Jump to content

`#Corona-வைத் தொடர்ந்து வைரலாகும் #Hantavirus!' - பின்னணி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஹான்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிடவே, அந்த ட்வீட் வைரலானது.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா
 
கொரோனா

இந்த நிலையில், சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஷான்டாங் மாகாணத்திலிருந்து பேருந்தில் திரும்பியபோது ஹான்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ட்விட்டரில் பதிவிட்டது. மேலும், அவருடன் பயணித்த 32 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

இந்த ட்வீட் வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள், பலரும் பல்வேறு விதமாகக் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியிருக்கின்றனர். `கொரோனாவைத் தொடர்ந்து ஹான்டா வைரஸ் உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என்பன போன்ற கமென்டுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. சீனா மற்றும் வைரஸ் என்ற இரண்டு பதங்களால் பலர் அச்சத்துடன் கமென்டுவதைப் பார்க்க முடிகிறது.

குளோபல் டைம்ஸ் ட்வீட்
 
குளோபல் டைம்ஸ் ட்வீட்

இதுபோன்ற சூழல்களில் வதந்திகளைப் பிரித்தறிய வேண்டியது அவசியமானது. உண்மையில் ஹான்டா வைரஸ் என்பது புதிதாகத் தோன்றிய வைரஸ் இல்லை. ஏற்கெனவே இருக்கும் வைரஸ்தான். கொரோனா போன்று ஹான்டா வைரஸ் காற்றில் பரவக் கூடியது அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதேபோல், இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸல்ல என்றும் சொல்கிறார்கள். இது எலிகளைத் தாக்கும் ஒருவகையான வைரஸ் என்று கூறும் ஆய்வாளர்கள், எலிகளின் சிறுநீர் அல்லது சளி ஆகியவற்றைத் தொடும்போது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின்படி, ஹான்டா வைரஸ் என்பது எலிகளால் மட்டுமே பரவும். இது மனிதர்களுக்குப் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஹான்டா வைரஸ் பல்மோனரி சிண்ட்ரோம் (hantavirus pulmonary syndrome) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்களிடம் இருந்து இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதனால், காய்ச்சல், தலைவலி, அடிவயிற்றில் பிரச்னைகள் உள்ளிட்டவைகள் இதன் அறிகுறிகளாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஹான்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபட்சத்தில், அதிகப்படியான இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், 38 சதவிகிதம் இறப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கின்றன புள்ளிவிவரங்கள்.

https://www.vikatan.com/health/international/all-you-need-to-know-about-hanta-virus?artfrm=v2

Link to comment
Share on other sites

 

 

ஹண்டா வைரஸ் ஒரு தெளிவு

கையில் போனும் பேஸ்புக்கும் இருப்பதற்காக உண்மைத்தன்மையை ஆராயாமல் எதனையும் சமூகத்திற்கு மத்தியில் கொண்டு சென்று பீதியைக் கிளப்பாதீர்கள்.

சீனாவில் தற்போது படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த நிலையில், அங்கு ஹண்டா வைரஸினால் ஒருவர் இறந்துள்ளார். யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் மாகாணத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டு இருக்கும்போது ஒருவர் இறந்துள்ளார். இவரை சோதித்துப் பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.

ஹண்டா வைரஸானது எலி, பெருச்சாளி போன்ற கொறித்து தின்னும், வலுவான பற்களை கொண்ட பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கொரோனா உள்ளிட்ட மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பது ஆறுதல் தரும் செய்தி.

இந்த வகை வைரஸ்கள் வெகு சீக்கிரத்தில் யாரையும் தாக்காது. ஆனால், தாக்கினால், உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், நோயாளிகள் இறக்கும் அபாயம் உள்ளது. அதிக அளவில் இந்த வைரஸ்கள் இன்னும் பரவவில்லை. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இது போன்ற எலி வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருந்த அறையில், மேஜைகளில் எலிகள் இருந்தால், அவற்றின் கழிவுகள் காணப்படும். நாட்கணக்கில் இந்த கழிவுகள் வறண்டு போய், தூசாக கிளம்பும். இந்த தூசியை சுவாசிக்கும் சிலருக்கு, ‘ஹண்டா வைரஸ்’ தொற்றும். சுவாச மண்டலத்தைத்தான் இது முதலில் பாதிக்கும். தொடர்ந்து மர்ம காய்ச்சல், ரத்தத்தில் சிவப்பு அணுக்களில் பாதிப்பு என தொற்றுக்களை ஏற்படுத்தும். இது உயிரிழப்பு வரை செல்லக்கூடும்.

இந்த வைரஸ் புதிய வகையொன்றல்ல. இது ஏற்கனவே உலகுக்கு அறிமுகமான ஒன்று தான். மேலும் சாதாரண சூழ்நிலையில் இந்த வைரஸினால் அந்த நபர் இறந்திருந்தால் அது வெறும் மரணமாகவே சீனாவில் கணிக்கப்பட்டிருக்கும். கொரோனாவில் தாக்கம் நடந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இது நிகழ்ந்ததாலேயே பெரியளவில் பேசப்படுகிறது.

எனவே கொரோனாவின் அளவுக்கு இதனை பயங்கரப்படுத்தி மக்களைக் குழப்பி விளையாடாதீர்கள். எல்லோரும் மனதைரியமும் திடாகத்திரமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களல்லர். எனினும் மிக அவதானமாக இருப்பது எமக்கும் எமது சமூகத்திற்கும் இந்த உலகுக்கும் நல்லது.

முகநூல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.