Jump to content

காயமே இது பொய்யடா !! -  புனைவுச் செய்திகளை தவிருங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காயமே இது பொய்யடா !! -  புனைவுச் செய்திகளை தவிருங்கள்

அன்பான “அறிவுள்ள” தமிழ்ப் பெருங்குடி மக்களே !!!

தமிழன் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி என “தமிழேண்டா” என்று காலரைத் தூக்கிவிடும் ஏழாம் அறிவுள்ள உங்களில் சிலரின் அலப்பறை தாங்கமுடியவில்லை.

உங்களுக்கு என்னதான் பிரச்சினை? பொய்யான செய்தி பரப்புவதற்கு ஒரு அளவில்லையா? எத்தனை தரம் சொன்னாலும் எத்தனை விதமாக சொன்னாலும் ....!  முடியலடா சாமி !!!

என் நண்பன் சொன்னான் இந்த எமனேறும் பரிகளுக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாதென்று. அது உண்மையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இத்தாலி அதிபர் அழுகிறார் என்று பிரேசில் அதிபர் எப்பவோ அழுத படத்தை போடுகிறார்கள்.

ஜஸ்டின் ரூடோவின் மனைவி வைத்தியசாலையில் இருந்து மக்களுக்கு அறிவுரை சொல்கிறார் என்று வேறு யாரோ பெண்ணின் வீடியோவைப் பகிர்கிறார்கள்.

அந்த நாடு மருந்தைக் கண்டுபிடித்துவிட்டது, இந்த நாடு கண்டுபிடித்து விட்டது என்ற ஆதாரமற்ற பதிவுகளை பாராட்டிச் சீராட்டுகிறார்கள்.

அமெரிக்கரின் கால் படாத கியூபாவிலும் வடகொரியாவிலும்  ஒருவருக்கும் கொரோனா வரவில்லை என்று சதிக் கோட்பாடு நிறுவுவோர் இன்னொரு புறம்.

 தொண்டைக்குள் நான்கு நாட்கள் கொரோனா வாடகை தராமல் குடியிருக்குமாம். அதன்பிறகு வாஸ்து சரியில்லை என்று முடிவெடுத்து நுரையீரலுக்கு குடிபெயர்ந்து விடுமாம். தொண்டையில் குடியிருக்கும்போதே  அடிக்கடி நீர் குடித்தால் கொரோனா கால் வழுக்கி வயிறுக்குள் விழுந்து விடுமாம். அதன்பிற வயிற்றில் உள்ள அமிலத்தில் மூழ்கி இறந்துவிடுமாம்.

இன்னும் சிலர், உப்பு வினிகருடன் வெதுவெதுப்பான நீரால் வாய் கொப்புளித்தால் சூடும் எரிச்சலும் தாங்காமல் கொரோனா வெளியே எகிறிக் குதித்து ஓடிவிடுமாம்.

தங்கத் தமிழ்நாட்டினர் தம் பங்குக்குக் உள்ளியைத் தின்னச் சொல்கிறார்கள். பேரூந்துகளுக்கும் வேப்பிலை அடிக்கிறார்கள். உள்ளிக்கு பல மருத்துவ குணங்கள் உள்ளனதான். அதற்காக உள்ளியை அள்ளிப் பச்சையாகச் சாப்பிட்டால் வேறு உடல் உபாதைகள் வரும் என்பதை மறக்க வேண்டாம். 

இரு நாட்களுக்கு முன்னர் திடீரெண்டு ரஷ்ய அதிபர் எண்ணூறு சிங்கங்களை ரோடில அவிழ்த்து விட்டிட்டாராம். அதனால சனம் பயத்தில வீட்டுக்குள்ளயே இருந்திட்டுதாம்.  முதலில் புடின் அவ்வளவு சிங்கத்தையும் இவ்வளவு நாளும் எங்கே வைத்திருந்தார் என்று யாருமே கேட்கவில்லை. ரஷ்யாவில் அவ்வளவு சிங்கங்கள் இருக்கின்றனவா என்றும் யோசிக்கவில்லை.

