடங்களுக்குப் பின், நிமோனியாக் காச்சலால் உயிரிழந்தார் என  அறிவிக்கப்பட்டது.

இதேவேளை தனது மகன் வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக,  பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகளிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது என்றும், பிரேத பரிசோதனை மூலம்  அதனை  உறுதிப்படுத்தியதாக அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும், லூகாவின் தந்தை, மிர்கோ, லா ரிபப்ளிகா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உடல்நலப் பிரச்சினைகள் உள்ள வயதானவர்களுக்கு  COVID-19 ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர், எனினும்  இதன் பொருள் இளைஞர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உண்மையில்  “கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட 13 வயதுடையவரின் மரணம் குறித்து கேள்விப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது. என லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் மருத்துவ விரிவுரையாளர் வைத்திய கலாநிதி நத்தலி மெக்டெர்மொட் கூறினார்:

“வயதானவர்களை விட குழந்தைகள் கடுமையான COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு என்பது எங்களுக்குத் தெரியும், இந்த வயது குறைந்த மரணங்கள் பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் தொற்றுப் பரவுவதைக் குறைக்க எங்களால் முடிந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இளையவர்கள் இன்னும் பாதிக்கப்படலாம் என்றும், “நீங்கள் எந்த வயதில் இருந்தாலும் பரவாயில்லை – நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும், நாங்கள் முன்னிலைப்படுத்திய அனைத்து சமூக தொலைதூர நடவடிக்கைகளையும் அவதானிக்க வேண்டும்” என  பிரித்தானியாவின் துணை தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் ஜென்னி ஹாரிஸ், வெலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், பெல்ஜியத்தில் மரணித்த 12 வயது சிறுமியே,  ஐரோப்பாவில் இறந்த இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-வயதில்-இளையவர்கள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.