Jump to content

கொரோனா வைரஸ் தொற்றில் மரணம் சம்பவித்தால் (எந்த சமயத்தவர்கள் ஆக இருந்தாலும்) உடலை தகனம் செய்வது கட்டாயம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
கொரோனா வைரஸ் உள்ளாகி நோயாளி ஒருவர் மருத்துவமனையில்

 மரணத்தை தழுவினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய தர செயற்பாட்டு நடைமுறைகள் குறித்து சட்டம் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
கோவிட் 19 நோயினால் ஒருவர் மரணம டைந்தால் இந்த தர செயற்பாட்டு நடைமுறைகளின் பிரகாரம் அவர்கள் எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்.
 
சட்ட மருத்துவ அதிகாரிகளின் திணைக் களத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றை எக்னோமிக் நெக்ஸ்ட் இணையத்தளம் பார்த்திருப்பதாக கூறுகின்றது. 
 
அத்துடன் மரணம் தீவிர சிகிச்சைப் பிரி வில் அல்லது இந்த சிகிச்சைக்கான நோக்கத் துக்காக விசேட பிரிவில் சம்பவித்தால் பிரேத பரிசோதனை தேவைப்படாது எனவும் அதில் 
குறிப்பிட்டுள்ளது.
 
அதேவேளை இறந்தவர்களின் சடலங்கள் பொதியிடப்பட்டு நெருங்கிய உறுப்பினர்கள் சடலத்தை பார்ப்பதற்கு வரையறுக்கப்பட்ட காலமே வழங்கப்படும். 
 
பார்வையிடுவதும் மருத்துவமனை வளாகத்தின் உட்புறத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும். உறவினர் க ளுக்கு 
முக வசனங்கள் வழங்கப்படும்
 
இறந்தவரின் முகம் மட்டுமே மூடப்பட்டி ருக்காது. உடலை தொடுவதற்கு அனுமதி வழங்கப்படாது. அதன் பின்னர் சடலம் இறுதிகிரியை மேற்கொள்வோரிடம் கைய ளிக்கப்படும்.
 
பிரேத பரிசோதனை செய்வது தடை செய் யப்பட்டுள்ளது. அத்துடன் இறந்தவரின் இல்லத்திலோ ஏனைய இடங்களில் இறுதி கிரிகைகளை மேற்கொள்வது நோய் பரவுவ தற்கான சாத்தியத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேவேளை சீல் பண்ணிய பூதவு டல் தாங்கிய பேளை மலர்சாலையில் அல் லது இல்லத்தில் சமய கிரியைகளுக்காக மட் டும் வைக்க முடியும். அதேவேளை இறுதி கிரியைகளில் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்க முடியாது
 
இதே வேளை நேற்று   வரை கொரோனா வைரஸ் தொற் றுக்கு 102 பேர் இலக்காகி இருப்பதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 
 
அவர்களில் 2 பேர்  தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஆபத்தான நிலையில் இருவர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 
அதேவேளை நால்வர் குணமடைந்திருப்பதாக சீன சுற்றுலா பணிகள் மட்டுமே மருத்துவ மனையை விட்டு சென்றியிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இலங்கையில் இன்னும் கொரோனா வைரஸ் மரணம் நிகழவில்லை என்பதும் நோய தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்து வெளியேறுவதும்
 ஆறுதலான ஒரு செய்தி.
Link to comment
Share on other sites

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

சைவ சமயத்தவர் இதற்குள் இல்லையா ?🤔

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டில் சில இடங்களில்  இன்றும் ஒரு வழக்கம் உள்ளது.அதாவது கோவில் திருவிழாக்காலங்களில் காப்புக்கட்டினால் வெளி ஊரவரும் உள்ளே வரமுடியாது.உள் ஊரவரும் வெளியே செல்லமுடியாது. சன நெரிசலில் கண்ட கண்ட களிசறைகள் வராமல் இருப்பதற்காகவும் இருக்கலாம். 🧐

