Jump to content

அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் காலம் மக்களுக்கு…..!மா.பாஸ்கரன் யேர்மனி

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%

தமிழருக்கானதொரு தலையமற்ற வெற்றிடத்தில் எவரும் சவாரி செய்யலாம் என்றதொரு நிலையிற் கடந்த பத்தாண்டுகளைக் கடந்து செல்லும் தமிழரது அரசியலில் மூன்று அரசுத்தலைவருக்கான தேர்தலையும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்துள்ள சூழலில் மீண்டுமொரு நாடாளுமன்றத் தேர்தலை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் இவ்வேளையில் கடந்தகாலத்திற் பதவிக்கு வந்த அரசுகளும் தமிழ்க்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினவா அல்லது குறைந்தபட்சம் ஏதாவது முனைப்புகளை மேற்கொண்டனவா என்றால் எம்மிடம் இருப்பது வெறும் சுழியமேயாகும். இந்தச் சுழியத்துள் சுற்றியவாறு அழிந்துவிடாது நிமிர்வதற்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துவதே இன்றைய தேவையும் சாதுரியமும் என்பதைத் தமிழினம் கடந்துவந்த பட்டறிவு சுட்டிநிற்கிறது.

2009இல் தமிழரது அரசியல் வேணவாவை நந்திக்கடலில் அமிழ்த்திவிட்டதாகச் சிங்களம் கொக்கரித்ததை அப்படியே முன்னெடுத்துச் செல்வோராகத் தமிழ்த் தலைமைகள் என்றுசொல்வோர், குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நகரும் நிலையானது ஈழத்தீவிலே தமிழினத்தின் மிகுதி இருப்பையும் இல்லாமற்செய்து அழிவை நோக்கி அழைத்துச் சென்றதையே கடந்து வந்த ஆண்டுகள் பதிவுசெய்துள்ளன. இனியும் பதிவுசெய்யும். இந்த சூழலில் மீண்டும் வாழவைப்போம் ஆளவைப்போம் என்று வாக்குக் கேட்டு அரசியல்வாதிகள் எந்தக் கூச்சமும் இன்றி உங்கள் வாசற்படிகளை நோக்கிவரும் வேளையில், பழைமை வழமை கைகாட்டியோர் என்று கண்மூடியிருக்காது காத்திரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியது வாக்குப்பலமுள்ள ஒவ்வொரு தமிழரதும் கடமையாகும்.

தமிழினத்துக்குப் பாதகமானதும் சிங்களத்துக்குச் சாதகமானதும், இனவழிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பிற்கான சட்டங்களை இயற்றவும் நடைமுறைப்படுத்தவும் இருக்கும் ஒரு பெரும் அலகாகவே ஈழத்தீவின் நாடாளுமன்றம் இருக்கின்றமையை இந்த உலகால் புரிந்துகொள்ள முடியாதெனினும், தமிழினத்தின் தொடரும் துயரநிலையே தமிழினத்திற்கான பாடமாகும். அப்படியாயின் ஏனிந்த நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழினம் கருத்திலெடுக்க வேண்டும் என்ற வினா எழுவது இயல்பானதே. இந்தக் வினாவுக்கான விடை தேடவேண்டும் என்றால் கடந்த தேர்தல்களைத் தமிழினம் மீளாய்வு செய்வதூடாகத் தெளிவடைவதோடு, தெளிவான முடிவையும் எடுப்பதே இன்றைய தேவையாகும்.

சனநாயகப்பிரதிநிதிகள் நாடாளுமன்றினூடாக வந்து பேசவேண்டும் என்று உலக அரசுகளும் அமைப்புகளும் நகரும் வேளையில் தமிழரது உரிமைப் பிரச்சினையை துணிவோடு முன்வைக்கும் தலைமையை இனம்காண்பதும் தெரிவுசெய்வதுமே தமிழினத்தின் அடிப்படைகளுக்கான முன்மொழிவையாவது நகர்த்த முடியும் என்பதே இன்றிருக்கும் யதார்த்தநிலையாகும். ஊதிப்பெருத்திருக்கும் சிங்கள உயரினவாதமானது தனிச்சிங்களவரால் தீர்மானிக்கப்பட்ட அரசுத்தலைமை என்ற இறுமாப்போடு, நாடாளுமன்றமும் தனிச்சிங்கள வாக்குகளால் அமைக்கப்படவேண்டும் என்ற இறுமாப்பில் சிங்களத் தரப்புக் குறிப்பாக, இறுதிக்கட்ட இனஅழிப்புக்குத் தலைமை தாங்கிய கோத்தபாய – மகிந்த தரப்புகள் நகரும் அதேவேளை, தமிழர்தரப்பிலும் தாமே தமிழ்தேசியத்தின் காப்பாளர்கள் என்றும், பாரம்பரியக் கட்சிகள் என்றும், தம்மை தெரிவு செய்தால்தான் தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமை ஓங்கும் என்றும் ஓலமிடுகின்றனர். இந்த ஓலத்தின் பின்னால் இருக்கும் அரசியலைத் தமிழினம் புரிந்துகொள்வதே தற்போதைய அவலத்திலிருந்து விடுபடுவதற்கான வழியாகும். வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதும் பின் சிங்களத்துக்கே வால்பிடிப்பதும் வக்காளத்து வாங்குவதுமே தமது நிகழ்வுநிரலாகக் கொண்டுள்ளோரை முதலில் நிராகரிப்பதே உலகுக்கும் சிங்களத்துக்குமான செய்தியாக அமையவேண்டும். அதேவேளை வாக்கைப்பெற்று நாடாளுமன்ற அவையையும் சிற்றுண்டிச்சாலையையும் அலங்கரிப்போராய் இல்லாது ஆக்கபூர்வமாகத் தமிழரது உரிமைப்பிரச்சினையை உலகுக்கு எடுத்துச்செல்லும் ஆற்றலுள்ளோரைத் தேர்வுசெய்வதே பொருத்தப்பாடாகும்.

