Jump to content

நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குள் எவ்வாறு வைரஸ் புகுந்தது?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 மார்ச் 25

இலங்கை ஒரு தீவு. இங்கிருந்து வெளியே செல்லவும் உள்ளே வரவும், ஒரே ஒரு பிரதான வழி தான் இருக்கிறது. அது தான் கட்டுநாயக்க விமான நிலையம். தவிர, மத்தல, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்கள், கப்பல்கள் வரும் சில துறைமுகங்கள் ஆகியன இருந்த போதிலும், இவற்றின் மூலம் மிகச் சிலர் மட்டுமே வருகின்றனர். இவற்றையும் கணக்கில் எடுத்தாலும், பொதுவாக நாட்டுக்குள் நுழைவதற்காக மிகச் சில வாயில்களே இருக்கின்றன. எனவே, வருபவர்களை மிக இலகுவாகக் கண்காணிக்கலாம்.  

ஆனால், வேறு நாடுகளுடனான நில எல்லைகள் இருக்கும் நாடுகளில், அவ்வாறு நாட்டுக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது மிகவும் கடினமாகும். உதாரணமாக, நேபாளத்திலிருந்து வெளியேற, 15 பிரதான வீதிகள் இருக்கின்றன. அவற்றில், 13 வீதிகள் இந்தியாவுக்கான வீதிகளாகும்.  

இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மதிற்சுவரோ, வேலியோ போடப்பட்டு மூடப்படவில்லை. எனவே, அந்தப் பிரதான வீதிகளுக்குப் புறம்பாக, திருட்டுத்தனமாக நேபாளத்திருந்து இந்தியாவுக்கும் இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கும் நுழையும் பல வழிகள் இருக்கின்றன. 

image_dca8ebacca.jpg

மெக்சிகோவிலிருந்து கள்ளத்தனமாக, பல மெக்சிக்கோகாரர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதாகக் குற்றஞ்சாட்டியே, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், இரு நாடுகளுக்கும் இடையில் மதிற்சுவர் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார்.  

இலங்கைக்குள் நுழைவதற்காக, அவ்வாறான வழிகள் இல்லாததாலும் இருக்கும் சட்டபூர்வமான வழிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருப்பதாலும், இலங்கைக்குள் வருபவர்களைக் கண்காணிப்பது இலகுவாக இருந்த போதிலும், கொரோனா வைரஸால் உலகமே அச்சுறுத்தப்பட்டு, இருந்த நிலையில், அந்த வைரஸ் தாக்கியவர்கள் பலர், நாட்டுக்குள் நுழைந்து, பலருக்கு அந்த நோயை எவ்வாறு பரப்பினார்கள்?   

இலங்கையின் சுகாதாரத் துறையினரும், கொள்கை வகுப்பாளர்களும் இந்த விடயத்தில் கோட்டை விட்டுள்ளார்கள் என்பதையே இது காட்டுகிறது.  

ஜனவரி மாதம் 27 ஆம் திகதி, இலங்கையில் முதலாவது கொவிட்-19 நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். சீனப் பெண்ணான அவர், அடையாளம் காணப்பட்டவுடன், மக்கள் முகமூடி அணிய ஆரம்பித்தனர். ஓரிரு நாள்களிலேயே கடைகளில் முகமூடிகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.   

அதாவது, மக்கள் அந்நோயின் பாரதுரத்தன்மையை அப்போதும், அறிந்து இருந்தார்கள். ஆனால், சுகாதார அதிகாரிகள், “முகமூடிகள் இப்போதைக்குத் தேவையில்லை” என்று கூறியதாலும், கடைகளில் முகமூடிகள் இல்லாதமையாலும், பிரத்தியேகமாக அக்கறை செலுத்தத் தவறிவிட்டனர்.  

சீனப் பெண், கொவிட்-19 நோயாளி என அடையாளம் காணப்பட்டமையானது, சுகாதாரத் துறையினருக்கு, ஓர் எச்சரிக்கைச் செய்தியைக் கூறியது. அதாவது, வைரஸ் காவிகள், நாட்டுக்குள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதே ஆகும்.   

