Jump to content

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்; - மூன்று நாட்களில் 35000 பேர் வேலையை இழந்தனர்- இதுவரை 12 பேர் பலி

1

அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று நாட்களில் 35000 பேர் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கசினோக்கள் விமானசேவைகள் வர்த்தக நிலையங்கள் போன்றன  பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளன.

புதன்கிழமை  வெர்ஜின் அவுஸ்திரேலியா விமானசேவை 8000பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.

கசினோ நிறுவனமான ஸ்டார் என்டர்டெய்மன்ட் 8100 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

virgin_1_australia.jpg

வெஸ்ட்பக்கின் பிரதம பொருளியல் நிபுணர் பில் இவான்ஸ் ஜூன் மாதத்திற்குள் 814,000 பேர்  வேலைகளை இழப்பார்கள் என  தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரசினால் தாங்கள் பாதிப்பை  எதிர்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலியாவின் பல வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

2

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12

australia_nurses_1.jpg

அவுஸ்திரேலியாவில் கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 68 வயது கொவிட் நோயாளியொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு முன்னரே பல நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார் என குயின்லாந்தின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த இருவர்  70 வயதினை தாண்டியவர்கள் என விக்டோரியாவின் பிரதம சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

3

காவல்துறைக்கும் பாதிப்பு

australia_polce.jpg

கொரோன வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் 200 ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

200 காவல்துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என விக்டோரியாவின் காவல்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளை விக்டோரியாவில் காவல்துறையினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என காவல்துறையினரின் சங்கம் தெரிவித்துள்ளது.

விக்டோரியாவில் போதியளவு முகக்கவசங்கள் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன ஆனால் அவற்றை காவல்துறையினருக்கு வழங்கவில்லை என சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் விக்டோரியா காவல்துறை இதனை நிராகரித்துள்ளதுடன் போதியளவு உபகரணங்கள் உள்ளன அவற்றை தேவைக்கேற்ப விநியோகிப்போம் என குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்கொண்டுள்ளனர் என சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது உறுதியானலோ உடனடியாக காவல்நிலையத்தையும் வாகனங்களையும் சுத்தம் செய்கின்றோம் என விக்டோரியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4

விக்டோரியாவின் சமூக  தனிமைப்படுத்தல் கொள்கையை மீறி சிட்னி விமானநிலையத்தில் பெருமளவானவர்கள் நெருக்கமாக காணப்படுவதை காண்பிக்கும்; வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

sydneyb_airporyt.jpg

சிட்னியில் இன்று காலை இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறிப்பிட்ட வீடியோவில் பலர் நெருக்கமாகயிருப்பதை காணமுடிந்துள்ளது.

வீடியோவை பதிவு செய்துள்ள நபர் பயணிகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

5

அவுஸ்திரேலியா தன்வசம் உள்ள முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு கவசங்களின் கையிருப்பை பேணுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

australia_corona.jpg

அவுஸ்திரேலியாவில் இயங்கும் முகக்கவசங்கள் உட்பட பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் சீனா நிறுவனம்  தனது உற்பத்தி பொருட்களை சீனாவிற்கு மாத்திரம் அனுப்பிவருவதை தொடர்ந்து அவுஸ்திரேலிய மருத்துவர்கள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/78671

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பார்வையில் அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ்- நாட்டிற்குள் நுழையும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் - பிரதமர் அறிவிப்பு- வர்த்தகர்களை காப்பாற்ற புதிய திட்டம்-

1

அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரும் இரண்டு வாரங்களிற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் இந்த விதிமுறைகள் அமுலிற்கு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு திரும்பும் அவுஸ்திரேலியர்களை கையாள்வதில் நாங்கள் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

australia_airport.jpg

அவுஸ்திரேலியாவிற்கு திரும்பும் அனைவரும் ஹோட்டல்களில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய மாநில அரசாங்கங்கள் இதனை அமுல்படுத்தவுள்ள, பாதுகாப்பு தரப்பினரினதும் காவல்துறையினரினதும் உதவி நாடப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் வீடுகளிற்குள் தங்கியிருந்ததன் மூலம் பல அவுஸ்திரேலியர்கள் பலரின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர்,வாழ்வாதாரத்தை காப்பாற்றியுள்ளனர்  ஸ்கொட்மொறிசன் தெரிவித்துள்ளார்.

