Jump to content

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன?


Recommended Posts

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை.

சமூக ஊடகங்கள் மற்றும் செயலிகளின் வாயிலாக கொரோனா குறித்த தகவல்கள் வேகமாக வெளியாகின்றன. இதில் ஒரு செய்தி மிகவும் பரவலாகப் பகிரப்படுகிறது.

"கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்," என்ற செய்தியே அது.

 

 

'காற்றுவழிப் பரவல்'

இந்த செய்தி வாட்ஸ்அப் மூலம் பிபிசிக்கு கிடைத்தது, இது பல குழுக்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியுடன் சி.என்.பி.சி செய்திக்கான இணைப்பும் பகிரப்பட்டுள்ளது.

காற்று வழியாகப் பரவும் வைரஸ் கொரோனா என அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முயற்சித்தோம்.

முதலாவதாக, சி.என்.பி.சி யின் அந்தக் கட்டுரையைப் படித்தோம். அதில் கோவிட் -19 ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 16 அன்று வெளியிடப்பட்ட இந்த கட்டுரையில், "கொரோனா வைரஸ் மருத்துவப் பணியாளர்களுக்கு 'காற்று வழியாக பரவுமா' என்பதை உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆராய்ந்து வருகிறது. "

"ஒரு குறிப்பிட்ட பரப்பு அதற்கு ஏற்றாற்போல் இருந்தால், கொரோனா வைரஸ் காற்றில் உயிர்வாழ முடியும் என்று ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மார்ச் 17ஆம் தேதியன்று, அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (என்.ஐ.எச்) ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மூன்று முதல் நான்கு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

சுகாதார வசதிகள்

இந்த கூற்றை நாங்கள் மேலும் ஆராய்ந்தபோது, பிப்ரவரி 11 அன்று நடந்த உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான விஷயங்கள் கிடைத்தன.

அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதன் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கிப்ரியேசோஸ், "கொரோனாவும் இபோலாவும் ஒரே மாதிரியானவை அல்ல, கொரோனா என்பது காற்றின் மூலமாக பரவும் ஒரு வைரஸ். எனவே இது அதிகம் ஆபத்தானது, மிகக்குறுகிய காலத்திலேயே 24 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். "

மார்ச் 16ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் துறையின் தலைவர் டாக்டர் மரியா கெர்கோவ், "கொரோனா வைரஸ் சிறிது நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது" என்று கூறினார். அதாவது இந்த வைரஸ்கள் இயல்பைவிட அதிக நேரம் காற்றில் உயிருடன் இருக்க முடியும்.

"மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சுகாதார வசதிகள் அதிக ஆபத்தில் உள்ளன. எனவே, அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், காற்று மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளை கவனமாக எடுக்க வேண்டும். ஆனால் சாதாரண மக்களுக்கு தொற்று இல்லை என்றால் மருத்துவ முகக்கவசங்களை எப்போதும் அணிய வேண்டியதில்லை. அதேபோல் பாதிக்கப்பட்ட நபருடன் வாழ்கிறீர்கள் என்றால் முகக்கவசத்தை பயன்படுத்தலாம்," என்றார் அவர்.

மார்ச் 23 அன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநர் பூனம் கேத்ரபால் சிங், "இதுவரை காற்று மூலம் பரவியதால் கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. கோவிட் -19 காற்றில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சீன அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளின் ஐ.சி.யு மற்றும் சி.சி.யுக்களில், இந்த ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள, கூடுதல் தரவுகள் தேவை," என்று தெரிவித்துள்ளார்.

"பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மலின்போது வெளியே வரும் நீர்த்துளிகளே, அத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு பரவக் காரணமாக இருந்தன. எனவே மற்றவர்களிடம் இருந்து சற்று தூரமாக இருப்பதை உறுதி செய்யவேண்டும். அதோடு, கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்."

உண்மையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள், இதுபோன்ற தூசுப்படலம் (Aersol) தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

தூசுப்படலத்தில் உள்ள நீர் துகள்கள் நீர்த்துளிகளைவிட லேசானவை. மேலும் அவை காற்றில் நீடித்து இருக்கக்கூடியவை.

இத்தகைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ், காற்று மூலம் நோயை தொற்றச் செய்யும் ஆபத்தான நீர் துகள்களை உருவாக்கும் என்பதும், இது சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

 

இதுவரை எதுவும் பதிவாகவில்லை

கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் நிராகரிக்கவில்லை என்று பிபிசி தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

ஆனால் இந்த ஆபத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

 

 

 

https://www.bbc.com/tamil/india-52048762

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ampanai said:

கொரோனா வைரஸ் காற்றில் பரவும் வைரஸ். இது எட்டு மணி நேரம் காற்றில் உயிருடன் இருக்கக்கூடியது. எல்லோரும் எல்லா இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இது எஃகு மீது 2 மணிநேரமும், காகிதம் மற்றும் பிளாஸ்டிக்கில் 3-4 மணிநேரமும், காற்றில் 8 மணி நேரமும் உயிர்வாழ முடியும்," என்ற செய்தியே அது.

காற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம்  எல்லாரும் அழிய வேண்டியதுதான் 😟

Link to comment
Share on other sites

3 minutes ago, குமாரசாமி said:

காற்றுமூலம் பரவுவது உண்மையானால் சுத்தம்  எல்லாரும் அழிய வேண்டியதுதான் 😟

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

இந்த வைரஸ் எவ்வளவு காலம் காற்றில் இருக்க முடியும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், காற்றில் எட்டு மணி நேரம் கொரொனா வைரஸ் வாழும் என்ற கூற்று முற்றிலும் தவறானது.

காற்றில் கொரோனா நோய்த்தொற்று பரவியதால் கோவிட்-19 நோய்க்கு ஒருவர் ஆளானதாக இதுவரை எதுவும் பதிவாகவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

சனத்தை பயப்பிடுத்தாமல் இருக்கிறதுக்கு முதல்லை மறுப்பு அறிக்கை வாறதெல்லாம் நோர்மல் தானே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.