ஆனால், எங்கே பிழைவிட்டோம் என்று பார்க்க, அதிகாரிகள் முற்படவில்லை. எந்தவொரு வெளிநாட்டவரும், தடையில்லாமல் நாட்டுக்குள் வரக்கூடிய நிலைமை தொடர்ந்தது.   

நோய் வேகமாகவும் பரவலாகவும் பரவியிருந்த சீனாவிலிருந்து வருவோரும், கண்டிப்பான முறையில் தனிமைப்படுத்தப்படவில்லை.  

அவர்கள், இலங்கையில் தாம் தங்கும் இடங்களிலேயே 14 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என, அரசாங்கம் அறிவித்தது. அவர்கள், உண்மையிலேயே உரிய முறைப் படி தனிமைப்பட்டு இருந்தார்களா என்பதை, உறுதி செய்து கொள்ள முறையான பொறிமுறையொன்று இருக்கவும் இல்லை.  

மார்ச் மாதம் நடுப்பகுதி வரை, அந்த நிலை நீடித்தது. அப்போது இத்தாலி, தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளில், கொவிட்-19 நோய் வேகமாகப் பரவிக் கொண்டு இருந்தது. அந்த நாடுகளில் இருந்து பலர், இலங்கைக்கு வருகை தந்து கொண்டும் இருந்தனர்.   

ஆனால், அவர்களிடமிருந்து இலங்கையில் உள்ளவர்களுக்கு நோய் பரவாது என்பதைப் போன்றதோர் மனப்பாங்கிலேயே, இலங்கை அதிகாரிகள் நடந்து கொண்டனர்.  

மார்ச் மாதம் 11 ஆம் திகதி, இலங்கைப் பிரஜை ஒருவரைக் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவர், உல்லாசப் பிரயாணிகளுக்கு வழிகாட்டும் ஒருவர்; மறுநாள், அந்த நபரது நண்பரொருவரும் வைரஸால் தாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.   

அடுத்த நாள், மேலும் மூன்று கொவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் பழகியவர்கள் என்பதும் தெரிய வந்தது. அப்போது தான், அரசாங்கம் விழித்துக் கொண்டது.  

நோயுள்ளவர்கள் நாட்டுக்குள் வந்தால் மட்டுமே, நாட்டுக்குள் வைரஸ் பரவலாம்; உள்நாட்டவர்கள் நோய்வாய்ப்படலாம். ஏனெனில், ஏனைய நோய்களைப் போலன்றி, இந்த நோயின் காவி மனிதனே.   

உள்நாட்டவர்களை நோய் தாக்குவதாக இருந்தால், வெளிநாடுகளிலிருந்து நோய்க் காவிகள், விமான நிலையப் பாதுகாப்புக் கடவைகளை மீறி, உள்ளே சென்றிருக்கிறார்கள் என்பதற்கு இது ஆதாரமாகும். அதாவது, மேலும் பலரும் நோய்க்கு இரையாகி இருக்கலாம்.  

இதையடுத்தே, அரசாங்கம் வெளிநாட்டிலிருந்து வருபவர்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்தது. முதலாவதாக, சீனாவை அடுத்து, மிகவும் கூடுதலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இத்தாலி, தென் கொரியா, ஈரானிலிருந்து வருவோரை மட்டும், தனிமைப்படுத்தும் மய்யங்களுக்கு அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்படடது.   

இதுவும் விந்தையான நடவடிக்கையாகும். ஓரிரு நோயாளர்கள் இருக்கும் நாடொன்றிலிருந்து வருபவர் ஒருவர், நோய்க் காவியாக இருக்க முடியாதா? அவ்வாறானவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பத் தேவையில்லையா? தேவையில்லை என்றே அரசாங்கம் கருதியது.  