என்னுடைய நாட்டிலையும் ஒருத்தர் அதை நம்பி இங்கேயும் சிங்கங்களை ரோட்டில விடவேணும் எண்டு சொல்லுறார். அது பொய்யான செய்தியென்று நான் சொன்னதும் அவர்  அப்படியே ஷாக் ஆயிட்டார். தலையும் சுத்திச்சுதோ தெரியேல்ல. சொன்னவர் சிங்கத்துக்கு எங்கே போவார் என்றும் தெரியவில்லை. நடிகர் சூர்யாவைக் கேட்பாரோ என்றும் எனக்கு சந்தேகம் வந்தது.

இப்பிடியான பொய் செய்திகளைப் பரப்புவோர் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே, மற்றவர்களை பயமுறுத்துகிறார்கள் அல்லது முட்டாளாக்குகிறார்கள். தவறான ஆலோசனையை தம் நண்பர்களுக்கு வழங்குகிறார்கள்.

நண்பர்களே, 
உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது உண்மைதானா என்று தேடிப்பாருங்கள். அனுப்பியவரிடமே இதற்குரிய ஆதாரம் என்னவென்று கேளுங்கள். கொரோனா பரவுவதை மட்டுமல்ல, இது தொடர்பான வதந்தி பரவுவதையும் தடுப்போம்.!
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் தமிழேண்டா தமிழன் சொன்னதை தான் உலகம் இன்று செய்கிறது அலப்பறை தாங்கமுடியவில்லை😂
படத்தில் உள்ள பலமானவர் தமிழனா?

90509897_144927343681693_442948219278721

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில உள்ள ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கொரோனோவுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்க.. நம்மாளுங்க எல்லாம் கொரோனோ மருந்தை வாட்ஸப் பேஸ்புக்கில் சேர் பண்ணுவதில் பிசியாக இருக்கிறாங்கள்.. தமிழண்ணா  கெத்து..

💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான் தமிழேண்டா தமிழன் சொன்னதை தான் உலகம் இன்று செய்கிறது அலப்பறை தாங்கமுடியவில்லை😂
படத்தில் உள்ள பலமானவர் தமிழனா?

90509897_144927343681693_442948219278721

மீசையையும் இடைக்கச்சையின் சைஸையும் பார்த்தால் தமிழன் மாதிரித்தான் இருக்கு😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

நண்பர்களே, 
உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது உண்மைதானா என்று தேடிப்பாருங்கள். அனுப்பியவரிடமே இதற்குரிய ஆதாரம் என்னவென்று கேளுங்கள்.

 

4 hours ago, கிருபன் said:

அதற்காக உள்ளியை அள்ளிப் பச்சையாகச் சாப்பிட்டால் வேறு உடல் உபாதைகள் வரும் என்பதை மறக்க வேண்டாம். 

கிருபன்,

இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா said:

 

கிருபன்,

இதற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

Times of India ஐ நம்புவீர்கள் என்றால் கூகிளில் தேடியபோது கிடைத்தது.

அள்ளிச் சாப்பிட்டால் என்பதைக் கவனியுங்கள்.

https://recipes.timesofindia.com/articles/health/10-harmful-effects-of-garlic-that-you-should-know/photostory/64355960.cms?picid=64355972

ஈரலுக்குக் கூடாதாம்

Heartburn வரலாம்

வயிற்றோட்டம் வரலாம்

 

மிச்சம் சாப்பிட்டு பார்த்துத்தான் சொல்லலாம்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் கிருப‌ன் அண்ணா /
என‌து சிறு வ‌ய‌து தோழ‌னுக்கு யாரோ சொல்லி இருக்கின‌ம் போல‌ அல்ல‌து முக‌ நூலில் வாசித்து தெரிந்து கொண்டானோ தெரியாது /

