Jump to content

கோரோனோ - நெருங்கும் பேராபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மாலை 5.40  மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

எனது தனிப்பட்ட  நிறுவனத்தின் கணக்காளர்.  ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன்.

சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன்.

அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன்.

நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார்.

உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. 

இரண்டு கிழமையாக இங்கே இருக்கிறேன் என்றார். அபாயக்கட்டம் தாண்டி விட்டார், அதுதான் போன் பண்ணி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே, 'என்ன, இரண்டு கிழமையாகவா.... என்ன நடந்தது' என்றேன்.

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

65 வயதான, இதய bypass அறுவை சிகிச்சை செய்த, நீரிழிவு நோயும் கொண்டவராகையால், உடனடியாக வீடு சென்று இருக்கிறார். வீடு போனவுடன் நடுக்கம் தொடங்கி இருக்கிறது.

டாக்டர் மகன், கொரோனா பயத்தில், வீட்டில் இருந்து இருக்கிறார். தகப்பனை சோதித்த மகன், பிராணவாயு அளவு குறைவதை அவதானித்து, உடனே 999 அழைத்து இருக்கின்றார்.

அவர்கள் வந்து அவரை பரிசீலித்து, கோரோனோ வைரசு என சந்தேகிப்பதாக சொல்லி, அழைத்து சென்று விட்டனர். சரியாக இரு மணிநேரத்தில், அவரது மகனும், மனைவியும் அதே நடுக்கத்தில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவார தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் இருவரையும் வீடு திரும்பி விட்டனர். இவர் நேற்று வருவதாக இருந்து, மீண்டும் பிராணவாயு அளவு குறைந்ததால் மொனிட்டர் பண்ணுகிறார்கள். 

மூவரும், சரியான நேரத்தில் வைத்தியசாலை சென்றதால் தப்பி விட்டதாக கூறுகின்றார்.

அந்த  உதவி கணக்காளர் நிலை என்ன என்று கேட்டேன்... இங்கேதான் பக்கத்து கட்டிலில் படுத்திருக்கிறார் .... அவரும் தப்பி விட்டார் என்கிறார்.

அலுவலகத்தில் இருந்த இன்னுமொரு இளைஞருக்கு வரவில்லை. அவருக்கு immune system ஸ்ட்ரோங் போல உள்ளது என்று சொல்லி லேசாக சிரித்தார். அந்த  உதவி கணக்காளர் ஞாயிறு இரவு நோய் தொற்றுதலுக்கு ஆளாகி உள்ளார் போலுள்ளது. காலை வேலைக்கு போகும் மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது என வேறு அறையில் படுத்துள்ளார்.

காலையில் கிளம்பி மனைவி வேலைக்கு சென்றுவிடடார். இவர்  பின்னர் கிளம்பி, காச்சல் குணத்துடன் வேலைக்கு போய் கொடுத்து விட்டு வந்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்து, மனைவிக்கு, வீட்டுக்கு உடனே செல்லவேண்டாம் என்றும், குறித்த சில மணிநேரம் கழித்தே செல்லுமாறும் சொல்லப்பட்டுள்ளது.

ஆக, கோரோனோ கொலைவெறியுடன் திரிகிறது.... நெருங்கி வரும் பேராபத்தில் இருந்து முடிந்த வரைவிலகி கவனமாக இருப்போம்...

அதவேளை அவர் ஒன்றையும் சொன்னார். தான் இரண்டு வாரம் தாக்குப் பிடித்ததால், பயப்படவேண்டாம்... வந்தாலும் மனஉறுதியினை இழக்காமல் போராடவேண்டும் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

நேற்று இரவு பக்கத்தில், இரு திசைகளில் இருக்கும் இரண்டு வைத்தியசாலைகளில் மட்டும் 24 இறப்புக்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் இன்று பேட்டியில் சொல்கிறார். இன்று முதல் வீட்டில் இருக்க சொல்லி அரசு கூறியது தாமதமாயினும், அவ்வாறு செய்யாவிடில், இது பரவும் வேகத்தில், அடுத்தவாரம் இதே வேளை, 10 லட்ச்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள் என்கிறார்.

பீதியை கிளப்புறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன முனியர் இப்படி கிளப்பிறீர்கள்....