மார்ச் 14, 15, 16, 17 ஆகிய நாள்களில், இலங்கையில், தொடர்ச்சியாகப் புதிதாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை முறையே, 05, 08, 10, 15 என அதிகரித்துக் கொண்டே போகும் போது தான், அரசாங்கம் தாம் விட்ட சில பிழைகளை உணர்ந்தது.  

அதன்படி, மார்ச் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை, வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில், தமது பெயரைப் பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டது.  

அவர்கள், எவரெவருடன் பழகினார்கள் என்பது, அதன் பின்னரே ஆராயப்பட்டது. அவர்கள் அதற்குள், ஆயிரக் கணக்கானவர்களுடன் பழகியிருப்பார்கள். அவர்கள் வைரஸ் காவிகளாக இருந்திருப்பின், அவர்கள் மேலும் பலருக்கு அவற்றைப் பரப்பி இருப்பார்கள்.   

இவ்வாறு வைரஸ் தொற்றியவர்கள் தான், இப்போது நாளாந்தம் நோயாளராகக் கண்டறியப்படுகிறார்கள். குறைந்த பட்சம், மார்ச் முதலாம் திகதி, நாடு திரும்பியவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு முன்னரே, அவர்களை ஏதாவது ஒரு முறையில் தனிமைப்படுத்தி இருந்தால், நாட்டுக்குள் நோய் பரவுவதைப் பெருமளவில் குறைத்து இருக்கலாம்.   

இலங்கை, தீவொன்றாக இருப்பதன் பயனை நாம் அடையவில்லை; இன்னமும் சீனர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இல்லை.  

பொது மக்களும் இந்தத் தனிமைப்படுத்தலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான், நாம் முன்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர், தனிமைப்படுத்தலை விரும்பாமல், தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் வசிக்கும் இடங்களுக்குச் சென்றார்கள்.   

அவர்களது மனைவி, பிள்ளைகள், பெற்றோரும் அவர்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறாமல், அவர்களை வரவேற்றார்கள். 

வேறு சிலர், நிலைமையைப் புரிந்து கொள்ளாமல், தமது பிரதேசத்தில் தனிமைப்படுத்தும் நிலையங்களை நிறுவ வேண்டாம் எனப் போராட்டம் நடத்தினார்கள்.  

மார்ச் மாதம் 11 ஆம் திகதி முதல், நாளாந்தம் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு, மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு, சுகாதார அதிகாரிகள் மக்களை அறிவுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையிலேயே, நாட்டின் பாடசாலைகளுக்கு இடையிலான மிக முக்கிய கிரிக்கெட் போட்டியாகக் கருதப்படும் றோயல்- தோமியன் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியைப் பார்க்கச் சென்ற ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது, ஓரிரு நாள்களுக்குப் பின்னர் தெரிய வந்தது.  

image_2fbed9beb2.jpg

தாம், இந்தப் போட்டியை நடத்த வேண்டாம் எனப் போட்டி அமைப்பாளர்களுக்கு அறிவித்ததாகவும், ஆனால், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் போட்டியை நடத்தி இருக்கிறார்கள் என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கொவிட்-19 நோய் நிலைமை பற்றி, நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட செய்தியொன்றில் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்தக் கூற்று, நாட்டில் முக்கிய பிரமுகர்களும் நிலைமையின் பாரதுரத் தன்மையை உணரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.  

இந்த கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டாம் என, ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவிக்காமல், அதைத் தடை செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?   

நாட்டு நிலைமை, அவ்வாறானதொரு போட்டியை நடத்துவதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை, உணர்ந்தமையாலேயே அவர் அதை நடத்த வேண்டாம் எனக் கூறியிருக்கிறார். அவ்வாறாயின், அதைச் சட்டப்படியே தடை செய்யாதது ஏன்?  

எல்லாவற்றையும் ஜனாதிபதியே செய்ய வேண்டுமா, ஜனாதிபதியின் ஆலோசனையின் படியே தான் செய்ய வேண்டுமா?  