அமெரிக்காவில் இருந்து பிரிந்து போன‌ நாடு கியூபா என்று /

ந‌ண்ப‌னுக்கு நான் சொன்னேன் கியூபா எப்ப‌வும் த‌னி நாடாக‌ தான் இருந்த‌து அமெரிக்க‌ கியுபாவை த‌ங்க‌ளின் நாட்டுட‌ன் இணைக்க‌ ப‌ல‌ முய‌ற்சி எடுத்து அது தோல்வியில் முடிஞ்ச‌து என்று /

எங்க‌டைய‌ல் முக‌ நூலில் ம‌ற்றும் சில்ல‌ரை ஊட‌க‌ங்க‌ளில் புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் /

த‌மிழ‌ன் அதை ஆண்டான் இதை ஆண்டன் என்று எழுதும் கூட்ட‌ம் , இந்த‌ பூமி ப‌ந்தில் த‌மிழ‌னுக்கு என்று ஒரு நாடு இல்லை , 

இது ஒட்டு மொத்த‌ த‌மிழ் இன‌த்துக்கே கேவ‌ல‌ம் / 70ஆயிர‌த்துக்கு குறைவான‌ ம‌க்க‌ளை கொண்ட‌ நாடு இந்த‌ உல‌க‌த்தில் இருக்கு 10கோடி த‌மிழ‌ர்க‌ள் வாழும் இந்த‌ உல‌கில் த‌மிழ‌ருக்கி என்று ஒரு நாடு இல்லை 😓😡

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.  இதனைக் குறிப்பாக தமிழர்கள் பலர் உண்மையாக நம்பிக் கொள்கின்றனர். இந்தப் புதிய வைரசின் உயிரியல் தரவுகள் எதையுமே தெரியாமல் அதற்குரிய நிவாரணிகளை எவ்வாறு இவர்களால் பரிந்துரை செய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தகைய புரளிகள் தொடர்பான சர்வதேச சுசுகாதார அமைப்பின் பதில்கள் சிலவற்றைப் பாருங்கள்.

 

சூடான பானங்கள் கொரோனா வைரசை அழிக்கும்
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தொற்று ஏற்பட்ட உடைகளை வெயிலில் போடுவதும் அதிக பயன் தராதாம்.
 

சூடான நீரில் குளித்தல்
இதுவும் பயனற்றது. எவ்வளவு சூடாகக் குளித்தாலும் உடல் வெப்பநிலை 37 டிகிரியைத் தாண்டாது.
 

உள்ளி சாப்பிடுதல்
உள்ளிக்குச் சில நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தாலும் கொரோனா வாரசுக்கு எதிராக எந்த எதிர்ப்புச் சக்தியையும் தராது.
 

புளியான உணவுகள்
விற்றமின் சீ தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டாலும் எதுவும் இந்த வைரசுக்கு எதிராகச் செயற்படுவதாக நிரூபிக்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தைப் பேண்ட் விற்றமின் சீ சாப்பிடலாம். ஆனால் நாளாந்தம் அளவுக்கதிகமான (ஏறத்தாள 110 மில்லி கிராமுக்கு மேல்) விற்றமின் சீ சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
 

சிறுநீரால் கழுவுதல்
குறிப்பாக இந்தியாவில் மாட்டுச் சிறுநீர் கிருமியை அழிக்கும் என்று கருதுகிறார்கள். இது தவறானதுடன் வேறு கிருமித் தொற்றுதலையும் ஏற்படுத்தலாம்.
 

