Jump to content

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜர் பெடரர், கிறிஸ்டியானோ ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி நிதியுதவி


Recommended Posts

சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்பொருட்டு இந்திய மதிப்பில் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் நன்கொடையாக தானும் தனது மனைவியும் வழங்குவதாக பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்களின் பங்களிப்பு ஆரம்பித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பெடரர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போல், பிரபல கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீசிய மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 8 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/104946/கொரோனாபாதிக்கப்பட்டவர்களுக்குரோஜர்-பெடரர்,-கிறிஸ்டியானோரொனால்டோ,-லியோனல்-மெஸ்ஸி-நிதியுதவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெஸ்சிய‌ விட‌ , ரொனால்டோ ம‌னித‌ நேய‌த்தை மிக‌வும் நேசிக்கும் சிற‌ந்த‌ ம‌னித‌ர் / 
 

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட நிதியுதவி வழங்கிய சச்சின்

இந்திய கிரிக்கெட் விரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. உலக அளவில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 750 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை இந்திய மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீர சச்சின் டெண்டுல்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக வீடியோ வெளியிட்டார். அதில், மக்களிடம் இருகரம் கூப்பிக் கேட்கிறேன், தயவுசெய்து வீட்டை விட்டு வெளிேய செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்திய மதிப்பில் சச்சின் டெண்டுல்கர் ரூ.50 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் அளித்த நன்கொடைதான் இதுவரை மிக அதிகமாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்கள் பொலிஸார் , சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முகக் கவசங்களை வழங்கியுள்ளனர்.

தோனி மூலம் புனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் ரூ.ஒரு இலட்சம் வழங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி மேற்கு வங்கத்தில் கொரோனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்குவதற்காக இந்திய மதிப்பில் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78757

Link to comment
Share on other sites

கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.8.35 கோடி நன்கொடை: செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அறிவிப்பு

செர்பியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிக்கு அந்நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் இந்திய மதிப்பில் சுமார் 8 கோடியே 35 லட்சத்தை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், 91 கோடி ரூபாயை (11 million euros ) திரட்ட சக விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்காக சுமார் 7 கோடி ரூபாயை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நோவக் ஜோகோவிச் மருத்துவ உபகரணங்கள், வென்டிலேட்டர் கருவிகள் வாங்க 8 கோடியே 35 லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/105168/கொரோனா-தடுப்பு-பணிக்குரூ.8.35-கோடி-நன்கொடை:-செர்பியவீரர்-நோவக்-ஜோகோவிச்அறிவிப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.