வெள்ளிக்கிழமையிலிருந்து வீட்டிலே முடக்கம்... இனி இருக்கேலாது வெளியால எட்டிப்பாக்கலாம் என்டால் .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

அலுவலகத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவரை....
கொரோனா... தேடி வந்திருக்கு. 😲

எந்த வகையில் எல்லாம்.... இது நம்மை பாதிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
இவற்றை வாசிக்க, மனதில் பயம் ஏற்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாகாமுனி ஜ‌யா / கொரோனாவாள் ப‌ய‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ய‌ம் இல்லாம‌ இருக்கு ம‌ருந்து இருக்குது / 

கொரோனா என்றால் யாருக்கு தான் ப‌ய‌ம் ந‌டுக்க‌ம் வ‌ராம‌ல் இருக்கும் / 

இர‌ண்டு வைக்யான‌ குளுசை இருக்கு ப‌ய‌ம் இல்லாம‌ இருக்க‌ , அந்த‌ குளுசை க‌ஞ்சா என்ற‌ போதை பொருளில் தயாரிக்கின‌ம் / ம‌ருத்துவ‌ர் பாம‌சிக்கு ம‌ருந்து குடுக்க‌ சொல்லி எழுதி இருந்தா தான் ம‌ருந்து கிடைக்கும்  

5 hours ago, தமிழ் சிறி said:

அலுவலகத்தில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தவரை....
கொரோனா... தேடி வந்திருக்கு. 😲

எந்த வகையில் எல்லாம்.... இது நம்மை பாதிக்கும் என்பதற்கு நல்ல உதாரணம்.
இவற்றை வாசிக்க, மனதில் பயம் ஏற்படுகின்றது.

த‌மிழ் சிறி அண்ணா இப்ப‌ தான் நாங்க‌ள் துணிவாய் இருக்கிற‌ நேர‌ம் , ப‌ய‌ப்பிட‌ பிடாது , கொரோனா வ‌ந்தா எதிர் நீச்ச‌ல் நாங்க‌ள் க‌ண்டிப்பாய் போட்டால் தான் அதில் இருந்து மீண்டு வ‌ர்லாம் , ப‌ய‌ப்பிட்டா இதைய‌ துடிப்பு கூடிடும் , க‌வ‌லைய‌ விடுங்கோ ந‌ல்ல‌தையே யோசிப்போம் 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சிரிச்சு கதைச்சாலும்....
அடி மனதில் திக் என்ற பயம்சுழன்றுகொண்டேயிருக்கின்றது. கொரொனா தொற்றிக்கொண்டிருக்கும் வேகத்தை பார்த்தால் நித்திரையே வரமாட்டன் என்கிறது.
நாதமுனியில் தகவலை பார்த்தால் யாருக்கும் எப்போதும் எந்தநேரத்திலும் வரலாம்  என்ற அச்சம் பேயாய் சதிராடுது.
இருக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் கோரோனா ஒரு தலையிடி.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

2 கிழமைக்கு முதல் என்றபடியால் முறையான மருத்துவம் கிடைத்திருக்கிறது.
   இதுவே இன்றைய நிலை என்றால் முழு மருத்துவம் பெறுவது மிகவும் கஸ்டம்.

நீஙகள் இப்போதும் கலிபோர்னியாவில்தான் நிற்கிறீர்களா?
அல்லது வீடு திரும்பி விடீர்களா?
நியூ யோர்கில் வேகமாக பரவுகிறது 
கூடுதல் கவனமாக இருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரச்சனையே அதிகப்படியான நோயாளர்களை கவனிப்பதுதான் வரும் வாரம் மட்டும் ஓரளவுக்கு சமாளிப்பினம் முன்னுக்கு கொரனோ  தொற்றுபவர்கள் ஓரளவு குடுத்துவைத்தவர்கள் நாள் செல்ல தொற்று வீதம் அதிகமாகும்போதுதான் நிலவரம் கலவரமாகிவிடும் அந்த காலகட்டத்தில் இறப்பவர்கள் நிலை இன்னும் பரிதாபகரமானது எந்த சமய அனுட்டானமும் இன்றி நூறோடு ஒன்றாக போய் சேரவேண்டியதுதான் செத்த வீட்டு  சிலவு இல்லை எனவே கள  உறவுகள் குறைந்தது மூன்று கிழமை தன்னும் வீட்டில் இருப்பது நல்லது .