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில, முதல் செத்த ஆட்களின் உடல்களை கிளறி எடுத்து, வெட்டி பார்த்து கொரோனா என்ன கூத்து ஆடி, அவையளின்ட உசிரை பறித்தது எண்டு ஆராயினம்  எண்டு  தாரோ அவிச்சு இறக்கிச்சினமே.... அத்தனையும் பொய்யா.... கோபாலு... ச.... சா... கொலம்பான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

 ... சமயத்தை நீங்கள் இப்படி கூறுவது உங்களுக்கு அழகல்ல சாமியாரே.☹️

நல்ல காலம் இலங்கையில் இது நடைமுறையில் இல்லை. அப்படி இருந்தால் தமிழரில் அரைப் பங்கினருக்கு மேல் ஊருக்கு வெளியில்தான் நிற்கவேண்டியிருந்திருக்கும் 😀

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, பெருமாள் said:

ஊரில் எந்த இடம் நீங்கள் ?

வடமராட்சி பக்கம் போவதில்லையோ ?

சில இடங்களில் பகல் பொழுது மட்டுமே வெளியூர் ஆட்க்கள் போய்  வரலாம் .

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

3 minutes ago, Kapithan said:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

இந்து, பௌத்த மதத்தவர் வழமையா பின்பற்றும் சுகாதாரமான முறை!

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, குமாரசாமி said:

வௌவால் வீட்டுக்குள் பறந்தால் தீமை வருமென முன்னோர்கள் சொன்னார்கள்.
அதே போல் இன்றைய வைரஸ்களும் வௌவாலில் இருந்து வருகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கையில் மாம்பழ (பழம்) வெளவால்களை உணவாக உட்கொள்ளும் பழக்கம் உண்டு.  கிராமங்களில் உணவுக்காக இவற்றைப் பிடிக்கும் பொறிமுறையை அவதானித்துள்ளேன்.🤔

Link to comment
Share on other sites

கொரோனா வைரசுகளுக்கு சார்பாக பின்னணி சூழ்நிலைகள் இருக்கேக்க கொரோனா வைரசுகளின் மரண தாண்டவம் தானே மிஞ்சி நிற்கும்.

Link to comment
Share on other sites

On 3/26/2020 at 9:14 PM, Kapithan said:

ஒருமுறை எனது ப்ல்கலைக் கழக  நண்பனுடன் அவரின் சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தேன். சாப்பிட்டுக் களையாறியபின் ஊரைச் சுற்றிப்பார்க்கலாமென்று கிளம்பினோம். மரத்தில் சாத்தியிருந்த துவிச்சக்கர வண்டியை  எடுத்தபோது பக்கத்து வளவிலிருந்த புளியமரதிலிருந்து நண்பனின் வளவிற்குள் நீண்டு வளைந்திருந்த கொப்பில் காய்த்திருந்த புளியம் பிஞ்சு ரெண்டை பறித்து வாயில் போடும்போது நண்பன் பதறியபடி ஓடிவந்து என் கையிலிருந்த புளியம் பிஞ்சுகளைத் தட்டிவிட்டான். நான் அதிர்ச்சியுடன் ஏனடா தட்டினனி என்றேன். 

அவன் சொன்னான் "அது வேற சாதியாட்கள். அந்த பிஞ்சுகளைச் சாப்பிட்டா எங்கள மதியாயினம்"

நான் அதிர்ந்து போனேன். என்ர அதிகைப்பைப் பார்த்துவிட்டு "வாங்கோ அண்ணன். நான் ஊர சுத்திக் காட்டுறன். அதுக்குப்பிறகு உங்களுக்கு எல்லாம் விளங்கும்"

அன்று பார்த்தவை கேட்டவை எல்லாமே என் வாழ்னாள் முழுதும் மறக்க முடியாது.