அமைச்சர்களான பவித்திரா வன்னியாரச்சி, டலஸ் அலகப்பெரும ஆகியோரது கருத்தைப் பார்த்தால், ஜனாதிபதியின் ஆலோசனை இல்லாமல், அவர்கள் எதையும் செய்வதில்லைப் போல்த் தான் தெரிகிறது. எதற்கெடுத்தாலும், “அதி மேதகு ஜனாதிபதியின் ஆலோசனையின் படி” என்றுதான் அவர்கள் கூறிவருகிறார்கள்.   

ஆனால், இந்தக் கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரையில், ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தும், சுகாதார அமைச்சரோ, விளையாட்டுத்துறை அமைச்சரோ அதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை; ஏன்?   

அத்தோடு, இந்தப் போட்டியின் அமைப்பாளர்கள் படிக்காதவர்கள் அல்லர். அவர்கள், இந்தப் போட்டியை நிறுத்த வேண்டும் என, ஏன் நினைக்கவில்லை? இது, சாதாரண இரு பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியாக இருந்தால், ஜனாதிபதி வெறுமனே கருத்துத் தெரிவித்துவிட்டு, அமைதியாக இருந்திருப்பாரா? 

அமைச்சர்கள், அதிகாரிகள் போட்டியை நடத்த விட்டு இருப்பார்களா? போட்டி அமைப்பாளர்களும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்த பின்னர், போட்டியை நடத்தத் துணிந்திருப்பார்களா?  

அரசாங்கமும் அதிகாரிகளும், கொரோனா வைரஸ் பிரச்சினையை எந்தளவு பாரதுரமாகக் கணக்கில் எடுத்துள்ளார்கள் என்பதைக் காட்டும் முக்கியமான நிகழ்வாக, இந்தப் போட்டியும் அமைந்துள்ளது. 

பொது மக்களும் சரியாக நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை. எனவே, மக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் முதலில் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கிய போது, பலர் அந்த விடுமுறையைப் பாவித்து, உல்லாசப் பயணங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்; சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றிருந்தார்கள்.  

மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல், இன்று வரை இலங்கையில் கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நாளே இல்லை. நோய் பரவும் நிலைமை, வழமை நிலைமைக்குத் திரும்பி வருவதாகவும் கூற முடியாது.   

சில நாள்களில் சுமார் ஐந்து நோயாளர்கள் கண்டறியப்பட்ட போதிலும், சில நாள்களில் அந்த எண்ணிக்கை ஒன்பதாகவும் பத்தாகவும் அதிகரித்திருந்தது. புதன்கிழமை (25) நோயாளர் எண்ணிக்கை 102ஐத் தாண்டி இருந்தது; அவர்களில் இருவரது நிலைமை மோசமாகவும் இருந்தது. 

உலகில் பல செல்வந்த நாடுகளே, கொரோனா வைரஸ் தாக்குதலால் செய்வதறியாது தடுமாறுகின்றன. இந்த நிலையில், வெளிநாட்டுக் கடனில் தங்கியிருக்கும் இலங்கை, மிக ஆபத்தான நிலையில் இருப்பதைச் சகலரும் உணர வேண்டியிருக்கிறது.  பொறுப்புடன் நடந்து கொள்ள, எமது அகம்பாவம் சில வேளைகளில் இடங்கொடுக்காவிட்டாலும், அவ்வாறு நடந்து கொள்ள நாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.   
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நாட்டுக்குள்-எவ்வாறு-வைரஸ்-புகுந்தது/91-247425

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

வெளிநாட்டுக் கடனில் தங்கியிருக்கும் இலங்கை, மிக ஆபத்தான நிலையில் இருப்பதைச் சகலரும் உணர வேண்டியிருக்கிறது.  

இந்த விடயத்தை நாங்க சொன்னால் கொஞ்சப்பேர் கம்பு சுத்த வருவினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த விடயத்தை நாங்க சொன்னால் கொஞ்சப்பேர் கம்பு சுத்த வருவினம் .

https://thediplomat.com/2019/03/what-sri-lankas-2019-budget-tells-us-about-its-economic-health/

What Sri Lanka’s 2019 Budget Tells Us About Its Economic Health

In the aftermath of political turmoil, Sri Lanka’s government will be hard-pressed to manage debt and growth in 2019.

