Jump to content

இலங்கையில் சிக்கித்தவிக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பயணிகள்


Recommended Posts

(ஆர்.யசி)

வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா நோக்கங்களுக்காக இலங்கைக்கு விஜயம் செய்த 18, 093 சுற்றுலாப்பயணிகள் தமது மீள் பயணத்தை உறுதிசெய்து நாட்டினை விட்டு வெளியேற எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

air.jpg

 

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரமாக இலங்கை அரசாங்கம் நாட்டுக்கான விமான சேவைகளை தடை செய்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகள் மீண்டும் அவர்களின் பயணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் நாட்டில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பிவைக்க வெளிவிவகாரத்துறை அமைச்சின் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரசபை அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை தொடக்கம் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர் மீண்டும் அவர்களின் நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்ததில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தினூடாக பயணிகள் வெளியேற மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

அதேபோல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலதிலும் கூட நாட்டினை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு முழு அனுமது வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் தமது பயண அனுமதி பத்திரங்களை காண்பித்து நாட்டில் எந்தப் பகுதியில் இருந்தேனும் பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல முடியும் என்ற அறிவிப்பையும் அரசாங்கம் விடுத்திருந்தது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பயணிகள் இலங்கையில் எங்கு பயணம் செய்திருந்தாலும் அவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு செல்வதற்கு சிரமங்களை சந்திப்பார்கலாயின் அவர்கள் தொடர்புகொள்ள தொலைபேசி இலக்கங்களையும் இலங்கை சுற்றுலாத்துறை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இருபத்து நான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வித்தல் 117 என்ற இலக்கத்தையும் 1912 என்ற இலக்கத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/78707

Link to comment
Share on other sites

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் விரும்பினால் வீடு திரும்பலாம் - இலங்கை சுற்றுலா சபை

(நா.தனுஜா)

இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மீண்டும் அவர்களது நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் சுற்றுலாப்பயணிகள் 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தம்மைத் தொடர்புகொண்டு பேசமுடியும் என்றும் இலங்கைச் சுற்றுலாச்சபை அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து சுற்றுலாச்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மிக்க சூழ்நிலையில், நேற்று புதன்கிழமை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட 18,093 வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக நாம் வெளிவிவகார அமைச்சுடனும் உரிய தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரங்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றோம்.

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் நாட்டிற்குள் தரையிறங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்வது நிறுத்தப்படவில்லை. அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வெளிநாட்டவர்கள் எவரேனும் சுற்றுலாப்பயணம் அல்லது வேறு வேலைகளின் நிமித்தம் இலங்கைக்கு வருகைதந்து இங்கு தங்கியிருப்பார்களெனின் அவர்கள் மீண்டும் தமது நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சுற்றுலாப்பயணத்துறை சார்ந்த தொழிற்துறையில் ஈடுபடுபவர்கள், தற்போதைய நெருக்கடி மிக்க சூழ்நிலையில் இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது நாட்டிற்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் ஊரங்குச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், விமான டிக்கெட்டை ஊரடங்கின் போது பயணிப்பதற்கான அனுமதியாகப் பயன்படுத்த முடியும் என்று பதில் பொலிஸ்மாதிபர் தெரிவித்திருக்கிறார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

விமானநிலையம் வரையிலான போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சுற்றுலாப்பயணிகள், உங்களுக்கு அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 1912 என்ற அவசர இலக்கத்தினூடாக எம்மையோ தொடர்புகொள்ள முடியும்.

https://www.virakesari.lk/article/78697

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ampanai said:

கடந்த காலங்களில் சுற்றுலா நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தந்து தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் தமது நாடுகளுக்கு செல்ல முடியாது 18 ஆயிரத்து 93 வெளிநாட்டு பயணிகள் நாட்டில் தங்கியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

Link to comment
Share on other sites

8 minutes ago, ampanai said:

அதேபோன்று தினமும் ஐக்கிய இராச்சியம், மெல்போர்ன் மற்றும் நரிற்றா ஆகியவற்றுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் ஈடுபடுத்தியிருக்கின்றது.

வேற ஒன்டுமில்லை. ராஜபக்ஷ கோஸ்டிட உறவினர் நிறைய இந்த நாடுகள்ல இருப்பீனம் என்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

இவ்வளவு பேர் உள்ள இருக்கினம் கொரனோ  பரவும் விகிதம் கடந்த இரு நாட்களில் குறைவாக உள்ளதாய் கணக்கு காட்டுகினம் எங்கையோ உதைக்குதே ........

ஆளுக்கு நாளுக்கு குறைந்தது 20 அமெரிக்க டாலர்கள் என்று பார்த்தாலும் ...

 நாளுக்கு 65 கோடி ...
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.