அந்த மூன்று கிழமையும் யாழில் மட்டுக்கள்  தங்கள் கத்திக்கு  ஓய்வு குடுத்தால்  நல்லது .😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கொலை வெறியோடு திரியுது.நானும் அவளும்  இப்ப ஒரு வாரமாய் வீட்டுக்குள்தான் இருக்கிறோம்.நினைக்கவே மிகவும் வேதனையாக இருக்கிறது.பிள்ளைகள் எல்லாம் தூரத்தூர இருக்கினம். யாழும் போனும்தான் ஆறுதல்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

பிள்ளைகள் எல்லாம் தூரத்தூர இருக்கினம்.

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

எல்லோரும் வேலைகள், அவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் இருந்து செய்கின்றனர்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

வெளியுலக தொடர்பு இல்லாத போது  ஏன் தள்ளி தள்ளி இருக்கினம் ?

Just now, suvy said:

எல்லோரும் வேலைகள், அவர்கள் தங்கள் தங்கள் அறைகளில் இருந்து செய்கின்றனர்......!

இருந்தாலும் பாருங்கோ வீட்டிலை இருந்து வேலை செய்யிறதாலை இப்பிடியான சோலியளும் வந்து போகும்.
வலுகவனமாய் இருக்க வேணும்.
இஞ்சாரும் உப்பு கணக்கோ  பாருமப்பா  எண்டு வாழ்க்கைப்பட்டவர் கறிச்சட்டியோடை லைவ்விலை வராதவரைக்கும் சந்தோசம். 😎

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அந்த மூன்று கிழமையும் யாழில் மட்டுக்கள்  தங்கள் கத்திக்கு  ஓய்வு குடுத்தால்  நல்லது .😃

நீங்க வேற.... அவர்களுக்கும் பொழுது போகணுமே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இன்று மாலை 5.40  மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.

எனது தனிப்பட்ட  நிறுவனத்தின் கணக்காளர்.  ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன்.

சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன்.

அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன்.

நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார்.

உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. 

இரண்டு கிழமையாக இங்கே இருக்கிறேன் என்றார். அபாயக்கட்டம் தாண்டி விட்டார், அதுதான் போன் பண்ணி இருக்கிறார் என நினைத்துக்கொண்டே, 'என்ன, இரண்டு கிழமையாகவா.... என்ன நடந்தது' என்றேன்.

அவரது அலுவலகத்தில் ஒரு உதவி கணக்காளராக ஒருவர் வேலை செய்கின்றார். அவர் வார இறுதி நாட்களில் யூபெர் டிரைவர் ஆக வேலை செய்கிறாராம்.

இரண்டு வாரங்களுக்கு முன்னாள் ஒரு திங்கள் காலை, அவர் மெல்லிய காச்சல், தடிமலுடன், முக்கியமான வேலை ஒன்றினை முடித்துக் கொடுத்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறார். காச்சல் என்றால் ஏன் வந்தீர் என்று அவரை அனுப்பிவிட்டு, இவர் வேலையில் மூழ்கி இருக்க,  சரியாக இரண்டு மணி நேரத்தில், இவருக்கு உடல் மாறுதல் தெரிய தொடங்கி இருக்கிறது.

65 வயதான, இதய bypass அறுவை சிகிச்சை செய்த, நீரிழிவு நோயும் கொண்டவராகையால், உடனடியாக வீடு சென்று இருக்கிறார். வீடு போனவுடன் நடுக்கம் தொடங்கி இருக்கிறது.

டாக்டர் மகன், கொரோனா பயத்தில், வீட்டில் இருந்து இருக்கிறார். தகப்பனை சோதித்த மகன், பிராணவாயு அளவு குறைவதை அவதானித்து, உடனே 999 அழைத்து இருக்கின்றார்.

அவர்கள் வந்து அவரை பரிசீலித்து, கோரோனோ வைரசு என சந்தேகிப்பதாக சொல்லி, அழைத்து சென்று விட்டனர். சரியாக இரு மணிநேரத்தில், அவரது மகனும், மனைவியும் அதே நடுக்கத்தில், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருவார தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் இருவரையும் வீடு திரும்பி விட்டனர். இவர் நேற்று வருவதாக இருந்து, மீண்டும் பிராணவாயு அளவு குறைந்ததால் மொனிட்டர் பண்ணுகிறார்கள். 

மூவரும், சரியான நேரத்தில் வைத்தியசாலை சென்றதால் தப்பி விட்டதாக கூறுகின்றார்.

