Jump to content

கொரோனாவை தாண்டி. - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

BEYOND THE CORONA VIRUS
கொரோனாவை தாண்டி.
- வ.ஐ.ச.ஜெயபாலன்
*
மலர்கிறது முல்லை
கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
வீழாவாய் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
.*
வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை.
 
.
கூதிர் - WINTER
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்லப்பட முடியாதவர்கள் மனிதர்கள் என்று சொல்லாதீர்ர்கள்.. மனிதர்களின் ஆணவத்தை தான் என்ற அகந்தையை இந்த பூமி எல்லா உயிரினங்களுக்குமானது என்றதை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்காத மனிதனின் சுயநலத்தை பேராசையை என்று எல்லாவற்றையும் வென்று விட்டிருக்கிறது இந்தவைரஸ்.  

காலப்பெருவெளியில் நமக்கான பாத்திரமென்று ஏதேனும் உண்டா..? மணல் துகளொன்றை கோடியாய் வெட்டி, அதிலொன்றின் அளவை நம் வாழ்வுடன் ஒப்பிட்டால், காலத்தின் சாட்சியாய் வெளியெங்கும் வேவு பார்க்கும் காற்றும் கைகொட்டி சிரிக்கும். அற்பத்தின் அருஞ்சொற்பொருள்தானே இவ்வாழ்வு..? 

சீமான் சொல்வதுபோல் பூமி நமக்கானது மட்டும் அல்ல நம்மை சுற்றி உள்ள உயிர்களுக்கும் வருங்கால சந்ததிக்கும் உரியது..அதை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைக்கவேண்டியது நம் பொறுப்பு.. ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

எத்துணை சிறியது இவ்வாழ்வு... அதை எண்ணிப்பார்க்காத மனிதனின் பேராசைதான் எத்தனை பெரியது..?

 

கவிதை.. கம்பனின் கவிதை கால் இடறுமோ..? அது வழமைப்போல் ஆற்று வெள்ளம்போல் பாய்ந்து வந்திருக்கிறது தங்கள் தமிழ் மலையில் இருந்து..

 

Link to comment
Share on other sites

4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 ஆனால் மனித இனம் என்ன செய்கிறது..? அபிவிருத்தி பொருளாதரம் என்ற பெயரில் காட்டையும் மலைகளையும் வெட்டி பால் குடிக்க வேண்டிய பூமித்தாயின் முலையை அறுத்து இரத்தம் குடிக்கிறது..

தாங்குமோ இயற்கையும் பொறுக்குமோ..?
 

 

 

ஆமாம். 

”அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .” என்று எழுதினேன் ஐயா. இன்னும் எழுதியும் இருக்கலாம்தான். உங்களைப்போல வாசிப்பவர்கள் யோசிக்கிறபோது  உயிர்த்த கவிதை துளிர்த்துத் தழைக்குமே. அதுவும் போதுமன்றோ ஐயா? . தவறெனில் மன்னிக்கவும்.. அன்புக்கு நன்றி
Link to comment
Share on other sites

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2020 at 3:49 PM, poet said:

2005 மே தினத்தன்று யாழ் குடும்பத்தில் இணைந்திருக்கிறேன். 14 வருடங்கள் என் கவிதைகளுக்கு  இடந்தந்த யாழ் சங்கப் பலகைக்கு நன்றி.   2 எச்சரிக்கை புள்ளிகளுகளுக்கான குற்றங்களுக்கு நெறிமிகு யாழ் சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறேன். என்னை இணைத்த மோகனையும் அனுமதித்த யாழ் குடும்பத்தையும் வாழ்தி யாழ் கள கவிதைப்பூங்காட்டில் இருந்து விடை பெறுகிறேன். இது சங்க புலவர்களது மரபுதான். தொடர்ந்து சிலகாலம் யாழ் உரைப்பகுதியில் சந்திப்போம் நண்பர்களே. 

ஏன் இப்படி ஒரு முடிவு .ஈழதின் தமிழ் தந்த புலவரில் அற்புதமான கவிஞரில் நீங்கள் ஒருவர்.எத்தனை எத்தனை கவிகள் உங்களில் பிறந்தது.தொடர்ந்து எழுத்துங்கள் பொயட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.