Jump to content

மீன்பிடியில் ஈடுபட்ட எம்மை இராணுவத்தின் மூலம் தடுத்துள்ளனர் - முல்லைத்தீவு மீனவர்கள் குற்றச்சாட்டு


Recommended Posts

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

mullaitheewu.jpg


குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

IMG_4221.jpg


இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை குறித்த தனியார் நிறுவன அதிகாரி பிரதேச இராணுவ அதிகாரிக்கு அழைப்பு மேற்கொண்டு தமது நிறுவனம் அமைந்துள்ள கடற்கரை பகுதியில் மீன்பிடியை மேற்கொள்வதை தடுக்குமாறு கூறி அருகில் இருந்த இராணுவ முகாம் படையினரை ஏவி தம்மை தடுத்ததாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர் .

இந்த நிலைமையை அடுத்து அப்பகுதிக்கு வருகைதந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் தொழில் செய்வதற்கான அனுமதி பத்திரம் போன்றவற்றை பார்வையிட்டு தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தினர்.

IMG_1669.jpg


ஏற்கனவே இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை குறித்த தனியார் நிறுவனம் தமது பணி ஆட்களை ஏவி தாக்குதலை மேற்கொண்டு மீன்பிடியை தடுத்திருந்த நிலையில் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் மீண்டும் மீனவர்கள் தொழிலில் ஈடுபடும் கரையோரங்களை ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த நிறுவனம் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களை புகைப்படம் எடுப்பதும் இராணுவத்தை ஏவி கலைப்பதும் குறித்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மீனவர்களின் உறவினர்களான பெண்களிடம் கடற்தொழில் எமது பகுதி அமைந்துள்ள கடற்கைரையில் உங்கள் உறவினர்கள் மேற்கொண்டால் உங்களை பணியை விட்டு நிறுத்துவோம் என எச்சரிப்பதாகவும் நிறுவனத்தில் வழங்கப்படும் வேலையை காரணம் காட்டி வேலை வேண்டும் என்றால் கடற்தொழிலை செய்வதை இப்பகுதியில் நிறுத்துமாறு குறித்த தனியார் நிறுவனம் சண்டித்தனம் செய்வது ஆண்டாண்டு காலமாக மீன்பிடியையே வாழ்வாதாரமாக கொண்ட எம்மை அடக்கும் செயல் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

IMG_1654.jpg


தாம் தொடர்ந்தும் இப்பகுதியில் தடையின்றி மீன்பிடியில் ஈடுபட இந்த பணபலம் படைத்த தனியார் நிறுவனத்தின் அடாவடியை நிறுத்தி தருமாறு மீனவர்கள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/78654

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு, சிலாவத்தை தியோகுநகர் பகுதியில் இன்று (25)மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை இராணுவம் தடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் ஒன்றினை அமைத்துவரும் கனடாவை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இராணுவத்தை ஏவி தம்மை அச்சுறுத்தி தொழில் நடவடிக்கையை தடுத்ததாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் , இன்று (25) குறித்த தனியார் நிறுவனம் அமைந்துள்ள கடற்கரைக்கு அண்மையாக கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

https://www.thaarakam.com/news/119340

Link to comment
Share on other sites

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

கொரோனா பீதிக்கு பின்னர் நீண்டநாட்களின் பின்னர் இன்றையதினம் கரைவலை மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பிரதேச மீனவர்களை அப்பகுதியில் முகாம் அமைத்துள்ள படையினர் மீன்பிடியில் ஈடுபடவேண்டாம் என தடுத்ததோடு இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட வேண்டும் என்றால் குறுித்த தனியார் நிறுவனத்தின் அனுமதி பெறவேண்டும் எனவும் எமது முகாம் கட்டளை அதிகாரியின் உத்தரவு இது எனவும் தெரிவித்து மீன்பிடியை தடுத்திருந்தனர் .

பாரம்பரியமா மீனவர்கள் மீன்பிடிக்கும் கடலில், கடற்கரையில் இடங்களை அந்த மீனவர் அனுமதியின்றி  எவனும் உரிமை கொண்டாட முடியாது.

குகதாசன் போல சில கனடா பேர்வழிகள் காசை காட்டி சுயலாபங்களுக்காக தமிழனை அழிப்பதில் சொறிலங்கா போர்குற்றவாளிகளுடன் கைகோத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

இந்தக் கண்டிக்கத்தக்க அடாவடியை அந்தப் பகுதியின் அரசியல்வாதிகள் கூட வேடிக்கைபார்க்கிறார்களா?  கடலில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரம்வரை யாருமே உரிமைகொண்டாட முடியாது என்றதொரு விதியும் உள்ளதல்லவா? எனவே இது குறித்துக் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையை உதாசீனம் செய்வதால் எழுந்துள்ள நிலைமையே இதுவாகும். 

புலம்பெயர்ந்தோர் தமது பணபலத்தால் செய்யும் தீமைகளை நிறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

7 hours ago, Vankalayan said:

இதுதான் புலம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மாபெரும் சேவை। தொடருங்கள் உங்கள் சேவையை। உதவி செய்யவிடடாலும் பரவாயில்லை। உபத்திரமாவது செய்யாமலிருந்தால் நல்லது। 

தமிழரிடையே ஓர் உயரிய பண்பாடுள்ளது அதாவது தாங்கள் செய்யும் உதவிகளைப் படம்போட்டுக் காட்டுவதில்லை. வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதவண்ணம் கொடுப்பது.

தமிழர்கள் நிலத்தில் இருந்தாலென்ன, புலத்தில் இருந்தாலென்ன இந்த மரபைப் புறந்தள்ளுவதில்லை.

புறந்தள்ளி வாழ்வதோடு உபத்திரவம் கொடுத்து வாழ்பவர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது, இவர்கள் ஒரு தமிழ் தாய்குப் பிறந்திருந்தாலும், தமிழில் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் அவ்வளவே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.