Jump to content

மருத்துவ போரில் தமிழகம்.. கொரோனாவை துடைத்தெறிய மாவட்ட எல்லைகள் சீல்வைப்பு


Recommended Posts

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய இயக்கத்தை தவிர, மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெளியே தலை காட்டாமல், வீடுகளுக்குள் முடங்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

view-source:https://www.polimernews.com/dnews/104825/மருத்துவ-போரில்-தமிழகம்..கொரோனாவை-துடைத்தெறியமாவட்ட-எல்லைகள்-சீல்வைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ampanai said:

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

Link to comment
Share on other sites

8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

maxresdefault.jpg 

Link to comment
Share on other sites

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

Link to comment
Share on other sites

4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

இல்லை நண்பர். அவ்வாறு துண்டு பிரசுரம் கொடுக்கும் ஒருவருக்கே கோவிட்19 இருந்தால்... எண்ணிப்பாருங்கள். அத்துடன், பலர் கையிலும் நவீன கைத்தொலைபேசியும் உள்ளது தானே. தகவல்களை பெறலாம். இதில் இருந்து வெற்றிகரமாக விடுபடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

மாட்டம்.....நாங்க எஞ்ஜினியர்,டாக்டர்,எக்கவுண்டன்,சாப்வெயர் எஞ்சினியாராக மட்டும் தான் இருப்பம்.
சிலோன் ரமில்ஸ் நாங்களும் அப்படித்தான்...😎

Link to comment
Share on other sites

vikatan%2F2020-03%2F5a28a98a-a140-429a-8a3e-6c7614d5857a%2FIMG_20200324_WA0187.jpg

`பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

https://www.vikatan.com/news/tamilnadu/salem-youth-creates-awareness-about-coronavirus-among-people?artfrm=v3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

சங்கீ  கூட்டம் முதலில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை நிப்பாட்டுங்குடா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கோரோனோ பரிதாபங்கள் 👍

கோபி - சுதாகர் ..👌 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

ஓணாண்டி அண்ண‌ன் சீமான் எது சொன்னாலும் எங்க‌டைய‌ல் சிரிப்பின‌ம் , இப்போது அண்ண‌ன் சீமான் சொன்ன‌து ந‌ட‌க்க‌ போகுது /

யாழிலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் சீமானை க‌ழுவி ஊத்த‌ , 

பிற‌க்கி விவாத‌ம் என்று வ‌ந்தா ந‌ம‌க்கு அவைக்கும் தேவை இல்லா ச‌ண்டைக‌ள் வ‌ரும் , இதை இத்துட‌ன் முடிப்ப‌து ந‌ல்ல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

 

Link to comment
Share on other sites

22 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

அறிவிப்பு விடுக்கப்பட்டுச் சில மணிநேரத்துக்குள் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மணித்தியாலத்துக்கு 10 ஈரோப்படி சம்பளமும் வழங்கப்படும். எதிர்வரும் 3 மாதத்துக்கு இரண்டு இலட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இவர்களை விவசாய இராணுவம் என்று அழைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்புக் கருதி ஒவ்வொருவரும் குறைந்தது 10 மீற்றர் இடைவெளியில் வேலை செய்வ்வவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 4:26 PM, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது.

asparagus அறுவடைக் காலம்.  இந்த நேரம் வழமையாக ரூமேனியா, போலந்து நாடுகளில் இருந்துதான் வேலைக்கு ஆட்களை யேர்மனிய  விவசாயப்  பண்ணைக்கு வேலைக்கு எடுப்பார்கள். கொரோனா அவலத்தில், பாதுகாப்புக் கருதி இந்த வருட அறுவடைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தருவிப்பதை யேர்மனிய உள்துறை அமைச்சு முழுமையாக தடை செய்திருக்கிறது. 

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

இப்ப அகதிகளாக வாற சனம் என்ன வேலை செய்யவே வந்தது? வரேக்கையே இஞ்சை இருக்கிற சட்டங்களின்ரை ஓட்டைகளை படிச்சுக்கொண்டுதான் வந்தவையள்.

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப அகதிகளாக வாற சனம் என்ன வேலை செய்யவே வந்தது? வரேக்கையே இஞ்சை இருக்கிற சட்டங்களின்ரை ஓட்டைகளை படிச்சுக்கொண்டுதான் வந்தவையள்.

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

13 minutes ago, Kapithan said:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

 

எனக்கு விளங்கினது சாமியர். சும்மா தனகினன். அம்புட்டுதே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்டைக்கு காடினுக்க ஊரில இருந்து எடுப்பிச்ச முருக்கம் நாத்து நட்டனான். தக்காளி பீற்றூட் கோவா கரட் கீரை எண்டு கொஞ்ச மரக்கறியும் செய்யுறன். கோழி மூண்டு வளக்கிறன். பாப்பம் வாறமாதம் பஞ்சம் எண்டா இத வச்சு வாறமாதத்தை ஓட்டிடுவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.