By Umesh Moramudali
What Sri Lanka’s 2019 Budget Tells Us About Its Economic Health
Credit: Pixabay

Following one of the most dramatic political crises in the recent history of South Asia, Sri Lanka’s government budget for 2019 was approved by the majority of the parliament on March 12. The 2019 budget was supposed to be presented to the parliament in November 2018, but President Maithripala Sirisena’s unexpected (and later overturned) decision to change prime ministers in October 2018 pushed back the budget. Later, a Vote of Account was passed by the parliament to provide finances until the budget could be presented in March.

The political turmoil, which surrounded the country with great uncertainty, took a toll on the economy. With the rising political instability in light of the fall 2018 constitutional crisis, three agencies downgraded Sri Lanka’s credit rating.

On top of that, economic growth in the fourth quarter of 2018 dipped down to 1.8 percent from 3.2 percent reported in 2017. Although the entire reduction of quarterly growth cannot be attributed to the political crisis, it is quite clear that a very significant portion of the slowdown was a result of the political instability. This resulted in the annual growth rate growing just slightly, reaching 3.2 percent in 2018 from 3.1 percent in 2017. Economic growth continues to be stagnant. This year expected growth is 3.5 percent, rising to 4.0 percent in 2020. Amid this outlook the government will seek to bring down Sri Lanka’s budget deficit to 4.4 of GDP in 2019 and 3.5 percent in 2020 to fulfill pledges made the IMF when the country obtained financial support to resolve a balance of payment crisis in 2015.

Budget Challenges

The 2019 budget was prepared amid this challenging economic environment, and reflects a variety of sometimes conflicting goals. First, the government feels the pressure to boost the country’s growth rate, which has been low for the last few years. Second, and related, the government must try to boost its popularity in light of the presidential and parliamentary elections due in 2020. In addition, the government is compelled to decrease macreconomic instability by reducing the budget deficit; increase tax revenue and the tax base; and rationalize expenditures as a part of its promises to the IMF. On top of all that, the government is supposed to manage massive debt repayments due in 2019 and 2020.

Enjoying this article? Click here to subscribe for full access. Just $5 a month.

thediplomat-fig-1.jpg

Data from Sri Lanka budget estimates and the Department of Treasury.

According to the budget estimates, the Sri Lankan government expects to reduce the budget deficit to 4.4 percent of GDP in 2019 from the 5.3 percent ratio recorded in 2018 and subsequently reach a budget deficit of 3.5 percent of GDP in 2020, in line with the agreements with the IMF. However, as ambitious the targets are, recent experience suggests that meeting budget deficit targets are very tough; more often than not the government has failed to achieve such goals. In 2018, the budget deficit target was 4.8 percent of GDP but Sri Lanka ended up recording a deficit of 5.3 percent, largely  due to a failure to increase tax revenue up to the targeted level.

The consistent failure of the government to meet budget deficit targets is largely due to issues regarding tax revenue. Over the last two decades or so, Sri Lanka’s tax revenue-to-GDP ratio has become among the lowest in the world.  In 2014, the tax-to-GDP ratio dipped down to 10.1 percent; since then, numerous efforts were put toward increasing tax revenue. Thanks to that focus, tax revenue increased to 12.6 percent of GDP in 2017. However, the tax revenue-to-GDP ratio saw another slight decline in 2018 as it fell to 11.9 percent, largely due to the reduction of tax revenue from external trade. However, the government is optimistic that it can raise tax revenue to 13.3 percent of GDP in 2019 and meeting the budget deficit target of 4.4 percent would largely depend on achieving that. Though it may seem an overly optimistic target, the government might be able to pull it off if the recently introduced Inland Revenue Act results in a significant increase of income tax collection.

thediplomat-fig-2.jpg

Data from the Sri Lankan Department of Treasury and the World Bank.

