Jump to content

அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது


Recommended Posts

அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது

 

காரை துர்க்கா  

 

கொரோனா! கொரோனா!!  

இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை.  

அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.  

இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ் உரு(புர)ட்டிப் போட்டு விட்டிருக்கின்றது.  

அறிவியல் ரீதியாகப் பல கண்டுபிடிப்புகளின் சொந்தக்கார நாடுகள்,  இன்று கண்டுபிடிக்க முடியாத, கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மல்லுக்கட்டி வருகின்றன.   

புதிய சட்டங்கள், புதிய திட்டங்கள் நாளாந்தம் நடைமுறைக்கு வருகின்றன.  

இவ்வாறானதொரு வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நேரத்தில் யாழ்ப்பாணம், நல்லூர்ப் பகுதியிலுள்ள குளிர்பான நிலையத்தில், கொரோனா வைரஸ் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டிய வைத்தியருக்கும் அவரது நண்பருக்கும் நிறுவனப் பணியாளர்களும் வேறு சிலரும் இணைந்து அடித்துள்ளனர்; கற்கலால் எறிந்துள்ளனர்.  

கொரோனா வைரஸ், மூன்று வழிகளில் பரவுகின்றது. முதலாவதாக, வெளிநாட்டிலிருந்து வருகின்ற நோயாளர்கள்;  

இரண்டாவது, வெளிநாட்டிலிருந்து வரும் நோயாளர்களுடன் நேரடித் தொடர்பு உள்ளவர்கள்;  
இறுதியாக, உள்ளூர் நோயாளிகளிடமிருந்து பரவுதல் என்பனவே அவையாகும்.  

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், வைத்தியரும் அவரது நண்பரும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்த வேளையில், வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர், குறித்த குளிர்பானக் கடைக்குச் செல்வதை அவதானித்து உள்ளனர்.  

வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என, வைத்தியரும் அவரது நண்பரும் எடுத்துக் கூறி விளக்கி உள்ளனர். அவ்வேளையிலேயே, குளிர்பான விற்பனை நிலைய ஊழியர்களும் வேறு சிலரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள பிறிதொரு குளிர்பானக் கடையில் பணியாற்றிய 18 வயதுக்குக் குறைந்த ஓர் ஊழியர் (சிறுவன்) அங்கு கடமையில் இருந்த வேளையில், மின்சார ஒழுக்கின் காரணமாக மரணமடைந்த சம்பவம் ஒன்றும் நடைபெற்றுள்ளது.  

வணிக நிலையங்கள், வருமானம் ஈட்டுவதற்கு அப்பால், சில சமூகப் பொறுப்புகள், கடப்பாடுகள் அவற்றுக்கு இருக்கின்றன. அவை, அறம் சார்ந்ததாகவோ, சட்டம் சார்ந்ததாகவோ, சமூகம் சார்ந்ததாகவோ இருக்கலாம். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, அவை கட்டாயமாகக் கடைப்பிக்கப்பட வேண்டியவைகள் ஆகும்.  

ஆனால், இன்றைய பரபரப்பான பொருள் ஈட்டும் குறுகிய வாழ்க்கை, அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்து விட்டது. குறித்த வைத்தியர், தான் பணியாற்றும் பிரிவு (ஊர்காவற்றுறை, காரைநகர்) என்பதைக் கடந்து, தான் சார்ந்த மக்கள் என்றே, அவ்வாறான விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தார் என்பதை, ஒரு தடவை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  

மேலும், இன்றுள்ள ஆபத்தான சூழ்நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை காரணமாக, இவ்வாறான விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை, வைத்தியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியாது. இந்நோய் தொடர்பிலான விடயங்களை அறிந்த தன்னார்வ நபர்கள் யாருமே, விழிப்புணர்வில் ஈடுபடலாம்.  

ஏனெனில், வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. ஆனால், ஒரு வைத்தியருக்கே அடி கொடுக்கும் எம்மவர்கள், கையில் சாதாரண நபர்கள் சிக்கினால், என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பது, வெட்கப்பட வேண்டிய ஒரு விடயம் ஆகும்; தலை குனிய வைத்திருக்கும்.   

‘எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப் பொருள் கேட்பதே அறிவு’. அதற்கு அமைவாக, நோய் பரவும் விதம், நோயின் கொடூரம், தடுப்பு முறைகள் என, அவற்றைக் கேட்டு, அவர்களது அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் பின்பற்றியிருக்க வேண்டியதே காலத்தின் கட்டாய தேவை ஆகும்.  

அடுத்து, ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ என, எமது சமூகம் கல்வியைத் தனது கண்கள் போலக் கருதுகின்றது. ஆனாலும், இவ்வாறான பாரிய இடர்பாடு நேரத்திலும், தனியார் வகுப்புகள், சட்டத்தைப் புறக்கணித்து, ஆங்காங்கே களவாக நடத்தப்படுகின்றன.  

கல்வி முக்கியம்தான்; அதில் இரண்டாம் கருத்துக்கு இம்மியும் இடமில்லை. ஆனால், ‘சுவர் இருந்தால் தானே, சித்திரம் வரையலாம்’ எனக் கல்வியைக் காட்டிலும், உடல், உள ஆரோக்கியம் முக்கியமானது. இதை, இக்காலப் பகுதியில், கல்வியைக் களவாகப் புகட்டும் ஆசிரியர் சமூகம், அறியாமை அறிவீனம் ஆகும். 

இவற்றைக் காட்டிலும், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்காக அரசாங்கம் விடுமுறை வழங்கி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஊர் சுற்றுவது, தேவையற்ற பயணங்களை மேற்கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே, அரசாங்கத்துக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்து, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டு உள்ளது.  

