Jump to content

காசா லேசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

04-BEC683-71-A9-4031-AB11-E27-E14579194.

வட்டி, சீட்டு இரண்டுமே அவருக்கு பிரதான தொழில்கள். அவரை நேற்றைக்கு முதல் நாள் சந்திக்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்குப் பாதுகாப்பாக அவரிடமிருந்து  தள்ளியே நின்றேன்.

 “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு  கஸ்ரம் வரப் போகுதுஎன்றார்

“எங்கடையாக்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்தான் கஸ்ரம்என்றேன்

“நான் சொல்லுறது வேறை

என்ன? என்பது போல் அவரைப் பார்த்தேன்.

“இஞ்சை கனபேர் தகுதிக்கு மேலை காணிகளோடை பெரிய வீடுகள் வேண்டி வைச்சிருக்கினம். அதுக்கு காசு கட்டிறதுக்காகவே  இரண்டு மூண்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவையள். இப்ப கொரோனாவாலை ஒரு வேலையே செய்ய முடியாத நிலை. அவையின்ரை பாடு ததிக்கிணதோம் தான்

“இந்த வேலைப் பிரச்சினைக்கு உதவுறதுக்காகத்தானே யேர்மன் அரசாங்கம் ஞாயமான  காசு ஒதுக்கியிருக்கு

“அதென்ன சம்பளத்திலை அறுபது வீதம்தானே. அதெங்கை காணப் போகுதுவருவினம். ராசாண்ணை காசு தேவைப் படுகுது எண்டு கேட்டுக் கொண்டு என்னட்டைத்தானே வருவினம்.

கொஞ்சப்பேர் வீட்டுக்குக் காசு கட்டேலாமல் வீட்டை வித்தாலும் விப்பினம். அதிலை ஒண்டிரண்டை அமத்திப் போடோணும்

அவரைச் சந்தித்ததில் இருந்து, “ஊசி முனைக் காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி கட்டையிலும் வேகாதடிஎன்ற பாடல்தான் இரண்டு நாட்களாகக் காதுக்குள் கேட்டுக் கொண்டிருக்கிறது

 

Link to comment
Share on other sites

5 minutes ago, Kavi arunasalam said:

“இந்த வேலைப் பிரச்சினைக்கு உதவுறதுக்காகத்தானே யேர்மன் அரசாங்கம் ஞாயமான  காசு ஒதுக்கியிருக்கு

"கையில்" காசுக்கு வேலை செய்து வீட்டு அடைமான கட்டுப்பணத்தை செலுத்தியவர்கள் பாடும் அம்போ தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

 “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு  கஸ்ரம் வரப் போகுது

கிம்பளத்தை நம்பி சீட்டுக்கட்டினவன் எல்லாருக்கும்  அரோகரா...
கிம்பளத்தை நம்பி வட்டிக்கு காசு வாங்கினவனுக்கும் டபுள் அரோகரா..

Bildergebnis für kovanam

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.