அந்த  உதவி கணக்காளர் நிலை என்ன என்று கேட்டேன்... இங்கேதான் பக்கத்து கட்டிலில் படுத்திருக்கிறார் .... அவரும் தப்பி விட்டார் என்கிறார்.

அலுவலகத்தில் இருந்த இன்னுமொரு இளைஞருக்கு வரவில்லை. அவருக்கு immune system ஸ்ட்ரோங் போல உள்ளது என்று சொல்லி லேசாக சிரித்தார். அந்த  உதவி கணக்காளர் ஞாயிறு இரவு நோய் தொற்றுதலுக்கு ஆளாகி உள்ளார் போலுள்ளது. காலை வேலைக்கு போகும் மனைவியை தொந்தரவு செய்யக் கூடாது என வேறு அறையில் படுத்துள்ளார்.

காலையில் கிளம்பி மனைவி வேலைக்கு சென்றுவிடடார். இவர்  பின்னர் கிளம்பி, காச்சல் குணத்துடன் வேலைக்கு போய் கொடுத்து விட்டு வந்து விட்டார்.

ஆஸ்பத்திரியில் இருந்து, மனைவிக்கு, வீட்டுக்கு உடனே செல்லவேண்டாம் என்றும், குறித்த சில மணிநேரம் கழித்தே செல்லுமாறும் சொல்லப்பட்டுள்ளது.

ஆக, கோரோனோ கொலைவெறியுடன் திரிகிறது.... நெருங்கி வரும் பேராபத்தில் இருந்து முடிந்த வரைவிலகி கவனமாக இருப்போம்...

அதவேளை அவர் ஒன்றையும் சொன்னார். தான் இரண்டு வாரம் தாக்குப் பிடித்ததால், பயப்படவேண்டாம்... வந்தாலும் மனஉறுதியினை இழக்காமல் போராடவேண்டும் என்றார்.

நாளைக்கு  எனக்கு என்ன வரும் என்று தெரியாது ...ஆனால் இவரது மகன் டொக்ரருக்கு படித்து என்ன புண்ணியம் ...அந்த வாய்ப்பை இன்னொருவருக்கு வழங்கி இருந்தால் ,இந்த அவசரமான நேரத்தில் சேவை செய்திருப்பார்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராத்திரி பத்து மணிக்கு நண்பர் ஒருவர் கன காலத்திற்குப் பின்னர் போனடித்தான். என்னடா நேரம்கெட்ட நேரத்தில் அடிக்கிறான் என்று போனை எடுத்தால் தனது லாப்ரொப் வேலை செய்யவில்லை. பார்க்கமுடியுமா என்று கேட்டான். என்ன மாதிரியான பிரச்சினை என்று கேட்டுக்கொண்டே கதையோடு கதையாக lockdown இல் வேலைக்கு போகிறாயா என்று கேட்டேன்.

தான் மூன்று கிழமை லீவில் நிற்பதாகச் சொன்னான். மகன் ஒரு வாரத்திற்கு முன்னர் காய்ச்சல், இருமலோடு அவதிப்பட்டு அது தனக்கும் தொத்திவிட்டது என்று சொன்னான். இப்ப இதுக்கெல்லாம் சுயதனிமைப்படுத்தலில் போகவேண்டுமல்லவா. அதனால் கொம்பனி மூன்று கிழமைக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தது. இன்னும் ஒரு வாரம் தாண்டவில்லை, ஆனால் லாப்ரொப் திருத்த வரப்போகின்றேன் என்றால் என்ன செய்யமுடியும்?

நான் கதையை மாத்தி இன்னும் மூன்று கிழமைக்கு பிறகு வா என்று சொல்லியுள்ளேன்😎 சும்மா எழுப்பம் காட்டி ஏன் கொரோனா சீதேவியை நெஞ்சில சுமக்கவேண்டும்!😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நாளைக்கு  எனக்கு என்ன வரும் என்று தெரியாது ...ஆனால் இவரது மகன் டொக்ரருக்கு படித்து என்ன புண்ணியம் ...அந்த வாய்ப்பை இன்னொருவருக்கு வழங்கி இருந்தால் ,இந்த அவசரமான நேரத்தில் சேவை செய்திருப்பார்கள் 
 

என்ன சொல்கிறீர்கள்?