ஏனென்றால் சிங்கள நாடாளுமன்று, ஏன் சிங்கள நாடாளுமன்றமென்று சொல்ல வேண்டியுள்ளது என்பதைத் தமிழினம் புரிந்தகொள்ள வேண்டியதும் அவசியமானது. ஏனெனில் ஆகக்கூடியது வட – கிழக்கிலிருந்து 22தமிழ் உறுப்பினர்களால் தமிழர் சார்பாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதென்ற மெய்நிலையைப் புரிந்துகொண்டு உற்றுநோக்கி நகர்வது தமிழரது தலையாய கடமையாகும்.225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றிற்கு 196 உறுப்பினர்கள் மக்களால் தேர்;தெடுக்கப்பட மிகுதி 29 உறுப்பினர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறைப்படி கட்சியின் செயலாளரினால் முன்மொழியப்படுபவர்கள் நாடாளுமன்றுக்குத் தெரிவாகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமே எந்த மாற்றத்தையும் செய்யலாம் என்ற சட்ட அமைப்புக்கொண்ட நாடாளுமன்றிலே எந்தவொரு காலத்திலும் தமிழர்தரப்பால், தமிழருக்கான எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொள்ள முடியாதென்பதே மெய்நிலையாகும். இங்கு தமிழர்களைப் பொறுத்தவரை பிரச்சனைகளைக் குறைந்தபட்சம் விவாதிக்க அல்லது சொல்வதற்கானதொரு சபையன்றி வேறில்லை. ஆனால் அந்தசபையைக்கூடத் சரியாகப் பயன்படுத்தாது சிங்களத்துக்கு வால்பிடிப்பதோடு, சிங்களத்தை வளமாக்குக்கும் தமிழ்த் தலைமைத்துவம் தேவையா(?) என்பதைத் தமிழ் மக்கள் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டியது காலத்தின் வினாவென்பதை கருத்திற் கொள்ளவேண்டும் என்ற காலத்தில் நிற்கின்றோம் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்வதே ஒரு அரசியல் வெற்றிதான்.

தமிழினத்தின் இருப்புக்கான சிந்தனை தமிழ்தேசியப் பரப்பில் மேலொங்குதலே எமது விடியலுக்கான கதவுகளைத் திறக்கும் என்ற பேருண்மையை தமிழினம் பற்றாதவரை அனைத்தும் வினாக்களோடு சுருங்கி விடைதெரியாது அமிழ்ந்துவிடும். விடைகள் எம்முன்னே தெரியவேண்டுமானால் விழிப்படைதலே முதல்வழியாகும். இல்லையேல் மக்களுக்குப் பட்டையைப் போட்டுவிட்டு வெள்ளை வேட்டியும் சட்டையுமாக அரசியல்வாதிகள் தமது வித்தைகளைக் காட்டும் களமாகத் தமிழர் தேசம் இருளில் அமிழ்ந்துவிடுதல் விதியென்றாகிவிடும். ஈழத்தீவில் தமிழினத்தின் வாக்குப்பலம் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இல்லாதுவிடினும், தமிழினத்தின் தலைவிதியை மாற்றும் சக்தியாகவேணும் மக்கள் தம் வாக்குப்பலத்தை மாற்றவேண்டும்.
விதியை மதியால் வெல்லும் வகைசெய்தல் அறிவின் செயலென்ற உண்மையை உணர்ந்து கொண்டு கட்சிகளின் அடிமைகளாக இல்லாது, கட்சிகளிடம் வினாத்தொடுப்போராகத் தமிழினம் மாறவேண்டும். கொள்கையற்ற இலக்கற்ற தமிழினத்தின் இருப்பை நிலைநிறுத்தும் சிந்தனையற்ற கட்சிகள் தேவையா(?)என்று சிந்திப்பதுகூட விடியலுக்கான வழியாகும்.

மா.பாஸ்கரன்
யேர்மனி.

https://www.kuriyeedu.com/?p=243870

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
    • பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். https://thinakkural.lk/article/299640
    • Published By: NANTHINI   19 APR, 2024 | 01:12 PM   1974 கச்சதீவு தொடர்பில் இலங்கையிலும் இந்தியாவிலும் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெற்றுவருகின்றன. கச்சதீவு யாருக்கு சொந்தமானது என்பது பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் இன்றைய நவீன உலகில் குறிப்பாக சமூக ஊடகங்களில் வைரலாக (trending) காணப்படுகிறது. கச்சதீவு வைரலாவதற்கு (trending) பல காரணங்கள் பலராலும் கூறப்படுகின்றன. ஆனால், வரலாற்றை மீட்டுப் பார்க்கும்போது “கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது! 45 வருடகாலத் தகராறு தீர்ந்துவிட்டது!!” என்ற தலையங்கத்துடன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி வெளியான வீரகேசரி பத்திரிகையின் முதல் பக்கத்தில் இவ்வாறு உள்ளது. https://www.virakesari.lk/article/181449
    • எப்படியோ இனி நீங்கள் யாழுக்கு வர ஒரு வருசம் எடுக்கும்…. நீங்கள் இப்படி எழுதியதை எல்லாரும் மறந்து விட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் உருட்டவில்லைத்தானே? ஒன்றின் பெயர் மிர்சேல் ஒபாமா என நினைக்கிறேன். ஏனையவற்றின் பெயர்கள் என்னவாம்? அம்பானிக்கும் தெரியாதாம்
    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.