இது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த ஒரு நவீன மருந்தையோ இரசாயனப் பொருளையோ வைத்தியரின் அனுமதியின்றி உட்கொள்ள வேண்டாம்.  மலேரியா மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக கணிசமான பலன் தந்தாலும் ஒருவருடைய உடல் நிலையை ஆராய்ந்த பின்னர் வைத்தியரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மருந்து உயிருக்கு ஆபத்தாக முடியும்.

https://fr.news.yahoo.com/coronavirus-boissons-chaudes-urine-cocaine-attention-fake-news-114748750/photo-little-girl-sitting-toilet-peeing-111229176.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.  இதனைக் குறிப்பாக தமிழர்கள் பலர் உண்மையாக நம்பிக் கொள்கின்றனர். இந்தப் புதிய வைரசின் உயிரியல் தரவுகள் எதையுமே தெரியாமல் அதற்குரிய நிவாரணிகளை எவ்வாறு இவர்களால் பரிந்துரை செய்ய முடியும் என்று எண்ணிப் பாருங்கள்.

இத்தகைய புரளிகள் தொடர்பான சர்வதேச சுசுகாதார அமைப்பின் பதில்கள் சிலவற்றைப் பாருங்கள்.

 

சூடான பானங்கள் கொரோனா வைரசை அழிக்கும்
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தொற்று ஏற்பட்ட உடைகளை வெயிலில் போடுவதும் அதிக பயன் தராதாம்.
 

சூடான நீரில் குளித்தல்
இதுவும் பயனற்றது. எவ்வளவு சூடாகக் குளித்தாலும் உடல் வெப்பநிலை 37 டிகிரியைத் தாண்டாது.
 

உள்ளி சாப்பிடுதல்
உள்ளிக்குச் சில நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் இருந்தாலும் கொரோனா வாரசுக்கு எதிராக எந்த எதிர்ப்புச் சக்தியையும் தராது.
 

புளியான உணவுகள்
விற்றமின் சீ தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டாலும் எதுவும் இந்த வைரசுக்கு எதிராகச் செயற்படுவதாக நிரூபிக்கப்படவில்லை. உடல் ஆரோக்கியத்தைப் பேண்ட் விற்றமின் சீ சாப்பிடலாம். ஆனால் நாளாந்தம் அளவுக்கதிகமான (ஏறத்தாள 110 மில்லி கிராமுக்கு மேல்) விற்றமின் சீ சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும்.
 

சிறுநீரால் கழுவுதல்
குறிப்பாக இந்தியாவில் மாட்டுச் சிறுநீர் கிருமியை அழிக்கும் என்று கருதுகிறார்கள். இது தவறானதுடன் வேறு கிருமித் தொற்றுதலையும் ஏற்படுத்தலாம்.
 

இது மட்டுமல்ல, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எந்த ஒரு நவீன மருந்தையோ இரசாயனப் பொருளையோ வைத்தியரின் அனுமதியின்றி உட்கொள்ள வேண்டாம்.  மலேரியா மருந்து கொரோனா வைரசுக்கு எதிராக கணிசமான பலன் தந்தாலும் ஒருவருடைய உடல் நிலையை ஆராய்ந்த பின்னர் வைத்தியரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த மருந்து உயிருக்கு ஆபத்தாக முடியும்.

https://fr.news.yahoo.com/coronavirus-boissons-chaudes-urine-cocaine-attention-fake-news-114748750/photo-little-girl-sitting-toilet-peeing-111229176.html

முற்றிலும் உண்மை இணைய‌வ‌ன் அண்ணா /

ஏன் இவ‌ர்க‌ள் இப்ப‌டி செய்கிறார்க‌ள் என்று புரிய‌ வில்லை /

த‌லைவ‌ர் எங்க‌ எல்லாருக்கும் சொன்ன‌ ஒரு விடைய‌ம் உன‌க்கு தெரிந்த‌தை ம‌ற்ற‌வைக்கும் சொல்லி குடுக்க‌ சொல்லி /

என‌க்கு தெரிந்த‌ சில‌ உண்மைக‌ளை ந‌ண்ப‌ர்க‌ளுக்கு சொல்லுவ‌துண்டு அண்ணா / 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.