Jump to content

கொரோனாவால் முடங்கியுள்ள நாடுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ள 6 விதிமுறைகள்


Recommended Posts

(நா.தனுஜா)

மக்களின் நடமாட்டத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் இத்தருணத்தை வைரஸை தாக்கி, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ரெட்றோஸ் அதானொம் கேப்றியேஸிஸ் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதற்கான ஆறு பிரதான வழிமுறைகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது. இது உலகின் பல பாகங்களிலும் சுகாதார ரீதியில் மாத்திரமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்நிலையில் இவ்வருடம் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பிற்போடுவது என்ற கடினமானதும் அதேவேளை தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானதுமான தீர்மானத்தை ஜப்பான் அரசாங்கமும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் மேற்கொண்டிருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் நலனைப் பாதுகாப்பதை முன்நிறுத்தி இத்தீர்மானத்தை மேற்கொண்ட ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இப்போட்டிகளை எதிர்வரும் வருடம் அனைவரும் இணைந்து மேலும் கோலாகலமாக நடத்தமுடியும் என்றும் நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் இதுபோன்ற மோசமான தொற்றுநோய்களிலிருந்து நாம் மீண்டு வந்திருக்கின்றோம். அதேபோன்று இதிலிருந்தும் எம்மால் மீளமுடியும். ஆனால் அதற்கு எத்தனை பெரிய விலையைச் செலுத்தப் போகின்றோம் என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.

ஏற்கனவே நாம் 16,000 இற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்துவிட்டோம். இன்னமும் பலி உயிர்களை இழப்போம் என்பது எமக்குத் தெரியும். ஆனால் அதன் எண்ணிக்கை என்னவென்பது தற்போது நாம் மேற்கொள்ளும் தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலுமே தங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகள் முன்மாதிரியான, குறிப்பாக சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இழப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன.

பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு, விளையாட்டுப்போட்டிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன், மக்களனைவரும் தத்தமது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். குறித்த நாடுகள் இந்த உத்தரவுகளை எப்போது, எவ்வாறு தளர்த்துவது என்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.

மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கோருவதும், அதனூடாக மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதும் உரிய மருத்துவ மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான இலகுவான சூழலை உருவாக்கும். ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு நோய் பரவுவதைத் தடுப்பதும், உயிர்களைப் பாதுகாப்பதுமே இந்நடவடிக்கைகளின் பிரதான நோக்கமாகும். எனவே மக்களின் நடமாட்டம் முழுவதுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, தமது நகரங்களை மூடியிருக்கும் அனைத்து நாடுகளும் வைரஸை தாக்குவதற்கு இத்தருணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால் இத்தருணத்தை அதற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதே தற்போது இருக்கின்ற கேள்வியாகும். அதற்கு மிகமுக்கியமாக 6 நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவையாவன:

முதலாவதாக அனைத்து நாடுகளும் தத்தமது நாடுகளின் சுகாதார மற்றும் பொதுச்சுகாதார சேவையாளர்களை விரிவாக்குவதுடன், அவர்களுக்குரிய பயிற்சியை வழங்கவேண்டும்.

இரண்டாவதாக சமூகத்திற்குள் இருக்கும் வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளிகளையும் கண்டறிவதற்கான உரிய செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும்.

மூன்றாவதாக நோயாளிகளைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடைமுறைகளை விரிவாக்கவேண்டும்.

நான்காவதாக அடையாளங்காணப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஐந்தாவதாக நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முறையான திட்டத்தை உருவாக்குவதுடன்

ஆறாவதாக கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, அடக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.

https://www.virakesari.lk/article/78680

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தனிமை படுவதால் எப்படி 
தப்பிக்கலாம் என்று சீனா காட்டிவிட்டது!
மீறினால் என்ன விளைவு என்று
இத்தாலி காட்டிவிட்டாது!
இனி முடிவு நம் கையில்!  :(
 
Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஆனால் இத்தருணத்தை அதற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பதே தற்போது இருக்கின்ற கேள்வியாகும். அதற்கு மிகமுக்கியமாக 6 நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் பரிந்துரைக்கின்றோம்.

அவையாவன:

முதலாவதாக அனைத்து நாடுகளும் தத்தமது நாடுகளின் சுகாதார மற்றும் பொதுச்சுகாதார சேவையாளர்களை விரிவாக்குவதுடன், அவர்களுக்குரிய பயிற்சியை வழங்கவேண்டும்.

இரண்டாவதாக சமூகத்திற்குள் இருக்கும் வைரஸ் தொற்றுக்குள்ளான அனைத்து நோயாளிகளையும் கண்டறிவதற்கான உரிய செயன்முறையொன்றை உருவாக்க வேண்டும்.

மூன்றாவதாக நோயாளிகளைக் கண்டறிவதற்கான பரிசோதனை நடைமுறைகளை விரிவாக்கவேண்டும்.

நான்காவதாக அடையாளங்காணப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஐந்தாவதாக நபர்களைத் தனிமைப்படுத்துவதற்கான முறையான திட்டத்தை உருவாக்குவதுடன்

ஆறாவதாக கொவிட் - 19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தி, அடக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.

சொல்வது சுகம். செய்வது....... அதிலும் மக்களாட்சி உள்ள நாடுகளில் அரசியல் வாதிகள் வாக்கு வங்கிகளை தக்க வைப்பதில் தான் கவனமாக உள்ளார்கள். 

2- 2.5 % உயிரிழப்புக்களுடன், தொழிற்ச்சாலைகளை  மீண்டும் ஆரம்பித்தால் -  மீண்டும் ஆட்சி   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.