New Income Tax Laws

To stem the consistent fall of the tax revenue-to-GDP ratio in Sri Lanka, the government introduced a new Inland Revenue Act in 2017 with the major aims of increasing the income tax net, simplifying the tax system, and moving toward a more progressive taxation system. The Act came into effect in April 2018 and increases the general corporate tax rate to 28 percent in addition to the rationalization of tax exemptions provided for both corporate income and employment income. Due to this, it is fair to assume that the revenue generated through income tax will increase considerably.

However, Sri Lanka’s taxation system is very regressive, like in most developing countries, and only about 20 percent of the tax revenue is generated through income tax. Almost 80 percent of the government revenue is generated through taxes on goods and services such value-added tax, custom duties, and excise duties. This means that a large portion of the tax burden is borne by the common people, and those who are rich pay a relatively lower share of their income as taxes. The heavy reliance on taxes on external trade is largely due to the large informal sector of the Sri Lankan economy and a strong industry lobbying to keep up high levels of protectionism by imposing taxes on imports.

thediplomat-fig-4.jpg

Less than 20 percent of the total tax revenue of Sri Lanka is raised through income taxes. Data from 2019 budget estimates.

Progressive steps such as the introduction of a new Inland Revenue Act and the adoption of new technology by the Inland Revenue Department may help to overcome the issue of taxing the informal sector and increase the tax base, but it will take some serious political effort to reduce taxes on the external sector without being influenced by domestic industry lobbying.

Sri Lanka’s Debt Crisis

Enjoying this article? Click here to subscribe for full access. Just $5 a month.

However, a budget is about not only balancing taxes, spending, and growth. In Sri Lanka, public debt repayments have become the largest element of government spending and the amount keeps getting bigger and bigger. In 2017, government spending on health and education was 1.5 percent and 1.9 percent of GDP, respectively, while government spending on debt repayments was 4.8 percent.

thediplomat-fig-3.jpg

Data from the Central Bank of Sri Lanka and World Bank.

The significant rise of the debt repayments is largely due to the increase of foreign commercial borrowing from international capital markets. Sri Lanka entered international capital markets in 2007 with its first international sovereign bond issue worth $500 million. Since then the country has issued international sovereign bonds more than 10 times. This has resulted in not only a significant rise of debt repayment, also increased Sri Lanka’s vulnerability to facing balance of payment crises.

The 2019 budget is very crucial from a debt management point of view, largely due to the massive debt repayments starting from 2019 due to the maturity of sovereign bonds. Debt repayments amounting to $5 billion will come due between 2019-2022 as bonds issued about a decade ago mature. $1.5 billion in sovereign bonds will mature this year; another $1 billion each in 2020 and 2021, and an additional $1.5 billion in 2022.

Nonetheless, Sri Lanka was able to pay the debt installments due in January 2019 due to sovereign bond maturity without much hassle, largely thanks to the good practices carried out by the Central Bank in foreign reserve management over the last year. Despite the significant drop of the exchange rate throughout 2018, Central Bank intervention to the exchange rate market was very limited. On top of that, the country has been receiving financial assistance as per an agreement between Sri Lanka and the IMF to receive an Extended Fund Facility (EFF). With these policies, the country was able to maintain a sufficient level of foreign reserves and successfully settled the sovereign bonds, worth $1 billion, that matured in January.

The 2019 budget has to manage these massive debt repayments even while reducing the budget deficit and lifting up growth. Large debt repayments mean that the government has to cut other expenditures or raise tax revenues significantly to reach the budget deficit target of 4.4 percent of GDP in 2019.

The government has done well in terms of fiscal consolidation in the last few years. Sri Lanka was able to achieve a primary surplus in its government budget of 0.6 percent of GDP in 2018. However, growth was still stagnant and the government will need to increase it and showcase some development, given the two big elections due next year. By this time in 2020, we will know how politically and economically successful this year’s budget was.

Umesh Moramudali served as a journalist and a columnist in a national newspaper in Sri Lanka for five years before pursuing a Master’s of Economics at the University of Warwick.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.