அன்று தமிழினம், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக உயிர்ப்பலி கொடுத்தது. அநியாயமாக, நடு வீதியில் குற்றுயிராகக் குருதி கொட்டக் கொட்டக் கிடந்த, எங்களை மீட்க மீட்பர்கள் இல்லையா என ஏங்கித் தவித்தோம்; அனைவரும் கை விட்டனர்; ஆற்றாமையால் அழுதோம், புரண்டோம்; இறுதியில் மடிந்தோம்.  

இன்று வீதி விபத்துகள் என்றும் தற்கொலைகள் என்றும் கொஞ்சம் கொஞ்சமாகக் கறையான் போல, எம் இனத்தைப் பலி கொண்டு வருகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இன்னும் ஏன் இந்த அலட்சியப் போக்கு எங்கள் மத்தியில் நிலவுகின்றது?  

1956ஆம் ஆண்டு தொடக்கம், 2009 ஆம் ஆண்டு வரையிலான மரணங்களைத் தடுத்து நிறுத்தும் வலிமை, எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டு இருந்தது. இன்று இவ்வாறான மரணங்களையும் நோய்களையும் அடியோடு அழிக்கும் சக்தி எங்களிடம் இருந்தும், ஏன் அவற்றை உதாசீனப்படுத்துகின்றோம்?  

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் மய்யங்களை, அரசாங்கம் கிழக்கில் மட்டக்களப்பிலும் வடக்கில் வவுனியாவிலும் அமைத்துள்ளதாக கவலை அடைகின்றோம். இது கூட, இன ரீதியான பாகுபாடு என, நாம் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றோம். ஆனால், எங்களது தனிப்பட்ட பாதுகாப்பிலும் அது கடந்து, ஒட்டு மொத்த எம் சமூகத்தினது பாதுகாப்பிலும் எந்தளவு தூரம் அக்கறை கொண்டிருக்கின்றோம்.  

ஸ்பெயின் நாட்டில், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட பிரார்த்தனையே, பலருக்குக் கொரோனாவை வழங்கி விட்டுச் சென்று விட்டது. அதாவது, அந்நாட்டில் கொரோனாவிலிருந்து விடுபடுவதற்கான விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டு உள்ளது. அதன் போது, புனித நீர் ஒரு பாத்திரத்தில் இடப்பட்டு, அங்கிருந்தவர்களுக்குத் தீர்த்தம் போல, வழங்கப்பட்டு உள்ளது. இறுதியில் அந்தத் தீர்த்தமே, எமனாக 80 பேருக்கு நோயை வழங்கி விட்டுச் சென்று விட்டது.  

இவ்வாறான, உலக நடப்புகளை அறியாது, எங்கள் நாட்டிலும் விசேட பூஜை வழிபாடுகள், ஜெப ஆராதனைகள் எனப் பலர் வெளிக்கிட்டு விட்டார்கள். கூட்டுப் பிரார்த்தனை சக்தி வாய்ந்தது; வலிமை மிக்கது. ஆனால், கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, கூட்டப் பிரார்த்தனை செய்வோரை, அது, கூட்டாகக் கொய்து விடும் என்பதை, அவர்கள் அறியாமை, அறிந்தும் அதை நிறுத்தாமை, வேதனை அளிக்கின்ற விடயங்கள் ஆகும்.  

கண்களை மூடிக் கொண்டு, நெருப்புடன் விளையாட முடியாது என, உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி, இது தொடர்பில் அழுத்தமாகச் கூட்டிக் காட்டி உள்ளார். ஏற்கெனவே, எம் நாடு கூட, கடந்த 12ஆம் திகதியே பாடசாலைகளுக்கு விடுமுறையை அறிவித்தது.  

நாம் அனைவரும், ஏதோ சீனாவில் ஏற்பட்ட ஒரு வியாதி தானே என, வெறும் அலட்சியப்போக்குடன் காலத்தைக் கடத்தி விட்டோம். எங்கள் நாடு, ஒரு தீவு ஆகும். ஆகவே, எமக்கு புவியியல் ரீதியாக எல்லைகள் கிடையாது. நோய்க் கிருமி எம் நாட்டுக்குள் நுழை(ந்த)வதற்கான ஒரே வழி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்புத் துறைமுகம் மாத்திரமே ஆகும்.  

ஆகவே, வெளிநாட்டவர்கள், வெளி நாட்டுக்குப் போய், மீள நாட்டுக்கு வந்த எம்மவர்களே, நோயைப் பரப்பியவர்கள் ஆவார்கள். எனவே, இவர்களது வருகையை, நாங்கள் கண்காணிக்கத் தவறி விட்டோம்.   

இத்தாலி நாட்டில் கூட, இந்நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தத் தவறியதாலேயே பாரிய அளவிலான உயிரிழப்புகள் நடைபெற்று உள்ளன. இன்று காலன் காலுக்கு அடியில் சுற்றிச் சுற்றி வட்டமிடும் போது கூட, உணர்கின்றோம் இல்லை.  

இதற்கிடையே முழு உலகுமே, தம்மைக் கொரோனா வைரஸ் கொன்று குவித்து விடும் எனப் பயத்தில் இருக்கையில், “கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப் பாரியதொரு பிரச்சினை அல்ல; அது தடிமன் போன்று, ஒரு புதிய நோய் ஆகும்” எனத் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் தெரிவித்து உள்ளார்.  

தனது கட்சி சார்பில், அம்பாறை மாவட்டக் கச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு, “கொரோனா வைரஸ் தாக்குதல் செய்யாது” எனக் கூறியுள்ளார். இது கூட, இவர்களது அறியாமையா? அல்லது, அநியாயக் கருத்தா?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அநியாயமோ-அறியாமையோ-ஆனால்-அடக்கப்பட-வேண்டியது/91-247373

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.