தாஸ்மேனியாவில் வசிக்குமட் ஒருவர் மெல்பேர்ன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்தால் அவர் மெல்பேர்னிலேயே தங்கியிருக்கவேண்டும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

2

அவுஸ்திரேலியாவின் ஒவ்வொரு பிரஜையும் ஒவ்வொரு நிமிடமும் சமூக தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என தலைமை மருத்துவ அதிகாரி பிரென்டன் மேர்பி தெரிவித்துள்ளார்.

3000__1_.jpg

வீடுகளில் இருந்து பணியாற்றுங்கள்,தேவையென்றால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் வணிக வளாகத்திலேயே வாகனத்தரிப்பிடத்திலேயே நண்பர்களுடன் சேர்ந்து நிற்காதீர்கள்  சமூக தனிமைப்படுத்தல் கைசுத்தம் ஆகியவற்றை பயன்படுத்துங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்குள் பரவுதல் குறித்தே நாங்கள் உன்னிப்பாக அவதானித்த வண்ணமுள்ளோம் விதிமுறைகளை மீறுவதற்கு எவருக்கும் அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

3

அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தை செயல்அற்ற நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் குறித்து அரசாஙகம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

scot_morrison.jpg

கொரோனா வைரசின் பின்னர் மீண்டும் வர்த்தகங்கள் கடனின்றி மீள்வதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது.

வர்த்தக உரிமையாளர்கள் கடனால் பாதிக்கப்படாத நிலையை உறுதி செய்வதற்கான திட்டத்தினை அவுஸ்திரேலியா உருவாக்கி வருகின்றது

வங்கிகள், நிதி வழங்குநர்கள், சொத்து உரிமையாளர்கள் அனைவரும் சிறிது காலத்திற்கு கடினமான நிலையை சகித்துக்கொள்ளுமாறு கேட்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன

அடுத்த ஆறு மாதங்களிற்கு வாடகைகள் குத்தகைள் போன்றன தள்ளுபடி செய்யப்படவுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இன்று அது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கைகளை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களின் சுகாதார நோக்கங்களின் அடிப்படையிலும் பொதுமக்கள் மீதான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்துடனும் இதனை முன்னெடுக்க விரும்புகின்றோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொருளாதார அடிப்படையிலான தாக்கங்கள் குறித்து நாங்கள் சிந்திக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

4

மேற்கு அவுஸ்திரேலியாவில் பெண்மணியொருவர் தனிமைப்படுத்தப்பட்டு;ளார் என  மாநிலத்தின் தனிமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

14 நாட்களின் பின்னர் அவர் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எந்த சூழ்நிலையில் அவர் பாதிக்கப்பட்டார் என்ற விபரத்தினை அதிகாரி வெளியிடவில்லை.

corona_austra_4.jpg

5

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு;ள்ள அச்சநிலையை இணைய வழி மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆபத்தான இணைப்புகளை அழுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கின்ற போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்கள் குறித்து அவுஸ்திரேலியாவின் சைபர் பாதுகாப்பு நிலையம் எச்சரித்துள்ளது.

வந்திருக்கும் செய்தியை கவனமாக வாசியுங்கள், சரியானதாக தென்படாத எதனையும் உன்னிப்பாக அவதானியுங்கள் என சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/78728

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அவுஸ்திரேலிய மக்களின் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆனால் சமூக விலக்களை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளி Bondi(NSW) கடற்கரையிலும், இன்று St.Kilda(VIC) கடற்கரையிலும் கூடியவர்களைப்பார்த்தால் சமூகவிலக்களை பின்பற்றுபவர்களாகவோ, அதை அறிந்தவர்களாகவோ தெரியவில்லை.. 

