Jump to content

மருத்துவ போரில் தமிழகம்.. கொரோனாவை துடைத்தெறிய மாவட்ட எல்லைகள் சீல்வைப்பு


Recommended Posts

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய இயக்கத்தை தவிர, மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெளியே தலை காட்டாமல், வீடுகளுக்குள் முடங்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

view-source:https://www.polimernews.com/dnews/104825/மருத்துவ-போரில்-தமிழகம்..கொரோனாவை-துடைத்தெறியமாவட்ட-எல்லைகள்-சீல்வைப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ampanai said:

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும். ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

Link to comment
Share on other sites

8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பெட்ரோல், மருந்து, பால் மூன்றை தவிர அனைத்தும் முடக்கி போட்டார்கள்..😢

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

இந்த தொற்று முற்று முழுதாக இல்லாமால் போகும் தருவாயில், இந்தியாவில் தமிழகம் முன்னேறக்கூடிய நிலையில் முதலாவது இடத்தில் இருக்கவேண்டும். 

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

maxresdefault.jpg 

Link to comment
Share on other sites

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

Link to comment
Share on other sites

4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கோரோனோ பற்றி ரீ.வி , ஒலி பெருக்கியை விட துண்டு பிரசுரம் கொடுத்து இருக்கலாம் தோழர் .. பழைய சனம் "கால்ரா" , "கால்ரா" என்டு பதற்றபடுகிின்ம் .. இளவட்டங்கள்  பைக் ரேஸ்  விடுகினம்..👌

இல்லை நண்பர். அவ்வாறு துண்டு பிரசுரம் கொடுக்கும் ஒருவருக்கே கோவிட்19 இருந்தால்... எண்ணிப்பாருங்கள். அத்துடன், பலர் கையிலும் நவீன கைத்தொலைபேசியும் உள்ளது தானே. தகவல்களை பெறலாம். இதில் இருந்து வெற்றிகரமாக விடுபடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

மாட்டம்.....நாங்க எஞ்ஜினியர்,டாக்டர்,எக்கவுண்டன்,சாப்வெயர் எஞ்சினியாராக மட்டும் தான் இருப்பம்.
சிலோன் ரமில்ஸ் நாங்களும் அப்படித்தான்...😎

Link to comment
Share on other sites

vikatan%2F2020-03%2F5a28a98a-a140-429a-8a3e-6c7614d5857a%2FIMG_20200324_WA0187.jpg

`பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

https://www.vikatan.com/news/tamilnadu/salem-youth-creates-awareness-about-coronavirus-among-people?artfrm=v3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ampanai said:

பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

சங்கீ  கூட்டம் முதலில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் நாட்டில்  கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை நிப்பாட்டுங்குடா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை கோரோனோ பரிதாபங்கள் 👍

கோபி - சுதாகர் ..👌 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

இதேபோன்ற முடிவைத் தமிழ்நாடும் எடுக்கலாம். தமிழகத்தை விவசாயத்தில் மேம்படுத்த நல்லதொரு சந்தர்ப்பம். காரியாலயங்களில் கணணிக்கு முன் இருந்தவர்கள் களை பிடுங்கவும் சினிமாக்காரர்கள் பாத்தி கட்டவும் சாத்திரம் பார்க்கும் சாமியார்கள் மாடு மேய்க்கவும்... சமுதாயத்தில் மாற்றங்களைக் கொண்டுவரலாம். 

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

ஓணாண்டி அண்ண‌ன் சீமான் எது சொன்னாலும் எங்க‌டைய‌ல் சிரிப்பின‌ம் , இப்போது அண்ண‌ன் சீமான் சொன்ன‌து ந‌ட‌க்க‌ போகுது /

யாழிலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் சீமானை க‌ழுவி ஊத்த‌ , 

பிற‌க்கி விவாத‌ம் என்று வ‌ந்தா ந‌ம‌க்கு அவைக்கும் தேவை இல்லா ச‌ண்டைக‌ள் வ‌ரும் , இதை இத்துட‌ன் முடிப்ப‌து ந‌ல்ல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இப்புடியே போனா இன்னும் கொஞ்ச நாளையில மரக்கறி இறச்சி அரிசி காசுக்கு சிங்கி அடிக்கவேண்டித்தான் வரும்போல..

