Jump to content

வீட்டில் தயிர், நெய் செய்யும் முறை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடையில் வேண்டிய தயிர் 5 மேசை கரண்டி எடுத்து முள்ளுக்கரண்டியால் அடித்து fridge க்கு வெளியில் வைக்கவும் (குளிரக்கூடாது). 8 கப் அல்லது அரை gallon பாலை medium heat இல் நல்ல பொங்கி வரும் வரை காய்ச்சவும் (சுண்டக்காச்சினால் நல்ல தயிர் வரும்). இளஞ்சூட்டிலும் பார்க்க கொஞ்சம் அதிகமான சூடாக இருக்கும்போது அடித்த கடை தயிரை பாலுக்குள் ஊற்றி நல்லா கலந்து விடவும். பாத்திரத்தை மூடி இன்னொரு பாத்திரத்தில் தண்ணி கொதிக்க வைத்து அதற்குள் இந்த மூடிய பாத்திரத்தை வைக்கவும். அல்லது மூடிய பாத்திரத்தை oven இல்  வைத்து oven light போட்டு 6 மணித்தியாலம் வைக்கலாம். முதலாவது முறையில் செய்தால் தயிர் கெதியாக வரும்.

Unsalted பட்டர் எடுத்து பாரமான பாத்திரத்தில் medium to Low heat இல் தொடர்ந்து காய்ச்சிக்கொண்டு இருக்கவும். வெக்கை கூடினால் கறுத்து  விடும். 2 pounds பட்டர் காய்ச்ச 15 நிமிடம் எடுக்கும். முதலில் நுரை மாதிரி வந்து வந்து ஆவியாகும் . பிறகு நுரை வருவது நின்று விடும். அதே நேரம் மணல் மாதிரி பாத்திரத்தின் அடியில்  படியத்துடங்கும் . இந்த படிவு மண் நிறமாக இருக்க வேண்டும் கருப்பாக இருக்க கூடாது (நான் நேற்று செய்தது கொஞ்சம் கருகி விட்டது . ஆனால் நெய் பரவாயில்லாமல் வந்தது).  தெளிவாக எண்ணெய் மாதிரி இருக்கும் போது அடுப்பை நிப்பாட்டி பாத்திரத்தை திறந்த படி இளஞ்சூடு வரும் வரை வைத்து கவனமாக எண்ணையை மட்டும் இன்னொரு பாத்திரத்தில் விடவும். அடியில் படிந்தவற்றை  பாவிக்க வேண்டாம் . நல்ல ஆற நெய் கட்டியாகி விடும்.Yogurt.jpgGhee-2.jpgGhee.jpgYogurt1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வீட்டில இருந்து கொண்டு இது தான் நடக்குது போல 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

இப்ப வீட்டில இருந்து கொண்டு இது தான் நடக்குது போல 🤣

🤣நேரம் போகவேணுமே  ரதி . தோட்டமும் துடங்கியாச்சு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் எமக்கு தேவையான.. மிகவும் பயனுள்ள பதிவு. 
வீட்டில் நாமே..தயிர், நெய்  போன்றவற்றை தயாரித்து உண்ணும் போது,
மனதிற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கும். 

நன்றி நில்மினி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nilmini said:

 அரை gallon பாலை

என்ன விதமான பால் பாவிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன விதமான பால் பாவிக்கிறீர்கள்?

Nonfat , 2% , full cream  எல்லாமே முயற்சித்து பார்த்திருக்கிறேன். கொஞ்ச வித்தியாசம்  தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

Nonfat , 2% , full cream  எல்லாமே முயற்சித்து பார்த்திருக்கிறேன். கொஞ்ச வித்தியாசம்  தான். 

20 வருடத்துக்கு மேலாக 2% தான் பாவிக்கிறது அதனால் கேட்டேன்.
செய்முறைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

20 வருடத்துக்கு மேலாக 2% தான் பாவிக்கிறது அதனால் கேட்டேன்.
செய்முறைக்கு நன்றி.

கடை தயிரில் நிறைய albumin சேர்ப்பார்கள். அதானல் ருசியும் குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2020 at 11:33 PM, தமிழ் சிறி said:

அன்றாடம் எமக்கு தேவையான.. மிகவும் பயனுள்ள பதிவு. 
வீட்டில் நாமே..தயிர், நெய்  போன்றவற்றை தயாரித்து உண்ணும் போது,
மனதிற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும் இருக்கும். 

நன்றி நில்மினி. :)

நெய்யும் தயிரும் உடலுக்கு மிகவும் நல்லது சிறி. கடை தயிரில் நிறைய ஆல்புமின் இருப்பதால் வீட்டில் செய்வதுதான் நல்லது. கோரோனோ வைரஸ் உடன் எப்படி வாழ்க்கை போகிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு சுண்டக்காய்ச்சிய பாலுக்கு பழைய தயிரில் சிறிதளவு சேர்த்தாலே காலையில் கெட்டியான தயிர் வந்திடுமே!

தயிரை கடைந்து உருவாக்கும் நெய் தான் நல்லது என்றும் சூடாக்கி எடுப்பது கூடாது என்றும் வாசித்த நினைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.