92-D2-C47-E-4946-4-A06-BAA0-087-C54-ACCE

Images of massive crowds at Bondi on Friday went viral online

5-D482419-7669-46-A7-B537-63-FB62-A3-F92

Dozens of people have been spotted at St Kilda beach, despite social distancing rules.
 

https://apple.news/AefCzJ1z6Rb67Md14A0pfEQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியாவில் கடந்த சில தினங்களுக்குள் 35,000 பேர் வரை வேலைகளை இழந்துள்ள நிலையில், தீடீரென அதிகரித்துள்ள Customers Call Centre வேலைவாய்ப்புகளை(தற்காலிக) இந்த வேலை இழந்தவர்களை கொண்டு நிரப்புவதாக Supermarkets Giants Woolworths, Coles மற்றும் Telstra  போன்றன தெரிவித்துள்ளன. வேலை இழந்த விமான ஊழியர்கள், உணவக ஊழியர்கள், திரையரங்கு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக வேலைவாய்ப்பாக இருந்தாலும் கூட தற்காலிகமாக ஆறுதலடையலாம்

https://apple.news/AvgTDQOS7TgqWRwxRvdWpeA

 

Link to comment
Share on other sites

22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவுஸ்ரேலியாவில் கடந்த சில தினங்களுக்குள் 35,000 பேர் வரை வேலைகளை இழந்துள்ள நிலையில், தீடீரென அதிகரித்துள்ள Customers Call Centre வேலைவாய்ப்புகளை(தற்காலிக) இந்த வேலை இழந்தவர்களை கொண்டு நிரப்புவதாக Supermarkets Giants Woolworths, Coles மற்றும் Telstra  போன்றன தெரிவித்துள்ளன. வேலை இழந்த விமான ஊழியர்கள், உணவக ஊழியர்கள், திரையரங்கு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக கூறப்படுகிறது. தற்காலிக வேலைவாய்ப்பாக இருந்தாலும் கூட தற்காலிகமாக ஆறுதலடையலாம்

https://apple.news/AvgTDQOS7TgqWRwxRvdWpeA

 

சிலர் தயங்குவார்கள் இந்த வேளைகளில் சேருவதற்கு. ஆனாலும், பண்டகசாலையில் வேலைசெய்வது பாதுகாப்பாக இருக்கலாம். 

சில மக்கள் சார்ந்த பல்பொருள் அங்காடிகள், வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியத்தை தருகின்றது. 

வால்மார்ட், அமேசான் பல நூறு ஆயிரம் வேலையாட்கள் தேவை என அறிவித்தள்ளார்.

மருந்தக  ஆய்வுகூட  பரிசோதனை கூடங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ampanai said:

சிலர் தயங்குவார்கள் இந்த வேளைகளில் சேருவதற்கு. ஆனாலும், பண்டகசாலையில் வேலைசெய்வது பாதுகாப்பாக இருக்கலாம். 

சில மக்கள் சார்ந்த பல்பொருள் அங்காடிகள், வேலை செய்பவர்களுக்கு அதிக ஊதியத்தை தருகின்றது. 

வால்மார்ட், அமேசான் பல நூறு ஆயிரம் வேலையாட்கள் தேவை என அறிவித்தள்ளார்.

மருந்தக  ஆய்வுகூட  பரிசோதனை கூடங்களும் வேலைக்கு ஆட்கள் தேவை என கூறியுள்ளன.  

உண்மைதான் Customer Call Center போன்ற வேலைகளுக்கு நிறைப்பேர் தயங்குவார்கள்.அத்தோடு இந்த வேலைகளுக்கு ஓரளவு Customer Service அனுபவம் இல்லாமல் எடுப்பதும் கஷ்டம். அதனால்தான் வாடிக்கையாளர்களுடன் நேரடிதொடர்புடையவர்களான விமான பணியாளர்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

ஆனால் பல்பொருள் அங்காடிகளில் வேலைகள், மற்றும் Food delivers (Dominos) வேலைவாய்ப்புகளும் இப்பொழுது அதிகரித்துள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.