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

 

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

எப்படி களையலாம் அல்லது எப்படி களைய வேண்டும் என இங்கே உங்கள் அறிவுரைகளை அல்லது ஆலோசனைகளை சொல்லுங்கள். 😎

ஒவ்வொருவரும் நான் சாதி பார்க்கேன் என்று தீர்மானம் எடுத்து நடைமுறைப்படுத்தினால் போயிற்று ! 👍 (தனக்குத்தானே உண்மையாகவிருத்தல்)

1 hour ago, tulpen said:

நீங்கள் கூறிய விடயம் உண்மையான விடயமாயினும் எமது தமிழ் சமூகத்தின் எதிர்மறையான களைய படவேண்டிய  விடயங்களை பற்றி பேசி அவற்றை தவறு என்று நீங்கள்  திரும்ப திரும்பசுட்டிக்காட்டினாலும் அதை எதுவமே நடக்காத்து போல் அதை கடந்து போய்  தமிழரின் வீண் வெட்டி வீரம் பேசுவதை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர. 

உண்மைதான் துல்பன். பல்வேறு நாட்டவருடன் பெண் எடுத்து பெண் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் நம்மவர்களில் பலர் தான் சார்ந்த சமூகத்தில் மட்டும் சாதியும்  சமயமும் பிரதேசமும் பார்க்கத் துணிவர். ☹️

Link to comment
Share on other sites

On 3/26/2020 at 4:14 PM, Kapithan said:

என் சமூகத்தின் மீதான கோபம் அன்றிலிருந்துதான் ஆரம்பமானது.😡

எமக்கு என்று ஒரு சமூகம் இல்லாமல் போய்விட்டதே !  

அப்படி  ஏதும் மிஞ்சி இருந்தால், அதுவும் அடுத்த தலைமுறையுடன் போய்விடும். 
இல்லை, இருப்பதை காப்பாற்றி, வளம்படுத்த  வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலையில் பயிலும் காலத்தில் இதே கேள்வியை என் தகப்பனாரிடம்  கேட்டேன். அவர் கூறியது " தம்பி இதைத் தெரிந்துகொண்டு  என்ன செய்யப்போகிறாய் ? " அன்றிலிருந்து நான் இதைப்பற்றி அலட்டிக்கொண்டதேயில்லை.

சாதியை தெரிந்துகொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது நான் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக் கல்லூரிகளிலொன்றின் மாணவர் விடுதியிலேதான் என் பெரும்பாலான மாணவப் பருவம்  கழிந்தது. எனது பெற்றோர் ஆசிரியர்கள். இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருந்தனர். இறுதியாக தமிழீழத்தின் தலை நகரில். 

எனது பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளர்.

*******

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

பல்கலையில் பயிலும் காலத்தில் இதே கேள்வியை என் தகப்பனாரிடம்  கேட்டேன். அவர் கூறியது " தம்பி இதைத் தெரிந்துகொண்டு  என்ன செய்யப்போகிறாய் ? " அன்றிலிருந்து நான் இதைப்பற்றி அலட்டிக்கொண்டதேயில்லை.

சாதியை தெரிந்துகொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது நான் யாழ்ப்பாணத்தின் முன்ணணிக் கல்லூரிகளிலொன்றின் மாணவர் விடுதியிலேதான் என் பெரும்பாலான மாணவப் பருவம்  கழிந்தது. எனது பெற்றோர் ஆசிரியர்கள். இலங்கையின் பலபாகங்களிலும் கடமையாற்றியிருந்தனர். இறுதியாக தமிழீழத்தின் தலை நகரில். 

எனது பெற்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அதி தீவிர ஆதரவாளர்.

********

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நித்திரையில் இருப்பவனை எழுப்பலாம்.நித்திரை போல் நடிப்பவனை எழுப்ப முடியாது.இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.😁
உங்களுடன் விவாதித்து பயனில்லை.
இன்னுமொன்று....நானும் என் சொந்த பந்தங்களும் இனி  இல்லையென்ற கூட்டணி விசுவாசிகள் தான். ஆனாலும் விவாதங்களுக்கு அது மூலதனம் அல்ல.:)
வணக்கம்.:cool:
 

என்னை நீங்கள் நம்பவேண்டுமென்று நா உங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் நான் எப்போதுமே எனக்கு உண்மையாக இருப்பவன்.😎

*******

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.