 

விவசாயத்தை இறக்குமதி செய்யலாம் காரையும் பிளைட்டையும் ஆய்தங்களையும் இயந்திரங்களையும் உற்பத்திசெய்து பெருஞ்செல்வந்த நாடுகளாக இருப்பம் எண்டு சொன்ன ஜரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகள் விவசாயத்துக்கு மக்களை அழைக்கின்றன

 

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி போல மேக் இன் இந்தியா எண்டு குறுகியகாலத்தில பொருளாதாரத்தை அதிகரிக்க இந்தியா விவசாயிகளை சாகவிட்டிச்சு..

 

இனிமேல் சீமான் சொன்னதுதான்..!

 

3ஜீ 4ஜீ 5ஜீ என்ன 7ஜீயே வரட்டும் கஞ்சிக்கு என்ன செய்வாய் ராஜா..?

 

24 மணித்தியாலமும் நீ விமானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சோறு கீழ பூமியில இருந்துதான் ராஜா வரணும்..

 

ஆடுமாடு விவசாயத்தை அரச தொழிலாக்கணும்னு நான் சொன்னப்ப கவட்டுக்க சிரிச்சியே.. இப்ப பாரு நிலமையை.. வாய்ப்பில்லை ராஜா..

 

Link to comment
Share on other sites

22 hours ago, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது. போர்க்காலம் போல் இனிவரும் நாட்களில் மக்களுக்குப் போதுமான உணவு வழங்க வேண்டுமானால் இதை ஒரு சேவையாக எண்ணி வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும் வயலில் இறங்க முன்வர வேண்டும் என்று கேட்டுள்ளது. 

அறிவிப்பு விடுக்கப்பட்டுச் சில மணிநேரத்துக்குள் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மணித்தியாலத்துக்கு 10 ஈரோப்படி சம்பளமும் வழங்கப்படும். எதிர்வரும் 3 மாதத்துக்கு இரண்டு இலட்சம் பேர் தேவைப்படுகின்றனர். இவர்களை விவசாய இராணுவம் என்று அழைக்கப்படுகின்றனர்.

பாதுகாப்புக் கருதி ஒவ்வொருவரும் குறைந்தது 10 மீற்றர் இடைவெளியில் வேலை செய்வ்வவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/24/2020 at 4:26 PM, இணையவன் said:

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்போரை பிரெஞ்சு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவி செய்ய அழைத்துள்ளது.

asparagus அறுவடைக் காலம்.  இந்த நேரம் வழமையாக ரூமேனியா, போலந்து நாடுகளில் இருந்துதான் வேலைக்கு ஆட்களை யேர்மனிய  விவசாயப்  பண்ணைக்கு வேலைக்கு எடுப்பார்கள். கொரோனா அவலத்தில், பாதுகாப்புக் கருதி இந்த வருட அறுவடைக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தருவிப்பதை யேர்மனிய உள்துறை அமைச்சு முழுமையாக தடை செய்திருக்கிறது. 

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

விவசாயப் பண்ணையார்கள் இப்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். யேர்மனியில் உள்ள அகதிகளை,வேலை இல்லாமல் வீட்டில் இருப்பவர்களை பயன்படுத்துங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள்.

இப்ப அகதிகளாக வாற சனம் என்ன வேலை செய்யவே வந்தது? வரேக்கையே இஞ்சை இருக்கிற சட்டங்களின்ரை ஓட்டைகளை படிச்சுக்கொண்டுதான் வந்தவையள்.

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப அகதிகளாக வாற சனம் என்ன வேலை செய்யவே வந்தது? வரேக்கையே இஞ்சை இருக்கிற சட்டங்களின்ரை ஓட்டைகளை படிச்சுக்கொண்டுதான் வந்தவையள்.

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

போயும் போயும் தோட்டவேலைக்கு????? :cool:

13 minutes ago, Kapithan said:

வயித்துக்கு சாப்பாடுபோடும் தொழிலை நக்கலடிக்கப்படாது சாமியோவ்😀

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் அவையளின்ரை இடத்திலையிருந்து வாய்ஸ் குடுத்தனான்..😁
உண்மையிலையே நான் ஒரிஜினல் தோட்டக்காரன் :cool:

 

எனக்கு விளங்கினது சாமியர். சும்மா தனகினன். அம்புட்டுதே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்டைக்கு காடினுக்க ஊரில இருந்து எடுப்பிச்ச முருக்கம் நாத்து நட்டனான். தக்காளி பீற்றூட் கோவா கரட் கீரை எண்டு கொஞ்ச மரக்கறியும் செய்யுறன். கோழி மூண்டு வளக்கிறன். பாப்பம் வாறமாதம் பஞ்சம் எண்டா இத வச்சு வாறமாதத்தை ஓட்டிடுவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.