அவரது 31 வயது மகன் Moorfields Eye Hospital கண் சிகிச்சை நிபுணர். இப்போது அவருக்கான தேவையில்லை என்பதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்.

அவர் சோதித்து, 999 கால் பண்ணி இராவிடில், இவர் மல்லி தண்ணி, பரிசிடமோல் என்று நேரத்தினை கடத்தி, ஆபத்தினுள் சிக்கி இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

ஆனால் லாப்ரொப் திருத்த வரப்போகின்றேன் என்றால் என்ன செய்யமுடியும்?

இந்த நேரம் வரப்போறன் என்று அடம்பிடிப்பவர் சுய நலமி யாக இருக்கணும் அவருக்கு இங்கும் காய்ச்சல் இருமல் கொஞ்சம் பார்த்து வாங்க என்று மட்டும் சொல்லிவிடுங்க போன் கூட தேடி எடுக்கமாட்டார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

என்ன சொல்கிறீர்கள்?

அவரது 31 வயது மகன் Moorfields Eye Hospital கண் சிகிச்சை நிபுணர். இப்போது அவருக்கான தேவையில்லை என்பதால் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்.

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

😁

அதில்லை விசயம்....

போன மார்கழி மாதத்தில் இருந்து கோரோனோ எண்டு ஊர் முழுக்க கத்துக்கிணம்.

உந்த அக்கவுண்டன், ஒரு நிறுவனம் நடத்திறார்.... அங்க வேலை செய்யிற எல்லாரிண்டையும் பாதுகாப்பினை கவனத்தில் எடுத்து, யாருக்கேன், தடிமன், காச்சல், இருமல் இருந்தால் இந்தப்பக்கம் தலையும் வைச்சு படுக்காதீங்கோ, வந்தால் வேலை காலி.. எண்டெல்லோ சொல்லி இருக்க வேண்டும்.

தாரில பிழை எண்டதை அக்கா விளங்காமால், அந்த கண் டாக்குத்தரை பிழை சொல்லுறாவே.. 

எனக்கு அந்தாளிலில் தான் எரிச்சல்.... இப்ப இரண்டு பேரும் பக்கத்து கட்டிலில் படுத்திருந்து கொண்டு பிசினெஸ்ஸை எப்படி டெவெலப் பண்றது எண்டு பிளான் போடுவினம் எண்டு நினைக்கிறன். என்ன சொல்லுறியல்?

🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்த நேரம் வரப்போறன் என்று அடம்பிடிப்பவர் சுய நலமி யாக இருக்கணும் அவருக்கு இங்கும் காய்ச்சல் இருமல் கொஞ்சம் பார்த்து வாங்க என்று மட்டும் சொல்லிவிடுங்க போன் கூட தேடி எடுக்கமாட்டார். 

அதை எல்லாம் சொல்லி எதுக்கு மினக்கெடுவான்.. போனிலையே ஒரு பத்துதரம் லொடுக்கு லொடுக்கு எண்டு இருமி இருந்தா நேரம் மிச்சம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் முதல்  மோன்காரன் கண் டாக்குத்தர் எண்டு ஒரு இடத்திலையும் சொல்லேல்லை.சும்மா தேவையில்லாமல் தங்கச்சியை குழப்பக்கூடாது 😎

இந்த பதிவை எழுதின குற்றத்துக்கு  நாதம்தான் சட்டைய கிழிச்சுட்டு ஓடனும்.. ஓவர்.. ஓவர்..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த பதிவை எழுதின குற்றத்துக்கு  நாதம்தான் சட்டைய கிழிச்சுட்டு ஓடனும்.. ஓவர்.. ஓவர்..😂

அதிலும் பார்க்க கோரோனோவை கொண்டு காவடி ஆடலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

நீஙகள் இப்போதும் கலிபோர்னியாவில்தான் நிற்கிறீர்களா?
அல்லது வீடு திரும்பி விடீர்களா?
நியூ யோர்கில் வேகமாக பரவுகிறது 
கூடுதல் கவனமாக இருங்கள். 

இல்லை மருது
சன்பிரான்ஸ்சிஸ்கோவில்த் தான் நிற்கிறேன்.அடுத்த ஆடி முடிவிலேயே நியூயோர்க் திரும்புவேன்.கொரொனா நிலமை இதே மாதிரி இருந்தால் நியூயோர்க் பயணமும் பிந்தலாம்.
நன்றி மருது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.