Jump to content

இலங்கையில் சிக்கித்தவிக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள்


Recommended Posts

(ஆர்.யசி)

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த 18, 093 சுற்றுலாப்பயணிகள் தமது மீள் பயணத்தை உறுதிசெய்து நாட்டினை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

air.jpg

 

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரமாக இலங்கை அரசாங்கம் நாட்டுக்கான விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் மீண்டும் அவர்களின் பயணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரசபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர் மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்ததில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக பயணிகள் வெளியேற மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலதிலும் கூட நாட்டினை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு முழு அனுமது வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது பயண அனுமதி பத்திரங்களை காண்பித்து நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தேனும் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்திருந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பயணிகள் இலங்கையில் எங்கு பயணம் செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கு சிரமங்களை சந்திப்பார்கலாயின் அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் இலங்கை சுற்றுலாத்துறை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வித்தல் 117 என்ற இலக்கத்தையும் 1912 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/78707

Link to comment
Share on other sites

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் விரும்பினால் வீடு திரும்பலாம் - இலங்கை சுற்றுலா சபை

(நா.தனுஜா)

இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சுற்றுலாப்பயணிகள் 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொண்டு பேசமுடியும் என்றும் இலங்கைச் சுற்றுலாச்சபை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சுற்றுலாச்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிக்க சூழ்நிலையில், நேற்று புதன்கிழமை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட 18,093 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக நாம் வெளிவிவகார அமைச்சுடனும் உரிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் நாட்டிற்குள் தரையிறங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வெளிநாட்டவர்கள் எவரேனும் சுற்றுலாப்பயணம் அல்லது வேறு வேலைகளின் நிமித்தம் இலங்கைக்கு வருகைதந்து இங்கு தங்கியிருப்பார்களெனின் அவர்கள் மீண்டும் தமது நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலாப்பயணத்துறை சார்ந்த தொழிற்துறையில் ஈடுபடுபவர்கள், தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் ஊரங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், விமான டிக்கெட்டை ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்று பதில் பொலிஸ்மாதிபர் தெரிவித்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள், உங்களுக்கு அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 1912 என்ற அவசர இலக்கத்தினூடாக எம்மையோ தொடர்புகொள்ள முடியும்.

https://www.virakesari.lk/article/78697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வேற ஒன்டுமில்லை. ராஜபக்ஷ கோஸ்டிட உறவினர் நிறைய இந்த நாடுகள்ல இருப்பீனம் என்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

ஆளுக்கு நாளுக்கு குறைந்தது 20 அமெரிக்க டாலர்கள் என்று பார்த்தாலும் ...

 நாளுக்கு 65 கோடி ...
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.