Jump to content

இயற்கையே சக்தி தா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையே சக்தி தா!
-----------------------------------------------
காலையைக் கடந்து 
செல்லும் பொழுது
மலர்கள் மலர்ந்திருக்கின்றன
கதிரோன் காலாற நடக்கின்றான்
மனித மனங்கள் வாடியிருக்கிறது
தெருக்கள் வெறிச்சோடியிருக்க
நாயை நடப்பதற்கு 
அழைத்துச்செல்லும் முதியவர்
ஆனந்தமாகப் புகைவிட்டவாறு
சிறியதொரு குளிரோடு
காற்று மெதுவாக வீசுகிறது
வீட்டுக்குள் சிறைப்பட்ட சூழல்
கொறொனாவை இந்த உலகு
வென்று நிமிரும் காலம்
விரைந்து வர வேண்டும்
இயற்கை அதற்கான 
சக்;தியைத் தர வேண்டும்!
ஒடுங்கி மடியும் உலகு
உயிர்பெற்று உயர்வடைய
இயற்கையே சக்தி தா!
உன்னுள் ஒளிந்திருக்கும்
புதிரகன்று புத்தொளி பரவிட
இயற்கையே சக்தி தா!
எல்லையற்று விரிகின்ற
உயிரிழப்பை நிறுத்தும் வகை
இயற்கையே சக்தி தா!
உன்னுக்குள் மகிழ்வாக
வாழ்ந்த மானிடரை
மீண்டெழச் சக்தி தா!
கொறோனோக் கொடுமையைக்
கொன்றொழித்து எழுகின்ற
உறுதிபெறச் சக்தி தா!

உறவுகளே  
நட்புடன்
நொச்சி

25.03.2020
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ கொரோனா உலகை ஆக்கிரமித்து விட்டது. அயலட்டைக்கும்  செல்ல முடியவில்லை, அவர்களும் வர முடியவில்லை.கண்ணுக்கு தெரியாத வலையைப் போட்டுகொண்டு தனித்திருக்கிறோம்.எப்படியும் மீண்டு வருவோம்.இதுவும் கடந்து போகும்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

எப்படியோ கொரோனா உலகை ஆக்கிரமித்து விட்டது. அயலட்டைக்கும்  செல்ல முடியவில்லை, அவர்களும் வர முடியவில்லை.கண்ணுக்கு தெரியாத வலையைப் போட்டுகொண்டு தனித்திருக்கிறோம்.எப்படியும் மீண்டு வருவோம்.இதுவும் கடந்து போகும்.......!

படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி சுவியவர்களே! 

நாளாந்த மரணங்கள் பெரும் கவலையைத் தருகிறது. செய்திகளைப் பார்க்கவே விருப்பமல்லாமல் இருக்கிறது. ஆனால் உலக பெரும் நாடுகள் கூட மனித இறப்புகளைவிட மருத்தவப் போட்டியில் நிற்பதையே காணக்கூடியதாக உள்ளது. பொருளாதாரங்களை இலக்குவைத்துக் கூட்டாக அழிவாயுதங்களோடு களமிறங்கும் நாடுகள் இந்த விடயத்தில் தனித்தனியே நிற்கின்றன. எங்கோ இடிக்கிறது. எல்லாம் இயற்கைக்கே வெளிச்சம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைப்புள்ளிகளால் பாராட்டும் சுவி  அவர்களுக்கும் தமிழ்ச்சிறி அவர்களுக்கும் மற்றும் குமாரசாமி ஐயாவுக்கும் எனது நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2020 at 4:28 PM, nochchi said:

எல்லையற்று விரிகின்ற
உயிரிழப்பை நிறுத்தும் வகை
இயற்கையே சக்தி தா!
உன்னுக்குள் மகிழ்வாக
வாழ்ந்த மானிடரை
மீண்டெழச் சக்தி தா!
கொறோனோக் கொடுமையைக்
கொன்றொழித்து எழுகின்ற
உறுதிபெறச் சக்தி தா!

சாதாரணர்கள் நாம் வீடுறைந்து கணணிகள், தொலைக்காட்சிகள், திறன்பேசிகள், படிப்பான்களில் விழியொட்டி இருக்கும்போது வைத்தியர்கள், தாதியர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனாவை கட்டுக்குள்கொண்டுவர இரவுபகலாக வேலைசெய்கின்றனர். விரைவில் மனிதகுலம் கொரோனாவை வெல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

விரைவில் மனிதகுலம் கொரோனாவை வெல்லும்.

மனிதர்கள் வெல்லுவார்கள். ஆனால் மனிதன் வென்ற பின் அதற்கு தான் உரிமை கொண்டாட ஒருவர் தற்போது நித்திரை செய்து கொண்டு காத்து கொண்டிருக்கிறார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சாதாரணர்கள் நாம் வீடுறைந்து கணணிகள், தொலைக்காட்சிகள், திறன்பேசிகள், படிப்பான்களில் விழியொட்டி இருக்கும்போது வைத்தியர்கள், தாதியர்கள் மருத்துவ விஞ்ஞானிகள் கொரோனாவை கட்டுக்குள்கொண்டுவர இரவுபகலாக வேலைசெய்கின்றனர். விரைவில் மனிதகுலம் கொரோனாவை வெல்லும்.

கருத்திட்டமைக்கு நன்றி.

உண்மை. பல மருத்தவர்கள் தாதிமார் என தமது வாழ்வையே அர்பணித்துவிட்டனர் என்ற செய்திகளும் வருகின்றமையானது கவலைதருவதாக உள்ளது.

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

மனிதர்கள் வெல்லுவார்கள். ஆனால் மனிதன் வென்ற பின் அதற்கு தான் உரிமை கொண்டாட ஒருவர் தற்போது சித்திரை செய்து கொண்டு காத்து கொண்டிருக்கிறார் 😂

கருத்திட்டமைக்கு நன்றி. யார் கடவுளையா சொல்கிறீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

யார் கடவுளையா சொல்கிறீர்கள்? 

அவரை தான் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.